🌺மெட்ராஸ் பீச்சில் இன்று மாலை தர்ணா....🌺

#நாட்டுமக்களுக்கோர்எச்சரிக்கை...

அஸ்வினி குமாரர்களான நகுலன், சஹதேவன் இருவரும் வானில் பேசிக்கொண்டே உலவுகையில், நகுலன் பூமியில் எதையோ உற்றுப் பார்த்தான். இதைக் கண்ட சஹதேவன் என்னென்று விசாரிக்க, நகுலன்....
“தம்பி... புவியில் ஜம்புத்வீபத்தில், நாம் வாழ்ந்த பரத கண்டத்தின் தெற்குத் திசை இறுதியில் இருக்கும் சிறு பகுதியில் ஓரிடத்தில் பெரிய கூட்டம்... அதைத்தான் பார்க்கிறேன்... வா... நாமும் சென்று என்னவென்று பார்க்கலாம்...” என்றான்.

அது அடையாறு ஏரியா... அங்கே ஒரு வனப்பகுதி...
அதிசயமாக, அதிக மனிதர்களின்றி இருக்கிறது. அங்கே ஆயிரக்கணக்கான நாய்களின் கூட்டம்... அவற்றின் தலைவர் ஒரு பெரிய கல்லில் ஏறி நின்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அருகில் ஏரியா தலைவர்களும், எதிரில் தொண்டர்களும். சஹதேவனுக்கு அவற்றின் பேச்சை நகுலன் அப்படியே மொழிபெயர்ப்பு செய்கிறான்...
** “இல்லை தலைவா… நீ சொல்றது சரியில்லை…”

“பொறுமையாக் கேளுங்கடா… நான் இன்னும் முழுசாப் பேசியே முடிக்கலை….”

“ சரி தலை…. மொதல்ல நீங்க பேசுங்க தல. நாங்க கடைசியா கேள்விக்கு வரோம்…”

“சரி. இங்க பாருங்கப்பா… மொத நான் ஒன்னு சொல்லிக்கறேன்… நாம் ரொம்ப உயர்வான ஜாதி…
நம்மளை சாமியா வச்செல்லாம் கும்புடுறாங்க… அந்தளவுக்கு, பெரியவங்க நம்ம இனத்துக்கு மரியாதை சேத்து வச்சிட்டுப் போயிருக்காங்க. நாம அதைக் காப்பாத்தணும். அதுக்கு ஒரு சிறு இழுக்கு வந்தாலும் இனி பொறுமையா இருக்கக் கூடாது…”

”இதைத்தான தல நாங்களும் சொல்றோம்…”
“டேய்… இருடா…

இவனுக நம்மளை அடக்கி, கட்டிப் போடறானுக …. சரி சோறு போட்ட கைதானேன்னு வுட்டோம்…

அடுத்து, ராவைக்கும் பகலுக்கும் வெயில் மழை பாக்காம தெருவுல நிக்க வக்கிறானுக … அப்பவும் சரி… செஞ்சோத்துக் கடனுக்கு நின்னோம்…

அப்பன்லேந்து, ஆத்தாக்காரி, மவன், மவ எல்லாம்
பறக்குற தட்டை வீசி, வீசி நம்பளை எடுத்தா-ன்னானுக… சரி… நம்மளால நாலு பேரு சந்தோஷமா இருந்தா சரின்னு அதையும் செஞ்சோம்…

நாம காஞ்சு கிடக்க, அவனுக ஃபாரின் வரை போய், டாக்டர் வைத்தியமெல்லாம் செஞ்சு, தனக்கு பிள்ளை பெத்துக்கிட்டானுக…. சரி… குழந்தை தானே வருது…
அதுக்கிட்ட என்ன பொறாமைனு அதையும் விட்டோம்…

சின்னதா ஒடம்புக்கு வந்தாலும், பாக்க வக்கில்லாம கழட்டி விட்டுத் துரத்தி அடிச்சானுக….

சரிதான்… கட்டின பொண்டாட்டியையே புள்ளைகளோட கழட்டி விடுறவனுக்கு இது பெரிசா…. ஆண்டவன் பாத்துப்பான்னு போயிட்டோம்…
எவன் வம்புக்கும் போகாம, நாம் உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்தா… இவனுக கோவத்துக்கு நம்ம ஜாதியை இழுத்துப் பேசுறானுக…. இதைப் பொறுக்க முடியாது….”

“ஆமாம் தல…. பின்ன…. நாம என்ன இங்க இருக்கற ஹிந்து ஜாதிங்களா?? எத்தனை அசிங்கமாப் பேசினாலும்…. அத்த துடைச்சிவிட்டு போவுறதுக்கு?
இல்லை நாம அவனுக அடிமைகளா…. நம்மளப் போலவே நாக்கையும் தொங்கப் போட்டுக்கிட்டு பின்னாடியே போவுறானுங்களே சொரனை கெட்டு, அப்புடிப் போவுறதுக்கு...”

“ஆமா தலைவா… இதை வுடக் கூடாது. அவன் பேசுனவனை… மவனே...”

“லே... சைதாப்பேட்டை… கொதிக்காத… தோ… மயிலாப்பூர் ஆளுங்களுந்தான் இருக்கான்…
கம்முனு இல்லை?? நீ ஏன் சும்மா கத்துற??”

”இன்னா தலைவா…. அவிங்களோட எங்களை வச்சுப் பேசுற…. அவனுக கண்டுக்கிரவே மாட்றானுவ…. சொரனையத்துப் போயிட்டானுகளா…. இல்லை…. ஒதுங்கிப் போறானுகளான்னு தான் தெரில்ல….

ஆனா நான் சும்மா கருவாடும் மீனுமா தின்னு நல்ல ரோசத்தோட இருக்கேன்….
என்னைய மிரட்டாத தலைவா அடங்கிப் போகச் சொல்லி….”

“இவன் பேசுறது சரியில்லை தலைவா. நாங்க அமைதியா இருந்தா என்ன தப்பு? நம்ம ஆளுங்களே எங்களை கிண்டல் செஞ்சா, அடுத்து நாங்க ஒதுங்கி வேற இடம் தேடிப் போறோம் தலைவா…. வேணவே வேணாம் இந்த ஊரு…”

“டேய்…. மயிலாப்பூரு…. கோவப்படாதடா….
சைதாப்பேட்டை ஆதங்கத்துல சொல்லுது…..”

“தாம்பரம்… ஏதோ நீ சொன்னா சரியா இருக்கும்… சரி… நீங்க பேசுங்க தலை…”

“சரிடா… அடுத்து இதுக்கு என்னவெல்லாம் செஞ்சு நம்ம எதிர்ப்பைக் காட்டலாம்னு ஏதாவது நல்ல ஐடியா சொல்லுங்கடா… நம்ம சண்டையை அப்பறம் வச்சுக்கிரலாம்…”
“தல… நம்ம ஆளுங்க எங்க இருந்தாலும், வெளிநடப்பு செய்யச் சொல்லலாம்… அதுவும் சும்மா இல்ல தல…

நல்லா நாமளே நம்ம கழுத்துப் பட்டை பெல்ட்டு எல்லாத்தையும் புடுங்கி வுட்டுகினு… தெருவுல அழுதுகிட்டே ஓடிவந்து ரகளை செய்யலாம் தல…

சும்மா ஸ்டண்ட் அடிச்சாப்ல இருக்கும்ல…”
“நல்ல வேளைடா… உன் பட்டையைக் கிழிச்சுக்கலாம்ன… அடுத்தவன் பட்டையை இதே போல கிழிச்சு கூட்டத்துல அவமானப் படுத்தி கிடுத்தி வச்சிராதீங்கடா…

யம்மா மகளிரணி… எதுக்கும் உங்க ஆளுங்களோட ஒதுங்கியே நில்லு…”

“தலீவா… இந்த ரெண்டு கூத்தும் ஏற்கனவே டி.வி. பொட்டில
எல்லாரும் கண்டுக்கிட்டானுவ… நாம புதுசா ஏதாச்சும் செய்யணும் தலீவா…”

“இதெல்லாம் வாணாம் தலை… நம்ம வேற ஏதாச்சும் செய்யலாம்… நீ வேண்ணா உண்ணாவிரதம் அனௌன்ஸ் பண்ணு தலை…

காலவரையற்ற உண்னாவிரதம்னு போடு… காலைல நல்லா ஒரு கட்டு கட்டிட்டு, அப்படியே சோந்து போய் வந்து கவுந்துக்க...
அதுவும்... உன் ராயப்பேட்டை வூட்டுல…. நாங்க ஆளுங்க சுத்தி நின்னுக்குறோம்….

உனக்கும் வயசாயிடுச்சு தலை…. அதனால சீக்கிரமா….”

“டேய்…. அண்ணா நகரு…. போதும்டா…. சிரிப்பு காட்டாத…. ஏற்கனவே நம்ம ஆளுங்களே நிறைய பேரு தலைக்கு வயசாயிடுச்சுன்னு சொல்லிக்கிட்டிருக்கு….
இதுல இந்தக் கூத்தெல்லாம் அடிச்சா அப்பறம் மனுசனுக்கும் நமக்கும் வித்தியாசம் இருக்காது….”

“ஹா…. ஹா…. ஹா….”

“டேய்…. எல்லாரும் சிரிச்சது போதும்…. என்னடா எக்மோரு…. நீ மாத்தரம் கம்முனு இருக்க?”

“தலைவா… நான் ஒன்னு சொல்லவா… இதெல்லாம் வேணாம்…
நாம எப்பவும் அரசுக்கு கட்டுப்பட்டு நடக்கணும். இத்தனை வருஷம் கழிச்சு இப்பத்தான் நமக்கு ஒரு நல்ல பொதுத் தலைவர் கிடைச்சிருக்காரு....

அவர் தன் ஊரிலயிருந்து அப்பப்போ எல்லா இடமும் சுத்தி, எல்லாரையும் ஃப்ரண்டு புடிச்சு, நமக்கு எவ்வளவோ நல்லது செய்யறாரு…
அவரு பேரைக் கெடுக்காதபடிக்கு ஒழுங்க ஒரு அமைதிப் பேரணி…. இல்லன்னா மெரீனாவுல ஒரு அமைதிப் போராட்டம் நடத்தலாம்…

எங்க அந்த ட்ரிப்ளிகேன்?? நீங்க சொல்லுங்க… இது ஓ.கே.வா??”

“ஓ.கே. தான்… ஆனா வேற ஒரு ப்ரச்சனை… நாம ஊர்வலமோ, தர்ணாவோ நடத்த விடமாட்டானுக…
அதுக்கு பர்மிஷன் வாங்குறது அவ்வளவு ஈஸி இல்லை…”

“அது எப்புடிங்க சாரே? இவனுங்க தனக்குள்ள என்ன சண்டை வேணா போட்டுக்கட்டும்… அதுக்காக இவனுங்களை நம்ம பேரைச் சொல்லி திட்டுறதும்… நம்ம பேரைச் சொல்லி வெளியேத்துறதும் மட்டும் சரியா??”

“டேய் சைதாபேட்டை… ஏன்டா ரொம்ப சூடாவுற?
நம்ம எதிர்ப்பு, இவனுக கோவத்துல ஒருத்தனை வெளிய போன்னு சொல்ல நம்ம ஜனத்துப் பேரைச் சொல்லி எகுறுனதுனால தானே… நீ குதிக்கிற… இதே வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு எவனாவது சவுண்டு வுடுறானா பாரு…”

“அது எனக்குத் தேவையில்லை தலைவா… நாளைக்கு நீ அவன் சொன்னதைக் கேக்கலைன்னா,
அல்டாப்பா எதிர்கட்சிக்குத் தாவுவானுக பதவி கேட்டு… நாங்க அப்படியா…”

“டேய்… நமக்குள்ள அடிச்சிக்கிட்டா அப்பறம் நாம எதிர்க்கறவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? வாயை மூடு…

ட்ரிப்ளிகேன்… நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது… நாம அமைதியான தர்ணா செய்யணும்… செய்யறோம்…
ஏற்பாடு செய்ங்க அதுக்கு…”

“சரிங்க தலைவா…”

“என்னடா எல்லாருக்கும் சரியா… தர்மத்தோட நாம போரிடலாம்டா… கொஞ்ச கொஞ்சமா இனி நம்ம ஒத்துமையை அதிகம் செய்யணும். இல்லைன்னா அந்த மன்ன்ன்

“டேய்… அப்புடியே மொபைல்ல ஒரு க்ரூப் மெஸேஜைத் தட்டி வுடுங்கடா…
எல்லா ஊர்லயும் பேனர் ரெடி பண்ணி மாட்டச் சொல்லு… அப்படியே எதுக்கும் ஒரு ஐயாயிரம் பேரை ரெடியா இருக்கச் சொல்லு… ரொம்ப ஏதாச்சும் பண்ணானுகன்னு வை…

ஒரு கால் மொபைல்ல, அத்தன பேரும் வந்து குவியணும் அரை மணியில… அப்பறம் நம்ம அமைதி மாறி சுய உருவம் காட்டையில தான் தெரியும் நாம யாருன்னு
ஆனா இது சேஃப்டிக்கு மட்டும் தாண்டா… இத்த வச்சு எவனும் வாலாட்டக் கூடாது அநாவஸ்யமா…”

“சரி தலை… நீ சொன்னா சரிதான்… ஆனா நம்மளைப் பாத்து இவனுக வெக்கப்படணும்… அதே சமயம் பயம் வரணும்… இனி நம்மளாண்ட வாலாட்டுனா… இவனுக வாலை ஒட்ட நறுக்கிருவோம்னு…”
“வரும்டா… குரல் இருக்குற எடத்தை விட, அமைதியா ஆப்பு அடிக்கறவனைக் கண்டாத்தான், எப்ப என்ன செய்வானோன்னு பயம் வரும். அத்த நம்ம தோட்டம் சொல்லிக் குடுத்துச்சு. அதே போல அமைதி ஆப்பு அடிக்கிறோம்…

மவனே… அதுக்கு மேல எந்த ராசா எந்த பட்டணம் போனாலும்… நம்மைப் பேசினா விழுந்து கடிக்கிறோம்…”

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vasavi Narayanan (Modi is My Familyman)

Vasavi Narayanan (Modi is My Familyman) Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VasaviNarayanan

Sep 2
🌺WHY IS USA, ANGRY WITH INDIA - THE BARE TRUTH.🌺

Behind the American perspective is not humility, but a wrong politics is hidden.

There is such a conditional clause which... India has refused to even touch.

Everyone asks, Why is India not signing all those conditions? Image
Trump is pushing.
But India is standing strong.

Let me explain it to you...

India - America trade target:
*Dream of reaching $500 billion by 2030.*

Sounds great, right? But..
There was a condition behind that dream:
Genetically Modified (GM) seeds/crops.
India said – *No* Image
America said – *Sign*
India: *Never*

Because this is not just trade. This is a matter of national independence.
GM seeds are not seeds.
They are software — patented software.

*Sow once.* Always *Keep paying.*

Your crops are no longer yours... Image
Read 16 tweets
Aug 8
🌺நம் எதிர்காலம்??.??.??🌺

Scary😩😩

இந்த காணொளியை முழுதும் பாருங்கள். இது இன்னும் 10 ஆண்டுகளுக்குள் நடந்துவிடும்...😮

AI யை நம் செயல்களின் உதவிக்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாமே ஒழிய அதற்கு முக்கியத்துவம் தந்தால் நம் குணம் நம்மை அழித்துவிடும்.
பல துறைகளில் நவீண யந்திரங்கள் வந்து மனிர்களின் வேலையைப் பறித்தன. பணத்தாசை கொண்ட முதலாளிகளும் தொழிலாளி சம்பளத்தை பாரமாக எண்ணினர்.

பல ஆண்டுகள் யந்திரம் வேலை செய்தாலும், காலமாற்றத்தால் பழைய தொழில்நுட்பம் புதியதாக மாற்றுகையிலும், சர்வீஸ் , கோளாறு போன்றவற்றில் செலவு செய்கையிலும்
ஆகும் பணத்தளவைத் தொழிலாளிகள் சம்பளத்துடன் ஒப்பிட்டால், மனிதைரை வேலையில் வைப்பதுதான் சிறந்தது. பல குடும்பங்கள் பிழைக்கும்.

அதன் அடுத்த பரிணாமமான AI மூலம் மனிதன் புறக்கணிக்கப்பட வாய்ப்பு அதிகம். இதற்கும் காரணம் நாமே...

மத்தியஅரசு AI-ஐ எப்படிப் பயண்படுத்தக் கூடாது என்பதைத்தான்
Read 6 tweets
Jul 24
🌺அடுத்த சுதந்திரப் போரின் அடித்தளமா??🌺
நேற்று கர்நாடகாவில் அதிர்ச்சிகரமான தீர்ப்பு ஒன்றை நீதிபதி டி. வெங்கட் நாயக் வழங்கியிருக்கிறார்.

ஜம்கந்தியில் உள்ள ராமதீர்த்தக்கோவிலில் மூன்று இஸ்லாமியர்கள் வேலை வாகனங்கள் தருவதாக உறுதியளித்தும்,
organiser.org/2025/07/24/304…
துண்டுப் பிரசுரங்கள் அளித்தும் தங்கள் மதத்தைப் பிரச்சாரம் செய்ததோடு, ஹிந்து மதத்தைக் கேவலமாகவும் பேசியுள்ளனர்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்-ஐ கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, வழக்கைப் பதிந்தவர் இதில் நேரடியாகத் தொடர்பில் இல்லாதவர் என்றும்,
அந்த இஸ்லாமியர்களின் பிரசாரத்தால் மதமாற்றத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர் மட்டுமே வழக்கு பதிய முடியுமென்றும் கூறியுள்ளது நீதிமன்றம்.

இந்த விஷயம் புரியவில்லை. ”ஒருவர் கொலை செய்யப்பட்டாலோ, அல்லது ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்தாலோ, பாதிப்புக்கு உட்பட்டவர்தான் வந்து வழக்கினைப்
Read 12 tweets
Jun 10
😱 *திடுக்கிடும்_உண்மை....!!* 😱

● சாக்லேட் கிட்காட்டில் மாட்டிறைச்சியில் இருந்து எடுக்கப்பட்ட சாற்றை சேர்ப்பதை நெஸ்லே நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது !!

● ஃபேர் அண்ட் லவ்லி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில், க்ரீமில் பன்றிக் கொழுப்பிலிருந்து
எண்ணெய் கலந்திருப்பதாக ஒப்புக்கொண்டது.
● ஐரோப்பாவின் பல நாடுகளில் Vicks தடைசெய்யப்பட்டுள்ளது..! அங்கு அது ஸ்லோ பாய்சன் என அறிவிக்கப்பட்டுள்ளது.
● Lifebuoy என்பது குளியல் சோப்பும் அல்லது கழிப்பறை சோப்பும் அல்ல! ஆனால் அது விலங்குகளைக் குளிப்பாட்டப் பயன்படும் கார்போலிக் சோப் !
ஐரோப்பா நாய்களுக்காக Lifebuoy பயன்படுத்துகிறது! நம் நாட்டில் மில்லியன் கணக்கான மனிதர்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள் !!
● கோக், பெப்சி உண்மையில் ஒரு டாய்லெட் கிளீனர், அதில் 21 வகையான பல்வேறு விஷங்கள் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் கேன்டீனில்
Read 13 tweets
May 4
🌺உலகின் 8'வது, 9'வது மற்றும் 10'வது அதிசயம் இந்தியாவில் தான் உள்ளது. 🌺

8️⃣வது அதிசயம்: கரீனா கபூரின் குழந்தைகள் முஸ்லீம் ஒருவரை மணந்த பிறகு முஸ்லிம்களாகப் பிறந்தனர். ஆனால் "ஃபெரோஸ் கானை" திருமணம் செய்த பிறகு "இந்திரா எனும் மைமுனா பேகம்" குழந்தைகள் "பிராமணர்களாக" பிறந்தார்கள்?😅
9️⃣வது அதிசயம்:

தீவிர காங்கிரஸ்காரரான "அஜித் ஜோகி" அவர் ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவ மதத்தின்படி அடக்கம் செய்யப்பட்டார்.
அவரது மகன் அமித் ஜோகி, காங்கிரஸ் தலைவர்களுடன் சேர்ந்து தனது மறைந்த தந்தையின் அஸ்தியை நர்மதா நதியில் கரைத்தார். எரிக்கப்படாத ஒருவரின் "சாம்பல்" எங்கிருந்து வந்தது?
😂
"காங்கிரஸால் எதையும் செய்ய முடியும், "கான் மற்றும் வத்ரா"வை "காந்தி" ஆக்க முடியுமானால்,
இது முடியாதா?😅

🔟வது அதிசயம்: "நேரு"க்கு முன் "நேரு" இல்லை. "நேரு"விற்குப் பிறகு "நேரு" இல்லை!

முழு வரலாற்றிலும், மோதிலால் & ஜவஹர் லால் ஆகிய 2 நேருக்கள் மட்டுமே பூமியில் பிறந்துள்ளனர்.
Read 6 tweets
Apr 24
🐵 ராம ராம ராம ராம 🐵

நீங்கள் அனுமனை தரிசித்தபோதோ அல்லது அனுமனின் படத்தைப் பார்த்தபோதோ கவனித்திருக்கலாம் அனுமனின் வாலில் ஒரு மணி தொங்கிக் கொண்டிருக்கும். வாலில் அந்த மணி எப்படி வந்தது தெரியுமா? அது ஒரு கதை...

🍒 தந்தை தசரதன் தன் பத்தினி கைகேயிக்கு கொடுத்த வாக்குப்படி Image
ஸ்ரீராமன் சீதா பிராட்டியுடனும் தன் சகோதரன் லட்சமணனுடனும் 14 ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும் அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே.

சீதாப்பிராட்டியை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன், ஸ்ரீ ராமன்
வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்களில் பல வகை. உயரமானவை, குட்டையானவை என்று. அதில் "சிங்கலிகா" என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை. இதில் ஆயிரம் வானரங்கள். இவை எப்படி போர் புரியும் என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
Read 22 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(