நான் சவூதி அரேபியாவில் ரியாத் வந்து கிட்டத்தட்ட ரெண்டு வருடங்களுக்கு மேலாகப்போகிறது.
ரியாத் மெட்ரோ ப்ராஜக்ட்.
உலகின் மிகச் சிறந்த கம்பெனியில், உலகின் பெரிய ப்ராஜக்ட்டில், உலகின் அனைத்து நாட்டுப் பொறியாளர்களுடனும் கலந்து பழகி வேலை செய்யும்
2. வாய்ப்பு.
இந்தப் ப்ராஜக்ட் முடியும் வரை நான் இருப்பேனா என்பது தெரியவில்லை.
ஆனால், முடிந்த மறுநாள் எனக்கும் இந்த ட்ரெய்னுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. ஹேண்டிங் ஓவர் முடிந்த அடுத்த நாள் இந்த ட்ரெயினில் ஏற வேண்டுமானால் நான் அதற்கான டிக்கெட் விலையைக் கொடுத்தாக வேண்டும்.
3. அவ்வளவுதான் எனக்கும் அதற்குமான உறவு.
சும்மா பெருமைக்கு சொல்லிக் கொள்ளலாம். நானும் இந்த ப்ராஜக்ட்டில் இருந்தேன் என்று. அவ்வளவுதான். வெறும் வெத்துப் பெருமை.
பொறியாளர்கள்… யோசித்துப் பார்க்கிறேன்.
நன்றியையே எதிர்பார்க்காத, நாடு, குடும்பம், நேரம், ஜாதி, மதம் என்று எதையும்
4. கருதா ஒரு சமூகம் இது.
ஒரு காட்டையே நாடாய் சமைத்துவிட்டு அடுத்த காட்டை நோக்கி ஓடும் நாடோடிகள்.
பொறியாளன் இல்லாத சமூகம் எப்படி இருந்திருக்கும்… காட்டுவாசியாய்த்தானே.?
அறிவியலாளன் எதையும் கண்டுபிடிப்பான். அதோடு அவன் வேலை
5. முடிந்தது. பொறியாளன் தான் அதை நமது தேவைக்குத் தகுந்தபடி வடிவமைப்பான்.
பறக்கலாம் என யோசித்த அறிவியலாளன் விமானம் கண்டுபிடிப்பான். அவன் பெயர் சரித்திரத்தில் இருக்கும்.
ஆனால், அதை இத்தனை பேர் அமர்ந்து செல்ல தோதாய் மெல்ல மெல்ல மெருகேற்றி வடிவமைத்தவன் பெயர் யாருக்காவது தெரியுமா.?
6. சொகுசுக்கு ஒரு ப்ளேன். பட்ஜெட்டுக்கு ஒரு ப்ளேன். பார்சல் சர்வீஸ் ஒரு ப்ளேன். போருக்கு ஒரு ப்ளேன். உளவுக்கு வேறொன்று. ஆளில்லாமல் ஒன்று. அதற்கடுத்த தேவை வந்தால் அதற்கும் ஒன்று என்று வடிவமைத்தது இவன் தானே.?
கூட்டு முயற்சி என்பார்கள்.
இன்னும் குறிப்பாய்ச் சொல்லலாம் என்றால்,
7. தாஜ்மஹாலைக் கட்டியது யார் என்றால், தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியது யார் என்றால், காவிரியில் கல்லணையைக் கட்டியது யார் என்றால் பணம் போட்ட மன்னரைக் கைகாட்டும் வரலாறு அதைக் கட்டிய பொறியாளனை ஒரு குறிப்பாகவாவது குறித்து வைத்திருக்குமா என்றால் பெரும்பாலும் இருக்காது.
ஆசிரியர்
8. இல்லாமல் இதுவெல்லாம் சாத்தியமா என்போர் இதை கவனிக்க வேண்டும்.
ஏரோப்ளேன் கண்டுபிடிக்கும் முன் ஏரோடைனமிக்ஸ் இல்லை.
டீசல் என்ஜின் கண்டுபிடிக்கும் முன் ஆட்டோமொபல் இல்லை.
முதல் குடிசை கட்டுவதற்கு முன் சிவில் என்ஜினியரிங் இருந்திருக்காது.
ஆனால், கண்டுபிடித்து அதில் முன்னேற்றங்களை
9. கொண்டு வந்து கொடுத்தபின் அதன் இயல் சார்ந்து ஒரு படிப்பு உருவாகும். அதைச் சொல்லிக் கொடுக்க ஒரு ஆசிரியர் உண்டாவார். ஆனால், அவர் கேட்கும் மரியாதையைக் கூட இந் என்ஜினியர்கள் கேட்பதில்லை என்பதுதான் உண்மை.
மனிதன் இவ்வுலகில் இரண்டு விதமான பொருட்களால் வாழ்கிறான்.
ஒன்று மனிதனால்
10. செய்யவே முடியாத ஐம்பெரும்பூதங்களால் ஆன இயற்கை சமைத்த பொருட்கள். இன்னொன்று முழுக்க முழுக்க மனிதனால் மட்டுமே செய்யப்பட்ட, நம் வாழ்க்கையை சீரமைத்து சுலபமாக்கும் நூறு சதவீத செயற்கைப் பொருட்கள்.
நீங்கள் உடுத்தும் உடை, நீங்கள் எழுதும் பேனா, நீங்கள் படிக்கும் புத்தகம், பயணிக்கும்
11. வாகனம், அது செல்ல சாலை, வீட்டில் பார்க்க டெலிவிஷன், தியேட்டரில் பார்க்க சினிமா, பாக்கெட்டில் இருக்கும் செல்போன், மூக்குக் கண்ணாடி, அதை முடிவு செய்யும் டெஸ்ட், ஆரோக்கியத்துக்கான மாத்திரை, அதற்குப் போடும் ஊசி.. என எங்கே இல்லை என்ஜினியரிங்.?
ஆனால், இதுவரை மற்ற துறை போல எங்காவது
12. என்னை மதியுங்கள் என்று கேட்டிருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தால் இல்லவே இல்லை என்றுதான் தோன்றுகிறது.
பணம் பெற்றுக் கொண்டுதானே செய்கிறீர்கள் என்பார்கள். யார்தான் சும்மா செய்கிறோம்.? ஆனால்,
அது மட்டும் போதவில்லை இல்லையா வாழ்க்கைக்கு.?
.
ஹேப்பி என்ஜினியர்ஸ் டே.!
❤️
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அநேகமாய் இந்தப் பதிவில் இணைத்திருக்கும் இந்தப் படம்... பதிவைப் படித்த பிறகு மறுபடி ஒரு முறை உங்களை இப்படத்தைப் பார்க்கத் தூண்டின்லும் தூண்டும் என்றே நினைக்கிறேன்.
நண்பகல் நேரத்து மயக்கம்... என்றால் அது மதிய உணவுக்குப் பின்னான சிறு உறக்கம். உறங்கி உடனே++
எழுந்து விட்டால் நாம் உறங்கினோமா இல்லையா என்ற குழப்பம் ஏற்படும். அதிகம் உறங்கிவிட்டாலோ எழும்போது அது மாலையா பகலா என்ற குழப்பம் உண்டாகும். அதுபோல இந்தக் படத்தில் நாம் பார்த்த கதை அங்கே நிகழ்ந்ததா... இல்லை நிகழ்ந்தது போன்ற கற்பனையா என்று நம்முடன் டைரக்டர் விளையாடும் விளையாட்டு ++
தான் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் கதை. தமிழும் மலையாளமும் ஒன்றோடு ஒன்று கலந்து நிற்கும் போஸ்டர் டிசைன் சொல்வது போன்ற ஒரு குழப்பமான மயக்கம் அது.
படத்தில் ஒரு மதிய உணவுக்குப் பின்னான உறக்கத்தில் விழும் ஜேம்ஸ் விழிக்கும் போது சுந்தரமாய் விழிக்கிறான். பிறகு ஒருநாள் முழுவதும் ++
1. கொஞ்ச நாள் ஸ்கூல்ல பசங்க அது பண்ணாய்ங்க, இது பண்ணாய்ங்கனு விடாம வீடியோ போட்டு குறை சொன்னாய்ங்க ரெண்டு மாசம் முன்ன. தீபாவளி அப்ப டாஸ்மாக் சேல்ஸ் டாட்கெட் வைக்கறாய்ங்க, தீபாவளிக்கு குடிச்சே அழியறானுங்கனு குறை சொன்னாய்ங்க. இப்ப பொங்கலுக்கு துணிவு வாரிசுனு சினிமா ஸ்டார் பின்னாடி
"இத்தனை பேர் இருக்கற இந்தியால ஒரு 11 பேர் இல்லையா.. ஃபுட்பால் விளையாட.?" ன்னு திடீர்னு ஒரு லெபனானி என்ஜினியர் எங்களைப் பார்த்து கேட்டான் இங்க.
"நாங்க காலனியா இருந்தவங்க. அதனால கிரிக்கெட் அடிக்ட் ஆகிட்டோம் போல"னு நான் பதில் சொன்னேன் எப்பவும் போல.
உடனே
2. கூட இருந்த இன்னொரு எகிப்தைச் சேர்ந்த என்ஜினியர், "ஏன்.. நாங்களும்தான் காலனியா இருந்தோம். நாங்க என்ன கிரிக்கெட்டா ஆடறோம்.? ஃபுட்பால் தான ஆடறோம். இவ்வளவு ஏன்... நம்மை காலனியா வெச்சிருந்த இங்கிலாந்து கிட்டயே பெரிய ஃபுட்பால் டீம் இருக்கே.!"னு கேட்டதும், யோசிக்க ஆரம்பிச்சேன்
ஆனா,
3. இப்ப எனக்கு உதவிக்கு வந்த இன்னொரு இந்தியர் சொன்ன பதில் கொஞ்சம் பொருத்தமா தெரிஞ்சது.
அவர் சொன்னாரு, "இந்தியா ஒரு விநோதமான நாடு. இங்க அரசியல்ல விளையாடுவாங்க. விளையாட்டுல அரசியல் பண்ணுவாங்க.
இங்க ஃபுட்பால் மட்டுமில்லை. எங்க தேசிய விளையாட்டான ஹாக்கியவே அம்புட்டு கவனிக்க
விக்ரம் காதலிச்சு அவர் வீட்டால விரட்டப்பட்ட பொண்ணு தான் பாண்டியனை கட்டிகிட்டு, அவன் செத்த பிறகு
2. திரும்ப வந்து பழி வாங்க காத்திருக்குனு புரிய இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்குது.
வாய்ஸ் ஓவர்ல இந்த உறவெல்லாம் தெளிவுபடுத்திட்டு படத்தை ஸ்டார்ட் பண்ணிருந்தா படம் ஆரம்பிக்கறப்பவே கொஞ்சம் குழப்பம் இல்லாமல் பிக்கப் ஆகியிருக்கும்.
இதுல பாண்டியனை ஐஸ்வர்யாராய் கட்டிக்கிச்சா.. இல்லை,
3. விக்ரம் அப்படி நெனச்சார்னு அடுத்த பார்ட்ல ட்விஸ்ட் வைக்கப் போறாய்ங்களா தெரியலை. அப்படி வெச்சா சோழர்களேட உளவுப்படை பத்தி வேற நமக்கு சந்தேகம் வந்துடும்.
கூடவே, முறைப்படி விக்ரம் தான் மூத்தவர், அடுத்த அரசன்னு இருக்கறப்ப.. அவரை விட்டுட்டு எதுக்கு எல்லோரும் ஜெயம் ரவியை குறி
பொன்னியின் செல்வன் படத்தில் வரும் இந்தப் பாத்திரம் தான் உண்மையில் என்னை கவனிக்க வைத்தது.
சோழ தேசத்தில் அநாதையாய் இருக்கும் இவர், முதலில் சோழ இளவரசனை தனது அழகால் வளைக்கிறார்.
பிறகு சோழ இளவரசியால் விரட்டப்பட்டு காணாமல் போனாலும், பாண்டிய மன்னனை மணந்து பாண்டிய அரசியாய்
2. வாழ்கிறார்.
போரில் பாண்டியமன்னனை அதே சோழ இளவரசன் கொன்றதும், சோழ தேசம் திரும்பி அடுத்து தேசத்தைக் கைப்பற்ற விரும்பும் பழுவேட்டரையரைத்தான் மணந்திருக்கிறார்.
அப்படியே பழுவேட்டரையர் இறந்தாலும் சோழ இளவரசன் இன்னும் மணமுடிக்காமல்தான் இருக்கிறான்.
இடையில் வந்தியத்தேவனையும் வளைக்கப்
3. பார்க்கிறார்.
எல்லாப் பெண்களும் அழகுடன்தான் பிறக்கிறார்கள். ஆனால் அழகுடன் கொஞ்சம் அறிவும் உள்ள பெண்கள் அந்த அழகை வைத்து அரசனை அடிமையாக்கி, அத்தனை சவுகரியங்களை அனுபவித்து விடுகிறார்கள்.
யோசித்துப் பாருங்கள்.
பில்கேட்ஸ் மைக்ரோசாப்ட் கம்பெனியை வளர்க்கிறார்... ஆனால் பில்கேட்ஸ்ன்