#நெல்லை_சங்கரன்கோவில்_அறியாத_தகவல்கள்
அன்னை கோமதி தவம் செய்த ஆடி மாதப் பௌர்ணமி அன்று, இங்கு வந்து கோமதி அன்னையை வழிபடுபவர்களுக்குப் பிறவித் துன்பம் தீரும்.
இங்கே அதிகார நந்தி தம் தேவியுடன் தரிசனம் தருகிறார்.
இத்திருக் கோயிலில் பிரபலமான ஆடித்தபசு திருவிழாவின் போது, பக்தர்கள்
தங்கள் விளை நிலங்களில் இருந்து கொண்டு வந்த காய்கறிகளைக் காணிக்கையாக அளிக்கிறார்கள்.
ஸ்ரீசங்கர நாராயணருக்கு அபிஷேகம் இல்லை. ஆனால், இங்கிருக்கும் ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் உண்டு.
ஞாயிற்றுக் கிழமை அன்று இந்த திருத்தலத்தில் இருந்து, ஆரோக்கியத்தை அருளும் சூரியபகவானைத் தியானித்து
Jul 26 • 19 tweets • 4 min read
#மயிலை_ஸ்ரீஆதிகேசவ_பெருமாள்
ஆதிகேசவ பெருமாள் ஆலயம் 500 முதல் 1000 வருடப் பழமையானது. அங்கு ஆலய மூலவர்களுடன் பேயாழ்வாருக்கும் தனிச் சன்னதி உள்ளது. அவர் திருவவதாரம் செய்தத் தலம் இது. சித்ரை புஷ்கரணி என்ற பெயரில் இருந்த நீர் நிலை காலப் போக்கில் பெயர் மாறி சித்திரக் குளம் என தற்போது
அழைக்கப் படுகிறது. ஒரு காலத்தில் வனமாக இருந்த இந்த இடத்தில் பிருகு முனிவர் தேவர்களையும் ரிஷி முனிவர்களையும் துன்புறுத்தி வந்த அசுரர்களின் தொல்லையை ஒழிக்க எண்ணம் கொண்டு யாகம் ஒன்றை செய்து வந்தார். அவருடன் வேறு பல முனிவர்களும் யாகத்தில் கலந்து கொண்டு இருந்தார்கள். யாகம் முடிந்து
Jul 25 • 16 tweets • 3 min read
#வனபத்ரகாளியம்மன்
தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம்
மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில், பவானி ஆற்றங்கரையில், காடுகள் நிறைந்த பகுதியில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி, தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து வருகிறாள், தேக்கம்பட்டி வன பத்ரகாளியம்மன்.
முன்னொரு காலத்தில் ஈசனிடம்
இருந்து பல்வேறு வரங்களைப் பெற்று, தேவர்களையும், முனிவர்களையும், மக்களையும் துன்புறுத்தி வந்தான், மகிஷா சூரன். இவனை அழிப்பதற்காக அம்பாள், சிவபெருமானை நினைத்து தியானம் செய்து பூஜித்தாள். பின்னர் அந்த அசுரனை அழித்தாள். பார்வதி தேவி, சிவபெருமானை நினைத்து தியானம் செய்த இடத்தில்
Jul 25 • 10 tweets • 2 min read
#சோ_விளக்கம் #இந்துமகாசமுத்திரம்
படைப்புக் கடவுளான பிரம்மன் தனது சொந்த மகளான சரசுவதியையே திருமணம் செய்துகொண்டது ஏன்?
சோ சார் தனது இந்து மகா சமுத்திரம் என்ற புத்தகத்தில் இது போன்ற பிதற்றல் ஆன கேள்விகளுக்கு அழகாக விளக்கம் கொடுத்திருக்கிறார். “இந்த மாதிரி கேள்விகள் கேட்கப்பட
காரணம் இந்துமத எதிர்ப்பாளர்களின் குறைபட்ட சமஸ்கிருத ஞானம், இவர்கள் சமஸ்கிருதத்தை முறையாக புரிந்து கொள்ளாதது என்று கூட சொல்லலாம். இதை நான் என்னுடைய பாணியில் விளக்குகிறேன். சம்ஸ்கிருதம் தமிழ் 2 மொழிகளுக்கும் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை உண்டு. ஒரு சொல், பல பொருள். உதாரணம் திருக்குறள்.
Jul 24 • 25 tweets • 5 min read
#ரிஷிகள்_மாகாத்மியம்
ரிஷிகள் மனிதர்கள் அல்ல, தேவர்களும் அல்ல. தேவர்களுக்கும் மேலானவர்கள். ரிஷிகள் தேவர்களையும், அசுரர்களையும், ராட்சஷர்களையும், மனிதர்களையும் படைத்தவர்கள். பரப்ரம்மான வாசுதேவனே ரிஷி தான். அவரே மும்மூர்த்திகளாக வ்யூஹ அவதாரம் செய்தார். மும்மூர்த்திகளும் ரிஷிகள்
தான். பரவாசுதேவன் மனித அவதாரம் செய்த போது கூட, தன்னை ரிஷியின் பரம்பரையை சேர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ள பெருமைப்பட்டார். ஸ்ரீ ராமர் வசிஷ்ட கோத்திரம் (பரம்பரை). சீதை அவதரித்தது கௌதம கோத்திரம், ஸ்ரீ ராமரை மணம் செய்து கொண்ட பின், வசிஷ்ட கோத்திரம்.
ஸ்ரீ கிருஷ்ணர் கர்க கோத்திரம்.
Jul 23 • 10 tweets • 2 min read
#வடநாகேஸ்வரம்_நாகேஸ்வரர்_கோயில்
குன்றத்தூர் காஞ்சிபுரம் மாவட்டம்.
பாம்பு என்றாலே தீய சக்தி விலங்காக கருதும் பல மதங்களுக்கு முன்பே பாம்பிற்கு இருக்கும் தெய்வீக குணத்தை கண்டுகொண்டவர்கள் நம் சித்தர்கள், ஞானிகள் ஆவர். ஜோதிடத்தில் நிழல் கிரகங்களான ராகு – கேது பாம்பின் அம்சமாக
கருதப்படுகின்றன. ராகு – கேது கிரகங்களின் தோஷங்களை போக்கும் வடநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயில் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமையானது.
மூலவர் நாகேஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
தாயார் காமாட்சி அம்மன்
தீர்த்தம்: சகல பாவங்களையும் போக்கும் சூரிய புஷ்கரணி தீர்த்தம்.
தல விருட்சம் செண்பக மரம்.
Jul 22 • 30 tweets • 4 min read
#தண்டபாணி_பைரவர் #காசி_வைபவம்
காசியில் 2 பைரவர் கோயில்கள் உண்டு. ஒன்று கால பைரவர் கோயில், மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போல காசி விஸ்வநாதர் ஆலய கருவறைக்கு நேர் எதிரில் அமைந்துள்ள சந்நதியில் பைரவர் தண்டபாணி என்னும் பெயரில் எழுந்தருளி உள்ளார். காசியிலேயே பாவம் செய்பவர்களும்
இருக்கிறார்கள். காசியில் சுற்றித்திரியும் போதும், பாவ எண்ணங்களுடன் திரிபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் வாழ்வில் முக்தியே கிடைக்காதபடி செய்து விடுவார் இந்த தண்டபாணி பைரவர். தண்டபாணி மந்திரிலிலுள்ள தண்டநாயகர் என்னும் தண்டபாணி பைரவர், காசிக்குப் போகிறவர்களைத் தரம்
Jul 20 • 25 tweets • 4 min read
திருவிடைமருதூர் ஆலயத்தில் அருள் பாலிக்கும் அன்னை #அன்பிற்பிரியாள்
காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த பெரும் வணிகரான மருதவாணனுக்குக் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தது. அதனை நினைத்து வருந்திய அவர், தனக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டி அங்கிருந்த சிவபெருமான் கோவிலில் தினமும் வழிபட்டு
வந்ததுடன், அங்கு வருபவர்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு தானங்களையும் வழங்கி வந்தார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த பார்வதி தேவி, இறைவன் சிவபெருமானிடம் அவருக்குக் குழந்தைப்பேறு அளிக்கும்படி வேண்டினாள். ஆனால் இறைவனோ, “இந்தப் பிறவியில் மருதவாணனுக்குக் குழந்தைப்பேறு இல்லை. எனவே,
Jul 20 • 18 tweets • 4 min read
#பாரியூர்_கொண்டத்துக்_காளியம்மன்
#ஆடிமாத_சிறப்புப்_பதிவு
பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் என்று எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்படும் அன்னை அற்புதமான சக்தி வாய்ந்தவள். இவ்வூர் புராண காலத்தில் பராபுரி என்று அழைக்கப் பட்டது. பரா என்றால் போற்றுதல், வழிபடுதல் என்றும் புரி என்றால் ஊர்,
என்பதற்கு ஊர், கோட்டை மதில் என்றும் பொருள். கோட்டை மதில்களால் சூழப்பட்ட தலமே பாரியூர் என்பதாக கல்வெட்டுக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குல தெய்வம் கொண்டத்துக் காளியம்மன் என நம்பப்படுகிறது. எனவேதான் பாரியூர் என்று அழைக்கப்படுவதாகவும்
Jul 19 • 16 tweets • 3 min read
#ஸ்ரீகாட்டுவீர_ஆஞ்சநேயர்
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேவ சமுத்திரம் கிராமத்தில் உள்ளது அருள்மிகு ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில். அனுமன் சிறுவயது முதலே காடுகளில் வலம் வந்தமையாலும் , இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு வனமாக இருந்தமையாலும், மூலவரானவர் காட்டுவீர ஆஞ்சநேயர் என்ற
என்ற திருநாமம் கொண்டு அழைக்கப் பெறுகிறார். இக்கோவிலில் உள்ள கர்ப்ப கிரகம் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் விக்கிரகமாக உள்ளது. இப்பகுதி குன்றுகளாக விளை நிலங்களாக இருந்தது. இந்த விளை நிலங்கள் யாவும் வெங்கட்ராம செட்டியாருடையது என்கிறது வரலாறு. அப்போது நிலத்தில் உள்ள பாறையின்
Jul 19 • 21 tweets • 4 min read
#ஆற்றுக்கால்_பகவதி_அம்மன்
கேரளம் உருவெடுக்க காரணமாக இருந்த பரசுராமர் 108 சிவாலயங்களையும், 108 பகவதி அம்மன் கோவில்களையும் நிறுவியதாக புராணம் கூறுகிறது. கேரளாவில் உள்ள அம்மன்களுக்கு என்று தனிப் பெயரில்லை. அவர்கள் அனைவருமே பகவதி என்றே அறியப்படுகின்றனர். கேரளாவில் பகவதி அம்மன்
கோவில்கள் அனேகம் இருக்கின்றன. இருப்பினும் அனைத்து பகவதி அம்மன் கோவில்களுக்கும் இல்லா சிறப்பு ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு உண்டு. அதற்கு, இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப் படும் உலகப் புகழ் பெற்ற பொங்கல் திருவிழாதான் காரணம். இந்த விழாவின்போது லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல்
Jul 18 • 7 tweets • 2 min read
#தீக்ஷை
ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட விரும்பும் ஒருவர் குருவிடம் இருந்து தீட்சை பெறுவது வழக்கம். தீட்சை என்பதற்கு ஆரம்பம் என்று அர்த்தம். அதாவது ஒரு மந்திரத்தின் மூலமாக ஆன்மீக வழியில் முன்னேற்றம் அடைய குருவின் மூலம் பெற்ற உபதேசத்தை தொடங்கி செய்வது என்பது அதன் பொருள். தீட்சைக்கு 3
அடிப்படை விஷயங்கள் தேவை. முதலாவது, தீட்சை தருவதற்கான ஆன்மீக குரு. இரண்டாவது தீட்சை பெறுவதற்கான மாணவன். மூன்றாவது தீட்சைக்கு உரிய மந்திரம் அல்லது நெறிமுறை. இந்த 3 விஷயங்களும் மிகச்சரியாக அமைந்தால் தான் ஒருவரது ஆன்மீக வளர்ச்சி என்பது சாத்தியம். ஆன்மீக சான்றோர்கள் அவரவர்களுக்கு
Jul 18 • 9 tweets • 2 min read
#Diksha
Guru Dikshā is very important and first step in spiritual journey. It is giving of a mantra or an initiation by the guru in Hinduism, Buddhism, and Jainism. Diksa is given in a one-to-one ceremony, and typically includes the taking on of a serious spiritual discipline.
Sanskrit word Diksha - root dā (to give) plus kṣi (to destroy) or alternately from the verb root dīkṣ (to consecrate). When the mind of the guru and the disciple become one, then we say that the disciple has been initiated by the guru. Diksa can be of various types, through
Jul 17 • 5 tweets • 2 min read
#ஆஷாட_ஏகாதசி இன்று 17.7.24
பண்டரி யாத்திரை ஆத்ம சுகத்தை அளிக்கும் என்று நாமதேவர் கூறுகிறார்.
பரப்ரஹ்ம ஸ்வரூபமே பாண்டுரங்கன் அவனைப் பாடுங்கள் என்கிறார் ஆதிசங்கரர். சந்த் ஞானேஸ்வர் முதல் துக்காரம் வரை பல பக்தர்கள் பாடிய ஆயிரக்கணக்கான அபங்கங்கள் பக்தியில் நம்மைத் திளைக்க வைக்கின்றன
தினமும் 24 மணிநேரமும் பகவான் நாம சங்கீர்த்தனம் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஒரே புண்ணியக்ஷேத்திரம் #பண்டரிபுரம் ஜெய் ஜெய் ராமகிருஷ்ண ஹரி என்ற ஒரே நாமம் எங்கும் ஒலித்தபடியே இருக்கும் பண்டரிபுரத்தில், பக்தர்கள் ஒவ்வொருவரும் தனது பாதக் கமலங்களைத் தொட்டு வந்தனம் செய்யும் பாக்கியத்தை
Jul 17 • 5 tweets • 2 min read
#நம்_முன்னோர்கள்_கடைபிடித்த_32அறங்கள்
1.வழிபோக்கர்களுக்கு சத்திரங்கள் கட்டி வைப்பது.
2.கல்வி கற்கும் ஏழை பிள்ளைகளுக்கு உணவு வசதி அளிப்பது.
3.அறுவகை சமயத்தார்க்கும் உணவு கொடுப்பது.
4.பசுவுக்கு புல்லும்,வைக்கோலும் கொடுப்பது.
5.சிறைச்சாலையில் துன்புறுவோர்க்கு அன்னமிடுதல்.
6.வீடு தேடிவரும் ஏழைகளுக்கு பிச்சை இடுதல்.
7.திண்பண்டம் நல்கல்.
8.அறநெறி மேற்கொண்டு வாழும் துறவிகளுக்கு பசியமர்த்துவது.
9.அனாதை குழந்தைகளை எடுத்து வளர்ப்பது.
10.அனாதைப் பிணங்களை எடுத்து அடக்கம் பண்ணுவது.
11.தாய்மை பேறுபெற்ற பெண்களுக்கு உதவி செய்வது.
12.வாசனைப் பொருட்களை கொடுப்பது
Jul 17 • 4 tweets • 5 min read
#ஸந்த்_சக்குபாய்
பண்டரிபுரத்துக்கு அருகில் சிஞ்சிருனிபுரம் என்ற கிராமத்தில் கங்காதர ராவ் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் மனைவி கமலாபாய். இவர்கள் எப்போதும் பகவான் நாமத்தைச் சொல்லி, நல்லதையே நினைத்து, எல்லோருக்கும் நல்லதையே செய்து வந்தார்கள். இவர்களுக்கு #சக்குபாய் என்ற பெண் குழந்தை இருந்தது.
தினமும் தெய்வ வழிபாட்டையும், பஜனையையும் கேட்டபடியே குழந்தை வளர்ந்தது. ஒரு நாள் தோழிகளுடன் சக்குபாய் மணல் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது பஜனைப் பாட்டுகளைப் பாடியபடியே முதியவர் ஒருவர் அந்த வீதி வழியாக வந்து கொண்டிருந்தார். சக்குபாய் கட்டிய மணல் வீடு, அவரின் கால் பட்டு அழிந்தது. கோபத்துடன் சக்குபாய்,
‘‘தாத்தா, நான் எவ்வளவு ஆசையா இந்த வீட்டைக் கட்டினேன் தெரியுமா? நீங்கள் ஒரு நிமிடத்தில் நாசமாக்கி விட்டீர்களே… இது நியாயமா?’’ என்று கேட்டாள்.
‘‘பகவான் நாமத்தில் லயித்து இருந்ததால் தவறு நடந்து விட்டது!” என்று மன்னிப்பு கேட்டார் முதியவர். குழந்தை அல்லவா? தனது வீடு சிதைந்ததை அந்தப் பிஞ்சு மனதால் தாங்க முடியவில்லை.
தனது மணல் வீட் டுக்கு பதிலாக, அவர் கையில் மீட்டிக் கொண்டு வந்த தம்புராவைக் கேட்டாள். அவரும் தம்புராவைக் கொடுத்து அதை எப்படி மீட்டுவது என்று கற்றுக் கொடுத்தார்.
குழந்தையின் காதில் அஷ்டாக்ஷர மகா மந்திரத்தை ஓதி அதை தினமும் ஜபிக்குமாறும் கூறினார்.
‘‘அஷ்டாக்ஷரம் என்ற பெயருடைய பலர் இந்தக் கிராமத்தில் இருக்கிறார்களே? அவர்களில் யாருடைய பெயர் இது?” என்று கேட்டாள் சக்குபாய்.
அவளிடம் கஜேந்திரன் மற்றும் பிரகலாதன் கதைகளைக் கூறிய முதியவர், அஷ்டாக்ஷரத்தின் பெருமைகளையும் எடுத்துரைத்தார்.
அனைத்தையும் கேட்ட சக்குபாய், பெரியவரிடம் தான் விளையாட்டாக தம்புராவைக் கேட்டதாகச் சொல்லி, ‘‘அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்!’’ என்றாள்.
சக்குபாயின் முதுகில் அன்புடன் தடவி, ‘‘தம்புராவை மீட்டி, நேரம் கிடைக்கும் போதெல்லாம் பஜனைப் பாடல் பாடு!’’ என்று சொல்லி மறைந்தார் முதியவர்.
அதன் பிறகு குழந்தையின் மனதில் இனம் புரியாத சந்தோஷம் ஏற்பட்டது. அவர் சொல்லித் தந்த அஷ்டாக்ஷர மந்திரத்தை எப்போதும் சொல்லிய படியே இருந்தாள். தோழிகளுடன் விளையாடச் செல்லவில்லை.
மனதில் எப்போதும் இறைவன் நாமம் ஒலித்துக் கொண்டிருந்தது. மறுபடியும் அந்தப் பெரியவரைக் காண வேண்டும் என்று மனது ஆசைப்பட்டது.
10 வயதாகி விட்டதால், உடனே இவளுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று பெற்றோர் வரன் தேடி னர். எப்போதும் மௌனமாக இருப்பதால் இவளை ‘பைத்தியம்!’ என்று ஊரார் பேசத் தொடங்கினர்.
இந்த நிலையில் சிந்து தேசத் திலிருந்து மித்ருராவ் என்ற இளைஞன் வியாபார விஷயமாக அங்கு வந்தான். அவனது அறிவும் அழகும் சக்குபாயின் பெற்றோருக்குப் பிடித்ததால், அவனைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
அதுவரை திருமணமே வேண்டாம் என்று சொன்ன சக்குபாயும் திருமணத்துக்குச் சம்மதித்தாள். திருமணம் சிறப்பாக நடந்தது. சக்குபாய் சிந்து தேசத்துக்குச் சென்றாள்.
கணவர் வீட்டில் மாமியாரும் நாத்தனாரும் நன்றாக வேலை வாங்கினார்கள். சக்குபாயும் எல்லா வேலைகளையும் பொறுமையாகச் செய்தாள். மனம் மட்டும் எப்போதும் பகவான் நாமத்தை சொல்லியபடியே இருந்தது.
தன் மனைவி எதிலும் பற்று இல்லாமல் இருப்பது மித்ருராவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. சக்குபாயோ நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியானம், பஜனை செய்வதுமாக இருந்தாள். இவளை இங்கும் ‘பைத்தியம்’ என்றனர் பலர்.
அவளுக்குப் பேய் பிடித்திருப்பதாகக் கூறி மந்திரவாதியைக் கூப்பிட்டு, பேய் ஓட்டச் சொன்னார்கள். அறையில் வைத்து பூட்டி னார்கள். அங்கும் அவள் தியானம் செய்தாள்.
பஜனைப் பாடல்களைக் கண்ணீருடன் மனம் உருகிப் பாடினாள். அவள் குழந்தையாக மணல் வீடு கட்டியபோது முதியவர் வேடத்தில் வந்த பகவான், மீண்டும் அதே வேடத்தில் சக்குபாய் வீட்டுக்கு வந்தார்.
தான் பேய் ஓட்டுவதில் வல்லவன் என்று முதியவர் கூற, சக்குபாயின் மாமியார் அவரை சக்குபாய் அறைக்குச் சென்று பேய் ஓட்டும் படி கூறினாள். அவரைப் பார்த்ததும், சக்குபாய்க்கு அவரை முதலில் சந்தித்தது நினைவுக்கு வந்தது.
அவர் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தாள். இதைப் பார்த்த அவள் கணவரும் மாமியாரும் இவரால் சக்குபாய்க்குப் பைத்தியம் தெளியும் என்று சமாதானம் அடைந்தனர்.
முதியவர் சக்குபாயிடம், ‘‘இல் வாழ்க்கையில் இருந்து கணவருக்கும் மற்றவர்களுக்கும் தேவையானவற்றைச் செய்து, அந்த வாழ்க்கையை அனுபவித்த பிறகே அதில் உள்ள பற்றுவிடும். ஆகவே, இனி நீ உன் கணவருக்குத் தேவையானதை இன்முகத்துடன் பூர்த்தி செய்’’ என்றார். அப்படியே இருப்பதாக வாக்குக் கொடுத்தாள். கணவருடன் இனிமையாகப் பேசி, அவரை மகிழ்வித்தாள் சக்குபாய்.
இவர்களின் இல்லறத்தைப் பார்த்து ஊரே வியந்தது. சக்குபாய் சந்தோஷமாக இருந்தாலும், அந்த முதியவரை இனி ஒரு முறை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் அடிக்கடி தோன்றி அவளை வாட்டியது. இதனால், மனநிலை பாதிக்கப்பட்டு, நீர் எடுக்கச் சென்றபோது கிணற்றில் குதித்தாள். இதைப் பார்த்து பகவான் சும்மா இருப்பாரா? பக்தரின் வடிவில் வந்து காப்பாற்றி, நல்ல வார்த்தைகள் பல கூறி அவளை சமாதானப்படுத்தினார். அதனால் தெளிவடைந்த சக்குபாய் அவரிடம் சகஜமாக மனம் விட்டுச் சிரித்துப் பேசினாள். அங்கு தண்ணீர் பிடிக்க வந்த சில பெண்கள், இந்தக் காட்சியைக் கண்டு மித்ருராவிடம் சென்று சக்கு பாய்க்கும் வேறு ஆடவனுக்கும் தொடர்பு இருப்பதாகவும் குளக்கரையில் அவர்கள் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதாகவும் கூறினர். கோபத்துடன் அங்கு வந்த மித்ருராவ், அவளைத் திட்டியதுடன், அவளிடம் பேசிய அந்த மாய பக்தனைப் பார்த்தார். ஆனால், மித்ருராவின் கண்களுக்கு, முன்பு வீட்டுக்கு வந்த முதியவர் போல காட்சி தந்தார் பகவான். சக்குபாய் கால் தவறி கிணற்றில் விழுந்ததாகவும், தான் காப் பாற்றியதாகவும் கூறினார். அவரிடம் மன்னிப்புக் கேட்டு, மனைவியுடன் வீடு திரும்பினார் மித்ருராவ். பழைய படி இல்லற வாழ்க்கை இனிமையாகச் சென்றது.
ஒரு முறை சக்குபாய் தண்ணீர் எடுக்க குளக்கரைக்குச் சென்றபோது, அந்த வழியாக பஜனை செய்தபடி ஒரு குழு பண்டரிபுரம் சென்று கொண்டிருந்தது.
கபீர்தாஸ், ராமதாஸ், நாமதேவர் என்று பலரும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். அவர்களை வலம் வந்து தன்னையும் அவர்களுடன் பண்டரிபுரம் அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டாள் சக்குபாய்.
அதற்கு அவர்கள், ‘‘கணவரிடமோ, மாமியாரிடமோ உத்தரவு வாங்கி வந்தால்தான் அழைத்துச் செல்வோம்!’’ என்றனர். இல்லத்துக்கு வந்த சக்குபாய் தன் கணவரிடம் விவரத்தைச் சொல்லி, அனுமதி கேட்டாள்.
கணவரோ தற்போது அங்கு செல்ல வசதி இல்லாததால் அடுத்த வருடம் தானே அழைத்துச் செல்வதாகக் கூறி னார். சக்குபாய் பிடிவாதம் பிடிக்கவே அவளை ஓர் அறையில் வைத்துப் பூட்டினார். அறையில் இருந்தபடி பண்டரிநாதனை மனம் உருக அழைத்துக் கதறி அழுதாள். ‘எத்தனையோ பேர் பகவானின் திருவிழாவைக் காணும்போது, தனக்கு மட்டும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே!’ என்று சங்கடப் பட்டாள்.
தன் பக்தை துன்பப்படுவதை பகவான் பொறுப்பாரா? உடனே அவர் ஒரு பெண் உருவில் அந்த அறைக்கு வந்தார். பூட்டை உடைத்து அவளுடைய கயிற்றை அவிழ்த்துவிட்டு, தன்னைத் தூணில் கட்டும்படி கூறினார். ‘‘யாருக்கும் சந்தேகம் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன். தைரியமாக பண்டரிபுரத்துக்குப் போ!’’ என்றார்.
வந்திருப்பது பகவான் என்று தெரியாமல் அவரைத் தூணில் கட்டிப் போட்டாள் சக்குபாய். பிறகு வீட்டின் பின்பக்கமாக வெளியேறி, கபீர்தாஸ் பஜனை கோஷ்டியிடம் சென்று, தானும் பண்டரிபுரம் வரு வதாகக் கூறினாள். தன் ஞானக் கண்ணால் நடந்ததை அறிந்த கபீர்தாஸ் சந்தோஷத்துடன் அவளை தன் பஜனை கோஷ்டியில் சேர்த்துக் கொண்டார். சக்குபாய் தனது இனிய குரலால் பாடல்களைப் பாடி, எல்லோரையும் மகிழ்வித்தாள். பக்தர்களின், ‘பாண்டுரங்க விட்டல! ஜே! ஜே! விட்டல பண்டரி நாதா’ என்ற குரல் எல்லா இடத்திலும் ஒலித்தது.
சக்குபாய்க்காக இறைவன் அறைக்குள் இருப்பதை அறியாத அவள் கணவர், பாகவத கோஷ்டி கிராமத்தை விட்டுச் சென்ற பிறகு, அறையைத் திறந்தார்.
அங்கு சக்குபாயின் உருவில் இருந்த பகவான், ஒன்றுமே நடக்காதது போல் அவர் சொல்லுக்குப் பணிந்து நடந்தார்.
வழக்கம் போல அந்த வீட்டில் எல்லோரும் அவளை வேலை வாங்கினார்கள். அவளும் சந்தோஷத்துடன் வேலை செய்வதைப் பார்த்து திருப்தி அடைந்தனர்.
பண்டரிபுரம் சென்ற சக்குபாயோ பகவானின் சந்நிதியை விட்டு வர மனம் இல்லாமல், எல்லாவற்றையும் மறந்து, ஒவ்வொரு நாளையும் மிகவும் சந்தோஷமாகக் கழித்தாள். ஒரு நாள் பகவானுக்குப் பூமாலை சூட, பூக்களைப் பறிக்கும்போது, பாம்பு கடித்து பாண்டுரங்கன் சந்நிதியில் மயங்கி வீழ்ந்தாள். அவள் இறந்து விட்டதாகக் கருதிய மற்றவர்கள், அவளை அருகில் உள்ள சத்திரத்தில் போட்டு விட்டு, அவளின் கணவருக்குச் செய்தி அனுப்பினர். இதைக் கேட்ட மித்ருராவ் கோபத்துடன் அவர்களை நோக்கி, ‘‘எப்போதும் என் மனைவியைக் குறை கூறுவதே உங்கள் பிழைப்பாகி விட்டது. அவள் இங்கேதான் இருக்கிறாள். அவளைக் குறை கூறி இனி யாரும் இங்கே வர வேண்டாம்!’’ என்று வந்தவர்களைத் துரத்தினார்.
பாம்பு கடித்த நிலையில் மயங்கிக் கிடந்த சக்குபாயை பகவான் வைத்தியராக வந்து காப்பாற்றினார். பிறகு அவளுக்கு நல்ல வார்த்தைகள் கூறி, அவளை பண்டரிபுரத்திலிருந்து ஊர் வரைக்கும் அழைத்து வந்து மறைந்தார்.
ஊருக்குள் வந்த சக்குபாய், தான் கட்டிப்போட்ட பெண் ஊர்க் குளத்தில் தண்ணீர் எடுப்பதைப் பார்த்தாள். ‘உடனே வருவதாகச் சொல்லி பல நாட்கள் தங்கி விட்டோமே!’ என்று வருந்தி, அவளிடம் மன்னிப்புக் கேட்டாள்.
Jul 16 • 9 tweets • 2 min read
#சாதுர்மாஸ்ய_விரதம்
மகான்கள் மற்றும் ஆன்மிக அன்பர்களால் பல வகையான விரதங்கள் அனுஷ்டிக்கப் படுகின்றன. சக்தி மிக்க விரதங்களில் ஒன்று சாதுர்மாஸ்ய விரதமாகும். ‘சதுர்’ என்றால் 4 என்று பொருள். ‘மாஸ்ய’ என்றால் மாதம் என்று பொருள். 4 மாதங்கள் கொண்ட இந்த விரதம், ஆடி மாத பௌர்ணமி முதல்
கார்த்திகை மாத பௌர்ணமி வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதத்தைக் கடைபிடிப்பவர்கள் ஆடி மாத பௌர்ணமி தினத்தன்று அதாவது, ‘குருபூர்ணிமா’ அன்று தங்கள் குருமார்களை நினைவு கூறும் வகையில் வேத வியாசரை வழிபட்டுத் விரதத்தைத் துவக்குவார்கள். இந்த தினத்தை மகான்கள், #வியாச_பூர்ணிமா என்றும்
Jul 16 • 26 tweets • 6 min read
#Sri_Purandara_Dasa
Srinivasa Nayaka, also known as Purandara Dasa (c. 1484 – c. 1564) was a composer, singer and a Haridasa philosopher from present day Karnataka, India. He was a follower of Madhvacharya's Dvaita philosophy. He was one of the chief founding proponents of
Carnatic music. In honor of his contributions to Carnatic music, he is referred to as the Pitamaha of Carnatic music. According to our Puranas he is considered as an incarnation of Narada. Purandara Dasa was a wealthy merchant of gold, silver and other miscellaneous jewellery
Jul 15 • 15 tweets • 3 min read
#திருச்சிற்றம்பலம்_எமதர்மன்
வாயு மூலையில் சிவனும், அக்னி மூலையில் எமனும் காட்சியளிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் எமகண்ட நேரத்தில் எமதர்மனுக்கு பூஜைகள் நடக்கும். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது, திருச்சிற்றம்பலம் கிராமம். இங்கு எமதர்ம ராஜா ஆலயம் உள்ளது. ஆறடி உயர எருமை
வாகனத்தின் மீது முறுக்கிய மீசையுடன், பாசக்கயிறு, ஓலைச்சுவடி மற்றும் கதையுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார் எமதர்ம ராஜா. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இவர்தான், இப்பகுதி மக்களுக்கு இஷ்ட தெய்வம். சாதாரண மண் கட்டிடமாக இருந்த இந்த ஆலயம், தற்போது பலதரப்பட்ட மக்களின் உதவியோடு, மிகச்
Jul 15 • 23 tweets • 5 min read
#மங்களம்_தரும்_குங்குமம்
நடு நெற்றியில் உள்ள லலாட மத்தியை (புருவமத்தி என்றும் அழைக்கப்படும்) நெற்றிக் கண் என்றும் அழைக்கப்படும். இதன் மூலம் திபேத்திய லாமாக்கள் மற்றவர்களின் ஆரா (aura) என்ற ஒளியுடலை காண்கிறார்கள். சிவனுக்கு இந்தக் கண்ணை வெளிப்படையாக தெரியும் வண்ணம் படங்களாக
வைத்துள்ளார்கள். பழங்காலத்திலும் இக்காலத்திலும் மந்திரவாதிகள், ஆண்களையும் பெண்களையும் வசியம் செய்து மயக்கி கொண்டு செல்ல நெற்றியின் நடுவே இருக்கும் ஆக்ஞா சக்கரத்தின் மூலமாகவே வசியம் செய்யும் சக்தியை செலுத்துவார்கள். மேலும் அந்த பொட்டு வைக்கும் இடம் பீனியல் மற்றும் பிட்யூட்டரி
Jul 14 • 11 tweets • 2 min read
#சுதர்சன_ஜெயந்தி
சுதர்சனம் பாஸ்கர கோடி துல்யம். பஞ்சாயுத ஸ்லோகம் எம்பிரானின் 5 ஆயுதங்கள் பற்றிப் பேசிடும். சக்கரத்தாழ்வாரின் பெருமை பற்றிச் சொல்லும்
'ஸ்புரத் சஹஸ்ரார ஷிகாதி தீவ்ரம்
சுதர்சனம் பாஸ்கர கோடி துல்யம்
சுரத் விஷாம் ப்ராண வினாசி விஷ்ணோ
சக்ரம் சதாஹம் சரணம் ப்ரபத்யே !
- அடியேன் எப்பொழுதும் விஷ்ணுவின் சக்ராயுதத்திற்கு முன்னே வேண்டிக் கிடக்கிறேன். ஆயிரம் அக்னிப் பிழம்புகளை விடக் கூர்மையானதும், எண்ணிக்கையைக் கடந்த கோடானு கோடி சூரியன்களுக்குச் சமமானதும், அரக்கர்களின் உயிர்களை நொடியில் சென்று விநாசம் செய்யும் ஒப்பற்ற பலமும் கொண்டது சக்ராயுதம்.