திமுக ஆட்சியமைந்த பிறகு முதன்முறையாக ஆளுநர் உரையுடன் இன்று கூடியிருக்கிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர். ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள சில முக்கியத் தகவல்களை பகிர்கிறேன்

#TNAssembly
தமக்கு வாக்களித்தவர், வாக்களிக்காதோர் பாரபட்சமின்றி தமிழக மக்கள் அனைவருக்குமான அரசாக இந்த அரசு செயல்படும்
மாநில சுயாட்சி என்ற தலையான இலக்கை எட்டவும் அரசியலமைப்பு சட்டத்தின் வழிமுறைகளை பின்பற்றி உண்மையான கூட்டாட்ட்சி தத்துவத்தை நிலைநிறுத்த அரசு உறுதியாக உள்ளது
ஈழத் தமிழர்களுக்கு சம குடியுரிமை, அரசியல் உரிமைகளை உறுதி செய்திட இலங்கை அரசை அறிவுருத்துமாறு ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப்படும்
இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களையும், திருத்தங்களையும் மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கழக பேராசிரியரும் நோபல் பரிசு பெற்றவருமான எஸ்தர் டப்ளோ , இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட தலைசிறந்தவர்கள் அடங்கிய பொருளாதார குழு அமைக்கப்படும்
நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை ஜூலை மாதத்தில் வெளியிடப்படும்

மாநிலத்தின் நிதிநிலை குறித்த முழுமையான விவரம் பொதுமக்களுக்கு இதன் மூலம் தெரியவரும்
தந்தை பெரியார் காண விரும்பிய சுயமரியாத சமூகமாகவும், உரிமை பெற்ற மக்களாகவும், எல்லா வளமும் கொண்ட மாநிலமாகவும், தமிழ்நாட்டை மாற்ற இந்த அரசு உறுதியேற்றுள்ளது
மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பிரச்னைகளில் தமிழக உரிமைகளை பாதுகாத்திட அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்
முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்தவும், தேவையான அனுமதியை விரைந்து வழங்குமாறும் கேரள அரசையும், ஒன்றிய அரசையும் தமிழக அரசு வலியுறுத்தும்
விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை பாதுகாக்க நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கான புதிய சட்டம் இயற்றப்படும்
கட்சத்தீவை மீட்பது, மீனவர் நலனை பாதுகாக்கும் வகையில் உயிரிழப்புகளை தடுப்பது, தீர்வு காண ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும்
மீனவர்கள் நலனுக்காக உள்நாட்டு மீனவர்கள் அனைத்து நலனை பாதுகாக்க தேசிய ஆணையத்தை அமைக்குமாறு ஒன்றியை அரசை வலியுறுத்துவோம்
குடும்ப அட்டை விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்த அனைவருக்கும் 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும்
தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்காமல் இருக்க தேவையான சட்டங்களை நிறைவேற்றி அந்த சட்டங்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற உரிய நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்படும்
பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரிசெய்ய தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சிகள் வழங்கப்படும்
சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க திட்டங்கள் வகுப்பதற்கு தொழில் அதிபதிகள், வங்கியாளர்கள், நிதித்துறை வல்லுநர்கள் அரசு வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்
தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை வகுக்க நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் குழு அமைக்கப்படும்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகமும் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால், இந்த கழகங்களின் நிதிநிலை மற்றும் நிர்வாக கட்டமைப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும்
கோவிட் தொற்று தீவிரம் குறைந்தவுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
மாநிலத்தின் உள்ள பெரிய நகரங்களின் நெருக்கடியை குறைக்க புறநகர் பகுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய துணை நகரங்கள் உருவாக்கப்படும்
சென்னை மாநகர கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில் சிங்கார சென்னை 2.0 புதிய திட்டம் செயல்படுத்தப்படும்
காரணமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மதுரவாயல் - சென்னை துறைமுகம் வரையிலான உயர்மட்ட சாலை திட்டத்தை விரைவு படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும், அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் அரசு பதவிக்கான வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும்
தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என ஒன்றிய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும்
தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டு கொள்கை காலத்தை வென்று சமூக நீதியை உறுதி செய்துள்ளது., இந்த வகையில் தமிழகத்தில் வழங்கப்படும் 69 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்
அரசுப் பணிகளில் ஆதி திராவிடர் மற்றும் பழக்குடியினருக்கான நிரப்பப் படாத காலியிடங்கள் சிறப்பு நியமனங்கள் மூலம் நிரப்பபடும்
பல்வேறு அரசு அமைப்புகளால் வழங்கப்படக்கூடிய பொது சேவைகளை முறைப்படுத்திட சேவைகள் உரிமைகள் சட்டம் அறிமுகப்படுத்தப்படும்
பரம்பிகுளம்- ஆழியாறு ஒப்பந்தத்தின் கீழ் இடைமலையாறு கட்டுமானத்தை கேரளா அரசு நிறைவு செய்துள்ளதையடுத்து, தொடர்ச்சியாக ஆனைமலையாறு அணை கட்டுவதற்காக கேரள அரசுடனான பேச்சுவார்த்தையை தமிழக அரசு தொடங்கும்
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு புத்துயிர் அளிக்கப்படும் - ஆளுநர்
கொரனா பெருந்தொற்றின் மூன்றாவது அலைக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்கு ரூ.50 கோடி ஒதுக்கப்படும்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vignesh Theni

Vignesh Theni Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(