தமிழிலேயே பேசுவோம், நம் தாய்மொழி தமிழில் மட்டுமே கலப்பில்லா தமிழில் பேசுவோம்.
கலப்பில்லா தமிழில் பேச, எழுத நம்மால் ஏன் முடியாது?
_உறவுகள்_தொடர்கதை_
1/25
‘‘உறவுகளை நான் பெருசா நினைக்கிறதில்ல, மதிக்கிறதில்ல. பெரிய என் உறவு வட்டத்தைவிட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டே வந்தேன். அதை `நாகரீக வாழ்க்கையின்’ ஒரு பகுதியா நான் நினைச்சேன்
2/25
சமீபத்தில், என் தோழி ஒருத்தியோட வீட்டு கிரகப்பிரவேச விழாவுக்குப் போயிருந்தேன். அவளோட மூன்று தலைமுறை உறவுகளோடும் அவ அரவணைப்பிலேயே இருந்ததோட, விழாவுக்கு அவளது உறவுகள் அத்தனை பேரையும் வரவழைச்சிருந்தா.
3/25
‘உங்க தாத்தாவும் நானும் பெரியப்பா மகன் - சித்தப்பா மகன்’னு தாத்தா ஒருவர் பேரனுக்கு உறவு முறையை விளக்கிக்கொண்டிருக்க, ‘வாட்ஸ்அப்ல இருக்கியா?
4/25
இனி நாம ஒருவருக்கொருவர் சமூக வலைத்தளங்கள் மூலமாகவோ, தொலைபேசி மூலமாகவோ ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருப்போம் என்று அலைபேசி எண்களை பரிமாறிட்டு இருந்தாங்க இந்தத் தலைமுறை இளைஞர்களும், இளம் பெண்களும்!
5/25
‘நாம தாயில்லாப் பொண்ணாச்சேனு எல்லாம் கவலைப்படாதே. உனது பிரசவத்திற்கு சித்தி நான் உதவிக்கு வர்றேன். பிரசவ வலி வந்ததும் எனக்கும் ஒரு அழைப்பு அனுப்புனு வளைகாப்பு முடிந்திருந்த ஒரு இளம் பெண்ணோட கைபிடித்துச் சொல்லிட்டிருந்தார் ஒரு பெண்மணி.
6/25
இப்படி எல்லா வகையிலும் ஒருத்தருக்கு ஒருத்தர் பலமா இருக்கக்கூடிய உறவுச் சங்கிலியை நான் தொலைத்ததை உணர வெச்சது அந்த விழா.
இப்போ என் சொந்தங்களோட தொலைத் தொடர்பு எண்கள் எல்லாம் சேகரிக்க ஆரம்பிச்சிருக்கேன்’’ என்று
- நீண்ட கடிதம் அனுப்பியிருந்தார் சென்னை வாசகி ஒருவர்.
7/25
இந்த அவசர உலகத்தில், பரபரப்பான வேலைச் சூழலில் சொந்தங்களை எல்லாம் அரவணைத்துச் செல்ல பலருக்கும் நேரமிருப்பதில்லை என்பதை, உறவுகளைத் தொலைப்பதற்கான காரணமாக ஏற்க முடியாது.
திருமண அழைப்பிதழ் தந்த உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்குச் செல்ல முடியவில்லை, வெளியூர் பயணம்,
8/25
அலுவலக வேலைகள், பிள்ளைகளின் பள்ளி, கல்லூரித் தேர்வுகள் என்று பல காரணங்கள்.
சரி,,,
ஆனால், திருமணம் முடிந்த பின்னும்கூட ஒரு வார இறுதி நாளில் அவர்கள் வீட்டுக்குச் சென்று, திருமணத்துக்கு வர இயலாத நிலையைச் சொல்லி, உறவைப் பலப்படுத்தும் வாய்ப்பை ஏன் பலரும் முன்னெடுப்பதில்லை?
9/25
குறைந்தது, ‘கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதா?! மன்னிக்கனும், வர முடியலை. நிச்சயம் அடுத்த முறை ஊருக்கு வரும்போது வீட்டுக்கு வந்து பார்க்கிறோம்!’
என்ற தொலைபேசி விசாரிப்பைக்கூட செய்வதில்லை.
‘அதுக்கெல்லாம் நேரமில்ல’, பெரு நகரச் சூழலில் நாங்களே பரபரனு ஓடிட்டிருக்கோம்’,
10/25
உண்மையான காரணம், அந்த உறவைப் பேணுவதில் ஆழ்மனதில் பிடிப்பு இல்லை.
‘அப்பாவோட தாய்மாமன் பையன்.
இனி, இந்த சொந்தத்தை எல்லாம் தொடர முடியுமா?
தொடர வேண்டுமா என்ன?’
என்று கேட்கலாம் பலர்.
11/25
இங்கு ஒரு பெரிய உண்மையைச் சொல்ல வேண்டும். சமூக வலைதளங்களில், முன் பின் தெரியாத, முகம் தெரியாத நபர்களுடன் எல்லாம் நாள் தவறாத தொடர்பில் இருப்பதும், நெதர்லாந்தில் இருக்கும் ஒரு நண்பன்/தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்து அனுப்புவதும்,
12/25
வெளிமாநிலத்தில் இருக்கும் ஒரு தமிழனுக்கு உதவி என்றதும், ‘நம்மாளு’ என்று ரத்தம் துடிக்க இணையப் புரட்சியில் இறங்குவதும், எனது நன்பனின் நன்பன் என்று அறிமுகமான ஒருவருடன் உயிர் நட்பு வளர்ப்பதும் என, யார் யாருடனோ இணைய முடிகிறது இந்தத் தலைமுறைக்கு.
13/25
ஆனால், உறவுகளைத் தொடர முடியவில்லை என்பது எவ்வளவு முரண்?!
சமூக வலைதளங்களின் வெற்றிக்கு அடிப்படை என்ன என்று தெரியுமா?!
சொந்தங்கள் ஒன்றுகூடி பேசி மகிழும் வீட்டு விழாக்கள்தான்.
14/25
கல்யாணத்தில், காதுகுத்தில், சடங்கில், ஊர்த் திருவிழாவில் என அடிக்கடி உறவுகள் அனைத்தும் ஓரிடத்தில் கூடி, பேசி, சிரித்து, அழுது, கோபம்கொண்டு, விருந்து உண்டு, கலைந்து சென்ற நம் முந்தைய தலைமுறையினரின் மகழ்ச்சி இந்தத் தலைமுறைக்குக் கிடைக்கவில்லை.
15/25
உறவினர் விழாக்களையும், ஊர்த் திருவிழாவையும் ‘இன்றைய நாகரீக வாழ்வில்’ தவிர்த்ததால் கூடி மகிழ, பேசிச் சிரிக்க வழியற்றுப் போன இந்தத் தலைமுறை, இணைய வீதியெங்கும் ஜனத்திரள் பார்க்க உற்சாகமாகிப் போனது.
யார் யாரிடமோ அறிமுகமாக, பேச, சிரிக்க, கோபம் கொள்ள, வம்பு வளர்க்க, வெளியேற
16/25
என பொழுது போக்கித் திரிகிறது.
அதில்தான. நம் மகிழ்ச்சியே இருப்பதாக நம்புகிறது. எனவே, பிள்ளைகளை ஆபத்துகள் நிறைந்த இணைய வெளியில் இருந்து உறவு வட்டத்துக்கு மடை மாற்றுங்கள்.
அதற்கு, ‘உறவுகள் வேண்டும்’ என்ற உணர்வு முதலில் வர வேண்டும்.
17/25
‘எதுக்கு உறவு? பொறாமை, பகை, புறணி பேசுறதுன்னு, ரொம்ப வெறுத்துட்டேன்!’ என்ற அனுபவம் சிலருக்கு இருக்கலாம்.
உறவுகள் அனைத்துமே அப்படி அல்ல. அது தனி மனித குணத்தின் வெளிப்பாடு.
நல்லது, தீயது, எங்கும் எதிலும் உண்டு என்பது போல, உறவுகளிலும் நல்லவர்கள்,தீயவர்கள்,குணம் கெட்டவர்கள்
18/25
இருப்பார்கள்தானே? அதற்காக ஒட்டுமொத்த உறவுகளும் வேண்டாம் என்று விலக்கத் தேவையில்லை.
‘உங்கப்பாதான் தகப்பன் பொறுப்பில இருந்து என் கல்யாண வேலைகள் எல்லாம் செஞ்சாரு. நீ எங்கே இருக்க, எத்தனை பிள்ளைங்க?’ என்று கண்கள் மல்க விசாரித்து,
19/25
‘எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்!’ என்று உளமாற வாழ்த்தும் ஓர் அத்தையின் வாழ்த்துக்கள்தான் உலகின் மிகத் தூய்மையான அன்பு.
‘நல்லது கெட்டதுனா கூப்பிடுடா, ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருக்கணும்!’ என்று உரிமையும், கடமையுமாகப் பேசும் சித்தப்பாவின் பிரியத்தை,
20/25
சித்தியின் சிடுசிடுப்பை சகித்துக்கொண்டாவது வாழ்வுதான் உண்மையில் சிறந்த வாழ்க்கை.
உங்களுக்கு ஒரு பிரச்னை எனில், உங்களுக்கு முன்பாகவே, ‘எங்க அண்ணனை பேசினது யாருடா..?’ என்று கோபம் கக்கிச் செல்லும் தம்பியுடையோனாக இருப்பதன் பலத்துக்கு இணை இல்லை.
21/25
நல்ல ஆடம்பரமான வீடு, கொழுத்த வங்கி இருப்புத் தொகை, சொகுசாக செல்ல பெரிய மகிழுந்து (Car) ஆடம்பர வாழ்க்கை என எல்லாம் இருந்தும், உறவுகள் இல்லை எனில், ஒருநாள் இல்லையென்றால் ஒருநாள் அந்த பலவீனத்தை உணரத்தான் வேண்டும். ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
22/25
உறவுகளுக்கு எப்போதும் முற்றுப்புள்ளி வேண்டாம். அது ஓர் அழகிய தொடர்கதை!
உறவுகளைப் பரிசளியுங்கள்,,, அடுத்த சந்ததிக்கு!!!
குழந்தைகளை உறவினர் விழா, விசேஷங்களுக்கு, ஊர்த் திருவிழா வுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு உறவினர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்துங்கள்.
23/25
‘உங்க அத்தை இருக்காளே, பொறாமை பிடிச்சவ', ‘உங்க அப்பா வீட்டு சொந்தம் இருக்காங்களே' என்று உறவுகள் என்றாலே உளம் வெறுக்கும் அளவுக்கு குழந்தைகளிடம் எதையும் பேசாதீர்கள். குத்தலாக எந்த உறவுகளையும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்காதீர்கள்.
24/25
அவர்களுடனான உங்களின் இளம் வயது நினைவுகளைப் பிள்ளைகளுடன் பகிருங்கள்.
நன்பர்களே போதும் நமக்கு, உறவினரெல்லாம் எல்லாம் வேணாம்’ என்று இன்று பல நகரத்துக் குடும்பங்களில் ஊறிக்கிடக்கும் மனநிலையை மாற்றுங்கள்;
உறவுகளைப் பேணுங்கள்!!! உறவுகளைப் பரிசளியுங்கள்,,, அடுத்த சந்ததிக்கு!!
25/25
திருத்தம்:
சமீபத்தில், என் தோழி ஒருத்தியோட வீட்டு கிரகப்பிரவேச விழாவுக்குப் போயிருந்தேன்.
கிரகப்பிரவேச விழாவுக்கு - புது மணை புகும் விழாவுக்கு
திருத்தம்:
‘வாட்ஸ்அப்ல இருக்கியா? - சமூக வலைத்தளங்களில் நீ இருக்கியா?
திருத்தம்:
ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருக்கணும்!’ என்று உரிமையும், கடமையுமாகப் பேசும் சித்தப்பாவின் பிரியத்தை,
ஒருத்தருக்கு ஒருத்தர் உதவும் கரமாக இருக்கணும்!’ என்று உரிமையும், கடமையுமாகப் பேசும் சித்தப்பாவின் அன்பை,
திருத்தம்:
குழந்தைகளை உறவினர் விழா, விசேஷங்களுக்கு, ஊர்த் திருவிழா வுக்கு அழைத்துச் செல்லுங்கள்.
குழந்தைகளை உறவினர்களின் வீட்டு விழாக்களுக்கு, ஊர்த் திருவிழா வுக்கு அழைத்துச் செல்லுங்கள்.
With more than four lakh people killed in India by the corona, the Supreme Court, hearing the case of compensation for the victims, has ordered to pay fifty thousand rupees as compensation to the victims of the corona.
1/7
Further, it ordered that the family of the deceased should not be denied compensation only on the ground that the cause of death was not corona in the death certificate of the deceased.
2/7
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சிசிடிவி-க்களை நிறுத்தச் சொன்னது யார்?
அப்போலோ மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது, மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களை அணைத்து வைக்கச் சொன்னது யார்?
1/2
என்ற கேள்விக்கு இதுவரைக்கும் தெளிவான பதில் இல்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அரசு சொன்னது என்ன?
2/2
1000 வன்னியர்கள் சூர்யா வீட்டுக்கு போனால்.. காடுவெட்டி குரு மகன் மீது கொலை மிரட்டல் வழக்கு பாயுமா?
1000 வன்னியர்கள் நடிகர் சூர்யா வீட்டுக்கு சென்றால் 5 போலீஸாரால் என்ன செய்ய முடியும் என பகிரங்கமாக காடுவெட்டி குருவின் மகன் கனலரசு விடுத்தது கொலை மிரட்டல் மற்றும் வன்முறையை தூண்டும் சட்டத்தின் கீழ் வராதா? என மூடர் கூடம் படத்தின் இயக்குநர் நவீன் முகமது அலி கேள்வி எழுப்பியுள்ளார்.
Blockchain seems complicated, and it definitely can be, but its core concept is really quite simple.
A blockchain is a type of database. To be able to understand blockchain, it helps to first understand what a database actually is.
Blockchain is a specific type of database.
It differs from a typical database in the way it stores information; blockchains store data in blocks that are then chained together.
1/5
As new data comes in it is entered into a fresh block. Once the block is filled with data it is chained onto the previous block, which makes the data chained together in chronological order.
2/5
There are very few management colleges in Tamil Nadu like IIM, which is as old as North India. This is why the CEOs of most Indian corporates are still people from the North.
1/3
As our politicians are unaware of the importance of such management colleges, not many world-class management institutes have sprung up in Tamil Nadu.
2/3
The DMK government led by Mr. Stalin should set up 6 world class management colleges like IIM in Tamil Nadu and a separate university to manage it.
1/3