மத்திய அரசு, இந்திய ஆட்சிப்பணி விதிகளில் சில திருத்தங்களை கொண்டு வருவது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் என சில அரசியல் கட்சிகள் கூறி வருவது உண்மைக்கு புறம்பானது. கூட்டாட்சி என்ற இலக்கணத்தை மீறி செயல்படும் எதிர்கட்சிகளின் சுயநல அரசியலினால் தான் இந்நிலை. (1/14)
அகில இந்திய சேவை பணிகளில், இந்திய ஆட்சி பணி, இந்திய காவல் துறை பணி, இந்திய வனத்துறை பணி ஆகிய மூன்றில் மிக முக்கியமானது இந்திய ஆட்சிப்பணி. இந்த சேவைப்பணிகளில் உள்ளோர், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு, நிர்வாகத்திற்கு சிறந்த ஆலோசனைகளை வழங்குவதோடு, பன்முகத்தன்மை (2/14)
வாய்ந்த நம் நாட்டின் அரசு நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்தும் திட்டங்களை அமல்படுத்தும் முக்கிய பொறுப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள். பல்வேறு துறைகளில், அமைச்சகங்களில், மாநிலங்களில், சூழ்நிலைகளில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் மத்திய அரசின் நிர்வாகத்தில்(3/14)
பணியாற்றுவதன் மூலம் பரந்து விரிந்த பார்வையோடு கூடிய தொலைநோக்கு திட்டங்களை ஒருங்கிணைக்க முடியும் என்பதாலே தான்,பல மாநிலங்களை சேர்ந்த இந்திய ஆட்சி பணி அதிகாரிகள் சிலகாலம் மத்திய அரசு பணிக்கு அழைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டது.

மாநிலத்திற்கு தேவைப்படும் ஐ ஏ எஸ் அதிகாரிகளின்(4/14)
எண்ணிக்கையை விட 40 விழுக்காடு அதிகமான அதிகாரிகள் மத்திய அரசு நிர்வாகத்திற்கு பணிக்கப்படுவர் என்பதை கருத்தில் கொண்டே பணியில் அமர்த்தப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும், அனுபவம் பெற்ற ஐ ஏ எஸ், ஐ பி எஸ் அதிகாரிகளின் பட்டியலை மாநில(5/14)
அரசுகளிடம் பெற்று அந்த பட்டியலிலிருந்து மத்திய அரசு தேர்வு செய்யும்.

ஆனால், சில மாநிலங்கள் தேவையான எண்ணிக்கையில், அனுபவமுள்ள அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு அனுப்ப மறுக்கின்றன என்பதால் கடந்த சில வருடங்களாக மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் அனுபவம் வாய்ந்த(6/14)
அதிகாரிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை. இதனால் பல்வேறு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தாமதமாகின்றன என்பதை மாநிலங்கள் உணர்ந்தும் ஒத்துழைக்க மறுக்கின்றன.
இந்த நிலையை தவிர்ப்பதற்கே புதிய திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசு மாநில அரசுகளிடம் (7/14)
முன்மொழிந்திருக்கிறது.அதன்படி, "மாநிலங்கள்,மத்திய அரசு நிர்வாகத்திற்கு தேவைப்படும் அதிகாரிகளின் பட்டியலை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அனுப்ப வேண்டும். அதில் மத்திய அரசுக்கு ஏதேனும் கருத்து வேறுபாடு இருப்பின்,பொது நலன் கருதி, மத்திய அரசு விரும்பும் அதிகாரிகளை உடனடியாக மாநில(8/14)
அரசு விடுவிக்க வேண்டும் அல்லது விடுவிக்கப்பட்டதாக கருதப்படுவர்" என்று குறிப்பிட்டுள்ளது மத்திய அரசு.
மாநில அரசுகள் பல இருந்தாலும், கட்டமைப்புகள், மக்கள் நல திட்டங்கள், சுகாதாரம் உட்பட பல்வேறு துறைகள் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானவை எனும் நிலையில், பல மாநிலங்களில் உள்ள (9/14)
அனுபவம் வாய்ந்த திறமை மிக்க அதிகாரிகள் மத்திய அரசில் பணியாற்றுவதன் மூலம் மட்டுமே அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து கட்டமைப்புகளை பெருக்கி. நாட்டை வளர்ச்சி பாதையில் ஒட்டுமொத்தமாக கொண்டு செல்ல முடியும். ஆனால், அதை கருத்தில் கொள்ளாமல், மாநில உரிமைகளை பறிக்கிறது என்றும்,(10/14)
கூட்டாட்சி முறைக்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது குறுகிய அரசியல் நோக்கம் மட்டுமல்ல, சொந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கே ஊறு விளைவிக்கும் செயல். மேலும் 'அகில இந்திய ஆட்சி பணி' யினை ஒரு மாநிலத்திற்குள் அடைத்து பார்க்கும் சில அரசியல் கட்சிகளின் அறியாமை(11/14)
என்றே கருதப்படும்.எதிர்க்கட்சி ஆளும் சில மாநிலங்களை ஆளும் கட்சிகள், தங்களுடைய அற்ப அரசியல் காரணங்களுக்காக ஐ ஏ எஸ், ஐ பி எஸ் அதிகாரிகளை பந்தாடுவது நாட்டின் வளர்ச்சியை, முன்னேற்றத்தை தடுப்பதோடு, மக்கள் நல திட்டங்கள் ஏழை, எளிய மக்களை சென்றடைவதற்கு முட்டுக்கட்டை போடுகின்றன.(12/14)
இந்திய அரசின் நிர்வாக காரணங்களுக்காக தான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றனவே அன்றி மாநிலங்களை ஒருங்கிணைக்க இந்திய அரசு நிர்வாகம் இயங்கவில்லை என்பதை அரசியல் தெரிந்தவர்கள், இந்திய அரசியலமைப்பு சட்டம் தெரிந்தவர்கள் மறந்து விடக்கூடாது.
மாநில அரசுகள் தங்கள் மாநில நலனை (13/14)
கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தை அணுகுவதன் மூலம் மட்டுமே மத்திய அரசின் ஒத்துழைப்போடு மாநில வளர்ச்சியை பெருக்க முடியும்.

நாராயணன் திருப்பதி,
செய்தி தொடர்பாளர்,
பாரதிய ஜனதா கட்சி.(14/14)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Narayanan Thirupathy

Narayanan Thirupathy Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Narayanan3

Jan 30
"பாஜகவின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள்" : தி மு க தலைவர் ஸ்டாலின்.

11 மருத்துவ கல்லூரிகளை தமிழகத்தில் ஏற்படுத்தி தனியார் கல்வி கொள்ளையை சீரழித்தததை அமபலப்படுத்துவீர்களா?
கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை காக்க தடுப்பூசிகளை கண்டுபிடித்து இலவசமாக செலுத்தி மக்களின் (1/7)
சீரழிவை தடுத்ததை அம்பலப்படுத்துவீர்களா?

காவிரி தீர்ப்பாணையம் அளித்த தீர்ப்பை 7 வருடங்கள் கிடப்பில் போட்டு தமிழக விவசாயிகளை சீரழித்த தி மு க அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் அராஜகத்தை மறைத்து,உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து தமிழக அரசியல் (2/7)
கட்சிகளின் தண்ணீர் அரசியலை சீரழித்த பாஜகவை அம்பலப்படுத்துவீர்களா?

பல மக்கள் நல திட்டங்களில் நேரடியாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தி,கோடி கோடியாக கொள்ளை அடித்து கொண்டிருந்த இடைத்தரகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வாழ்வாதாரத்தை சீரழித்ததை அம்பலப்படுத்துவீர்களா?(3/7)
Read 7 tweets
Dec 31, 2021
தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய 16,725 கோடி இழப்பீட்டு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், இந்த நிலுவை எந்த அனுமானத்தின் அடிப்படையில் கேட்கப்படுகிறது என்பதை நிதியமைச்சர் விளக்க வேண்டும். கடந்த 2020-21 மற்றும் (1/6)
இந்த நிதியாண்டில் செப்டம்பர் காலாண்டு வரை ஒட்டுமொத்த மாநிலங்களுக்கும் மத்திய அரசு செலுத்த வேண்டிய இழப்பீட்டு நிலுவை தொகை ரூபாய்.37,134 கோடி மட்டுமே. அதில் தமிழத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை ரூபாய். 2894 கோடி மட்டுமே. இதே காலகட்டத்தில் மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், (2/6 )
உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு, முறையே 6723 கோடி, 3528 கோடி, 3145 கோடி மற்றும் 3125 கோடி செலுத்த வேண்டியுள்ளது, மேலும், ஜி எஸ் டி சட்டத்தில் குறிப்பிட்டது போல் மாநிலங்களுக்கு சேர வேண்டிய மொத்த நிதியையும் மத்திய அரசு அளிப்பதில் உறுதியாக உள்ளது என்பதை டிசம்பர் 13,2021 (3/6)
Read 6 tweets
Dec 31, 2021
மாநிலக்கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, நேற்று அம்பேத்கர் கல்லூரி மற்றும் தியாகராயர் கல்லூரி மாணவர்களுக்குள் மோதல். ஒருவருக்கு வெட்டு, ஆறு பேர் கைது என்ற செய்தி கவலை தருகிறது.(1/9)
இந்த நான்கு கல்லூரிகளும் அரசு மற்றும் அறக்கட்டளைகளை சார்ந்தவை. சென்னை நகரின் மிக முக்கிய பகுதிகளில் அமைந்துள்ளவை. நீண்ட காலமாக செயல்படுபவை. இங்கு பணிபுரியும் பேராசிரியர்கள்,முதல்வர்கள் அனைவரும் பல ஆண்டுகால அனுபவம் வாய்ந்தவர்களாகவே இருப்பார்கள். தமிழகத்தில் தனியார் கல்லூரிகள்(2/9)
பல இருக்கும் நிலையில், அந்த கல்லூரி மாணவர்களுக்கிடையே இது போன்ற மோதல்கள் நடைபெறாதது ஏன்? அரசு மற்றும் அறக்கட்டளை கல்லூரிகளில் மட்டும் ஒழுக்க குறைவு மற்றும் கட்டுப்பாடற்ற மாணவர்கள் உருவாகுவதற்கு காரணம் என்ன? உறுதியாக இதற்கு காரணம் மாணவர்கள் அல்ல,அந்த கல்லூரிகளின்நிர்வாகங்களே.(3/9)
Read 9 tweets
Dec 30, 2021
பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், மாநிலக்கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில்,
மாநிலக்கல்லூரி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காலங்கள் மாறினாலும் கோலங்கள் மாறுவதில்லை என்பது போல் கல்லூரி மாணவர்களிடையே (1/ )
நிலவும் இந்த பகைமை உணர்ச்சி நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்தாலும், உயிர் பலியாகும் நிலைக்கு செல்வது கொடூரமானது.கட்டுபாடற்ற கல்வி முறை, ஒழுக்கத்தை போதிக்க மறந்த ஆசிரியர்கள், நிர்வாக திறனற்ற கல்லூரி, பெற்றோர்களின் கண்காணிப்பின்மை,அரசியல் ஆதிக்கம் ஆகியவையே இது போன்ற வெட்கக்கேடான(2/ )
சம்பவங்களுக்கு காரணமாகின்றன. இந்தியாவின் தலைசிறந்த தலைவர்கள் பயின்ற கல்லூரிகளின் மாணவர்கள் தெருக்களில் சண்டையிட்டுக்கொண்டு மக்களை இன்னல்களுக்கு உள்ளாக்குவதும், சட்ட ஒழுங்கை சீர்கெடுப்பதும் அராஜகத்தின் உச்சகட்டம். இதை கட்டுப்படுத்த முடியாத கல்லூரிகளின் நிர்வாகங்களும், (3/ )
Read 9 tweets
Dec 17, 2021
'பார்ப்பன மதத்தில்' உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்ததாக திராவிடர் கழக கொள்கையுடைய ஒரு இடையீட்டாளரும், இஸ்லாமியர் ஒருவரும் பங்கேற்ற ஒரு 'யூ டியூப்' பேட்டியை பார்க்க நேர்ந்தது. உடன் அந்த இடையீட்டாளரை தொடர்பு கொண்டு 'பார்ப்பன மதம்' என்றால் என்ன என்று வினவினேன். அதற்கு பதில் (1/10)
இல்லை அவரிடம். ஆனால் நான் கேட்ட கேள்வியை தவிர்த்து, பாரதியே பதிவிட்டுள்ளார், 'பார்ப்பனன்' என்று கூறுவது தவறா? என்றார். பாரதியார் பார்ப்பனன் என்றும் அழைத்தார், துலுக்கன் என்றும் அழைத்தார். ஆனால், இப்போது 'துலுக்கன்' என்று கூறுவது தவறு என்றால் 'பார்ப்பனன்' என்று கூறுவதும் (2/10)
தவறு என்றேன். அவரிடம் பதிலில்லை. துலுக்கன் என்று அழைப்பதை அவர்கள் விரும்பவில்லை என்றார். அதே தானே பார்ப்பனர்களுக்கும் பொருந்தும்? என்றேன். பதிலில்லை.
ரிக்வேதம் பத்தாவது மண்டலம் பதினெட்டாவது அத்தியாயம் இவ்வாறு சொல்கிறது (10.18). இறந்த மனிதனின் சகோதரர்களும் மற்ற உறவினர்களும் (3/10)
Read 10 tweets
Dec 17, 2021
தமிழகத்தில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டேயிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில், நான்கு மடங்கு, ஐந்து மடங்கு என உயர்ந்து மக்களை விழி பிதுங்க வைக்கிறது. விவசாயிகளின் வயிற்றில் அடித்து இடைத்தரகர்கள் கொள்ளையடித்து கொண்டிருக்கிறார்கள். இதன் காரணம் என்ன? விலை (1/4)
உயர்வுக்கு மழை ,வெள்ள காலத்தில் விளைச்சல் குறைவு, போக்குவரத்து பிரச்சினை என பல்வேறு காரணங்களை சொன்ன தமிழக அரசு, தொடரும் விலை உயர்வுக்கு காரணம் என்ன என்பதை ஆராய்ந்து சரி செய்திருக்க வேண்டும். ஆனால் இடைத்தரகர்களின் கொள்ளையை, வாய் மூடி, மௌனம் காத்து வேடிக்கை பார்த்து வருவது(2/4)
வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு, நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து, உடனடியாக விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் அமைச்சர்களை ஈடுபடுத்த வேண்டும். உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுப்பது குறித்தும்,எந்த அமைச்சருக்கு கோளாறு உள்ளது என்று ஆராய்ச்சி செய்வதையும்,(3/4)
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(