தமிழ்நாட்டில் கடந்த ஒரு நூற்றாண்டாக ஹிந்தி திணிப்பிற்கு நடந்துவரும் மொழிப்போரில் 30 ஆண்டுகாலம் தலைமை வகித்து வழி நடத்தியவர் அண்ணா #HBDAnna113
ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போர் 1947ல் முடிவுற்றது
ஆனால் திணிக்கப்படும் ஹிந்திக்கு எதிராக நடத்தப்படும் போர் 1937ல் தொடங்கியது...இன்றும் தீ எரிந்து கொண்டிருக்கிறது #HBDAnna113
இந்த மொழிப்போர் அரசாங்கத்துக்கு எதிரானது அல்ல
ஹிந்தி பேசும் வட மாநில மக்களுக்கு எதிரானதும் அல்ல
தமிழர்கள் மீது ஹிந்தியைத் திணிக்க பல காலகட்டங்களில் ஒன்றிய அரசு அமுல்படுத்திய சட்டங்களுக்கும் திட்டங்களுக்கும் எதிர்வினை மட்டுமே #HBDAnna113
இந்தியாவில் 1500க்கும் மேற்பட்ட மொழிகள் புழக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது
இத்தனை மொழிகள் உள்ளபோதும் ஹிந்திக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து ஹிந்தி பேசாத மற்ற மக்களிடம் அதைத் திணிக்கும் போக்கு ஆங்கிலேய ஆட்சி காலத்திலிருந்து தற்போது வரை தொடர்கிறது #HBDAnna113
எதிரிகள் தாக்கித் தாக்கி
வலுவை இழக்கட்டும்
நீங்கள் தாங்கித் தாங்கி
வலுவைப் பெற்றுக்கொள்ளுங்கள் ~ அண்ணாதுரை #HBDAnna113
ஆங்கிலேயர் காலத்தில் வெவ்வேறு மொழி கலாச்சாரங்கள் வெவ்வேறு உணர்வுகள் என வேறுபட்டிருந்த மக்களை ஒன்றிணைக்க காந்தி உட்பட காங்கிரஸ் கட்சி எடுத்த ஆயுதம்தாம் நாடு முழுவதும் ஹிந்தி மொழி கற்பிப்பு
இதுதான் ஹிந்தி திணிப்பின் தொடக்கம்
1893ம் ஆண்டு பிரச்சாரனி என்ற அமைப்பும்
1910ப் ஆண்டு ஹிந்தி சாகித்ய சம்மேளன் என்ற அமைப்பும் ஹிந்தி கற்பிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டன
பின்னாளில் இந்த அமைப்பை காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் ஹிந்தி பிரசாரத்திற்கு பயன்படுத்தத் தொடங்கினர்
நாடு முழுவதும் ஹிந்தி பிரசாரத்தை தொடங்கிய காந்திக்கு வட இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது
ஆனால் 1915ல் தமிழ்நாட்டில் ஹிந்தி பிரச்சாரத்துக்கு வந்த காந்திக்கு அழைப்பிதழ் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டது
அதன் அதிருப்தியை அந்த மேடையிலேயே பதிவு செய்தார் காந்தி
1924ல் சென்னையில் நடைபெற்ற கல்வி மாநாட்டில் பங்குபெற்ற சத்தியமூர்த்தி (ஐயர்) ஹிந்தி மொழியை அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் 2வது கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்பிற்கு விதை போட்டார்
அதே ஆண்டு சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் இந்திய அரசுப்பணி தேர்வாணையத்தின் தலைவராக இருந்த சர்.டி. விஜயராகவாச்சாரி, பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும், ஹிந்தியில் தோல்வியடைபவர்கள் படித்தவராகவே கருதமுடியாது என்றார்
ராஜாஜியும் சத்யமூர்த்தியும் தொடர்ந்து ஹிந்தி பிரசாரத்தில் ஈடுபட...
"பழையன கழிந்து புதியன புகுவதாக இருந்தால் நமக்கு கவலை இல்லை
ஆனால் புதியவனவைகள் வந்து பலாத்காரமாய் புகுந்து கொண்டு பழையனவை வலுக்கட்டாயமாக கழுத்தைப் பிடித்து தள்ளுவதை சகித்துக் கொண்டு...
...அதற்கு வக்காலத்து பேசுவது பாஷைத் துரோகம்
சமூகத் துரோகம் " என்று எழுதினார் பெரியார் தன் குடி அரசு இதழில்
1937ல் சென்னை மாகாண முதல்வரான ராஜாஜி உயர்நிலைப் பள்ளிகளில் ஹிந்தியைக் கட்டாய மொழியாக்கினார்
இதற்கு மறியல் கருப்புக்கொடி காட்டல் உண்ணாவிரதம் எனப் பல போராட்டங்கள் நடைபெற்றன
ஜூன் 1938ல் சென்னையில் நடைபெற்ற ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில் பங்குபெற்று அண்ணா பேசினார்
அந்த பேச்சுக்கு 3 மாதங்கள் கழித்து வழக்கு பதிவு செய்து அவரை 4மாதங்கள் சிறையில் அடைத்தது ராஜாஜியின் அரசு
1938ல் ஹிந்தி எதிர்ப்பு இயக்கம் சார்பில் திருச்சியில் இருந்து சென்னைக்கு நடைப்பயணமாக வந்தனர்
போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் தலைவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டர்
பெரியாருக்கு 18மாதமும் அண்ணாவிற்கு 9மாதமும் சிறை விதிக்கப்பட்டது
1948ல் ஓமந்தூர் ராமசாமி பிராந்திய மொழி முதல்மொழியாகவும் ஹிந்தி அரபு தெலுங்கு ஆகிய பிற மொழிகளில் ஏதேனும் ஒன்றை 2ம் மொழியாகவும் கட்டாயம் படிக்க வேண்டுமென உத்தரவு வெளியிட்டார்
இதை எதிர்த்து நடத்தப்பட்ட மாநாட்டில் அண்ணாவை சர்வதிகாரியாக நியமித்து பல கட்ட போராட்டங்கள் தொடங்கப்பட்டன
14 /09/ 1949ல் ஹிந்தி ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது அப்போதைய ஒன்றிய அரசால்(காங்கிரஸ்))
தென்னிந்திய மாநிலங்களில் ஹிந்தி பரப்பும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக 1952ல் அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒன்றிய அரசு அலுவலகங்களிலும் பெயர் பலகையில் ஹிந்திக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது
இதற்கு எதிராக 01/08/1952ல் 500க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் பெயர் பலகையில் ஹிந்தியை தார் பூசி அழித்தனர்
(இதற்கு எதிர்வினையாக காங்கிரஸ் தார் பூசிய பெயர் பலகையில் மண்ணெண்ணெய் ஊற்றினர்)
1960ல் ராஜேந்திர பிரசாத் 1965முதல் ஹிந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என்ற ஆணையை வெளியிட்டார்
இதை எதிர்த்து அண்ணா தலைமையிலான திமுக போராட்டத்திற்கு தயாரானது
30/08/60க்குள் ஆணையைத் திரும்பப் பெறவில்லை என்றால் தென்னகத்தை விடுவிக்கக் கோரி சுதந்திரப் போராட்டம் தொடரும் என்றார் அண்ணா
அண்ணாவின் அந்தப் போராட்டத்தை எதிர்க்கத் தயாரானார் முதல்வர் காமராஜர்
01/08/1960ல் கோடம்பாக்கத்தில் பேசிய அண்ணா - போராட்டத்தில் கருப்புக் கொடி மட்டுமே காட்டவேண்டும்
ஹிந்தி ஒழிக, கட்டளையைத் திரும்பப் பெறுக மட்டுமே முழக்கமிட வேண்டும் என்றார்
கருப்புக் கொடி காட்டினால் தமக்கு அவமதிப்பு ஏற்படுமென ஜவஹர்லால் கடிதம் அனுப்பினார்
ஹைதராபாத்தில் பேசிய குடியரசுத் தலைவர் இனிவரும் காலங்களில் பிற மாநில சகோதரர்களின் உணர்விற்கு மதிப்பளித்து ஹிந்தி திணிக்கப்பட மாட்டாது என்றார்
1963ல் லால் பகதூர் ஆட்சிமொழி ஆணையம் கொடுத்த திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்
அதில் 26/01/65 முதல் ஹிந்தி ஆட்சி மொழியாகவும் அதற்கு ஆங்கிலம் துணை மொழியாக இருப்பது ஆட்சியாளர்களின் விருப்பம் என்றவிதத்தில் சொற்கள் இருந்தன
அந்த மசோதாவை ஆதரித்த உறுப்பினர் இந்தியாவில் அதிகமானோர் ஹிந்தி பேசுவதால் அதுதான் ஆட்சிமொழியாக அமைய வேண்டும் என்க அதற்கு அண்ணா அளித்த பதில் பிரசித்தி பெற்றது
1964ல் திருச்சி ரயில் நிலையத்தில் தீவைத்து தற்கொலை செய்து கொண்டார் சின்னசாமி
ஹிந்தி திணிப்பின் எதிர்ப்பிற்கான முதல் தற்கொலை
அண்ணா யாரும் தற்கொலை செய்து கொள்ளவேண்டாம் என அறிக்கை வெளியிட்டார்
போராட்ட கள மாணவர்களைத் தேவைப்பட்டால் துப்பாக்கியால் சுடச்சொல்லி இருக்கும் (காங்கிரஸ்) உத்தரவு அண்ணாவை வந்தடைய...
பின்விளைவுகளை மாணவர்கள் சுமக்கக்கூடாது என்பதற்காக போராட்டத்தை பெரியவர்களிடம் விட்டுவிடுங்கள் என்றார்
67ல் திமுக ஆட்சிக்கு வர... அண்ணா முதல்வரானார்
மத்தியில் இந்திரா பிரதமரானார்
27 /11/67ல் ஆட்சி மொழி சட்டத்தில் ஆங்கிலத்தையும் ஆட்சி மொழியாக திருத்தி மசோதா தாக்கல் செய்யப்பட்டது
இது சரியான முடிவல்ல
அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக அமுல்படுத்த வேண்டும் என திமுக கூறியது
ஹிந்திக்கு அளிக்கப்படும் இடத்தை தமிழுக்கும் மற்ற மொழிகளுக்கும் சமமாக அளிக்கவேண்டும் என கூறப்பட்டது
08/01/1968ல் ஒன்றிய அரசுப் பணிகளுக்கு ஆரம்பத்தில் ஹிந்தியறிவு தேவையில்லை என்று சொன்னதோடு மும்மொழித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது
ஹிந்தி மறைமுகமாக திணிக்கப்படுவதை உணர்ந்து...
போராட்டம் தொடங்கப்பட்டது
திமுக அரசில் (போராட்டக்கள மாணவர்களின்) கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர்கள் கூறினர்
அண்ணா மறைந்தும் வழி நடத்துகிறார்
ஆதிக்கம் ஒலிக்கும் இடத்தில் அண்ணாவின் குரல் ஒலிக்கும் #HBDAnna113
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
படிக்கதான இங்க வந்துருக்க
பாஸாகி டிகிரி வாங்கி சொந்தக்கால்ல நிக்கணுமா வேணாமா
இல்லன்னா அடுப்பில வெந்து கஷ்டம் தான் படணும்
புரியுதா
...
...
...
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் #Scene 1
பொண்ணுங்க ஆம்பளைங்களுக்கு அடிமையா இருக்க வேணாம்
வேலைக்கு போற பொண்ணுங்க மட்டும் இல்ல வீட்ல இருக்கற பொண்ணுங்களும் தைரியமா இருக்கணும்
...
...
பெண்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமை கிடைச்சே ஆகணும் #Scene 2
நீங்க உடுத்துற உடை உங்க உரிமை
அதை கேலி செய்றதுக்கு இங்க எவனுக்கும் ரைட்ஸ் இல்ல
...
...
(பெண்கள்) அவங்கவங்க சொந்தக் கால்ல நிக்கணும்
அடுப்பாங்கரையில் வெந்து புழுங்கறதுக்கு மட்டும் நீங்க (பெண்கள்) பிறக்கல #Scene 3
சோழர் எல்லாம் நாகரிகமானவங்கனு சொன்னதும் பொய்யா கோப்ப்பால்
ரேசர் பிளேடு கண்டுபிடிக்கப்படாத காலத்து ராமர் கூட க்ளீன் ஷேவ்ல வந்தாரு
இந்த சோழ பாண்டிய பல்லவ குரூப் எல்லாம் பொதருக்குள்ள மூஞ்சிய ஒளிச்சி வச்சிக்கிட்டு அலையுதுக
நல்லவேளை பெண்களுக்கு வச்சுவிடல மீசை தாடிய #PS1review
மாப்பிள்ளை அவர் தான் ஆனா சட்டை என்னோடதுங்கற மாதிரி
கதை பேர் என்னவோ பொன்னியின் செல்வன் ஜெயம்ரவி தான் (இடைவேளைக்குப் பிறகு தான் இன்ட்ரோ) படம் முழுவதும் வந்து கலகலக்கறது கார்த்தி தான்
Prince of Persia நினைவுக்கு வந்தாப்ல
தெரிந்த கதை அட போட எதுவுமே இல்ல தான்
ஆனா வசனம் பூணூல் 🤣👌🏾
கதை படிச்சா பிடிக்காதுன்றதெல்லாம் சும்மா உடான்ஸ்
கதை தெரியலேன்னா தலையும் புரியாது வாலும் புரியாது
Because of the too many characters
திரிஷாவும் ஜெயம்ரவியும் நேருக்கு நேர் சந்திக்கல இந்த பாகத்தில் (நல்லவேளை)
1934,35,36 ம் ஆண்டுகளில் இந்தியை அவர்கள் ஆட்சிமொழி என்று அல்ல; இணைப்புமொழி என்றல்ல; தேசிய மொழி என்றழைத்தார்கள். இந்தத் தேசத்திற்கென்று ஒரு மொழி உண்டு. அதுதான் இந்தி; இந்தத் தேசத்திற்கு இருக்கத்தக்க தேசிய மொழி இந்திதான் என்று 1935 ல் அவர்கள் சொன்னார்கள்.
பெரியார் அவர்களின் போர் முறையின் தன்மை உங்களிலே பலருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் என்று கருதுகிறேன். அவர்கள் எதிரில் உள்ள படையை மட்டுமல்ல; முதலிலே அப்படைக்கு எங்கே மூலபலம் இருக்கிறது என்று கண்டுபிடித்து அந்த மூல பலத்தைத் தாக்குவது தான் அவருடைய போர் முறையாகும் #HBDAnna113
இந்தியைக் கொண்டு வந்தவர்கள் இந்தியைக் காப்பாற்றிக் கொள்ளக் கருதி தேசியத்தையும், இந்தியாவையும் உடைத்துவிடக் கூடாது என்று தேசியம்’ என்று சொல்லியதை மாற்றிக்கொண்டு, ‘இந்தியாவில் தேசிய மொழிகள் பதினான்கு இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்தி...
எலக்ட்ரிக்
ரயில்வே
மோட்டார்
கப்பல்
நீர்மூழ்கிக் கப்பல்
அதைக் கண்டுபிடிக்கும் கருவி
டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி
விஷப்புகை
அதைத் தடுக்கும் முகமூடி
இன்ஜக்ஷன் ஊசி
இனாகுலேஷன் ஊசி
இவைகளுக்கான மருந்து
ஆப்ரேஷன் ஆயுதங்கள்
தூரதிருஷ்டிக் கண்ணாடி
ரேடியோ
கிராமபோன்
டெலிபோன்
தந்தி
கம்பியில்லாத் தந்தி
போட்டோ மெஷின்
சினிமாப்படம் எடுக்கும் மெஷின்
விமானம்
ஆளில்லா விமானம்
டைப் மெஷின்
அச்சு யந்திரம்
ரசாயன சாமான்
புதிய உரம்
புதிய விவசாயக் கருவி
சுரங்கத்துக்கள் போகக் கருவி
மலை உச்சி ஏற மெஷின்
சந்திர மண்டலம் வரைபோக விமானம்
அணுவைப் பிளக்கும் மெஷின்
இன்னும், எண்ணற்ற, புதிய, பயன்தரும், மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகியவைகளைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், இன்னமும் கண்டுபிடிக்கும் வேலையிலே உடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் எல்லாம்,
சரஸ்வதி பூஜை
ஆயுத பூஜை
கொண்டாடாதவர்கள்!
"Do we need a big door for the big dog and a small door for the small dog? I say, let the small dog use the big door too!" ~ C. N. Annadurai #HBDAnna113
India is a continent and should be divided into separate nations. There is no need for a single government.
~ C. N. Annadurai #HBDAnna113
If Hindi were to become the official language of India, Hindi-speaking people will govern us.
We will be treated like third rate citizens
~ C. N. Annadurai #HBDAnna113