#ஆடிமாத#அம்பாள்தரிசனங்கள்
அன்னை பராசக்தி சில தலங்களில் வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.
*அம்மனுக்கு மூல விக்ரகம் இல்லாமல் உற்சவ விக்ரமே மூலவராக வழிபடப் பெறும் தலம், காரைக்குடி, #கொப்புடையம்மன் கோயில்.
*வடக்கு நோக்கி சிவனை பூஜை செய்யும் அம்பிகை சன்னதி உள்ள தலம் #தக்கோலம்
*அசாம் மாநிலம் கௌஹாத்திக்கு அருகில் உள்ள #காமாக்யாதேவி கோயிலில் தேவியின் யோனிச்சின்னம் மட்டுமே உள்ளது.
*கிடந்த கோல துர்க்கை சன்னதி உள்ள தலம், திருநெல்வேலி கங்கை கொண்டான் அருகில் உள்ள #பராஞ்சேரி. இங்கே பள்ளிகொண்ட துர்க்கை தரிசனம் தருகிறாள்.
*துர்க்கையம்மனுக்கு
என்று தனிக் கோயில்
மயிலாடுதுறையை அடுத்துள்ள #தருமபுரத்தில் உள்ளது.
*அம்பாள் வில் வடிவில் சிவனை வழிபடும் உற்சவமூர்த்தம், திருமால் பேறில் உள்ளது.
*பிரம்மனுக்கு ஞானம் அருளும் பிரம வித்யாம்பிகை உள்ள தலம்-திருவெண்காடு
*திருவானைக்கா, திருஆமாத்தூர், அறையணி நல்லூர் போன்ற தலங்களில் சுவாமி, அம்மன் சன்னதிகள்
எதிர் எதிராக அமைந்துள்ளன.
*திருநாகேஸ்வரத்தில் உள்ள அம்பிகை திருமகளும், கலைமகளும் பணி செய்யும் அம்பிகையாகக் காட்சி தருகின்றனர்.
*கொல்லூர #மூகாம்பிகை அதிகாலை மூன்றரை மணி முதல் 7 மணி வரை சோட்டானிக்கரை பகவதியாகக் காட்சி தந்தருளுவதாக ஐதிகம்.
*அமர்ந்த நிலையில் எட்டுத் திருக்கரங்களுடன்
அமைந்த துர்க்கை அம்மனை காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயிலில் தரிசிக்கலாம்
*திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் அம்மன் பெரியநாயகி சன்னதி கீழேயும், சிவன் கனககிரீஸ்வரர் சன்னதி மலைக்கு மேலேயும் அமைந்துள்ளது.
*பொள்ளாச்சி #மாசாணியம்மன் கோயிலில் அம்மன் சயன கோலத்தில் உள்ளாள்.
*திருவாரூர்
தியாகராஜர் கோயிலில் #நீலோத்பலாம்பாள் முருகனின் தலையை தடவிய கோலத்தில உள்ளாள். அன்னை கமலாம்பாள் கால் மேல் கால் போட்டு ராணி கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.
*#திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் அம்மன் பெரியநாயகி சம்பந்தரை இடுப்பில் தூக்கிய நிலையில் பிரகாரத்தில் உள்ளாள்.
*#காஞ்சிபுரம்
ஆதிகாமாட்சி கோயிலில் லிங்கத்தின் பாணத்தில் அம்மனின் வடிவம் உள்ளது. இதை அர்த்தநாரீஸ்வர லிங்கம் என்கின்றனர்.
*தஞ்சாவூர் திருச்சத்திமுற்றம் #சிவக்கொழுந்தீசர் கோயிலில் அம்மன் சிவனை கட்டித்தழுவிய கோலத்தில் உள்ளார்.
*பொதுவாக வலது கையில் அருள்பாலிக்கும் அம்மன் கேரளா #சோட்டாணிக்கரை பகவதி
அம்மன் கோயிலில் இடதுகையில் அருள்பாலிக்கிறாள்.
*நாகப்பட்டினம் மாவட்டம் திருமணஞ்சேரியில் உள்ள #கோகிலாம்பாள் இடது கையை ஊன்றி, வலது காலை குத்தவைத்தபடி அமர்ந்த கோலத்தில் உள்ளாள்.
*சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் உள்ள காளி வலது காலை குத்துக்காலிட்டு இடது காலை தொங்கவிட்டு வலது கையில்
சூலம் ஏந்திய கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.
*சிதம்பரம் தில்லை காளி கோயிலில் அம்மன் நான்கு முகத்துடன் பிரம்மசாமுண்டீஸ்வரியாக அருள்பாலிக்கிறாள்.
*கும்பகோணம் அய்யாவாடி பிரத்தியங்கிரா கோயிலில் அம்மன் சிம்ம முகத்துடன் அருள்பாலிக்கிறாள்.
ஆடி மாதம் அன்னையின் அருள் பெற்று வளம் பெறுவோம்🙏🏻
*ஓம் சக்தி பராசக்தி*
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
முருகன் கோவில்களில் உள்ள சில சிறப்புகள்
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் திருக்கோவிலில் கொடிமரத்தில் இருந்து வலமாக எல்லாச் சன்னிதிகளுக்கும் நாம் சென்று வந்தால் ஓம் என்ற எழுத்து வடிவில் அப்பாதை அமைந்துள்ளதைக் காணலாம். இங்கு மட்டுமே விபூதியை பன்னீர் இலையில் மடித்து தருவர்.
இந்தப் பன்னீர் இலையை பிரித்தால் 12 நரம்புகள் இலையில் இருப்பதை உணரலாம். இவை முருகனின் 12 திருக் கரங்களைக் குறிக்கின்றன. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கென்று தங்கக் குடங்கள் இருக்கின்றன. வேள்வி மற்றும் குடமுழுக்கு நாட்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. தங்கத் தேங்காய்களும் இங்கு
உண்டு. இவை முக்கியப் பிரமுகர்கள் வருகை, பூரண கும்ப மரியாதை மற்றும் வேள்வியின் போது பயன்படுத்தப் படுகின்றன.
திருக்கழுக்குன்றம் மலை மீதுள்ள வேதகிரீஸ்வரர் ஆலயத்தில், முருகப்பெருமான் 6 திருக்கரங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். முருகப் பெருமானோடு வள்ளி-தெய்வானை
வானமாமலை கலியன் ஸ்வாமி மிகுந்த புலமை உள்ளவர். தமிழ் ஹிந்தி ஆங்கிலம் தெலுங்கு ஆகிய மொழிகளை பேசவும் எழுதவும் படிக்கவும் தெரியும். நவோதயா பள்ளியில் பலவற்றில் பணியாற்றி அதன் தலைமை பீடத்திலும் அமர்ந்தவர். திருக்குறளை ஹிந்தியில்
மொழி பெயர்த்தவர். அவர்களை ஶ்ரீவைணவ உலகில் இந்திய அளவில் அனைவருக்கும் தெரியும். ஜீயரின் 75வது சம்வஸ்த்ர வைபவம் நடந்த போது அவரை கம்யூனிச சித்தாந்தத்தை கொண்ட பத்திரிகை நிருபர் பேட்டி எடுத்தார். இந்து மதத்தை சிறுமைப்படுத்தியும் கிறிஸ்தவ முஸ்லிம் மார்க்கங்களை உயர்த்தியும் தாங்கிப்
பிடிப்பதிலேயே அவர் ப்பேட்டியின் சாரமாக இருந்தது. ஸ்வாமியிடம் தன்னை அறிமுகபடுத்தி கொண்டு பேட்டியை எடுத்தவர் பேட்டியின் இடையே இஸ்லாத்தை கண்டு பிடித்தவர் யார் ஸ்வாமிஜி என கேட்டார். முகம்மது நபி என்றார் ஸ்வாமி. கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபித்தவர் ஸ்வாமி என கேட்க
ஏசுகிரிஸ்து என்றார் ஜீயர்.
#அருள்மிகு_கோரக்கநாதர்_ஆலயம்
திருநெல்வேலி மாவட்டம்
ஆழ்வார் குறிச்சியின் அத்ரி மலை அடிவாரத்தில் உள்ள அணையின் மட்டத்தில் இருந்து சுமார் 6 கிமீ உயரத்தில் உள்ளது. மும்மூர்த்திகள் தங்கியிருந்த அத்ரி அனுசுயாதேவி சமேத அத்ரி பரமேஸ்வர் கோவில். உலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த ரிஷிகளில்
ஒருவர் அத்ரி மகரிஷி சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவரின் மானசபுத்திரரான இவரது மனைவியின் பெயர் அனுசுயா. வேத, புராண, இதிகாசங்கள் அனைத்திலும் இந்தத் தம்பதியர் உயர்வாக பேசப்பட்டுள்ளனர். தவசக்தியில் இருவருமே சளைத்தவர்கள் அல்லர். இந்தத் தம்பதியர் ஆசிரமம் அமைத்து தவம் மேற்கொண்டது, பொதிகை
மலை தொடரில் உள்ள திரிகூடமலைப் பகுதியாகும். எனவே இந்தப் பகுதிக்கு அத்ரிமலை என்றும் பெயருண்டு. நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் இருந்து 9 கிமீ தொலைவில் உள்ளது அத்ரிமலை அடிவாரம். மலையடிவாரத்தில் கடனாநதி அணை உள்ளது. இந்த அணையின் மட்டத்தில் இருந்து 6 கிலோமீட்டர் உயரத்தில் அத்ரி
இந்த விநாயகப் பெருமான் அமைதியான சூழலில் ஒரு குளத்தின் அருகில் கோயில் கொண்டு அருள் பாலிக்கிறார். சதுர் ஸஹஸ்ர கணபதி என்று வட மொழியில் வழங்கப்படும் இப்பிள்ளையாருக்கு இப்பெயர் வந்த காரணம் சுவாரஸ்யமானது. இராமாயண காலத்தில்
நடைபெற்ற சம்பவத்தைக் கொண்டு இப்பெயர் காரணப் பெயர் ஆயிற்று.
இவரே க்ஷேத்ர கணபதி. கிஷ்கிந்தையை ஆண்டு வந்த வாலிக்கு யாரிடம் போரிட்டாலும் எதிரியின் பலத்தில் பாதி தனக்கு வர வேண்டும் என்ற வரத்தைப் பிரமதேவனிடம் பெற்றான். பிரமனை நோக்கிக் கடுமையான தவம் செய்ய ஒரு குகைக்குள் இருந்தான்.
நெடும்காலமாகியும் வாலி வெளியில் வராதது கண்டு அஞ்சிய அவனது வீரர்கள் குகையை ஒரு பாறாங் கல்லால் மூடிவிட்டுக் கிஷ்கிந்தைக்குத் திரும்பி விட்டனர். இதற்கிடையில், கடும் தவத்தின் பலனாக வாலிக்குப் பிரமனின் தரிசனம் கிடைத்தது. வாலி வேண்டியவாறே எதிரியின் பலத்தில் பாதி அவனுக்கு வரும்படியாக
#துர்க்கையின்_நவ_வடிவங்கள்
வன துர்கா, சூலினி துர்கா, ஜாதவேதோ துர்கா, சாந்தி துர்கா, சபரி துர்கா, ஜ்வாலா துர்கா, லவண துர்கா, தீப துர்கா, ஆசுரி துர்கா என்று 9 வகையான வடிவங்களை கொண்டுள்ளாள் துர்கை
#வன_துர்கா
பண்டைத் தமிழ் இலக்கியங்களால் #கொற்றவை என்ற பெயரால் குறிப்பிடப்பட்டவள். அகத்திய முனிவர் வனதுர்க்கையை வழிபட்டார். ராவணனை வதைத்திடும் வல்லமையைப் பெறுவதற்காக அகத்தியரின் ஆலோசனைப்படி ராமபிரான் இந்த துர்க்கையை வழிபட்டார். வனதுர்கை வழிபாடு ஆந்திரப் பிரதேசத்தில் மிகவும் பிரசித்தம். மகாவித்யா என்று லலிதா சகஸ்ரநாமம் பராசக்தியை துதிக்கும். தன்னை வழிபடுபவர்களை சம்சாரமாகிய கட்டிலிருந்து காப்பாற்றுபவள் வனதுர்கா என்பது பக்தர்களின் நம்பிக்கை. தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் கதிராமங்கலம், மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தருமபுரத்தில் வனதுர்க்கை கோயில்கள் காணப் படுகின்றன.
#சூலினி_துர்கா
துர்க்கையின் வடிவங்களில் இவள் மிகவும் சக்தி படைத்தவள். சரபேஸ்வரரின் இறக்கை ஒன்றில் இவள் வசிக்கிறாள். சிவனின் உக்ரவடிவின் தேவி. முத்தலை சூலத்தினைக் கையில் ஏந்தி இருப்பதால் சூலினி துர்க்கா எனப் படுகிறாள். திருவாரூர் மாவட்டம், பேரளம் எனும் ஊருக்கு அருகில் உள்ள அம்பர் மாகாளம் எனும் பாடல் பெற்ற தலத்தில் மாகாளி சூலினிதுர்க்கையாக காட்சி தருகிறார். இவளது திருமேனியை அர்ச்சகர்கள் கூட தொட்டு பூஜை செய்வதில்லை. ஒரு சிறிய கோலின் துணையாலேயே மாலை, ஆடை முதலியவற்றை அணிவிப்பார்கள்.
#திருவிசைநல்லூர்_சிவயோகிநாதர்_கோவில்
8 ஸ்தல விருட்ச மரங்களை கொண்ட அதிசய சிவாலயம்
கும்பகோணம் அருகில் உள்ளது திருவிசைநல்லூர் சிவயோகநாதர் திருக்கோவில்
ஸ்தல விருட்சங்கள்
வன்னி, உந்து வில்வம், புன்னை, மகிழம், ஆல், அரசு, நெல்லி, பரசு வில்வம் என இங்கு 8 ஸ்தல விருட்சங்கள் இருக்கின்றன.
இன்னும் சில அதிசயங்கள்: எல்லா சிவத்தலங்களிலும் உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம் முதலிலும் பின்னர் பலிபீடம், நந்தி என்று இருக்கும். ஆனால் இந்த ஆலயத்திற்குள் நுழையும் போது, நந்திதான் முதலில் உள்ளது. இறைவன் 7 முனிவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் கருவறையில் இருக்கும் சிவலிங்கத் திருமேனி
மேல் பகுதியில் 7 சடைகள் காணப் படுகின்றன. சித்திரை 1,2,3 தேதிகளில் சூரிய ஒளி கதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழுகிறது. தென்புற மதில் சுவர் அருகே சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட சூரிய ஒளி கடிகாரம் அமைந்துள்ளது. காலையில் சூரியன் உதிப்பதிலிருந்து மாலையில் சூரியன் மறையும் வரை சூரியன்