நன்றி...!
இது என்னுடைய தொகுப்பு மட்டும் இல்லை.. பேஸ்புக்கில் நண்பர் மு. ரா. விவேக் என்பவரும் எழுதியிருந்தார். அதனுடன் என்னுடையதையும் சேர்த்து நான் கார்டுகளாக போட்டுள்ளேன்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்தியாவில் ஊழல் தான் பெரிய பிரச்சனை, ஊழலால் தான் இந்தியா வளர்ச்சி அடையாமல் இருக்கு என்று ஊடகங்கள், நடுநிலையாளர்கள் மூலம் பேசி, எழுதி, போராடி பாஜக ஆட்சிக்கு வந்தது.
8 ஆண்டு பாஜக ஆட்சியில் தான் ஊழலே இல்லை என்று சொல்கிறார்களே.? சரி, அப்ப இந்தியாவில் என்ன வளர்ச்சி ஏற்பட்டுள்ளது? 1/n
45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளது. 8 ஆண்டுகளில் 100 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துள்ளார்கள். பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியாருக்கு விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள். வளமான ரயில்வே துறையையே தனியாருக்கு தாரை வார்க்க தயாராகவிட்டார்கள். 2/n
அவசர கால பயன்பாட்டிற்காக ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி நிதியில் இருந்து 1.76 லட்சம் கோடியையும் வாங்கி செலவு (2019 லேயே கொரோனா வருவதற்கு முன்பே) செய்துவிட்டார்கள். கொரோனா வருவதற்கு முன்பே 2019 லேயே இந்தியாவின் ஜிடிபி 4.5% சரிந்துவிட்டது. 3/n
இரண்டு நாட்களாக தமிழ்நாட்டு அரசியலில் நடக்கும் சம்பவங்கள், கட்சி சாரா பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பிரச்சார மேடைகளில், திமுக குறித்து எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு,
1/n
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஆகியோர் கொடுத்த கவுண்ட்டர் மக்களை திரும்பிப் பார்க்க வைத்ததுள்ளது.
இன்று ஸ்டாலினின் மகள் வீட்டிலேயே வருமான வரித்துறை சோதனை நடத்திய போதும், ஸ்டாலின் செம கூலாக பிரச்சாரத்தில்,
2/n
"எவ்வளவு வேண்டுமானாலும் ரெய்டு நடத்துங்கள்.. எங்களுக்கு கவலையில்லை" என்றதும்... இதற்கு ஒருபடி மேலே போய், "இது என் வீட்டு முகவரி.. முடிந்தால் என் வீட்டுக்கு ரெய்டு வாங்க" என்று உதயநிதி ஸ்டாலின் சொடுக்கு போட்டு சவால் விட்டதும் தமிழ்நாட்டு மக்களை ஆச்சரியப்பட வைத்ததுள்ளது.
3/n
வாரிசு அரசியல் என்று பேசுகிற அத்தனை கட்சிகளிலும் வாரிசு அரசியல்வாதிகள் உள்ளனர்.
வாரிசுகளுக்கு கட்சியில் வாய்ப்பு வழங்கப்பட்டாலும், மக்கள் அவர்களை தேர்ந்தெடுத்தால் தான் எம்பி, எம்எல்ஏ வாக முடியும்.
1/n
ஒருவரை வேண்டாம் என்று நினைத்தால் மக்களால் நிராகரிக்க முடியும். எத்தனையோ வாரிசுகளை மக்கள் புறக்கணித்துள்ளனர்.
சரி.. வாரிசு அரசியலால் மக்களுக்கு என்ன பிரச்சனை.?
2/n
இப்போது உதாரணமாக திமுகவின் வாரிசு அரசியல் என்று சொல்லப்படும் உதயநிதியையும், அதிமுகவின் வாரிசு அரசியல் இல்லாத நபர் என்று சொல்லிக் கொள்ளும் பழனிசாமி இருவரையும் எடுத்துக் கொள்வோம். யாரால் தமிழ்நாட்டு மக்களுக்கு கெடுதல் ஏற்பட்டுள்ளது..?
3/n
காலந்தோரும் திரும்ப திரும்ப ஒரு பொய்யை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். திமுக ஆட்சி கலைக்கப்பட்டது 31/1/1976. திமுக மீதான ஊழல் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது 3/2/1976. 1/n #DMK4TN#VoteForDMK
திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பின்பு தான், சர்க்காரியா கமிஷனே அமைக்கப்பட்டது. அப்புறம் எப்படி ஊழலுக்காக திமுக ஆட்சி கலைக்கப்பட்டு இருக்க முடியும்.?
காங்கிரஸ் கூட்டணி அரசு மீது "2ஜி ஊழல்" என்று எப்படி பொய்யான குற்றச்சாட்டு வைக்கப்பட்டு, ஊடகங்கள் துணையுடன் இனநலவாதிகள்
2/n
பாஜக என்ற கட்சியை எப்படி ஆட்சிக்கு வர வைத்தார்களோ.. அதே போல தான் எமர்ஜென்சியை இந்தியாவிலேயே கடுமையாக எதிர்த்த திமுகவை ஒழிக்க, சர்க்காரியா கமிஷன் என்ற பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகள் மூலம் ஊடகங்கள் துணையுடன் இனநலவாதிகள் எம்ஜிஆர் - அதிமுக என்ற கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள். 3/n