#மாத்ரு_பக்தி
#ஆதி_சங்கரர்
ஆதி சங்கரர் தாம் சந்யாசம் மேற்கொள்ள சம்மதித்தால் தாயின் இறுதி காலத்தில் 3 முறை சங்கரா என்றழைத்தால் எங்கு இருந்தாலும் நான் வந்துவிடுவேன் என வாக்கு அளித்து செல்கிறார். தாயார் ஆர்யாம்பாளின் இறுதிக் காலம். தாயும் 3 முறை சங்கரா என்றழைக்கிறார், சிறிது நேரம் கடக்கிறது அம்மா என்ற குரல் கேட்கிறது. 'சங்கரா வந்துவிட்டாயா அருகில் வா' என்கிறார். கண்பார்வை மங்கிய நிலையில் அருகில் வந்த சங்கரனை தொட்டு தடவுகிறார் தாயார். அவருடைய மனம் பதைத்துப் போகிறது. துறவறம் மேற்கொண்ட மகனின் உடம்பில் அணிந்துள்ள ஆபரணங்களின் ஸ்பரிசம் ஏற்படுகிறது. மகன் துறவறக் கடமையிலிருந்து தவறிவிட்டானோ என்று மனம் அஞ்சுகிறது, மீண்டும் அம்மா என்ற குரல் அம்மாவை அழைத்தபடி சங்கரன் வருகிறார், மகனே சங்கரா இப்போதுதான் வருகிறாயா என்று நடந்ததை சங்கரனிடம் கூறுகிறார். சங்கரனோ சிரித்தபடி "அம்மா நான் துறவரம் சென்றபோது நமது வீட்டின் எதிரிலுள்ள ஆலயத்தின் கிருஷ்ணனிடம் நான் வரும்வரை அம்மாவை பார்த்துக்கொள்" என்று கூறிவிட்டுப் போனேன் நான் வர தாமதம் ஆனதால் உங்கள் மனது நோகக் கூடாது என்று அந்த கிருஷ்ணனே வந்திருக்கிறான் என்றார். தன் தாயாரின் நெடுநாளைய ஆவலான தெய்வ தரிசனத்திற்காக தன் தபோ சக்தியால் அவருக்கு மும்மூர்த்திகளின் தரிசனம் கிடைக்கச் செய்கிறார். ஆதிசங்கரரின் தாயார் சமாதியும், அதில் சங்கரர் ஏற்றி வைத்த விளக்கும், தாயாருக்கு காவல் இருந்த கிருஷ்ணரின் ஆலயமும் காலடியில் இன்றும் உள்ளது. தாயார் இறந்தபின் அவர் அருளிச் செய்த 'மாத்ரு பஞ்சகம்' என்னும் 5 பாடல்கள் தாயாரின் பெருமையை நமக்கு விளக்குகிறது. மாத்ரு பஞ்சகம் link
#பட்டினத்தடிகள் #பட்டினத்தார்
பட்டினத்தடிகள் துறவறம் ஏற்று ஊர் ஊராகச் செல்ல (துறவி தர்மம்) நினைத்தார். ஆயினும் தன் தாயார் ஞானகளையின் அன்பில் கட்டுண்டு ஊர் எல்லையிலேயே தங்கி இருந்தார். சிறிது காலத்திற்குப் பின் அன்னையார் மரணமடைந்தார். ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழை மட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்து ஞானப் பாடல்கள் பாடி சிதைக்கு தன்னுடைய தபோ சக்தியால் தீ மூட்டினார். அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை:
"ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்று
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி.
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்.
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்தி முலை தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்தி பகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ விறகிலிட்டு தீமூட்டு வேன்.
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் ருசியுள்ள தேனே அமுதமே செல்வத் திரவியப் பூமானே என அழைத்த வாய்க்கு.
அள்ளி இடுவது அரிசியோ தாய் தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகம் மேல் முகம் வைத்து முத்தாடி என்றன் மகனே என அழைத்த வாய்க்கு.
முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே.
வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல் ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக் குருவி பறவாமல் கோதாட்டி என்னைக் கருதி வளர்த்தெடுத்த கை.
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என் தன்னையே ஈன்றெடுத்த தாய்
வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல் எல்லாம் சிவமயமே யாம்.
Apr 18 • 10 tweets • 2 min read
#இராமனை_காட்டிலும்_ராமநாமம்_பெரிது
லட்சுமணா! இந்த வானரங்கள் செய்யும் வேலை அதிசியமாக அல்லவா இருக்கிறது. என்ன வேகம், என்ன சுறுசுறுப்பு, ஏதோ மந்திரத்தால் நடப்பது போல் அல்லவா இருக்கிறது. என்று ராமர் கேட்க, ராமரின் பேச்சைக் கேட்டுக் கொண்டே அங்கு வந்தார் ஆஞ்சநேயன். அனுமா! எல்லோரும்
என்ன அழகாக வேலை செய்கிறீர்கள். என்ன ஒழுங்கு, என்ன கச்சிதம். எல்லோரும் ஒவ்வொருவராக தூக்கி போடும் கல், எதிரில் நிற்க எவ்வளவு அழகாக அது பொருந்த வேண்டிய இடத்தில் பொருந்துகின்றன. அதைப் பார்த்து வியந்துக் கொண்டு இருக்கிறேன். இந்த வானரங்கள் எல்லோரும் இந்த அணைகட்டும் கலையை எங்கே எப்போது
Apr 17 • 17 tweets • 4 min read
சடையவர்மன் சுந்தர பாண்டியனின் கைங்கர்யங்கள்
(கோயிலொழுகு தரும் தகவல்)
திருவரங்கத்தில் பல ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் பல அரசர்களும் கைங்கர்யங்கள் செய்துள்ளனர். இதில் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் (எ) சடையவர்மன் சுந்தர பாண்டியனுக்கு மட்டும் தனி சிறப்பு உண்டு. 'சுந்தரபாண்டியம்
பிடித்தேன்' என்ற அருளப்பாடு உண்டு. முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனை (பொ.யு.1251 - 1271)
||சுந்தரபாண்டியம் பிடித்தேன் என்ற அருளப்பாடு காரணம்||
இந்த அரசன் திருவரங்கம் கோயிலுக்கு சமர்ப்பித்த கைங்கரியங்கள் அளவு கடந்தவை. இதன் புகழ் வட இந்தியா வரை பரவி 14ஆம் நூற்றாண்டு முகலாய படை
Apr 17 • 9 tweets • 2 min read
இன்று ஸ்ரீராமநவமி
உலகத்தின் அனைத்து சேதனர்களுக்கும் சரணாகதி வாத்சல்யனான எம்பிரான் ராமன், எதற்காக யாரிடம் சரணாகதி கோரினான்?
வால்மீகி இராமாயணத்தில் ராமபிரான் சூரிய புத்திரனான சுக்ரீவனால் ஈர்க்கப் பெற்று 'சுக்ரீவம் சரணம் கத:' - சுக்ரீவா உன்னைச் சரணம் அடைகிறேன் என்று இறைஞ்சினான்.
சுக்ரீவன், தன்னுடைய இலங்கை ஆக்ரமணத்திற்கும், சீதையை மீண்டும் அடைந்திட உதவிடத் தகுந்தவன் வல்லவன் என்று இராமபிரான் தீர்க்கமாக நம்பியதால், சூரிய புத்திரனான சுக்ரீவனிடம் சரணாகதி வேண்டி நின்றான். அந்த நிமிடம் முதலாக இராமபிரானை ஒரு சிறு துரும்பு கூடத் தாக்கிடாத வகையில், சுக்ரீவன்
Apr 16 • 19 tweets • 3 min read
#வடுவூர்_ஸ்ரீராமன் நம் சக்கரவர்த்தி திருமகனின் அழகை அனுபவிப்போம். அவரின் வடிவழகு = ஸாமுத்ரிகா லக்ஷணம் பெயர்க்காரணம்: ஸமுத்ரராஜன் இந்த கலையை அருளினார். ஆகவே இதற்கு ஸாமுத்ரிகா (ஸமுத்ரத்தின் தத்தித ப்ரயோகம்+टाप् பெண்பால் விகுதி பெற்று ஸாமுத்ரிகா) என்றானது. இதனை அவர் கர்க மகரிஷிக்கு
உபதேசித்தார். ஒரு பொருளை இன்னதென்று புத்தியால் நிச்சயிக்க லக்ஷணம் (template) அவசியம். உதாரணமாக பானை என்பதற்கு வயிறும் வாயும் உடைய மண்ணாலான, நீர், அரிசி போன்றவற்றை சேமிக்க/சுமக்க உதவும் வஸ்து எனலாம். அதே போன்ற ஒன்றை குயவன் உருவாக்கியதை காணும் நாம், இது பானை என்று அறிகிறோம்.
Apr 15 • 20 tweets • 3 min read
#பழமொழிகளின்_சரியான_பொருள்
1 அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த
ராத்திரியில் கொடை புடிப்பான்
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த
ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.
2. அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்
இறைவன் திருவடி உதவுவது போல!
3 நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு சந்தையில்
மாட்டை வாங்கும் போது கவனிக்க வேண்டியது அதன் சுவடு. அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது. ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பது தவறானது.
4 ஆறிலும் சாவு, நூறிலும் சாவு
குருசேத்திர போரில் போருக்கு முன்னராக தன் மூத்த மகன்
Apr 13 • 23 tweets • 6 min read
#சூல்லூர்பேட்டை_செங்கலம்மா_பரமேஸ்வரி கோவில். செங்கலம்மா பரமேஸ்வரி கோயில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் திருப்பதி மாவட்டத்தில் உள்ள சூல்லூர் பேட்டையின் தெற்கு முனையில், காலங்கி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. சோழர்கள் காலத்தில் (பத்தாம் நூற்றாண்டில்) கட்டப்பட்ட தலம் இது.
இக்கோயில் சென்னை திருப்பதி மற்றும் நெல்லூரில் இருந்து முறையே 79 கிமீ, 84 கிமீ மற்றும் 97 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. செங்கலம்மா தேவிக்கு தென்காளி (தட்சிண காளி) என்று இன்னொரு பெயரும் உண்டு. ஆற்றில் நீராடச் சென்ற சில சிறுவர்கள் ஆற்றங்கரையில் செங்கலாம்மா விக்ரகத்தைக் கண்டு
Apr 12 • 12 tweets • 5 min read
பிரச்சினைகள் தீர்க்கும் பரிகாரங்கள்
அரியக்குடி தென் திருவேங்கடேசனுக்கும் தாயாருக்கும் 12 வெள்ளிக்கிழமை அர்ச்சனை செய்து வழிபட்டால் விரும்பிய வேலை கிடைக்கும்.
திருநாங்கூர் திருப்பதிகளுள் ஒன்றான திருக்காவளம்பாடி ராஜகோபால சுவாமிக்கு அவலும் வெண்ணெயும் நிவேதித்தால் மழலை வரம் கிட்டும்
திருக்கோலக்காவில் அருளும் தொனிப்ரதாம்பாளுக்கு வாக்வாதினி அர்ச்சனை செய்து, அம்பிகைக்கு அபிஷேகித்த தேனை உண்ணச் செய்தால் சரியாகப் பேச வராத குழந்தைகள் நன்கு பேசும்.
செங்கல்பட்டு அருகில் உள்ள சிராத்த சம்ரட்சணப்பெருமாளை தொடர்ந்து அமாவாசையில் தரிசித்தால் பித்ரு தோஷம், சாபம் விலகும்.
Apr 11 • 9 tweets • 3 min read
#கோவில்_நைவேத்தியங்கள்
இறை வழிபாட்டில் நைவேத்தியம் என்பது முக்கியமானது. மூலவர் விக்கிரகத்தின் அளவிற்கும், பிரகார தெய்வங்களின் எண்ணிக்கைக்கும் ஏற்ப சாஸ்திரத்தில் ஒரு கணக்கீடே உள்ளது. அந்த கணக்கீட்டின்படி, மூலவர் அகலம், உயத்துக்கு ஏற்ப சரியான அளவு நைவேத்தியம் தயாரித்து இறைவனுக்கு
சமர்ப்பித்து வந்தால், அந்த ஆலயம் உயிரோட்டமாக இருக்கும் என்கிறது சாஸ்திரம். இந்த நைவேத்தியம் இறைவனுக்கு படைக்கப்படும்போது, அதில் ஒரு பகுதியானது, அந்த கோவிலை பாதுகாக்கும் பூத கணங்களுக்கும், இறைவனிடம் வேண்டுதலை கொண்டு சேர்க்கும் தேவதைகளுக்கும்
Apr 11 • 7 tweets • 2 min read
#நற்சிந்தனை
கை, கால், காது, கண், நாக்கு, என, அனைத்து உறுப்புகளும் நன்றாக இருப்போர், அங்கஹீனம், காது கேளாமை, பேச்சு இழந்தோர், பார்வையற்றோர் ஆகியோரைப் பார்க்கும் போது, ஆண்டவா எந்தக் குறையும் இல்லாமல் என்னைப் படைத்தாயே என்று, இறைவனுக்கு நன்றி சொல்ல மறந்து விடுகிறோம். அதே சமயம்,
தெருவில், யாராவது சிரித்து பேசி செல்வதைப் பார்த்தால், சிரிப்பைப் பார் என்று, சிலருக்கு மனம் வெம்முகிறது. அடுத்தவர்கள் சற்று மகிழ்ச்சியாக இருந்தால் கூட, பொறுக்க முடிவதில்லை. இந்த பொறாமை குணத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து, மகாபாரதத்தில் ஒரு கதை உள்ளது. திருதராஷ்டிரன் மனைவி
Apr 10 • 19 tweets • 4 min read
#நற்சிந்தனை
#உண்மையான_பரிகாரம்_எது
ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார். நேரம் போனது தெரியாமல் வேட்டையாடி மாலை நேரம் வந்து எங்கும் இருள் கவ்வத் தொடங்கிவிட்டது. தூரத்தில் தெரிந்த ஒரு மரத்தின் மீது ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பதை போல் இருந்தது. மிகப் பெரிய உருவமாக இருந்தபடியால்
ஏதேனும் கொடிய மிருகமாகத் தான் இருக்க வேண்டும் என்று கருதி, பாணத்தை செலுத்தினான். அடுத்த சில வினாடிகளில் மரத்தின் மீதிருந்து “ஐய்யோ அம்மா” என்ற குரல் கேட்டது. மனிதனின் ஓலம் கேட்கிறதே யாரையோ தவறுதலாக கொன்று விட்டோமோ என்று அஞ்சி மரத்தை நோக்கி விரைந்தான். அங்கு சென்று பார்த்தால் 16
Apr 9 • 21 tweets • 4 min read
#சேண்பாக்கம்_பதினோரு_விநாயகர்கள்
விநாயகர் என்றாலே முதல் நாயகனாக, எங்கும் மூத்த பிரானாக பிரகாசிப்பவர். அந்தப் பிரகாசத்தின் ஓரு கீற்று பாலாற்றின் வெண்மையில் பட்டுத் தெறித்தது. மூலச் சக்தியின் கிரணங்கள் 11ஆக பெருகி பூ மலர்வது போன்று அழகு மூர்த்தங்களாக பூமிக்குள்ளிருந்து மலர்ந்தன.
மலர்ந்ததின் வாசம் தம் திருப்பாதங்களால் வலம் வந்த ஆதிசங்கரரின் உள்ளத்தை நிறைத்தது. அருகே அழைத்தது. அந்த மகான், விண் நிறைந்த நாயகன் மண்ணுக்குள் மறைந்து இருப்பதை தம் மனக்கண்ணில் கண்டு, தன் உற்றாரோடு வேகமாய் விநாயகனை தரிசிக்க நடந்தார். ஆற்றின் விரைவோடு செண்பக வனத்தினுள் புகுந்தார்.
Apr 9 • 19 tweets • 4 min read
#சேங்கனூர்_சீனிவாச_பெருமாள்_கோவில்
திருமலையில் கோயில் கொண்டுள்ள திருமால், சிலாத் திருமேனியாக மாறி நின்று அருளும் ஊர் சேங்கனூர். திருவெள்ளியங்குடி என்னும் திவ்ய தேசத்திற்கு வெகு அருகில் உள்ளது. 'வியாக்கியான சக்ரவர்த்தி' எனப் போற்றப்படுபவருமான ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை இத்தலத்தில்
தான் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு அவதரித்தார். ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிர திவ்யபிரபந்தம், ராமாயணம் போன்ற பல நூல்களுக்கு, அவர் எழுதிய விளக்க உரை வைணவ ஆச்சாரியார்களால் பெரிதும் போற்றிக் கூறப்படுகின்றது. தற்போது சேய்ஞலூர் என வழங்கும் ஊரில் யாமுன தேசிகருக்கும், நாச்சியார்
Apr 8 • 14 tweets • 3 min read
சிவபுராணம் என்றால் என்ன? அதை தினமும் படிப்பதால் வரும் பயன்கள் என்ன?
தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய திருவாசகத்தை ஒரு முறை
சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார். மாணிக்க வாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார். எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்
Apr 8 • 15 tweets • 5 min read
#திருப்புட்குழி
மூலவர்: விஜயராகவப் பெருமாள்,
தாயார்: மரகதவல்லி
தலவிருட்சம்: பாதிரி
தீர்த்தம்: ஜடாயு புஷ்கரிணி
விமானம் : விஜய வீர கோட்டி விமானம்
ஒப்பற்ற நாதனாம் இறைவன் நாராயணன் தர்மத்தை நிலைநாட்ட எடுத்த சிறப்பு மிக்க ஓர் அவதாரம் இராமாவதாரம். இராமவாதாரக் காலத்தில் தோன்றிய தலம்
இது. புள் என்பதற்கு பறவை என்பது பொருள். திரு என்றால் மரியாதை. ஜடாயு என்ற பறவைக்கு இராமபிரான் ஊழியம் செய்த தலம் என்பதால் திருப்புட்குழி என்பது பெயர். இராவணன் சீதா பிராட்டியை, சிறை எடுத்துச் செல்லும் வழியில் பறவைகளின் அரசனாகிய ஜடாயு சீதையை மீட்க இராவணனுடன் போரிட்டது. இராவணனால்
Apr 5 • 26 tweets • 6 min read
#விநாயகர் #காணபத்தியம்
இந்து சமயத்தில் இறைவனை வணங்குவதை 6 விதமாகப் பிரித்து (ஷண்மதம்) வழிபடும் வழக்கம் உள்ளது. அதில் காணபத்தியம் விநாயகரை முழு முதற்கடவுளாகக் கொண்டது. காணாபத்யம் கணபதிக்குரிய தனி வழிபாடாக இருந்தது என்றாலும் இன்று அது சைவ சமயத்தில் ஒரு பிரிவாகவே உள்ளது. விநாயகர்
என்றாலே தெய்வங்கள் எல்லோருக்கும் முதன்மையானவர், வெற்றியைத் தரும் நாயகர் என்று பொருள். (வி=இல்லை; நாயகன் =தலைவன்: தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவன் தனி முதல்வன்) கணங்களுக்கு தலைவராக இருப்பதால் கணபதி என்றும், யானை முகம் கொண்டிருப்பதால் கஜமுகன் என்றும், சிவபெருமான், உமையம்மை
Apr 4 • 10 tweets • 2 min read
திருமண் (திருநாமம்) வைணவர்களால் இட்டுக் கொள்ளப்படும் புனிதமான வைணவ சமயச் சின்னம். ஸ்ரீமன் நாராயணனின் பாதங்களைக் குறிப்பது #திருமண் என்னும் #திருநாமம் ஆகும். திருமண்ணை #ஸ்ரீசூர்ணம் என்றும் அழைக்கிறார்கள். ஸ்ரீசூர்ணம் மகாலட்சுமியின் அடையாளம். இந்தப் திருமண் புனிதமான இடங்களில்
இருந்து சேகரிக்கப் படுகிறது. எப்படி உவர் மண் நம் ஆடையினைத் தூய்மைப் படுத்துகிறதோ, அவ்வாறே திருமண்ணும் வைணவனின் உள்ளத்தையும் தூய்மை ஆக்குகிறது. ஸ்ரீ வராஹவதாரம் தோன்றி பூமிதேவியை காத்ததன் பொருட்டு துதிக்க வந்த தேவர்கள், முனிவர்கள் நெற்றி சூன்யமாக இருந்தது கண்டு திருமான் காப்பின்
Apr 2 • 14 tweets • 4 min read
Editor, A. N. D'Souza
DNA TIME
Arvind Kejriwal is not a Hindu but a #Crypto_Christian. He got converted to Christianity while working with Mother Teresa. He was also allowed to go to that part of the Vatican, where only Christians can go. When Mother Teresa was being given the title of saint, the Vatican had invited only Arvind Kejriwal from among the CMs of the whole of India.
The word 'crypto' in Greek means hidden or secret. "Crypto Christian" means Secret-Christian.The important aspects in this are:
Crypto-christian is not an abusive or negative word. Crypto-Christianity is an institutional practice of Christianity in a country in which Christians live under the basic principle of crypto-Christianity. There they worship the God of that country as a show, follow the religion that country which is their camouflage. But in reality they are Christians inside and continue to preach Christianity continuously.
Apr 1 • 5 tweets • 2 min read
#தேர்_இழுப்பதால்_வரும்_பெரும்_பலன்கள்
#மகாபெரியவா
நிலக்கிழார் ஒருவர் சொத்து தகராறினால் மன அமைதி இழந்து தவித்த நேரத்தில் காஞ்சி மஹாபெரியவரை தரிசித்தார். அவருடைய அகவேதனைகளை உணர்ந்த பெரியவர் அவரிடம் "தேர் இழுத்திருக்கிறீர்களா?" என வினவ, இல்லை என்றார் நிலக்கிழார். ஒரு முறை தேர்வடம் இழுத்துவிட்டு பிறகு உங்கள் பணியைத் தொடருங்கள் எல்லாம் நன்றாக முடியும் என ஆசீர்வதித்தார் மஹா பெரியவர். மூன்று மாதங்களுக்குப் பிறகு புன்னகையுடன் பெரியவரை சந்தித்த நிலக்கிழார் தீர்ப்பு எனக்கு சாதகமாக வந்தது தர்மம் தோற்பதில்லை என்ற நம்பிக்கை வந்துவிட்டது என்றார். தேர் இழுத்தாயோ என பெரியவர் வினவ ஆம் அதன்பின் தான் எல்லாம் நன்றாக நடந்தது. என்றார் நிலக்கிழார்.
தேர் என்பது நடமாடும் கோயில். முதியவர்கள், நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், ஆலயத்துக்குச் சென்று இறைவனை தரிசிக்க முடியாதவர்கள் தேர்த்திருவிழா அன்று இறைவனைக் கண்ணாரக் கண்டுகளிக்க முடியும். கோயிலில் தெய்வசக்தி எப்போதும் வெளிப் பட்டுக்கொண்டிருக்கிறது. தேர்த்திருவிழா அன்றோ தெய்வ சக்தி ஊர் முழுவதும் வெளிப் படும் ஊருக்குள் இருக்கும் தீய சக்திகள் அனைத்தும் அப்போது பறந்தோடி விடும். தேர் இழுப்பவர்களில் பேதங்கள் கிடையாது. எல்லாவற்றிலும் பேதங்கள் பார்க்கும் மனிதர்களாலேயே தம் பக்கம் இழுக்க முடியும் என்பதே தேரோட்டம் உணர்த்தும் உண்மை.
Apr 1 • 13 tweets • 3 min read
திங்கட்கிழமை இரவு மட்டும் திறக்கும் அதிசிய கோவில் #பரக்கலகோட்டை_பொது_ஆவுடையார்_கோவில்
வாரம் தோறும் திங்கள்கிழமை இரவு மட்டும் திறக்கும் அதிசய கோவில் பரக்கலக்கொட்டையில் உள்ள பொது ஆவுடையார் கோவில் ஆகும். ரூபமாகவும் (வடிவம்), அரூபமாகவும் (வடிவம் இல்லாமல்), அருவுருவமாகவும் (லிங்கம்)
வழிபடப்பெறும் சிவபெருமான், இத்தலத்தில் வெள்ளால மரத்தின் வடிவில் அருள் செய்கிறார். எனவே, இங்கு லிங்க வடிவம் கிடையாது. கோயில் திறக்கப்படும் போது, வெள்ளால மரத்தின் முன்பக்கத்தில் ஒரு பகுதியில் மட்டும் சந்தன காப்பு சாத்தி, வஸ்திரங்கள் அணிவித்து சிவலிங்கமாக அலங்காரம் செய்கின்றனர்.
Apr 1 • 13 tweets • 3 min read
#ஆனைகுட்டே_விநாயகர்_கோயில்
கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் உள்ள கும்பாசி என்ற ஊரில் உள்ள கோயில் ஆனைகுட்டே (ஆனேகுட்டே) விநாயகர் கோயில். ஆனேகுட்டே விநாயகர் 12 அடி உயரம்! ஒரே கல்லில் யானை ரூபத்தில் காட்சித் தருகிறார். தமிழக விநாயகர் அமைப்பில் இல்லாமல் யானை போல விக்ரகம்
அமைப்பு உள்ளது. சுயம்பு விநாயகர். திருநீற்றுக்கு பதிலாக நெற்றியில் நாமம் அணியப் பட்டுள்ளது. இவரை பக்தர்கள் விஷ்ணு ரூப கணபதி, விஷ்ணு ரூப பரமாத்மா, சித்தி விநாயகர், சர்வ சித்தி பிரதாய்கா என்கின்றனர். வரம் தரும் வரஹஸ்தம், சரண் அடைந்தோரைக் காக்கும் அபய ஹஸ்தம் என இவர் 4 கரங்களுடன்