அஸ்வினி குமாரர்களான நகுலன், சஹதேவன் இருவரும் வானில் பேசிக்கொண்டே உலவுகையில், நகுலன் பூமியில் எதையோ உற்றுப் பார்த்தான். இதைக் கண்ட சஹதேவன் என்னென்று விசாரிக்க, நகுலன்....
“தம்பி... புவியில் ஜம்புத்வீபத்தில், நாம் வாழ்ந்த பரத கண்டத்தின் தெற்குத் திசை இறுதியில் இருக்கும் சிறு பகுதியில் ஓரிடத்தில் பெரிய கூட்டம்... அதைத்தான் பார்க்கிறேன்... வா... நாமும் சென்று என்னவென்று பார்க்கலாம்...” என்றான்.
அது அடையாறு ஏரியா... அங்கே ஒரு வனப்பகுதி...
அதிசயமாக, அதிக மனிதர்களின்றி இருக்கிறது. அங்கே ஆயிரக்கணக்கான நாய்களின் கூட்டம்... அவற்றின் தலைவர் ஒரு பெரிய கல்லில் ஏறி நின்று பேசிக் கொண்டிருக்கிறார்.
அருகில் ஏரியா தலைவர்களும், எதிரில் தொண்டர்களும். சஹதேவனுக்கு அவற்றின் பேச்சை நகுலன் அப்படியே மொழிபெயர்ப்பு செய்கிறான்...
** “இல்லை தலைவா… நீ சொல்றது சரியில்லை…”
“பொறுமையாக் கேளுங்கடா… நான் இன்னும் முழுசாப் பேசியே முடிக்கலை….”
“சரி. இங்க பாருங்கப்பா… மொத நான் ஒன்னு சொல்லிக்கறேன்… நாம் ரொம்ப உயர்வான ஜாதி…
நம்மளை சாமியா வச்செல்லாம் கும்புடுறாங்க… அந்தளவுக்கு, பெரியவங்க நம்ம இனத்துக்கு மரியாதை சேத்து வச்சிட்டுப் போயிருக்காங்க. நாம அதைக் காப்பாத்தணும். அதுக்கு ஒரு சிறு இழுக்கு வந்தாலும் இனி பொறுமையா இருக்கக் கூடாது…”
காலவரையற்ற உண்னாவிரதம்னு போடு… காலைல நல்லா ஒரு கட்டு கட்டிட்டு, அப்படியே சோந்து போய் வந்து கவுந்துக்க...
அதுவும்... உன் ராயப்பேட்டை வூட்டுல…. நாங்க ஆளுங்க சுத்தி நின்னுக்குறோம்….
உனக்கும் வயசாயிடுச்சு தலை…. அதனால சீக்கிரமா….”
“டேய்…. அண்ணா நகரு…. போதும்டா…. சிரிப்பு காட்டாத…. ஏற்கனவே நம்ம ஆளுங்களே நிறைய பேரு தலைக்கு வயசாயிடுச்சுன்னு சொல்லிக்கிட்டிருக்கு….
இதுல இந்தக் கூத்தெல்லாம் அடிச்சா அப்பறம் மனுசனுக்கும் நமக்கும் வித்தியாசம் இருக்காது….”
“ஹா…. ஹா…. ஹா….”
“டேய்…. எல்லாரும் சிரிச்சது போதும்…. என்னடா எக்மோரு…. நீ மாத்தரம் கம்முனு இருக்க?”
“தலைவா… நான் ஒன்னு சொல்லவா… இதெல்லாம் வேணாம்…
நாம எப்பவும் அரசுக்கு கட்டுப்பட்டு நடக்கணும். இத்தனை வருஷம் கழிச்சு இப்பத்தான் நமக்கு ஒரு நல்ல பொதுத் தலைவர் கிடைச்சிருக்காரு....
அவர் தன் ஊரிலயிருந்து அப்பப்போ எல்லா இடமும் சுத்தி, எல்லாரையும் ஃப்ரண்டு புடிச்சு, நமக்கு எவ்வளவோ நல்லது செய்யறாரு…
அவரு பேரைக் கெடுக்காதபடிக்கு ஒழுங்க ஒரு அமைதிப் பேரணி…. இல்லன்னா மெரீனாவுல ஒரு அமைதிப் போராட்டம் நடத்தலாம்…
எங்க அந்த ட்ரிப்ளிகேன்?? நீங்க சொல்லுங்க… இது ஓ.கே.வா??”
“ஓ.கே. தான்… ஆனா வேற ஒரு ப்ரச்சனை… நாம ஊர்வலமோ, தர்ணாவோ நடத்த விடமாட்டானுக…
அதுக்கு பர்மிஷன் வாங்குறது அவ்வளவு ஈஸி இல்லை…”
“அது எப்புடிங்க சாரே? இவனுங்க தனக்குள்ள என்ன சண்டை வேணா போட்டுக்கட்டும்… அதுக்காக இவனுங்களை நம்ம பேரைச் சொல்லி திட்டுறதும்… நம்ம பேரைச் சொல்லி வெளியேத்துறதும் மட்டும் சரியா??”
“டேய் சைதாபேட்டை… ஏன்டா ரொம்ப சூடாவுற?
நம்ம எதிர்ப்பு, இவனுக கோவத்துல ஒருத்தனை வெளிய போன்னு சொல்ல நம்ம ஜனத்துப் பேரைச் சொல்லி எகுறுனதுனால தானே… நீ குதிக்கிற… இதே வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு எவனாவது சவுண்டு வுடுறானா பாரு…”
“அது எனக்குத் தேவையில்லை தலைவா… நாளைக்கு நீ அவன் சொன்னதைக் கேக்கலைன்னா,
அல்டாப்பா எதிர்கட்சிக்குத் தாவுவானுக பதவி கேட்டு… நாங்க அப்படியா…”
ட்ரிப்ளிகேன்… நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது… நாம அமைதியான தர்ணா செய்யணும்… செய்யறோம்…
ஏற்பாடு செய்ங்க அதுக்கு…”
“சரிங்க தலைவா…”
“என்னடா எல்லாருக்கும் சரியா… தர்மத்தோட நாம போரிடலாம்டா… கொஞ்ச கொஞ்சமா இனி நம்ம ஒத்துமையை அதிகம் செய்யணும். இல்லைன்னா அந்த மன்ன்ன்
“டேய்… அப்புடியே மொபைல்ல ஒரு க்ரூப் மெஸேஜைத் தட்டி வுடுங்கடா…
எல்லா ஊர்லயும் பேனர் ரெடி பண்ணி மாட்டச் சொல்லு… அப்படியே எதுக்கும் ஒரு ஐயாயிரம் பேரை ரெடியா இருக்கச் சொல்லு… ரொம்ப ஏதாச்சும் பண்ணானுகன்னு வை…
ஒரு கால் மொபைல்ல, அத்தன பேரும் வந்து குவியணும் அரை மணியில… அப்பறம் நம்ம அமைதி மாறி சுய உருவம் காட்டையில தான் தெரியும் நாம யாருன்னு
ஆனா இது சேஃப்டிக்கு மட்டும் தாண்டா… இத்த வச்சு எவனும் வாலாட்டக் கூடாது அநாவஸ்யமா…”
“சரி தலை… நீ சொன்னா சரிதான்… ஆனா நம்மளைப் பாத்து இவனுக வெக்கப்படணும்… அதே சமயம் பயம் வரணும்… இனி நம்மளாண்ட வாலாட்டுனா… இவனுக வாலை ஒட்ட நறுக்கிருவோம்னு…”
“வரும்டா… குரல் இருக்குற எடத்தை விட, அமைதியா ஆப்பு அடிக்கறவனைக் கண்டாத்தான், எப்ப என்ன செய்வானோன்னு பயம் வரும். அத்த நம்ம தோட்டம் சொல்லிக் குடுத்துச்சு. அதே போல அமைதி ஆப்பு அடிக்கிறோம்…
மவனே… அதுக்கு மேல எந்த ராசா எந்த பட்டணம் போனாலும்… நம்மைப் பேசினா விழுந்து கடிக்கிறோம்…”
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், அறுவை சிகிச்சை இன்றி “சிறுநீரக கற்களை அகற்றும் கருவி” இன்று முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு ரூ.4000/- (நான்காயிரம் ரூபாய்) செலுத்தி
இச்சலுகையை பெற்றுக் கொள்ளலாம் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது...
ஒரு மன்னனுக்கு நிறைய குழந்தைகள். அந்த நாட்டின் சட்டப்படி மன்னனின் வாரிசுகளில் யாருக்கு மக்களிடம் அதிக செல்வாக்கு இருக்கிறதோ அவர்களே மன்னனாக முடியும்.
அந்த வகையில் மன்னனின் பிள்ளைகளில் ஒருவன் மக்களிடம் அவன் அந்த நாட்டு அரசனானால்
அவர்களுக்கு நிறைய சலுகைகள் வழங்குவதாக உறுதியளித்தான். அவனின் பேச்சு மக்களை ஈர்த்தது. மக்கள் அதில் மதி மயங்கினர். அதனால் அவனை அமோகமாக ஆதரித்தனர். அவனும் அந்நாட்டின் மன்னனானான்.
ஆனால் அவன் மன்னனான பின் அவன் கொடுத்திருந்த உறுதிமொழிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.
இதனால் மக்கள் வெறுப்படைந்து இருந்தனர். மக்களின் சார்பாக மன்னரிடம் மெய்க்காப்பாளனாக வேலை பார்த்த ஒருவன் அவரிடம் கேட்டான்,
"மன்னா! உங்கள் வார்த்தைகளை நம்பித்தான் மக்கள் உங்களுக்கு ஆதரவளித்தார்கள். ஆனால் நீங்கள் அவர்களின் ஆதரவை மட்டும் பெற்றுக்கொண்டு அவர்களுக்குச் செய்வதாகச் சொன்ன
ஒரு பிரபலமான இஸ்லாமிய புக் ஸ்டாலில் கூட்டத்தைப் பார்த்து, நானும் லைனில் நின்றேன். 'குர்ஆன்-இ-ஷெரீப்' புத்தகத்தை மக்களுக்கு இலவசமாக விநியோகித்து வருவதாக அறிவிக்கப்பட்டது.
அமைதி, uஅன்பு மற்றும்
பரஸ்பர நல்லிணக்கம்
ஆகியவை இஸ்லாத்தின் செய்தி எனவும் கூறப்பட்டது.
சரி, ஆர்வத்தினால், குர்ஆனை இலவசமாகப் பெறுவதற்காக வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தையும் நிரப்ப முடிவு செய்தேன், அதில் பெயர்-முகவரி மற்றும் மொபைல் எண்ணை எழுத கேட்கப்பட்டு இருந்தது,
மக்களை பின்னர் தொடர்பு கொள்ள முடியும் என்ற காரணம் என எண்ணி கொண்டேன்.
திடீரென்று ஒரு மனிதர் தனது மனைவியுடன் ஸ்டாலுக்கு வந்தார். பொது வாழ்த்துக்குப் பிறகு, அவர் தனது எண்ணத்தையும் முஸ்லீம் அறிஞரின் முன் வைத்தார் - "நான் என் மனைவியுடன் இஸ்லாத்தை ஏற்க விரும்புகிறேன்".