1968ம் ஆண்டு நடைபெற்ற சம்பவம்.
நான் அரசு கலைக்கல்லூரி மாணவன்.திடீரென்று கலவரக்கோலம் பூண்டது சென்னை. போக்குவரத்து தொழிலாளர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே கடுமையான மோதல். மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியிலிருந்து சோடா பாட்டில் வீச்சு, சட்டக்கல்லூரி மாணவர் விடுதி அருகில் 1/1
நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஊர்வலமாக சட்டக் கல்லூரி விடுதியை சூழ்ந்து நிற்கிறார்கள்.

காவல்துறை திகைத்து நிற்கும் அந்த தருணத்தில் ஒரு தொழிலாளர் தவைவர் சூழலை அப்படியே மாற்றி அமைக்கிறார்.
விடுதி வாயிலில் தரையில் தலை வைத்து படுக்கும் அந்தத் தலைவர் சொல்கிறார
1/2
"நீங்கள் விடுதிக்குள் நுழைந்து மாணவர்களை தாக்க நினைத்தால் என் பிணத்தைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்".

தொழிலாளர் கூட்டம் அப்படியே கலைந்து செல்கிறது. அதே காலகட்டத்தில் தான் நாளிதழ்களில் அவருடைய அறிக்கை ஒன்றையும் படித்தேன்.

தொழிலாளர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே 1/3
ஒற்றுமையை வலியுறுத்திய அறிக்கை அது.தொழிலாளர் தலைவரான
வி.பி.சிந்தன் ஒரு மாணவனான எனக்குள்
இப்படித்தான் வந்து அமர்ந்தார்.

மாணவர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் விவகாரத்தை கையாண்ட
விதத்துக்காக..அன்றைய முதல்வர் அண்ணா சட்டமன்றத்தில் வி‌.பி.சிந்தனை
மனம் திறந்து பாராட்டினார்.
1/4
நான் இணைந்து செயலாற்றிய மாணவர் சோசலிச அமைப்பு நடத்திய கூட்டத்துக்கு ஒரு நாள் வந்திருந்தார்.தும்பை நிற வேட்டியும்,முழுக்கை சட்டையும் அணிந்தபடி குறித்த நேரத்தில் கூட்டத்துக்கு வந்த சிந்தன் ஆற்றிய உரையும், அவருடைய நட்பார்ந்த அணுகுமுறையும்தான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் 1/5
மீது ஒரு பெருமதிப்பையும்,
ஈர்ப்பையும் என்னிடம் உருவாக்கின.

உள்ளூர் அரசியலில் மட்டும் ஊறித்திளைத்துக்கொண்டிருந்த எனக்கு உலக அரசியலை தொட்டுக்காட்டியவரும் அவர்தான். பாரிஸ் நகர மாணவர்கள் அரசியல் மாற்றத்திற்காக போராடுவதையும், அமெரிக்க மாணவர்கள் வியட்நாம் விடுதலைக்கு குரல் 1/6
எழுப்புவதையும், சுட்டிக் காட்டிய சிந்தன் ஒரு போராட்டம் எத்தகைய நோக்கங்களை கொண்டிருக்க வேண்டும் என்று மையப்படுத்திச் சொன்னார்,
"நோக்கமில்லாத போராட்டம் வீண்".

அன்று முதலாக தோழர் வி.பி.சி.நடத்தும்
வாயிற்கூட்டங்கள்,பேரணிகள்,
போராட்டங்கள், மேதின ஊர்வலங்கள் எல்லாவற்றிலும் பங்கு 1/7
கொள்ள ஆரம்பித்தேன். விரைவில் சோசலிஸ்ட் மாணவர் அமைப்பை கலைத்து விட்டு, இந்திய மாணவர் சங்கத்தில் சேர்ந்தோம்.
"மாணவர் சங்க வேலைகள் மட்டும் போதாது.
தொழிற்சங்க இயக்கத்துடனும் சேர்ந்து வேலை பார்க்க வேண்டும்" என்று அடிக்கடி
வலியுறுத்துவார் தோழர் வி.பி.சிந்தன்.

- நீதிபதி #சந்துரு.1/8

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with True voice of people

True voice of people Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Damodar61187959

7 Nov
#சோவியத்_புரட்சி_அப்படி_என்ன_தான்_சாதித்தது?
☆ரஷ்ய சமூகம் தன் புரட்சியின் மூலம் அப்படி என்ன தான் செய்தது.. வாருங்கள் பார்ப்போம்...

☆உலகின் முதல் பட்டினியற்ற தேசத்தை உருவாக்கிக்காட்டியது.

☆உலகின் முதல் கல்லாதோர் அற்ற தேசத்தை உருவாக்கிக் காட்டியது.

☆முழுக்கல்வியும் 1/1
இலவசமாக்கப்பட்டது.

☆உயர் கல்வி வரை கட்டாயமாக்கப்பட்டது.

☆சுகாதாரத்திற்கு ஆகும் மொத்த செலவையும் அரசே ஏற்றது.

☆தொழிலாளர்களின் வேலை நேரம் 7 மணி நேரமாக்கப்பட்டது.

☆24 மணிநேரம் பணியாற்ற வேண்டிய அத்தியாவசியத் தொழிலாளர்களின் வேலை நேரம் 6 மணி நேரமாக்கப்பட்டது. 1/2
☆தவிர்க்க முடியாத காலகட்டத்தை தவிர கூடுதல் நேர உழைப்பு தடை செய்யப்பட்டது.

☆தொழிலாளர்களுக்கு இதர விடுமுறை இல்லாமல்,ஆண்டிற்கு ஒரு மாதம் முழு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டது.

☆விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வோருக்கான மானியத்துடன் கூடிய உல்லாச விடுதிகள் 1/3
Read 9 tweets
6 Nov
இதோ 2021 ல் தன் குடிசை
வீட்டிற்கு முன்பாக நின்று
பேசுகிறார் தோழர் கோவிந்தன்

25 வருடங்கள் முன்பு வழக்கில் இருந்து விலகி கொள்ள
25 லட்சம் ரூபாய் கொடுக்க
முயற்சி செய்கிறார்கள்.

எவ்வித சலனமும் இன்றி
மறுத்தது ,நியாயத்தின் பக்கம்
நிற்கிறார் இந்த மார்க்சிஸ்ட்
1/1
ட் .

இது எப்படி சாத்தியம்
இது தான்
commitment to ideology

தோழர் கோவிந்தன்
மெத்த
படித்தவர் அல்ல.
அவர் உள்வாங்கியது
மார்க்சியம் .

மக்களுக்கு சேவை
என்பதை தவிர
மார்க்சிஸ்ட்களுக்கு
வேறு நோக்கம் இல்லை.

இங்கே சில அரசியல் இயக்கங்கள் பொறாமையில்
எங்கள் 1/2
மீது அவதூறு
பொழிகிறார்கள் .

அந்த சிவப்பு துண்டு
போராளியை எங்கள் ஜாதி
என்று வெட்கம் இல்லாமல்
உரிமம் கொண்டாடுகிறது
ஒரு மஞ்சள் துண்டு ஜாதி.

இவர்களுடைய
பொறாமை , ஏக்கம்
எல்லாம் இயலாமையில்
இருந்து வருகிறது.

தோழர் கோவிந்தன் போல்
ஒருவரை கூட நம்மால்
1/4
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(