அன்பெழில் Profile picture
Feb 6, 2022 10 tweets 4 min read Read on X
இந்துவாக பிறந்த ஒவ்வொருவரது ஆசையும் வாழ்நாளில் ஒரு தடவையாவது #காசி_யாத்திரை செலஸ் வேண்டும் என்பது தான். காசியாத்திரை என்பது காசிக்கு மட்டும் செல்வது கிடையாது. காசியுடன் ராமேஸ்வரமும் செல்வது தான். அப்படியானால் காசி-ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி என்பதை காண்போம்:
காசி யாத்திரை
செல்ல விரும்புபவர்கள் முதலில் ராமேஸ்வரம் சென்று அங்குள்ள அக்னி தீர்த்தமாகிய கடலில் நீராடி ஈர உடையுடன் கடலில் மூன்று தடவை மூழ்கி எழ வேண்டும். ஒவ்வொரு தடவை மூழ்கும் போதும் ஒவ்வொரு பிடி மணல் எடுக்க வேண்டும். முதல் தடவை மூழ்கி எடுக்கும் மணலை சேது மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும்,
இரண்டாவது தடவை மூழ்கி எடுக்கும் மணலை பிந்து மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும், மூன்றாவது தடவை மூழ்கி எடுக்கும் மணலை வேணு மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும், கரையில் வைக்க வேண்டும். பின்னர் மூன்று லிங்கத்திற்கும் விபூதி சந்தனம் குங்குமம் இட்டு, வில்வ இலை போட்டு ஓம் நம சிவாய
என்ற பஞ்சாட்சர மந்திரம் கூறி வாழைப்பழம் வெற்றிலை பாக்கு நைவேத்தியம் வைத்து, பின் கற்பூர தீபாராதனை காட்டி வணங்க வேண்டும். பின் சேது மாதவ லிங்கத்தை மட்டும் எடுத்து பத்திரமாக நாம் வைத்து கொள்ள வேண்டும். பிந்து மாதவ மற்றும் வேணு மாதவ லிங்கம் இரண்டையும் கடலில் போட்டு விட வேண்டும்.
அதன் பின் ராமநாதர் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி விட்டு கோடி தீர்த்த்தை மட்டும் ஒரு கேனில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின் ஈர உடையை மாற்றி கொண்டு ராமநாதர் மற்றும் பர்வதவர்த்தினி அம்மனுக்கு மாலை சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். இறைவனை வழிபட்டு காசிக்கு கிளம்ப
வேண்டும். உடனே காசிக்கு செல்ல இயலாதவர்கள் தம்முடன் வைத்திருக்கும் சேது மாதவ லிங்கத்தையும், கோடி தீர்த்தத்தையும் பூஜை அறையில் வைத்து காசி செல்லும் வரை பூஜை செய்ய வேண்டும். காசி செல்லும் போது மறக்காமல் சேது மாதவ லிங்கத்தையும், கோடி தீரத்த்தையும் எடுத்து செல்ல வேண்டும். முதலில்
அலகாபாத் சென்று அங்கு சேது மாதவ லிங்கத்தை திரிவேணி சங்கமத்தில் இட வேண்டும். பின் அங்கிருந்து ஒரு கேனில் தீர்த்தம் எடுத்து கொள்ள வேண்டும். பின் காசி சென்று அங்குள்ள விஸ்வநாதருக்கு ராமேஸ்வரத்தில் இருந்து எடுத்து சென்ற கோடி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வணங்க வேண்டும். பின்னர்
தங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு உணவு பொருளை விட்டு விட வேண்டும். பின்னர் கயா சென்று அங்கு நமது இறந்த மூதாதையருக்கு பித்ருக்கடன் செய்தும், மோட்ச தீபம் ஏற்றியும் வழிபட வேண்டும். இதனால் இறந்த மூதாதையரின் பரிபூரண ஆசி நமக்கும் நமது சந்ததியினருக்கும் கிடைக்கும். அதன் பின் ராமேஸ்வரம் வர
வேண்டும். உடனே ராமேஸ்வரம் வர இயலாதவர்கள் 15 நாட்களுக்குள் ராமேஸ்வரம் செல்ல வேண்டும். அது வரை அலகாபாத்தில் எடுத்த தீர்த்தத்தை பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும். ராமேஸ்வரம் செல்லும் போது அலகாபாத்தில் எடுத்த தீர்த்தத்தை ராமேஸ்வரம் ராமநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு காசி ராமேஸ்வர
யாத்திரையை நிறைவு செய்ய வேண்டும. இப்படி செய்தால் தான் காசி ராமேஸ்வர யாத்திரையின் முழுபலனும் கிடைக்கும்.

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Aug 26
#தங்கத்தால்_செய்த_கொலுசு_மெட்டி_காலில்_அணியலாமா?
தங்கம் மகாலட்சுமியின் அம்சம். அதுபோல நவகிரகங்களில் நன்மைகளை கொடுக்கும் குரு பகவானின் அம்சமாகவும் தங்கம் உள்ளது. அதனால் தான் ஒரு சிலர் ஒரு கிராம் தங்கம் வாங்கினாலும் குரு ஓரையில் பார்த்து வாங்க வேண்டும் என கூறுவார்கள். மகாலட்சுமி Image
மற்றும் குருவின் அம்சமாக தங்கம் பார்க்கப்படுவதால், அதை காலில் அணிவது கடவுளை அவமதிப்பதாக கருதப்படுகிறது. எனவே காலில் தங்கத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள் அணிய கூடாது. நம் உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு நவகிரகத்தால் ஆளப்படுகிறது. இதில் நம் கால் பகுதி சனி கிரகத்துடன் தொடர்பு
Image
Image
உடையது. நன்மைகளை கொடுக்கும் குரு பகவான் தங்கத்தின் அம்சமாக கருதப்படுகிறார். குரு பகவானும், சனி பகவானும் பகை கிரகங்கள் என்பதால், தங்கத்தால் செய்யப்பட்ட கொலுசு, மெட்டி காலில் அணிந்து கொள்வதால் அது ஒருவருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும் ஆன்மீக ரீதியாக மட்டுமல்லாமல், மருத்துவ
Read 6 tweets
Aug 26
#ஸ்ரீகிருஷ்ணஜெயந்தி_ஸ்பெஷல்
#ஶ்ரீநவநீதகிருஷ்ணர்_கோயில்
மதுரையில் தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ள நவநீத கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி வைபவம் வெகு கோலாகலமாகக் கொண்டாடப் படும். கிருஷ்ணரை தங்கத் தொட்டிலில் வைத்து வீதி உலாவும், உறியடி உத்ஸவமும் சிறப்பாக நடைபெறும். நவநீத கிருஷ்ணன் Image
சுயம்பு மூர்த்தமாகும். விநாயகர் இக்கோயிலில் நின்ற கோலத்தில் கைகளில் சங்கு, சக்கரம் மற்றும் கதாயுதம் தாங்கி நிற்பது வித்தியாசமான அமைப்பாகும். இவரது சன்னிதியில் கருடாழ்வார் மண்டியிட்டு அமர்ந்து வணங்கியபடி காட்சி தருகிறார்.

இக்கோயில் கிருஷ்ணருக்கு அவல், பாயசம் படைத்து வேண்டிக்
கொள்ள குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தவிர, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க சிறப்பு வழிபாடுகளும் நடை பெறுகின்றன. கருவறையில் ஸ்ரீ வேங்கடேச பெருமாள் திருப்பதி பெருமாளின் அமைப்பில் காட்சி தருவது மிகவும் விசேஷம். முன் மண்டபத்தில் கிருஷ்ணருக்கு சன்னிதி உள்ளது. இவர்
Read 12 tweets
Aug 25
#கம்ப_வால்மீகி_ராமாயணம்
கம்பன்:
குன்று சூழ்வான் மகனொடும் அறுவரானோம்

இதை வால்மீகியும் சொல்கிறார்.
त्वमस्माकं चतुर्णां वैभ्राता सुग्रीव पञ्चमः || ६-१२७-४५
सौहार्दाज्जायते मित्रमपकारोऽरिलक्षणम् |

புஷ்பக விமானம் நந்திகிராமத்தில் இறங்கியது. பரதன் சுக்ரீவனை ஆலிங்கனம் செய்து - Image
எங்கள் நால்வருக்கும் ஐந்தாவது தம்பி- என்று கூறிகிறார்.

கம்பன் குஹனோடும் ஐவரானோம்- என்றார். வால்மீகியில் வரிசை மாறுகிறது.
கம்பன், வால்மீகி மற்றும் ஆழ்வார்களால் ஈர்க்கப்பட்டு எழுதுகிறார்.
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி*  மற்று அவற்கு இன் அருள் சுரந்து*
மாழை மான் மட நோக்கி உன் தோழி*  
உம்பி எம்பி என்று ஒழிந்திலை*  உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து*  அடியேன் மனத்து இருந்திட* 
ஆழி வண்ண! நின் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே
Read 5 tweets
Aug 25
#விருந்தாவனம்_கிருஷ்ண_லீலா_பூமி
வழங்கியவர்: வேணுதாரி கன்னைய தாஸ்
சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்பூவுலகில் தோன்றி லீலைகள் புரிந்த புண்ணிய பூமி, விருந்தாவனம், அல்லது விரஜ மண்டலம். ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகள் பதிந்த காரணத்தினால், விருந்தாவனத்தைவிட Image
சிறந்த இடம் மூவுலகிலும் இல்லை. டெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் வழியில் உள்ள இத்திருத்தலத்தை சேவித்தவரை சேவித்தாலே பாவங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்பதை #ஆதிவராஹ_புராணத்தில் காண்கிறோம். 168 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்ட விரஜ மண்டலத்தில் 137 காடுகள் உள்ள போதிலும், 12 காடுகள்
மிகவும் முக்கியமானவை: மதுவனம், தாலவனம், குமுதவனம், கதிரவனம், மஹாவனம், பத்ரவனம், பாண்டீரவனம், பில்வவனம், லௌஹவனம், பஹுலாவனம், காம்யவனம், மற்றும் விருந்தாவனம். மொத்த விரஜ மண்டலமும் விருந்தாவனம் என்று அழைக்கப்படும்போதிலும், விருந்தாவனம் என்று குறிப்பிட்ட ஒரு வனமும் உண்டு. உத்தரை
Read 25 tweets
Aug 24
#ஶ்ரீமத்வாசாரியார்
வைஷ்ணவ ஆச்சாரியர்களில் தலைசிறந்து விளங்கியோரில் ஒருவர் ஸ்ரீபாத மத்வாசாரியர். 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர், துவைதம் என்ற தத்துவக் கொள்கையை நிலைநாட்டி பக்தியைப் பரப்பியவர். ஹனுமான், பீமன் ஆகியோரின் வரிசையில் வாயுவின் மூன்றாவது அவதாரமானவர் இவர். பொ.யு 1238 ஆம் Image
ஆண்டு விஜயதசமி அன்று உடுப்பிக்கு அருகிலுள்ள கிராமத்தில் நாராயண பட்டர், வேதவதி தம்பதியினர் பகவான் விஷ்ணுவிடம் அர்ப்பணித்த 12 வருட பிரார்த்தனையின் பலனாக மகனாக அவதரித்தார். தனது சிறு வயதில் தந்தையின் கடனைத் தீர்ப்பதற்காக, புளியங்கொட்டையை தங்க நாணயங்கள் ஆக்கினார். தனது ஐந்தாம் வயதில்
தனது வீட்டுக்கு அருகில் பாம்பு உருவில் இருந்த மணிமான் என்ற அசுரனை கால் கட்டை விரலினால் அழித்தார். தனது பன்னிரண்டாம் வயதில் அச்சுத பிரகாசர் என்பவரின் குருகுலப் பள்ளியில் இணைந்தார். பூர்ணபிரக்ஞர் என்ற நாமத்துடன் சந்நியாசம் ஸ்வீகரித்தார். சில காலம் பல ஆச்சாரியர்களின் வேதாந்த Image
Read 9 tweets
Aug 24
#முக்தீஸ்வரர்_கோயில்
திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் என்னும் ஊரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள சிதலப்பதி என்னும் ஊரில் முக்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பாடப் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 58வது தலம் ஆகும். இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக, Image
முக்தி தருபவராக அருள் புரிவதால் இவர் முக்தீஸ்வரர் என்று அழைக்கப் படுகிறார். இக்கோயிலில் மகாவிஷ்ணு தனது மூன்று கோலத்தை காட்டியபடி காட்சி தருகிறார். அதாவது சிவனது கருவறை கோஷ்டத்தில் வழக்கமாக லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணுவாக நின்ற கோலத்திலும், பிரகாரத்தில் நவக்கிரக Image
சன்னதி அருகில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார். இவ்வாறு மகாவிஷ்ணுவின் மூன்று விதமான கோலங்களை இக்கோயிலில் தரிசிக்கலாம். இத்தகைய தரிசனத்தை காண்பது அபூர்வமான ஒன்றாகும். இக்கோயிலில் ஆதி விநாயகர் பிற ஆலயங்களில் வீற்றிருக்கும் யானை Image
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(