அன்பெழில் Profile picture
Feb 24, 2022 20 tweets 6 min read Read on X
#திருப்பரங்குன்றம் #ஸ்ரீசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்.
முருகனின்ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடு இது, அவற்றில் மிகப் பெரியதும் ஆகும். இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சித் தருகிறார். முருகப்பெருமான் அவதாரம் செய்ததன்
நோக்கமே சூரபத்மனையும் அவன் சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார். இதனால் தேவர்கள் துன்பம் நீங்கி மகிழ்ச்சியடைந்தார்கள்.
அதனால் நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன் தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது. திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி
பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது. கோவிலின் கருவறை ஒரு குகைக்கோவிலாகும். கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப் பட்டுள்ளன.
சுப்ரமணியசுவாமி சந்நிதி, துர்காதேவி சந்நிதி, கற்பக விநாயர் சந்நிதி, சத்தியகிரீஸ்வரர் சந்நிதி, பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதி ஆகிய ஐந்து சந்நிதிகள் இங்கு உள்ளன. சத்தியகிரீஸ்வரர் சந்நிதி வாயிலிலுள்ள துவாரபாலர்களின் உருவங்களில் காணப்படும் ஆடை மடிப்புகளும், இதர சிற்ப அம்சங்களும் மிக
நேர்த்தியானவை. ஐந்து சந்நிதிகளைத் தவிர திருப்பரங்குன்றக் கோவிலில் அன்னபூரணிக் குகைக் கோவிலும், ஜேஷ்டா தேவிக்கான குகைக் கோவிலும் உள்ளன. அர்த்த மண்டபத்தில் சத்தியகிரீஸ்வரர் சந்நிதியை அடுத்துள்ள மலைப் பாறையிலும், பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதியை அடுத்துள்ள பாறையிலும் திருமாலின்
அவதாரங்களைக் குறிக்கும் புடைப்புச் சிற்பங்களும் உள்ளன. கோவிலின் நுழைவாயிலிலுள்ள 10 பெரிய கற்றூண்கள் நாயக்கர் காலச் சிற்பக் கலைத்திறனைக் காட்டும் முருகன் தெய்வானை திருமணக்கோலம் போன்ற கற்றூண்கள் அமைந்துள்ளன.
சுப்ரமணியசுவாமியின் கருவறை கி.பி.773ல் பராந்தக நெடுஞ்சடையன் (765-815) என்ற
பாண்டிய மன்னர் காலத்தில் அவரது படைத்தலைவன், சாத்தன் கணபதி என்பவரால் சிவனுக்காக எழுப்பப்பட்ட குகைக்கோவில் என்று கல்வெட்டுச் செய்தி தெரிவிக்கிறது. மதுரை நாயக்க மன்னர்களில் வீரப்பர் (1572-1595), திருமலை மன்னர் (1623-1659) ஆகியோர் திருப்பணிகளும், அரசி மங்கம்மாள் (1689-1706)
திருப்பணிகளும் இக்கோயிலில் உள்ளன. கோயிலின் கோபுரம் 46 மீட்டர் உயரமுள்ளது. கோபுரத்தின் அடிப்பகுதி சிற்ப வேலைப்பாடு மிக்கது. இதன் சிகரப் பகுதியில் காணப்படும் சுதைச் சிற்பங்களும் அழகுமிக்கவை. சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு வடக்கில் சுவாமி சந்நிதி தெருவில் பழமையான சொக்கநாதர் கோயில்உள்ளது
திருப்பரங்குன்றத்தின் உச்சியில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. அதன் தென் பகுதியில் (தென்பரங்குன்றம்) உமை ஆண்டார் குகைக் கோவில் உள்ளது. மலையின் வடமேற்குப் பகுதியில் சமணர் கற்படுகைகள் உள்ள ஒரு குகை உள்ளது.
#தல_வரலாறு
கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு ஒம் எனும் பிரணவ
(பரம்பொருளே எனும் பொருளுடைய) மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும் போது, தன் தாயாரின் மடிமீது முருகப் பெருமான் அமர்ந்து இருந்தார். தாய்க்குத் தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது அவரும் அவ்வுபதேசத்தைக் கேட்டார். புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும்
மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறையாகாது. அது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. முருகப் பெருமான் பிரணவ மந்திரத்தையும் அதன் உட்பொருளையும் பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒருவரே ஆனாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாத்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக
அமைந்துவிட்டபடியால், இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகப் பெருமான் இங்கு வந்து தவம் செய்தார். சிவபெருமானும், பார்வதி தேவியாரும் தோன்றி, முருகப் பெருமானுக்கு காட்சி தந்து தவத்தைப் பாராட்டினார்கள். சிவபெருமான் - பார்வதி தேவி இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்னும்
பெயரில் உள்ளனர். இவர்கள் காட்சியளித்த திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. எனவே திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முதலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபடுதல் ஐதீகம். முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை
மாதம் பூச நட்சத்திரத்தன்று காட்சித் தந்தார். எனவே தைப்பூசத்தன்று சிவபெருமானையும், முருகக் கடவுளையும் வழிபடுகின்றவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. எனவே திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
#பெயர்க்காரணம்
பரம்பொருளான
சிவ பெருமான் குன்றம் எனும் மலை வடிவாகக் காட்சியளிக்கும் இடம் திருப்பரங்குன்றம். திரு + பரம் + குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான். குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகதச் சேர்த்து திருப்பரங்குன்றம் என
ஆயிற்று. இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சி அளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான்
இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார். சங்க இலக்கியங்களில், அகநானூற்றில் இந்த மலை முருகன் குன்றம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் திருமுருகாற்றுபடை, கலித்தொகை, மதுரை காஞ்சி, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்கள் இம்மலை பற்றி கூறுகின்றன. லிங்க வடிவில் இருக்கும் இம்மலையைப் பற்றி சைவ சமயக்
குரவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் இவ்வூருக்கு வந்து ஆலய வழிபாடு செய்து பதிகங்கள் பல பாடியுள்ளனர். சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக் கொண்ட திருத்தலம்.
மதுரை நகரிலிருந்து தென்மேற்கில் தேசிய
நெடுஞ்சாலை வழியே 9-கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சென்று முருகப் பெருமான், அவன் பெற்றோர் சகிதம் அனைவரின் அருளையும் பெருவோம்.
ஓம் சரவணபவாய
ஓம் நமசிவாய
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 21
#நற்சிந்தனை
உத்தவ கீதையில் கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு கலியுகம் எப்படி இருக்கும் என்று மிக அழகாக தெரிவிக்கிறார். உத்தவர் கிருஷ்ணரிடம் கலியுகம் பற்றிய கேள்வியை எழுப்பினார். அப்போது கிருஷ்ணர் "உத்தவா, இதே கேள்வியை பாண்டவர்களில் நால்வர் எம்மிடம் கேட்டனர். அவர்களுக்கு யான் சொன்ன பதிலைImage
உனக்கும் சொல்கிறேன், அதை நீ கவனமாக கேட்பாயாக” என்று கூறலானார். பீமன், அருஜுனன், நகுலன் சகாதேவன் கலியுகத்தைப் பற்றி கேள்வி எழுப்பியபோது, மாதவன், சொல்வதென்ன எப்படி இருக்கும் என்றே காண்பிக்கிறேன் என்று கூறி 4 அம்புகளை 4 திசைகளிலும் செலுத்தினார். அவற்றை கொண்டு வருமாறு 4 Image
பாண்டவர்களிடமும் ஆணையிட்டார். கோவிந்தனின் ஆணைப்படியே நால்வரும் 4 திசைகளில் சென்றனர். முதலில் பீமன், அம்பை எடுத்த இடத்தில் ஒரு காட்சியைக் கண்டான். அங்கு 5 கிணறுகள் இருந்தன. மத்தியில் ஒரு கிணறு, அதைச் சுற்றி 4 கிணறுகள். சுற்றியுள்ள 4 கிணறுகளில் சுவை மிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்து
Read 15 tweets
May 20
#நற்சிந்தனை
குருசேஷத்திர போர் முடிந்தவுடன் திருதராஷ்டிரன் கிருஷ்ணரிடம் நான் குருடனாக இருந்தபோதும் விதுரர் சொல் கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணர், உனக்கு Image
நான் ஒரு கதை சொல்லி கேள்வி கேட்கிறேன். அதற்குப் பதில் சொன்னால் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன் என்றார். நீதி தவறாது ஆட்சி செய்த அரசனிடம் வறியவன் ஒருவன் சமையல்காரனாகச் சேர்ந்தான். மிகச் சுவையாக சமைப்பது அவரை பிரத்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளினால்
வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான். அரசருக்கு வித்தியாசமான சுவையை செய்து கொடுத்து பரிசு பெறும் நோக்கில் அவனுக்கு விபரீதமான யோசனை ஒன்று தோன்றியது. அதன்படி அரண்மணை குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து அரசருக்குப் பரிமாறினான்.
Read 9 tweets
May 20
பெண்ணரசு ஆளும் ஊர் #திருநறையூர்
பள்ளிக் கமலத்து நண்டுக்கு கர்ப்ப காலத்தில் இனிமையான பொருட்களைத் தேடித் தர வேண்டும் என்ற ஆசை பட்ட,

பள்ளி வாய் பகு வாயலவன் முகம் நோக்கி
நள்ளி ஊடும் வயல் சூழ் நறையூர்
(பெரிய திருமொழி 6-7-6)

நள்ளி என்றால் பெண் நண்டு. அலவன் என்றால் ஆண் நண்டு.Image
ஒரு ஆம்பல் மலரில், நண்டுத் தம்பதிகள் இனிதான இல்லறம் நடத்திக் கொண்டிருந்தன. பெண் நண்டு கர்ப்பம் உற்றது. தன்னுடைய பெண் துணைக்கு ரசமான, இனிப்புப் பொருட்கள் கொண்டுத் தருவதற்கு ஆண் நண்டு ஆசை கொண்டது. சூரியன் மறைந்திடும் நேரத்திற்குச் சற்று முந்திச் சென்று, கொல்லென்று மலர்ந்த ஒரு
தாமரை மலருக்குள் நுழைந்து, வாயிலும், உடலிலும், தாமரைப் பூவின் இனிய மகரந்தங்களைத் தேக்கிக் கொண்டு, தாமரை மலரிலிருந்து வெளிப் புறப்பட முயற்சி செய்யும் பொழுது, சூரியன் அஸ்தமித்த காரணத்தால், வாய் கூம்பிப் போய் மூடிக் கொண்ட தாமரையிலிருந்து ஆண் நண்டு வெளியில் வர முடியாத படி சிறைப்
Read 9 tweets
May 20
#பஞ்சகவ்யம்
பஞ்ச என்றால் ஐந்து மற்றும் கவ்யம் என்றால் பசுவிடமிருந்து என பொருள். பாலில் எடுக்கப் படுகின்ற தயிர் முதலிய ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவையுடையவை, குணம் உடையவை. இவற்றின் கலவை சிறந்த சத்துணவு . கோசலமும்(கோமியம்) , கோமலமும்(பசுஞ்சாணம்) மருத்துவக் குணமுடையன. பஞ்சகவ்யம் தயார் Image
செய்ய பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்கள் – 1)சாணம் 2) கோமியம் 3) பால் 4) நெய் 5) தயிர். இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கப் படுவதே பஞ்சகவ்யம். இது இந்து சமய இறை வழிபாட்டின்போது முக்கிய பூஜை பொருளாகவும், ஆயுர்வேத வைத்தியம், வேளாண்மை பயிர் பாதுகாப்பிலும் Image
பயன்படுகிறது. பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்கின்ற போது கிடைக்கின்ற பயன்கள் வருமாறு.
பசும்பால்: ஆரோக்கியம், ஆயுள் விருத்தி
பசுந்தயிர்:பாரம்பரிய விருத்தி
பசும்நெய்:மோட்சம் Image
Read 20 tweets
May 19
#சாயா_சோமேஸ்வரர்
நல்கொண்டா தெலுங்கானா.
இக்கோவிலில் பல மர்மங்கள் அடங்கியுள்ளன. ஹைதராபாத்தில் இருந்து சுமார் 100 கிமீ தொலைவில் உள்ளது. 10ம் நூற்றாண்டில் கன்டூர் சோழர்களால் கட்ட பட்ட இந்த கோவிலில் ஃ வடிவில் மூன்று கருவறைகள் உள்ளது. அந்த 3 கருவறைகளில் 3 விதமான மர்ம நிழல்கள் உள்ளன. Image
1. லிங்க கருவறை -1
இங்குள்ள லிங்கத்திற்கு பின்புறம் ஒரு தூணின் நிழல் விழுகிறது. நிழலில் என்ன அதிசயம் என்றால், காலை முதல் மாலை வரை அந்த நிழல் நகர்வதே கிடையாது. அதோடு இரவு நேரத்தில் கூட அந்த நிழல் மறைவதே கிடையாது. பொதுவாக சூரியன் நகர நகர நிழலும் நகர்ந்துகொண்டே போகும் அது தான் Image
உலக நியதி. அனால் இங்கு சூரியன் உதித்ததில் இருந்து மறையும் வரை அந்த நிழல் நகராமல் ஒரே இடத்தில உள்ளது. இந்த கருவறைக்கு முன்பு நான்கு தூண்கள் உள்ளன. அனால் கருவறையில் விழும் நிழல் எந்த தூணிற்கானது என்று கண்டறியவே முடியவில்லை. எந்த தூணிற்கு பக்கத்தில் நாம் நின்று பார்த்தாலும் தூணின் Image
Read 9 tweets
May 19
திருநெல்வேலி நகரில் ஶ்ரீ பிரகலாத வரதன் திருக்கோயில்
எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயில் பாண்டிய மன்னனால் நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னரே, இந்த நரசிம்மப் பெருமானின் திருமேனி வடிவமைக்கப் பட்டதாக தகவல் உள்ளது. இந்த சன்னதியும்,Image
நெல்லையப்பர் மூல லிங்கமும் ஒரே மட்டத்தில் இருந்துள்ளன. இரு கோயில்களுக்கும் இடையே சுரங்கம் ஒன்றும் இருந்தது. ஒரு காலத்தில், இக்கோயில் மண்ணுக்குள் புதைந்து விட்டது. பின்னாளில் வைணவ பக்தரான கூரத்தாழ்வார் கோன் என்பவர் இதை மீண்டும் கண்டுபிடித்தார். அப்போது நரசிம்மர் அளவற்ற சக்தி Image
உடன் ஆர்ப்பரித்து தனது சக்தியை வெளிப்படுத்தி உள்ளார். வைணவ பக்தர்களான பேரருளாளர் கோன், திருமங்கையர் கோன் ஆகியோர் பல திருப்பணிகள் செய்து நிர்வாகத்தையும் கவனித்து வந்தனர். கோயிலில் எழுந்தருளி உள்ள பெருமாளுக்கும், மகாலட்சுமி தாயாருக்கும் நீராஞ்சன தீபம் செலுத்தும் வகையில் பக்தர்கள் Image
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(