கதிரவனின் மையத்திலிருந்து ஒளி
#ஹிலால்

பெரும்பாலோர் 8 நிமி. என
பதில் அளித்துள்ளனர். கேள்வியை மீண்டும் நன்கு பாருங்கள். கதிரவனின் மையத்திலிருந்து. மேற்பரப்பில் இருந்து அல்ல.

கதிரவனின் மேற்பரப்பில் இருந்துதான் ஒளி 8 நிமி.ல் புவியை வந்தடையும். மையத்திலிருந்து? வாங்க பார்க்கலாம்.
இரண்டு ஹைட்ரஜனின் புரோட்டான்கள் இணைந்து ஹீலியமாகிறன. எப்படி? இணைந்து! அங்கே தான் ஒரு ஃ இருக்கு. இரு புரோட்டான்கள் ஏதோ பிணைந்து வைக்கப்பட்ட புரோட்டா மாவு அருகருகே இருப்பது போல வந்து இணைவதில்லை. காரணம் இரண்டும் பாசிடிவ் துகள்கள். இரண்டு காந்தங்களை வடபுலம் - வடபுலம் என்று வைத்தால் Image
எப்படி விலகி ஓடுமோ, அப்படி ஹைட்ரஜனின் இரண்டு புரோட்டான்களும் விலகிவிடும். அப்படியெனில் எவ்வாறு கதிரவனில் ஹைட்ரனின் புரோட்டான்கள் இணைந்து ஹீலியமாகிறன?

இதனை நடத்துவது குவாண்டம் டன்னலிங் (Quantum Tunnelling). குவாண்டம் டன்னலிங் என்பது ஒரு ஹைட்ரஜனில் உள்ள புரோட்டான் மறைந்து
இன்னொரு ஹைட்ரஜனின் புரோட்டான் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ளும். இதற்கு பெயர் Quantum Teleportation. அதாவது உங்களை ஒரு அறையில் வைத்து பூட்டிவிடுவோம். நீங்கள் அங்கிருந்து மறைந்து குவாண்டம் டன்னலிங் முறையில் அடுத்த அறையில் நீங்கள் தோன்றுவது தான் teleportation. இப்படி ஓரிடத்தில்
இருந்து மறைந்து இன்னொரு இடத்தில் தோன்றுவது தான் teleportation. காண்பிக்கப்பட்டுள்ள Star Trek எனும் அறிவியல் புனைவில் நடப்பது போலிருக்கும். Star Trekஐ ஒரு விளக்கத்திற்காக சொன்னேன். பெரிய துகள்களில் (மனிதர்களில்) டன்னலிங் நடைபெறாது. மீச்சிறு குவாண்டம் துகள்களில் மட்டும் சாத்தியம்.
குவாண்டம் டன்னலிங் படி ஏதேனும் நடந்தால் அது அதிக நிலையற்றதாக இருக்கும். உடனே அது அதிக நிலைப்புத் தன்மையுடைய வேறு ஒன்றாக மாறிவிடும்.

எடுத்துக்காட்டாக ஹைட்ரஜன்களில் 2 புரோட்டான்கள் வெகுநேரம் அருகருகே இருக்க இயலாது. எனவே தான் அது அதிக நிலைப்புடைய ஹீலியமாக உடனே மாறிவிடும்.
இந்த முறையில் தான் கதிரவனில் உள்ள ஹைட்ரஜன்களின் புரோட்டான்கள் இணைந்து ஹீலியமாகிறது. இப்படி எல்லாம் நடக்குமா? இப்படி நடக்க 1ல் 100,000,000,000,000,000,000,000,000 வாய்ப்புகள் தான் உள்ளன. அதாவது நீங்கள் லாட்டரியில் முதல் பரிசை தொடர்ந்து 3 முறை வெல்லுவதற்கு எவ்வளவு வாய்ப்போ.அவ்வளவு.
அதாவது கிட்டத்தட்ட கதிரவனில் அணுப்பிணைவே இல்லை எனலாம். இன்னொரு வழியில் சொல்லுவதென்றால், கதிரவனில் அங்கொன்று இங்கொன்று அணுப்பிணைவு நடைபெருகிறது. அதற்கே இவ்வளவு வெப்பம் & ஒளியா? அப்படியெனில் கதிரவன் எவ்வளவு பெரிய மாபெரும் கோளம் என்று புரிந்துகொள்ளுங்கள். நம்பமுடியவில்லையா?
ஒருவேளை கதிரவனில் நடக்கும் அணுப்பிணைவிற்கு குவாண்டம் டன்னலிங் காரணம் இல்லை என வைத்துக்கொள்வோம். அப்படி காரணம் இல்லையெனில் கதிரவனில் உள்ள ஹைட்ரஜன்கள் எல்லாம் ஒரே நேரத்தில் பிணைந்து எப்போதோ வெடித்து சிதறி எல்லாமே ஹீலியமாக மாறியிருக்கும். புவி உட்பட எந்த கோள்களும் தோன்றியிருக்காது.
கதிரவனின் நிறையான சுமார் 2,000,000,000,000,000,000,000,000,000 டன்னில் வெறும் 600,000,000 டன் ஹைட்ரஜன்கள் தான் வினாடிக்கு ஹீலியமாக மாறுகிறது. தற்போது 25% ஹைட்ரஜன் ஹீலியமாக மாறியுள்ளன. ஆனா மற்ற 75% ஹைட்ரஜன் எல்லாமே ஹீலியமாக மாறாது. மேற்கூறிய வாய்ப்பு உள்ள வரைதான் ஹீலியமாக மாறும்.
அப்படி என்றால் வியாழன் கோளிலும் ஹைட்ரஜன் வாயுக்கள் உள்ளனவே? அதில் ஏன் அணுப்பிணைவு நடைபெறவில்லை? ம்... குவாண்டம் டன்னலிங் நடைபெறும் வாய்ப்புகளை அதிகரிக்க கதிரவனின் நிறை அதீத அழுத்தத்தை அதன் மையத்தில் ஏற்படுத்துகிறது. அத்தகைய அழுத்தம் வியாழனில் இல்லாததால் குவாண்டம் டன்னலிங்
வியாழனில் நிகழ வாய்ப்புகள் மிக அரிது அல்லது நடைபெறாது எனலாம். வியாழனின் தற்போதைய நிறையை போல 13 மடங்கு இருந்தால் அங்கு குவாண்டம் டன்னலிங் மூலம் சிறிது அணுப்பிளவு நடைபெறுலாம். ஆனா கதிரவனை போல அணுப்பிணைவு நடைபெற வேண்டுமெனில் வியாழனின் நிறை இன்னும் 75 மடங்காக வேண்டும். ஆக கதிரவனில்
குவாண்டம் டன்னலிங் முறையில் தான் ஆங்காங்கே உள்ள ஹைட்ரஜன்கள் பிணைந்து (fusion) ஹீலியமாக மாறுகிறது. அப்போது உமிழப்படும் கதிர் தான் காமாக் கதிர். அப்போது கதிரவனின் மைய அடர்த்தி நீரைவிட 150 மடங்கு அதிக அடர்வுடன் இருக்கும். அதனூடே காமாக் கதிர் 1 மிமீ நகர்ந்த பின் பக்கத்து துகள்களுடன் Image
முட்டி மோதி விலகி எதிரோளிக்கும். இப்படி ஒவ்வொரு மில்லிமீட்டராக நகர்ந்து நகர்ந்து கதிரியிக்கப் பகுதியை விட்டு வெளியேறி வெப்பச்சலனப் பகுதிக்குள் நுழையும். அங்கும் இதே முட்டல் & மோதல். இதற்குள் காமாக் கதிர் தன்னுடைய ஆற்றலை இழந்து ஃபோட்டான் எனும் ஒளிக்கதிராக மாறுகிறது. Image
அதன் பின் அந்த ஒளி கதிரவனின் மேற்பரப்பிற்கு ஒருவழியாக வந்து சேர்கிறது. இப்படி அந்த காமாக்கதிர், கருவில் உருவாகி முட்டி, மோதி சுமார் 700,000 கிமீ தூரம் நகர்ந்து நகர்ந்து மேற்பரப்பிற்கு வருவதற்கு சுமார் 100,000 ஆண்டுகளாகிறது.

இந்த பதிலை சொன்னோர்க்கு வாழ்த்துக்கள் 💐.
அந்த மேற்பரப்பிலிருந்து அந்த ஒளி புறப்பட்டு புவிக்கு 143 மில்லியன் கிமீ பயணித்து வருவதற்கு just 8 நிமிடங்கள் தான்.

ஆகவே கதிரவனின் மையத்திலிருந்து ஒளி புறப்பட்டு புவிக்கு வருவதற்கு சுமார் 100,000 ஆண்டுகளாகிறன. நம்மீது விழும் ஒளியானது சுமார் 100,000 ஆண்டுக்கு முன் உருவானது.
இவ்வாறு கதிரவனைக் கட்டுப்டுத்தி அணுப்பிணைவை நடத்துவது குவாண்டம் டன்னலிங் தான். அது மட்டுமல்ல! நீங்கள் பயன்படுத்தும் எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்களில் பல & மைக்ரோப்ராஸசர்கள் வேலை செய்வதற்கும் அந்த குவாண்டம் டன்னலிங் தான் காரணம்.
ஆக, அணுத்துகள், மைக்ரோப்ராசஸர் முதல் விண்மீன்கள் வரை நிகழ்த்திக் காட்டவது - Quantum Tunnelling / teleportation...

குவாண்டம் கணிணித்துறையில் உள்ள Quantum Communication & Quantum Cryptography -யின் அச்சாணியாக இருப்பதும் இந்த குவாண்டம் டன்னலிங் தான்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with இளம்பிறை | hilaal

இளம்பிறை | hilaal Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @HilaalAlamTamil

Dec 9, 2024
நேரத்தைப் பற்றிய 6 செய்திகள்-2

நேற்றைக்கும் இன்றைக்கும் நமக்கு வேறுபாடு தெரிகிறது. சற்று நேரத்திற்கு முன்பிற்கும் தற்போதைக்கும் நமக்கு வேறுபாடு தெரிகிறது.

இதனை நேரம் என்கிறோம். இது அறிவியலின் மிகப் பெரிய புதிர். இந்த வேறுபாடு எப்படி நிகழ்கிறது?

அதற்குமுன் இடைவெளி பற்றி காணலாம்
நாம் வெளிகளைப் பற்றி தவறான கண்ணோட்டம் வைத்துள்ளோம் அல்லது எளிதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்து நகர்ந்து பிறகு பின்னோக்கி செல்வது நம் அன்றாட வாழ்வில் இயல்பு.

ஆனால் அதுவே ஒரு புதிர் தான். ஒவ்வொரு இடமும் இன்னொரு இடத்தைப் போலவே பிரபஞ்சம் எங்கும் பரவி
இருந்திருந்தால் நமக்கு நகர்தல் பற்றிய அறிவே இருக்காது. முன்னோக்கி நடப்பதற்கும் பின்னோக்கி நடப்பதற்கும் ஒரு வேறுபாட்டினையும் அறியமாட்டோம்.

நின்று கொண்டிருக்கும் ரயில் அருகில் நம் ரயில் மெதுவாக நகர்ந்தால், எது நகர்கிறது என்றே தெரியாது.

ஆக நாம் முன்பின் நகர்வதற்கு ஏதேனும் துல்லிய
Read 14 tweets
Nov 6, 2024
4 வகை பன்னுலகங்கள்

Max Tegmark என்ற இயற்பியலாளர் இப்பிரபஞ்சம் கணிதங்களால் ஆனது என்கிறார். எண்களே எல்லாம் என்ற கலீலியோ காலத்து வாதங்களை உறுதியாக முன் வைக்கிறார்.

பன்னுலகம் என்ற multiverse-ம் கணிதங்களால் சூழப்பட்டன. ஆனால் இந்தப் பன்னுலகில் சில கணிதங்கள் உலகிற்குத் தேவையின்றி Image
உள்ளன. இயற்பியல் பருப்பொருள் உண்மைகள் (physical realities) கணித அடிப்படையில் ஆனவை என்ற கொள்கை ஐயமின்றி உறுதியாகிவிட்டது.

இந்த பிரபஞ்சத்திற்கு தொடர்பற்ற கணிதங்களால் ஆன பன்னுலகம் என்ற multiverse தான் Level 4 Multiverse.

முதல் பன்னுலகம்:

நம்மைப் போலவே பல பன்னுலகங்கள் உள்ளன Image
என்ற கொள்கை தான் முதல் நிலை பன்னுலகம். இது பொதுவாக நாம் எல்லாருக்கும் தெரியும்.

நம்மைப் போலவே நம் பிரதி மற்ற உலகத்தில் எங்கோ இருப்பார் என்கிறது இந்தக் கொள்கை. ஹாலிவுட்/பாலிவுட்/கோலிவுட் ஆகிய woods அடித்துவிடும் woodதான் இது

நம் பிரபஞ்சம் முடிவற்றதா (infinity)?
தயக்கம் சிறிதும்
Read 12 tweets
Aug 4, 2024
தூரத்திலொரு விந்தைச் “செயல்”

இதனைச் சொன்னவர் ஐன்ஸ்டீன். இக்கூற்றை இயல்பாக கடந்து செல்ல இயலாது. இன்றைய வளர்ச்சிப் பாதையிலுள்ள குவாண்டம் கணினி நிரலும் (Quantum Algorithm) & செயற்கை நுண்ணறிவிலும் (AI) இது எந்த வகையான முன்னேற்றங்களை ஏற்படுத்தப் போகிறது என்பது தான் இப்போதைய ஆர்வம்.
Image
முதலில் Spooky Action at a Distance - என்றால் என்ன? (@crselvakumar1 ஐயா, இதற்கு சரியான தமிழ் பெயர்ப்பு தேவை)

நீங்களும் உங்கள் நண்பரும் அவரவர் காசுகளை சுண்டுகிறீர்கள்.

உங்களுக்கு தலை அல்லது பூ விழலாம்…!

உங்கள் நண்பருக்கும் தலை அல்லது பூ விழலாம்…!

இது ஒன்றும் விந்தையல்ல..
Image
Image
இப்போது ஒன்று சொல்கிறேன்…!

உங்களுக்கு தலை விழுந்தால் உங்கள் நண்பருக்கு பூ விழும்

உங்களுக்கு பூ விழுந்தால் உங்கள் நண்பருக்கு தலை விழும்

இப்படி நடக்குமா என்றால் என்னை ஒருமாதிரியாகத் தான் பார்ப்பீர்கள்.

அல்லது அந்த இரண்டு காசுகளுக்கிடையே ஏதோ பிணைக்கப்பட்டுள்ளது என சந்தேகிப்பீர்
Read 16 tweets
May 7, 2024
குஷ்வந்த் சிங் என்ற தீர்க்கதரிசி

2002-ல் வெளிவந்த இந்த புத்தகத்தை எழுதியவர் 2014-ல் மறைந்த திரு குஷ்வந்த் சிங்.

அதில்…

“ஒரு பாசிச சக்தி செழித்து வளர, மக்களிடையே உள்ள பிரிவுகளையும் குழுக்களையும் கொண்டு அவர்களை அச்சமடைய வைத்தல் வேண்டும்.

வெறுப்பின் மீது கட்டமைக்கப்பட்டு வளரும்
Image
Image
அந்த பாசிச சக்தி, தொடர்ந்து அச்சம் & கலவரத்தை தூண்டியே நிலைத்து நிற்க இயலும்.

முஸ்லிமாகவோ கிறித்தவராகவோ அல்லாத நாம், எந்த பிரச்சனையுமின்றி பாதுகாப்பாக உள்ளோம் என நினைத்தால் நாம் முட்டாள்கள் உலகில் வாழ்கிறோம்.

பாசிசம் ஏற்கனவே இடதுசாரி வரலாற்று ஆய்வாளர்களை & மேற்கத்திய பண்பாட்டை Image
பின்பற்றும் இளைஞர்களை குறிவைக்கத் தொடங்கிவிட்டனர்.

நாளை குட்டை பாவாடை அணியும் பெண்களையும், மது & இறைச்சி உண்போரையும், வெளிநாட்டு படங்களை போற்றுவோரும், பாதயாத்திரை செல்லாதவர்களையும், பாரம்பரிய பற்பொடிகளை பயன்படுத்தாதவர்களையும், பாரம்பரிய மருத்துவர்களை அணுகாதவர்களையும், Image
Read 4 tweets
Nov 30, 2023
முதலாளித்துவ & பெருநிறுவன உலகங்கள் இந்த நவீனக் காட்டுமராண்டியை பற்றி அதிமாக சிலாகிக்கும்.

அதாவது இந்த காட்டுமிராண்டி எப்படி இவ்வளவு திறனாகச் செயல்பட்டார் என்பதற்கு ஒரு சிறு சான்று (15 ஆண்டுகளுக்கு முன் என் investor சொன்ன சம்பவம். துல்லியமாக நினைவில்லை)

அமெ. சீனாவை அடக்குவதற்கான
திட்டச்செயல் வரையறையை இவர் தலைமையில் வகுத்தது.

அதற்கான ஓரு திட்டத்தை சீனாவை பற்றி நன்கறிந்த ஒரு திட்டக்குழு உபதலைவர் வகுத்துக் கொடுத்தார்.

கிஸ்ஸிங்கர், “எனக்கு இந்த திட்டத்தில் முழு திருப்தி இல்லை” என்றார்.

அந்த தி கு உபதலைவர் அதனைச் சீர்படுத்தி அடுத்த திட்ட அறிக்கையை
சமர்ப்பித்தார்.

கிஸ்ஸிங்கர், “எனக்கு இந்த திட்டத்திலும் முழுதிருப்தி இல்லை” என்றார்.

அந்த தி.கு உபதலைவர் அதனையும் வெகுவாகச் சீர்படுத்தி அடுத்த அறிக்கையை சமர்பித்தார்.

கிஸ்ஸிங்கர், “எனக்கு இந்த திட்டத்திலும் முழு திருப்தி இல்லை” என்றார்.

அந்த தி.கு. உபதலைவர் அதனையும் வெகுவாகச்
Read 5 tweets
Jul 22, 2023
அருமையான ஆனால் மிகவும் சிக்கலான வரலாற்று நிகழ்வுகள். ஆகவே nonlinear editing போல எழுதியுள்ளார். எழுத்து நடையில் திருப்தி இல்லை என்றாலும் அனைத்தும் ஒவ்வொரு இந்தியரும் தமிழரும் கட்டாயமாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வரலாற்றுப் பதிவுகள்…!

ஏன்?

இராபர்ட் கிளைவ் கால கிழக்கிந்திய
கம்பெனிகளும் பிரெஞ்சுக்காரர்களும் தமிழகத்தின் வழியாக இந்தியாவில் காலூண்ற முயன்ற நேரம். கடைசியில் வென்றது ஆங்கிலேயர்கள்.

இந்தப் போட்டியில் மருதநாயகம் என்ற கான் சாகிபு என்ற நபரையே வரலாறு சுற்றி சுற்றி வருகிறது.

இன்றைய “நாடுகள்” என்ற பார்வையின் அடிப்படையில் அந்த 18ம் நூற்றாண்டின்
வரலாறை பார்த்தால் எல்லாருமே கொடுமையானவர்களாகவே / நாட்டின் துரோகிகளாகவே தெரியும்.

ஆனால் அன்றைய மக்களுக்கு அன்றைய நாட்களில் நாடு என்ற ஒன்றே தெரியாது. “வலியோன் ஆழ்வான். வென்றவனுக்கு நிலம் சொந்தம்” என்ற ஆயிரங்கால கொள்கையே தெரியும்.

நாம் தான் இன்றைய பார்வை கொண்டு நமக்குப் பிடித்தோர
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(