டேனியப்பா Profile picture
ஒன்றாய் வாழ்வோம். உரையாடுவோம். ஓரிதயம் கொண்டிருப்போம்.! -ரிக்
3 subscribers
Feb 26, 2023 15 tweets 5 min read
நண்பகல் நேரத்து மயக்கம்

அநேகமாய் இந்தப் பதிவில் இணைத்திருக்கும் இந்தப் படம்... பதிவைப் படித்த பிறகு மறுபடி ஒரு முறை உங்களை இப்படத்தைப் பார்க்கத் தூண்டின்லும் தூண்டும் என்றே நினைக்கிறேன்.

நண்பகல் நேரத்து மயக்கம்... என்றால் அது மதிய உணவுக்குப் பின்னான சிறு உறக்கம். உறங்கி உடனே++ எழுந்து விட்டால் நாம் உறங்கினோமா இல்லையா என்ற குழப்பம் ஏற்படும். அதிகம் உறங்கிவிட்டாலோ எழும்போது அது மாலையா பகலா என்ற குழப்பம் உண்டாகும். அதுபோல இந்தக் படத்தில் நாம் பார்த்த கதை அங்கே நிகழ்ந்ததா... இல்லை நிகழ்ந்தது போன்ற கற்பனையா என்று நம்முடன் டைரக்டர் விளையாடும் விளையாட்டு ++
Jan 15, 2023 7 tweets 2 min read
1. கொஞ்ச நாள் ஸ்கூல்ல பசங்க அது பண்ணாய்ங்க, இது பண்ணாய்ங்கனு விடாம வீடியோ போட்டு குறை சொன்னாய்ங்க ரெண்டு மாசம் முன்ன. தீபாவளி அப்ப டாஸ்மாக் சேல்ஸ் டாட்கெட் வைக்கறாய்ங்க, தீபாவளிக்கு குடிச்சே அழியறானுங்கனு குறை சொன்னாய்ங்க. இப்ப பொங்கலுக்கு துணிவு வாரிசுனு சினிமா ஸ்டார் பின்னாடி 2. சுத்தறாய்ங்கனு... இதைப் புடிச்சுகிட்டு தொங்கிட்டு இருக்கறாய்ங்க அத்தனை வாட்சப் வாயனுகளும், பூமர் அங்கிள்ஸும்.

ஆனா பாருங்க.. இதே ஊர்ல தான் 50வருஷம் முன்னாடி எம்ஜியார் சிவாஜிக்கு அடிச்சுக்கிட்டு இருந்தாய்ங்க. எம்ஜியார் ஓட்டுப் போட்டு முதலமைச்சரே ஆக்கினாய்ங்க. 30வருஷம் முன்னாடி
Nov 21, 2022 5 tweets 2 min read
1. இந்தியக் கால்பந்து.!

"இத்தனை பேர் இருக்கற இந்தியால ஒரு 11 பேர் இல்லையா.. ஃபுட்பால் விளையாட.?" ன்னு திடீர்னு ஒரு லெபனானி என்ஜினியர் எங்களைப் பார்த்து கேட்டான் இங்க.

"நாங்க காலனியா இருந்தவங்க. அதனால கிரிக்கெட் அடிக்ட் ஆகிட்டோம் போல"னு நான் பதில் சொன்னேன் எப்பவும் போல.

உடனே 2. கூட இருந்த இன்னொரு எகிப்தைச் சேர்ந்த என்ஜினியர், "ஏன்.. நாங்களும்தான் காலனியா இருந்தோம். நாங்க என்ன கிரிக்கெட்டா ஆடறோம்.? ஃபுட்பால் தான ஆடறோம். இவ்வளவு ஏன்... நம்மை காலனியா வெச்சிருந்த இங்கிலாந்து கிட்டயே பெரிய ஃபுட்பால் டீம் இருக்கே.!"னு கேட்டதும், யோசிக்க ஆரம்பிச்சேன்

ஆனா,
Oct 1, 2022 8 tweets 2 min read
1. பொன்னியின் செல்வன்
நாவல் படிக்காத ஒரு வாசகனின் விமர்சனம்:

முதல் குறையா பட்டது... விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி மூணு பேரும் சகோதர சகோதரினு புரியறதுக்குள்ளயே இன்டர்வெல் வந்துடுது.

விக்ரம் காதலிச்சு அவர் வீட்டால விரட்டப்பட்ட பொண்ணு தான் பாண்டியனை கட்டிகிட்டு, அவன் செத்த பிறகு 2. திரும்ப வந்து பழி வாங்க காத்திருக்குனு புரிய இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்குது.

வாய்ஸ் ஓவர்ல இந்த உறவெல்லாம் தெளிவுபடுத்திட்டு படத்தை ஸ்டார்ட் பண்ணிருந்தா படம் ஆரம்பிக்கறப்பவே கொஞ்சம் குழப்பம் இல்லாமல் பிக்கப் ஆகியிருக்கும்.

இதுல பாண்டியனை ஐஸ்வர்யாராய் கட்டிக்கிச்சா.. இல்லை,
Oct 1, 2022 5 tweets 2 min read
1. நந்தினி:

பொன்னியின் செல்வன் படத்தில் வரும் இந்தப் பாத்திரம் தான் உண்மையில் என்னை கவனிக்க வைத்தது.

சோழ தேசத்தில் அநாதையாய் இருக்கும் இவர், முதலில் சோழ இளவரசனை தனது அழகால் வளைக்கிறார்.

பிறகு சோழ இளவரசியால் விரட்டப்பட்டு காணாமல் போனாலும், பாண்டிய மன்னனை மணந்து பாண்டிய அரசியாய் 2. வாழ்கிறார்.

போரில் பாண்டியமன்னனை அதே சோழ இளவரசன் கொன்றதும், சோழ தேசம் திரும்பி அடுத்து தேசத்தைக் கைப்பற்ற விரும்பும் பழுவேட்டரையரைத்தான் மணந்திருக்கிறார்.

அப்படியே பழுவேட்டரையர் இறந்தாலும் சோழ இளவரசன் இன்னும் மணமுடிக்காமல்தான் இருக்கிறான்.

இடையில் வந்தியத்தேவனையும் வளைக்கப்
Jan 17, 2022 12 tweets 2 min read
1. வெள்ளையன் முதலில் இங்கு வியாபாரியாய் நுழைந்தான்.

பிறகு வியாபாரத்தை பெருக்க ஒப்பந்தங்கள் போட்டான்.

ஒப்பந்தங்கள் மூலம் கடன்கள், சலுகைகள் கொடுப்பதாய் நம்ப வைத்தான்.

அதன் மூலம் அதிகார மையங்களை வசியப் படுத்தினான்.

பிறகு, கடனுக்கு பதிலாய் நிலப் பரப்புகளை வாங்கிக் கொண்டான். 2. அங்கு வரி விதிக்கும் உரிமை பெற்றான்.

பிறகு அவனே இந்தியா முழுமைக்கும் ஆளும் சக்தியாய் உருவெடுத்தான்.

தமிழகமே சேர சோழ பாண்டியர் எனவும் சிற்றரசுகள் பலவாகவும் பிரிந்து கிடந்த காலம்.

இந்தியா எத்தனை துண்டுகள் இப்படி இருந்ததுவோ தெரியாது.

வெள்ளையன் வராமல் இருந்திருந்தால் இன்னும்
Jan 17, 2022 6 tweets 2 min read
1. புத்தம் புது காலை விடியாதா...
என்றொரு அந்தாலஜி அமேசான் ப்ரைமில் ஓடிக் கொண்டிருக்கிறது.

அதில் "மெளனமே பார்வையாய்" எனும் மூன்றாவது எபிசோட் மதுமிதா இயக்கத்தில், நதியா - ஜோஜு ஜார்ஜ் நடிப்பில், கிட்டத்தட்ட வசனமே இல்லாமல் அசத்தி... பரவலாய் கவனத்தை பெற்றிருந்தது.

ஒரு சாதாரண 2. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிணக்கு, அதன் பிறகான வீம்பு, அது உடையும் அந்தத் தருணம், யாரும் யாரிடமும் மன்னிப்புக் கூட கோர வேண்டியிராத அவர்கள் உள்ளாடும் காதல். இதையெல்லாம் பகிர வார்த்தை கூடத் தேவையில்லை என்பதை மிக அழகாக காட்டியிருந்தனர்.

கதையே இல்லாத இந்த
Dec 27, 2021 12 tweets 4 min read
1. ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன் இது இந்தப் படத்திற்கான விமர்சனம் அல்ல.

ஒரு மனிதன் மற்றொரு நபரை கொலை செய்து விட்டால் கொலையுண்ட நபரின் வருமானம் குடும்ப சூழலை கணக்கிட்டு 'இரத்த பணம்' (பிளட் மணி) கொலை செய்த நபரிடமிருந்து வசூலிக்கப்படும். கொலை செய்யப்பட்டவரின் வாரிசுகள் மன்னித்து Image 2. விட்டால் கொலை செய்தவர் தண்டனையிலிருந்தும் விலக்களிக்கப் படுவார். சில சமயம் இந்தப் பணத்தை அவர்கள் மறுத்து விடுவதும் உண்டு.

இந்தக் கருவை மையமாகக் கொண்டு வந்திருக்கும் படம்தான் இந்த ப்ளட் மணி.

ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் துபாயில் செய்யாத கொலைக்கு தண்டனையாக மாட்டிக் Image
Dec 5, 2021 11 tweets 4 min read
1. பெரும்பாலும் அலி தன் வெற்றிக்கு தேவையான அளவை விட ஒரு அடியும் எதிராளி மேல் விழக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பவர்.

எதிராளி மயங்கி விழும்போது அடிக்க மாட்டார், விழுந்து எழும் வரை சீண்ட மாட்டார். எதிராளிக்கு முடியாத நிலை வரும்போது அவரே நடுவரிடம் போட்டியை முடிக்க வேண்டுகோள் 2. வைப்பார். அதனாலயே அலியிடம் தோல்வியுற்றவர்கள் கூட அவரை பெரிதும் நேசித்தனர்.

உலக பிரசித்தி பெற்ற George foreman என்னும் ஜாம்பவான் உடனான சண்டையில் தோல்வியுற்ற foreman "the greatest of all his punch was the one not landed, when i was falling" என்பார். அதாவது ஃபோர்மேன் நாக்அவுட்
Nov 23, 2021 8 tweets 3 min read
1. நல்ல சிறுகதை எழுதுவது எப்படி?
-சுஜாதா பாலகுமாரனுக்குக் கொடுத்த டிப்ஸ்

முன்கதைச் சுருக்கம் என்ற பாலகுமாரன் சுயசரிதையிலிருந்து: பாலகுமாரனுக்கு ஆரம்ப காலத்தில் சிறுகதை எழுதுவதில் நுட்பங்கள் பிடிபடவில்லையாம். ஒரு முறை சுப்ரமணியராஜுவுடன் சுஜாதாவை சந்தித்து “எத்தனை ட்ரை பண்ணாலும் 2. சிறுகதை எழுத வரலை. சிக்கறது. தப்பா கதை எழுதறோம்னு தெரியறது. ஒரு நல்ல சிறுகதை எப்படி எழுதறது?” என்று கேட்டிருக்கிறார். சுஜாதா பத்து நிமிஷத்தில் சொல்லித் தருகிறேன் என்று ஒரு மணி நேரம் விளக்கினாராம். அது கீழே.

கதை எழுதறது கஷ்டம் இல்லைய்யா, சுலபம். ஒரு பத்து நிமிஷம் நான் சொல்லித்
Sep 25, 2020 11 tweets 4 min read
1. அச்சிறுமி கருப்பினத்தைச் சேர்ந்தவள் என்பதால் அமெரிக்க பள்ளியில் அனுமதிக்கப்படவில்லை. அமெரிக்காவின் வெள்ளை இனக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் கருப்பின மாணவர்கள் யாரும் அனுமதிக்கப்படாத காலம் அது. அந்நாட்டின் உச்சநீதிமன்றம் வெள்ளையர் பயிலும் பள்ளிகளில் கருப்பினக் குழந்தைகளும் 2. சேர்க்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனாலும் லூசியானா மாநிலத்தில் வெள்ளையர் பயின்ற பள்ளிகள் கருப்பினத்தவர் பயில அனுமதிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை அரசுப் பள்ளிகள் கடைபிடிக்கும்படி கடுமையாக வலியுறுத்தப்பட்டது. எனவே கருப்பின மாணவர்கள் பள்ளியில் சேர்வதை தடை செய்ய பள்ளிகள் ஒரு
Sep 25, 2020 7 tweets 2 min read
நிர்வாகம் என்பது...
🙊🙊🙊

1. அந்த அரசனிடம் கொடூரமான 10 வேட்டைநாய்கள் இருந்தன.

எப்போதுமே கூண்டுக்குள்ளேயே இருக்கும் அவைகளை, தனது எதிரிகளையும், வேண்டாதவர்களையும் கொல்ல மட்டுமே உபயோகப்படுத்தினான்.

அன்றும் அப்படித்தான்.. ஒரு சிறிய தவறு செய்தார் என்ற கோபத்தில் தனது மந்திரியைக் 2. கொல்ல முடிவுசெய்து அந்த நாய்களிடம் தூக்கி எறிய உத்தரவிட்டான்.

மந்திரி அரசனைப் பார்த்துக் கவலையுடன் கேட்டார்.

"பத்து வருடங்கள் உங்களுக்கு உண்மையாய் சேவை செய்ததற்கு இதுதான் பலனா அரசே.! பரவாயில்லை.. தண்டனையை நிறைவேற்றும் முன் எனக்கு ஒரு பத்து நாட்கள் மட்டும் அவகாசம் கொடுங்கள்
Sep 15, 2020 12 tweets 2 min read
1. எதுவும் கேட்காத என்ஜினியர்ஸ்…

❤️

நான் சவூதி அரேபியாவில் ரியாத் வந்து கிட்டத்தட்ட ரெண்டு வருடங்களுக்கு மேலாகப்போகிறது.

ரியாத் மெட்ரோ ப்ராஜக்ட்.

உலகின் மிகச் சிறந்த கம்பெனியில், உலகின் பெரிய ப்ராஜக்ட்டில், உலகின் அனைத்து நாட்டுப் பொறியாளர்களுடனும் கலந்து பழகி வேலை செய்யும் 2. வாய்ப்பு.

இந்தப் ப்ராஜக்ட் முடியும் வரை நான் இருப்பேனா என்பது தெரியவில்லை.

ஆனால், முடிந்த மறுநாள் எனக்கும் இந்த ட்ரெய்னுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. ஹேண்டிங் ஓவர் முடிந்த அடுத்த நாள் இந்த ட்ரெயினில் ஏற வேண்டுமானால் நான் அதற்கான டிக்கெட் விலையைக் கொடுத்தாக வேண்டும்.
Sep 1, 2020 6 tweets 1 min read
1. திருவிளையாடல்

கொரண்டைன் சமயத்தில் டேனிக்கு இன்று புதிதாய் ஏதாவது கற்றுக் கொடுக்க வேண்டுமே என்று யோசித்து, ஹார்ட் வொர்க் ஸ்மார்ட் வொர்க் (hard work, smart work) பற்றிச் சொல்லிக் கொடுக்க முடிவு செய்தேன்.

ஏதாவது ஒரு உதாரணத்தோடு சொல்லிக் கொடுத்தால் நன்றாயிருக்குமே என்று யோசித்த 2. போது, வாட்சப்பில் அந்த வீடியோ வர, அந்தக் காட்சியையே அன்றைக்கு அதற்கான உதாரணம் ஆக்கிவிடலாம் என்று முடிவு செய்தேன்.

திருவிளையாடலில் முருகனும், விநாயகரும் மாம்பழத்துக்காக சண்டை போடும் காட்சிதான் அந்த வீடியோவில் இருந்தது.

முருகனை ஹார்ட் வொர்க்கிற்கும், விநாயகரை ஸ்மார்ட்
Aug 31, 2020 5 tweets 1 min read
1. தில்லுதுரயின் ஹெல்த் ரிப்போர்ட்டைப் பார்த்த டாக்டர், இனிமேல் அவர் எதற்குமே கவலைப்படக் கூடாது... எதற்காவது கவலைப்பட்டால் உயிருக்கே ஆபத்து என்று சொல்லிவிட்டார்.

கம்பெனி நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்தது. வேலை செய்பவர்களுக்கு சம்பளம் குடுக்க முடியாத நிலை. எப்படி கவலைப்படாமல் இருக்க Image 2. முடியும் என்று யோசித்தவர் கடைசியாய் ஒரு வழியையும் கண்டுபிடித்து விட்டார்.

ரெண்டொரு நாளில் பேப்பரில் விளம்பரம் கொடுத்து, இன்டர்வியூ செய்து, இவருக்காக கவலைப்படுவதற்கென்றே இப்போது ஒரு ஆளை மாதம் ஐம்பதாயிரம் சம்பளத்தில் வேலைக்குச் சேர்த்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது.

அன்று
Aug 21, 2020 5 tweets 1 min read
1. டேனியின் அடக் கழுத.!
🙈🙉🙊

பஸ் அந்த மெய்ன் ரோட்டுத் திருப்பத்தில் இறக்கி விட்டது எங்களை.

நண்பர் வந்து அவர் வீட்டுக்கு கூட்டிச் செல்வதற்காகக் காத்திருந்த நேரம்.

போய்க் கொண்டிருந்த கார் பஸ்களை இடைஞ்சல் செய்வது போல் சாலையில் இங்கும் அங்குமாக குறுக்கே துள்ளிக் குதித்து ஓடிக் Image 2. கொண்டிருந்தது ஒரு அழகான கழுதைக் குட்டி.

போகிற வருகிற கார் பைக்குகளெல்லாம் அந்த குட்டிக் கழுதைக்காக நின்று தயங்கிச் செல்வதை சந்தோஷமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் டேனி.

பார்த்துக் கொண்டிருந்த நானும் மெல்ல டேனியைச் சீண்டும் நோக்கில், “அந்தக் குட்டிக் கழுதைதான் டேனி.!’
Aug 13, 2020 9 tweets 2 min read
1. டேனிக்கு இந்த பிறந்தநாளுக்கு என்ன வாங்கித் தருவது என்று ஒரு மாதமாய் யோசித்துக் கொண்டே இருந்தேன்.

13வயதுப் பையனுக்கு சுவராஸ்யமாய் இருக்கும்படி என்ன வாங்குவது என்று முடிவெடுக்க பெரும் குழப்பமாய் இருந்தது.

அதுவும், கடந்த நான்கைந்து மாதங்களாய் வீட்டிலேயே அடைந்து கிடப்பவனுக்கு Image 2. எதாவது உற்சாகமாய் வாங்கிக் கொடுக்க வேண்டுமே என்று தோன்றியதால் மட்டும் தோன்றிக் கொண்டே இருந்தது.

அலுவலக நண்பர்களிடம் கேட்டால், ஏதாவது ப்ளே ஸ்டேசன் வாங்கிக் கொடு என்று அட்வைஸ் செய்தார்கள்.

சும்மா இருக்கற சிங்கத்தை சொறிந்து விட்ட கதையாய் ஆகிவிடக் கூடாதே என்று அதை முற்றிலும்
Aug 10, 2020 5 tweets 2 min read
1.
அன்று சனிக்கிழமை.

டேனி கோபமாய் அபார்மென்ட் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தான்.

வேலை முடித்து சாயங்காலம் வந்து சர்க்கஸ் கூட்டிப் போகிறேன் என்று சொன்ன அவனுடைய அப்பா, ஏதோ அலுவலக மீட்டிங் என்பதால் வரமுடியவில்லை.

லேட்டாகிறதே என்று கோபமாய் இருந்த டேனிக்கு, இப்போது சர்க்கஸே இல்லை Image 2.
என்றதும் ஏமாற்றத்தில் அழுகையே வர ஆரம்பித்து விட்டது.

சர்க்கஸ் போகிறோம் என்று நண்பர்களிடம் பெருமையாய் சொல்லிவிட்டதால், இப்போது சர்க்கஸ் போகவில்லை என்று சொல்லி நண்பர்களோடு விளையாடப் போகவும் மனம் ஒப்பவில்லை.

கவலையுடன் இருந்த அவனுடைய மனதை மாற்ற அவன் அம்மா ஹோம் வொர்க்கை முடிக்கச்
Jul 23, 2020 14 tweets 3 min read
1. சேவையை வியாபாரமாக்கும் நாட்டில் வியாபாரத்தை கூட சேவையாக செய்யும் மனிதர்கள்...
❤️

30நாற்பது வருடமாக ஒரு கடையை வைத்து நடத்திகிட்டு இன்னும் அந்த கடை ஒரு வெயில் மழை ஒழுகும் கூரையின் கீழ் செயல் படுகிறது என்றால் நிச்சயமாக சொல்ல முடியும் அவர்கள் அங்கே வியாபாரம் எல்லாம் செய்யவில்லை Image 2. ஒரு மாபெரும் மக்கள் சேவை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று. ஏழை எளியவர்களுக்கு பசி போக்கிக் கொண்டிருக்கிறார்கள் அந்த கடையை வைத்து நடத்தும் மனிதர்கள்.

நாளை ஞாயிற்றுக் கிழமை இந்த வார புரதத்தேவையை இன்றே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அந்தோணிசாமிக்கு தமிழ் நாட்டில் எங்கே விலை
Jun 17, 2020 8 tweets 2 min read
"கன்னியாகுமரி மாவட்டத்தின் ஊர்களும் அவற்றின் வழங்கு சொற்களும்" கற்றுக் கொள்வோம் வாருங்கள்
-எழுத்தாளர் பிரபு தர்மராஜ்

🌑கன்னியாகுமரி - கன்னியாமறி, கன்னியாரி
🌑நாகர்கோவில் - நாரல், நாரோல், நாரியலு
🌑திருவெண்பரிசாரம் -த்ருப்சாரம், திருப்பேசாரம்
🌑கோதைகிராமம் -கோச்சப்பிளாரம்
1/n
🌑அழகியபாண்டியபுரம் -அழயாண்ட்ரம்
🌑பூதப்பாண்டி -புப்பாண்டி புவப்பாண்டி
🌑இறச்சகுளம் -எறச்சோளம்
🌑பன்றிக்குழி -பண்ணுளி
🌑பார்வதிபுரம் -பாரேயொரம், பாரியுரம்
🌑சுங்கான்கடை -சுங்கியாங்கட
🌑குமாரகோவில் -குமாரோல்
🌑மார்த்தாண்டம் -தொடுவட்டி
🌑கருங்கல் -கருங்க

2/n
Jun 12, 2020 27 tweets 7 min read
குழந்தைகளின் உழைப்பைத் தின்னும் சாக்லேட்... ஒரு கண்ணீர் ஸ்டோரி.! #WorldChildLabourDay

சினிமா ஆசையுடன் சுற்றிக்கொண்டிருந்த காலம் அது. திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்யும் நண்பர் ஒருவர் டைரக்டராகும் ஆசையில் எங்கள் அறைக்கு வந்திருந்தார். எங்களது நீண்ட நெடிய பேச்சு ஒரு
1/n கட்டத்தில் திருப்பூர் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றித் திரும்பியது. அப்போது அந்தத் திருப்பூர் நண்பர், `சார்.. குழந்தைத் தொழிலாளர்னு சொல்றீங்க. அங்கே, ஒரு சிறுவன் சம்பாதிக்கற காசை பெரியவங்களாலகூட சம்பாதிக்க முடியாது, தெரியுமா?' என்றார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த எழுத்தாளர்
2/n