Second Show Profile picture
Sep 22, 2020 27 tweets 4 min read Read on X
சங்கீகளும், தம்பிகளும் எப்போவுமே என்கிட்ட கேட்குற ஒரு கேள்வி... "#பெரியார் தான் தமிழ்நாட்டுக்கு எல்லாம் பண்ணாரா?"

ரொம்ப நாளா, இதை பத்தி எழுதணும்ன்னு நினைச்சேன்... in fact, சீக்கிரமே என் தலைவன் பெரியார் பத்தி ஒரு பெரிய வீடியோவோட வர்றேன் 🙂

"பெரியார் தான் எல்லாம்

1/N
👇👇👇
பண்ணாரா?" அப்படிங்கிற கேள்விக்கு என்னோட பதில்...
'ஆமாம்... பெரியார் தான்டா எல்லாம் பண்ணார்!' ❤️

- வடக்குல அம்பேத்கர் என்ன பண்ணாரோ, அதை இங்கே பெரியார் பண்ணார். சொல்லப்போனா, 1927ல அம்பேத்கர் ‘மகத்’ பொதுக் குளத்துல ‘தீண்டப்படாத’ மக்களை திரட்டி தண்ணீர் எடுக்கும் போராட்டத்தை
நடத்துனதுக்கு உந்துசக்தியா இருந்ததே 1925ல பெரியார் வைக்கத்துல நடத்துன சத்தியாகிரகம்தான்னு அம்பேத்கர் நடத்துன “Mook Nayak” பத்திரிகையோட தலையங்கத்துல் பதிவு பண்ணியிருக்கார்.
- அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன் உட்பட எத்தனையோ பேரால முடியாத விஷயங்களை செஞ்சு காட்டுனவர் பெரியார்.
- 2000 வருஷமா கண்ணை மூடிட்டு பின்பற்றி வந்த சாஸ்திரத்தை, ஜாதியை, மூடநம்பிக்கைகளை இவ்வளவு வலிமையா பெரியாரை விட வேற யார் எதிர்த்தது இருக்காங்க? ஒரு பேரை சொல்லுங்களேன் பார்ப்போம்..

- இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்குறதுக்கு 30 வருஷம் முன்னாடி இருந்தே, வகுப்புவாரி இடஒதுக்கீடு
வேணும்ன்னு குரல் கொடுத்தவர் பெரியார். காங்கிரஸ் கட்சியில சேர்ந்து 6 வருஷமா கேட்டும் இடஒதுக்கீட்டு தீர்மானத்தை கொண்டுவராததால, "சமூகத்தை பத்தி கவலைப்படாம, சுதந்திரம் கிடைச்சு என்ன பிரயோஜனம்...? இடஒதுக்கீடு தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி நிறைவேத்தாதுன்னா, எனக்கு காங்கிரஸே வேணாம்"னு
சொல்லி கட்சியை விட்டு விலகுனவர் பெரியார்.

- காங்கிரஸை விட்டு வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார் பெரியார். "காங்கிரஸ் கட்சி என் எதிரி இல்ல, ஜாதி தான் எதிரி... ஜாதியை தூக்கி பிடிக்குற வைதீக மதத்தையும், கடவுளை போதிக்குற சாஸ்திரத்தையும், மூடநம்பிக்கைகளையும் வாழ்க்கை முழுக்க
தீவிரமா எதிர்க்க போறேன்"னு சொன்னார்.

- 1937ல மெட்ராஸ் பிரசிடென்சியோட முதல்வரா ராஜாஜி இருந்தப்போ, பள்ளிக்கூடங்கள்ல ஹிந்தியை கட்டாய மொழி ஆக்குனப்போ இந்த மாகாணம் முழுக்க ஹிந்திக்கு எதிரா புரட்சி வெடிக்க காரணமா இருந்தார். 1939ல ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்துல உயிரை விட்ட தாளமுத்து
நடராசனுக்கு 1940ல வடசென்னையில நினைவு மண்டபம் எழுப்பினார் பெரியார்.

- இந்தியாவிலேயே பேருக்கு பின்னால ஜாதியை போட்டுக்காத ஒரே மாநிலமா தமிழ்நாடு இருக்குறதுக்கு ஒரே காரணம், சுதந்திரம் அடையுறதுக்கு முன்னாலேயே 'சுயமரியாதை இயக்கம்' மூலமா பெரியார் எடுத்த முன்னெடுப்பு! இன்னைக்கு வரை,
ஒருத்தனோட ஜாதியை நேரடியா கேட்குறதுக்கு கூச்சப்படுறானுங்க இல்ல? அதுக்கு காரணம், பெரியார் இல்லாம வேற யாரு?

- தமிழ் மொழியை எளிமையா எழுதுறதுக்காகவும், அச்சடிக்குறதுல இருக்குற சிரமங்களை குறைக்குறதுக்காகவும்... 15 தமிழ் எழுத்துக்கள்ல சீர்திருத்த மாற்றங்களை முன்மொழிந்தார் பெரியார்.
அவரோட இந்த மொழி சீர்திருத்தத்தை அக்டோபர் 1978ல அரசாணையில கொண்டுவந்த பெருமை, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை சேரும்.

- கடந்த 100 வருஷத்துல பெரியார் அளவுக்கு பெண்களுக்காக பேசுன ஒரு தலைவர், இந்தியா முழுமையிலும் கிடையாதுன்னே சொல்லலாம். உடன்கட்டை ஏறுதலுக்கு எதிராவும், குழந்தை
திருமணத்துக்கு எதிராவும், தேவதாசி முறைக்கு எதிராவும் பேசியவர், போராடியவர்். விதவை மறுமணத்தோட அவசியம் பத்தியும், குடும்பக்கட்டுப்பாடோட அவசியம் பத்தியும், பெண்களுக்கு சொத்துல உரிமை வேணும்ன்னும் பல மேடைகள்ல பேசுனவர்.

இன்னைக்கு நாம பேசுறோமே.. பொண்ணுங்களோட financial independence,
பொண்ணுங்க அவங்களுக்கு பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணனும்னு அதையெல்லாம் அந்த மனுஷன் 100 வருஷமா முன்னாலேயே பேசிட்டு போயிருக்கார்

- பிரிட்டிஷ் ஆட்சில கம்யூனிச கொள்கை தடை செய்யப்பட்டிருந்தப்போ, கம்யூனிச கொள்கைகளை மொழிபெயர்த்து எழுதி மக்கள்கிட்ட பரப்புனவர் பெரியார்.

- ஒரு முறை காந்திஜி
"தீண்டாமை தப்பு, ஆனா வர்ணாசிரமம் தப்பு இல்ல"ன்னு சொன்னப்போ உடனே அவரை போய் பெங்களூர்ல சந்திச்சு தன்னோட எதிர்ப்பை தெரிவிச்சுட்டு வந்தார் பெரியார்.. "நம்ம சட்டம் தீண்டாமைக்கு எதிராதான் இருக்கு, ஜாதிக்கு எதிரா இல்ல. அதையேதான் நீங்களும் சொல்றீங்க, மகாத்மா... மதத்தை வெச்சுக்கிட்டு,
சமுதாயத்துல உங்களால எந்த சீர்திருத்தத்தையும் பண்ண முடியாது"ன்னு சொல்லிட்டு வந்தார்.

- 1939ல ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்துல இருந்தப்போவும், 1942 காலக்கட்டத்துலயும், இரண்டு முறை முதல்வர் பதவி பெரியாரை தேடி வந்தது... அவர் தலைமையில மந்திரி சபை அமைக்க சொல்லி ஆளுநர் சொன்னப்போ
'வேணாம், எனக்கு பதவியில ஆசை இல்ல'ன்னு பெரியார் சொல்லிட்டார். ராஜாஜி அவர்கள் கூட 'உங்க தலைமையில ஆட்சி அமைச்சா, நான் காங்கிரஸ் ஆதரவு வாங்கி தர்றேன்"னு சொன்னார். ஆனா, "பதவின்னு வந்துட்டா, நாம எவனை எதிர்க்குறோமோ அவன் கூடவே சமாதானமா போகவேண்டியிருக்கும். அதனால, சாகுற வரைக்கும் எந்த
அரசியல் பதவியும் வேணாம்ங்கிறதுல நான் ரொம்ப தெளிவா இருக்கேன்.. மானங்கெட்ட அரசியல்வாதிகளுக்கு வேணா அந்த பொழப்பு சரிப்பட்டு வரும், எனக்கு அது வேணாம்"னு சொல்லிட்டார். எந்தவொரு உட்சபட்ச பதவியையும், பணத்தையும் துட்சமா நினைச்ச ஒரு தலைவர் பெரியார்!

- 1947'ல இந்தியாவுக்கு சுதந்திரம்
கிடைச்சப்போ கூட, "அதிகாரம் பிரிட்டிஷ் காரன் கையிலருந்து, பார்ப்பனர்கள் கைக்கு போயிருக்கு அவ்ளோதான்... அடிமட்ட ஜனங்களுக்கு இது ஒரு துக்க நாள் மட்டுமே"ன்னு சொன்னார் பெரியார்!

- எல்லா தலைவர்களும் தன்னை பின்தொடர்ந்து வர்றவங்களை எல்லாம் "நான் சொல்றத செய்ங்க"ன்னு தான் சொல்வாங்க.
ஆனா, பெரியார் ஒருத்தர் தான் 'யார் எது சொன்னாலும் அதை நம்பாதீங்க. கேள்வி கேளுங்க. ஏன், நானே சொல்றதையும் கேள்வி கேளுங்க. அப்புறமா, நீங்க முடிவெடுங்க. உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை பண்ணுங்க"ன்னு சொன்னார்.

- ஒரு முறை, மெட்ராஸ் யூனிவர்சிட்டியோட vice chancelor சுந்தரவடிவேலு அவர்கள்
“இன்னைக்கு கிராமத்துல கூட படிச்சவங்க ஜாஸ்தியா இருக்காங்க, நிறைய கல்விக்கூடங்கள் இருக்குன்னா, அதுக்கு நீங்கதான் காரணம்"னு காமராஜரை புகழ்ந்தப்போ "இதுக்கெல்லாம் பெரியார்தான் காரணம். அவர்தானே அடித்தட்டு மக்கள் எல்லாரும் படிக்கணும்னு ஆசைப்பட்டார்"னு பெரியாரை நினைவுகூர்ந்தார் காமராஜர்
- "தமிழ்நாட்டுல காங்கிரஸ் கட்சியை ஒரு கோட்டையாக்க பாடுபட்டவர் பெரியார். அந்த கோட்டையை கட்டி எழுப்பிட்டு, அதை அனுபவிக்காம வெளியே போய்ட்டார். அவர் நினைச்சிருந்தா, எப்பவோ முதல்வர் ஆகியிருக்கலாம். ஆனா, மக்கள் தொண்டுதான் முக்கியம்ன்னு நினைச்சார். காங்கிரஸ்ல இருந்துட்டு பெரியார் சொன்ன
சமூகநீதி கொள்கையை செயல்படுத்துறேன்னு சிலர் என் மேல புகார் சொல்றான். அதுக்கு நான் பெருமைப்படுறேன்"னு சொன்னார் காமராஜர்

- பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்ததும் முதல்ல கையெழுத்து போட்ட "சுயமரியாதை திருமண சட்டம்" உருவாக முழுமுதற் காரணமா இருந்தவர் பெரியார்

- இந்தியாவிலேயே OBC ரிசர்வேஷனை
முதன்முதல்ல கொண்டுவந்த மாநிலம் தமிழ்நாடு. அதே போல, இந்தியாவிலேயே முதல்முறையா தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் நீதிபதி ஆன பெருமையும் பெரியார் அவர்களையே சேரும்

- "அனைத்து சாதி மக்களும் கோவில் கருவறைக்குள் போக அனுமதி வேண்டும்"னு போராட போறேன்னு பெரியார் சொன்னப்போ "அதுக்கு அவசியமே இல்ல.
எல்லா சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம்ன்னு சீக்கிரமே ஒரு சட்டம் கொண்டுவர்றேன்"னு சொல்லி அந்த போராட்டத்தை நிறுத்தினார் கருணாநிதி.

- பெரியாரை பத்தி பேரறிஞர் அண்ணா "உலக தலைவர்களில், தன்னுடைய காலத்திலேயே தன் கொள்கை வெற்றி பெறுவதைப் பார்த்த ஒரே ஒருவர் நீங்கள்தான்"னு சொன்னார். அதான்
உண்மையும் கூட. ஹிந்துத்துவா, தமிழ் தேசியம் உட்பட எந்த அரசியல் கொள்கையை முதன்முதல்ல பேசுனவங்களும் அந்த கொள்கை அரசியல்ரீதியா வெற்றியடையுறதை பார்க்கல!

- காமராஜர், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா, தொல்.திருமாவளவன், வைகோ, ராமதாஸ், உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, பகுஜன் சமாஜ்
கட்சியோட நிறுவனர் கன்ஷி ராம் உட்பட எத்தனையோ தலைவர்களோட சமூக நீதி கொள்கைகளுக்கு ரோல் மாடல் ஆக இருந்தவர் / இருப்பவர் பெரியார்

- பெரியார் அவர்கள் இறந்து போறதுக்கு சில நாள் முன்னால சொன்ன விஷயம் "இந்தி திணிப்பை எதிர்த்து ஜெயிச்சாச்சு. தெருவுக்குள்ள விடமாட்டேன்னு சொன்னவங்களை எதிர்த்து
போராடி ஜெயிச்சாச்சு. கோவிலுக்குள்ள விடமாட்டேன்னு சொன்னவங்களை எதிர்த்து ஜெயிச்சாச்சு.. ஆனா, நான் சாகும்பொழுது இப்போவும் உங்களை எல்லாம் சூத்திரனாவே விட்டுட்டு போறேனே... இந்த ஜாதியை இன்னமும் ஒழிக்க முடியலையே"ன்னு வருத்தப்பட்டார்.

- நாடு முழுக்க ஜெயிக்குற பாஜக, இன்னமும் தமிழ்நாட்டுல
மட்டும் நோட்டாவுக்கு கீழே இருக்குன்னா அதுக்கு காரணம் பெரியார் அவர்கள் வளர்த்தெடுத்த சமூகநீதி, சமத்துவ கொள்கைகள்!

.........

வரலாறு தெரிஞ்சவன், வாட்சப் வதந்தியை பார்த்து வாயை பொளக்காதவன் எவனுக்கும் இது தெரியும்... "ஆமா, பெரியார் தான்டா எல்லாம் பண்ணார்" ❤️❤️

#பெரியார்_மண் 🔥🔥🔥

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Second Show

Second Show Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SecondShowTamil

Mar 12
இங்கே பல பேருக்கு தலைவன் #சரத் எப்பேர்ப்பட்ட சம்பாவக்காரன்னு தெரியல.. ரெண்டே ரெண்டு incident சொல்றேன்

#2016 - அதிமுக கூட்டணியில வெறும் 2 சீட் கொடுத்தப்போ.. 'எனக்கு இங்க மரியாதை இல்ல.. எத்தனை சீட் குடுத்தாலும், இவங்க கூட இனிமே கூட்டணி இல்ல'ன்னு சொல்லிட்டு, பாஜக உடன்

1/4 Image
2/4

கூட்டணின்னு அறிவிச்சான் தலைவன்.. ஆனா, அடுத்த வாரமே 'நடிகர் சங்கத்துல பல கோடி மோசடி'ன்னு சொல்லி சங்க பதவிகள்லருந்து நீக்குனப்போ.. சட்டுனு ஜெயலலிதா கிட்டயே திரும்ப வந்து அதே 2 சீட்டை வாங்குனவன்டா தலைவன் 🔥

#2021 - மக்கள் நீதி மய்யம் கூட்டணியில இருந்தப்போ,
3/4

'எல்லா சீட்டையும் வெச்சு நானே என்ன பண்ணுவேன்?'னு ஆண்டவர் 40 தொகுதியை அள்ளி தலைவன் கிட்ட கொடுத்தாரு.. அங்கிருந்து போனவர் ஒரு வாரம் கழிச்சு திரும்ப வந்து 'என் கட்சியில இருக்குறதே 13 பேர் தான்.. எனக்கு 33 சீட் போதும்.. இனிமே தான் மீதி 20 பேரை தேடணும்'ன்னு சொல்லி
Read 4 tweets
Dec 29, 2023
அரசியலுக்கு வர்றதுக்கு முன்னால வரைக்கும், #விஜயகாந்த் தொடர்ச்சியா ஒவ்வொரு வருஷமும் குறைஞ்சது 3-4 படங்கள்ல நடிச்ச நடிகர்.

#விருதகிரி வரை அதுல 90% படங்களை தியேட்டர்ல பார்த்த ஒருத்தனா.. நான் வியக்குற ஒரு விஷயம் - கேப்டனோட choice of scripts.

நான் ஏழாவது படிச்சுட்டு இருந்தப்போ,

1/N Image
2/N

பொங்கலுக்கு 'வானத்தை போல' ரிலீஸ் ஆச்சு. நிஜமாவே குடும்பங்கள் கொண்டாடுன ஒரு blockbuster அது. அந்த படம் annual leave தாண்டி, எங்க ஊர்லயே 175 நாள் ஓடுச்சு. அதே annual leaveல, வானத்தை போல படத்துக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத 'வல்லரசு'ங்குற ஆக்ஷன் படம் தமிழ் புத்தாண்டு அன்னைக்கு
3/N

ரிலீஸ் ஆச்சு. அந்த படமும் பயங்கர ஹிட்! ஒரு பக்கம் 'வல்லரசு' 100 நாள் நோக்கி ஓடிட்டுருக்க, 'வானத்தை போல' வேற ஒரு தியேட்டர்ல rerelease ஆகி 50 நாள் ஓடுச்சு. கேப்டன் எல்லா தரப்பு ஆடியன்ஸ்க்குமான படங்கள் பண்ணனும்ங்குறதுல ரொம்ப தெளிவா இருந்திருக்கார்
ஒரு பக்கம் 'சொக்கத்தங்கம்',
Read 10 tweets
Dec 6, 2023
நேத்து போரூர்லருந்து அண்ணா நகர் வரை, மதுரவாயல் வழியா போனப்போ மெயின் ரோட்ல எங்கேயும் சுத்தமா தண்ணி இல்ல.. அதே போல கிண்டி, வளசரவாக்கம் சைட்ல தண்ணி இல்லன்னு சில போஸ்ட் பார்த்தேன். சரி, எல்லா பக்கமும் சரியாகிடுச்சு போலருக்குன்னு நெனச்சா...

வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை,

1/N

Image
Image
Image
2/N

சோழிங்கநல்லூர் படங்களை எல்லாம் பார்த்தா பகீர்னு இருக்கு 😰 வடசென்னை பக்கம் எல்லாம் இன்னும் மோசம்ன்னு சொல்றாங்க

ஆ ஊன்னா 2015 வெள்ளத்தோட compare பண்ணி, அது 'man made disaster.. மக்களுக்கு நிவாரண பொருட்கள் கொடுக்காம, மூட்டையில ஸ்டிக்கர் ஒட்டிட்டு இருந்தாங்க'னு போன கவர்ண்மெட்டை
3/N

மட்டுமே குறை சொல்லிட்டு 'நாங்க better'ன்னு காட்டிக்குறதே எரிச்சலூட்டுற விஷயமா இருக்கு.

அட்லீஸ்ட், 2015லயாவது எல்லா பக்கமும் படகுகள் போய் சேர்ந்துச்சு.. மக்கள் 2, 3 நாளைக்குள்ள பாதிக்கப்பட்ட ஏரியாக்களை விட்டு வெளியே வந்துட்டாங்க. இப்போ, 2023ல படகுகளும் பெருசா வரல.. அடிப்படை
Read 8 tweets
Nov 13, 2023
#JigarthandaDoubleX படம் பார்த்து 3 நாள் ஆச்சு. ஆனா அந்த படத்தோட 2nd half உண்டு பண்ண impact இன்னமும் இருக்கு. மத்த வேலைகள்ல ஈடுபட்டு இருக்கும்போது கூட, ஏதோ ஒரு கேரக்டரோ இல்ல அந்த கிளைமாக்ஸோ மைண்ட்ல ஓடிட்டே இருக்கு💖

சினிமா அப்படிங்குற மீடியம் இந்த படத்தோட கிளைமாக்ஸ்ல எப்படி

1/4 Image
2/4

பயன்படுதுங்குறது அவ்ளோ powerful ஆன ஒரு ஐடியா.. 🔥 இந்த படத்துல அந்த moment வர்ற இடம், ஒரு instant high கொடுத்தது.. அளவில்லாத goosebumps கொடுத்தது 🙏

இந்தியா முழுக்கவே பல மாநிலங்கள்ல, சினிமா ஒரு propaganda tool ஆகிவிட்ட நிலையில.. திரைப்படங்கள் என்ன பண்ணக்கூடும் அப்படிங்குறதை
3/4

ரொம்ப சத்தமான மொழியில, சினிமா மீதான பெரும்காதலோட சொல்லியிருக்கார் கார்த்திக் சுப்பராஜ். Take a bow, Director @karthiksubbaraj!

இந்த வருஷத்துல வந்த பெருவாரியான பெரிய ஹீரோக்கள் படங்கள் அல்லது பெரிய budget படங்கள், சும்மா பேருக்கு ஒப்பேத்துன படங்களாதான் இருந்தது. அந்த வகையில,
Read 4 tweets
Jul 2, 2023
'மாமன்னன்' படத்தோட கதையில பெரிய potential இருந்தது; #அசுரன் ரேஞ்சுக்கு mainstream ரசிகர்களை கவர்ந்தந்திருக்கூடும்.. ஆனா, அதுக்கு சுவாரஸ்யமான திரைக்கதை இருந்திருக்கணும்

அற்புதமான கதை மட்டுமே அற்புதமான சினிமா ஆகிடாது அப்படிங்குறதுக்கு மிக சிறந்த உதாரணம் - #ஜிப்ஸி, #மாமன்னன்,

1/N
2/N

#நட்சத்திரம்நகர்கிறது போன்ற திரைப்படங்கள்.

நல்ல writing இல்லாம, எவ்வளவு முக்கியமான அரசியலையோ / மக்களுக்கு அவசியமான விஷயத்தையோ ஒரு படம் பேசுனாலும்.. அது வெகுஜன ரசிகர்களை சென்றடையாது. அதுக்குகு, ஆடியன்ஸை குறை சொல்லவும் முடியாது

அழகியல், குறியீடு எல்லாம் வலுவான திரைக்கதைக்கு
3/N

அப்புறம்தான்.. பாயசத்துல கடைசியில சேர்க்குற முந்திரி பருப்பு மாதிரி.

'மாமன்னன் சூப்பராதான் இருக்கு.. மாரி செல்வராஜ் படங்கள் இந்த சமூகத்துக்கு தேவை'ன்னு சிலர் முட்டு கொடுக்குற மாதிரி பேசுறாங்க.. மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவுக்கு தேவை அப்படிங்குறதுல மாற்றுக்கருத்தே இல்ல. ஆனா,
Read 11 tweets
May 5, 2023
ஆசியாலயே முதல்முறையா ஒரு தமிழன் 2 ஆஸ்கர் விருது ஜெயிக்குறப்போ, ஒரு பாராட்டு விழா வெச்சா.. அங்கே போய் "ஆஸ்கர் விருதெல்லாம் பெரிய விஷயம் இல்லையே"ங்குற ரேஞ்சுல காண்டுல பேசுறது..

1000, 2000, 5000 காசு போட்டு live concertல பாட்டு கேட்க வந்த ரசிகன்கிட்ட "உன்னால தண்ணி குடிக்காம

1/N Image
2/N

இருக்க முடியாதா? என் இசையால்தானே நீங்கள் வாழ்கிறீர்கள்"னு பேசுறது.

வேற ஒரு மேடையில "இந்தியாலயே நான் மட்டும்தான் உண்மையான composer.. மத்தவனுக்குலாம் பாட்டே போட தெரியாது"ன்னு தற்பெருமை + பொறாமை காம்பினேஷன்ல நான்ஸ்டாப்பா பேசுறது..

கேள்வி கேட்க வர்ற ஜர்னலிஸ்ட் கிட்ட "உனக்கு
3/N

அறிவு இருக்குங்கிறதை எந்த அறிவை வெச்சு சொல்ற?"ங்குற ஏலியன் லெவல் கேள்விகளால lock பண்றது

மனோபாலா மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்குறப்போ கூட "என்னை காண காத்து கிடந்த நூத்துக்கணக்கான இயக்குனர்கள்ல ஒருத்தர்"னு தன்னை முன்னிலைப்படுத்தியே பேசுறது.. ஏதோ உலகமே தன்னை சுத்தி சுழலுதுங்குற
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(