#நாசூக்கு
#மிக_மிக_அவசியம்

பிராமணர்கள் கடல் கடந்து போகக் கூடாது என்பது அந்தக் கால ஆச்சாரமாம் ...
அதை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன்...!

அப்படி கடல் கடந்து வெளிநாடு போய் வந்தவர்களுக்கு , காஞ்சி மஹா பெரியவர் ,
தன் கையால் தீர்த்தம் கொடுப்பது இல்லையாம் ... அதையும் கேள்விப்பட்டிருக்கிறேன்...!

ஆனால்..இந்த "நாசூக்கு" சம்பவத்தை இப்போதுதான் நான் கேள்விப்படுகிறேன்..!

ஒரு தடவை எம்.எஸ். சுப்புலக்ஷ்மி – சதாசிவம் தம்பதிகள் , கச்சேரிக்காக வெளிநாடு போய் விட்டு திரும்பி வந்தவுடன் ...
நேராக காஞ்சி மஹா பெரியவரை தரிசனம் செய்ய வந்து விட்டார்கள்...!

அவர்கள் வந்த அந்த வேளையிலே பெரியவர் தன் கையாலேயே பக்தர்கள் எல்லாருக்கும் வரிசையாக தீர்த்தம் கொடுத்துக் கொண்டிருந்தாராம்...!

சற்றும் யோசிக்காமல் , சதாசிவமும் தீர்த்தம் வாங்க வரிசையில் நின்று விட்டாராம்...
[
அவருக்கு இந்த ஆச்சாரம் ,அனுஷ்டானம் எல்லாம் அந்த சமயத்தில் எப்படி மறந்து போனதோ..தெரியவில்லை..! ]

சதாசிவத்துக்கு பின்னால் ரா.கணபதி என்ற ஆன்மீக எழுத்தாளர் நின்று கொண்டிருக்கிறார்..!

[
இவர்தான் காஞ்சிப் பெரியவர் சொல்லச் சொல்ல அவற்றைத் தொகுத்து "தெய்வத்தின் குரல்” என்ற நூலை எழுதியவர்]

காஞ்சி மடத்துக்கு ரொம்ப நெருக்கமான அவருக்குத் தெரியும் ... கடல் கடந்து போய்விட்டு வந்த பிராம்மணர்களுக்கு பெரியவர் தன் கையால் அபிஷேக தீர்த்தம் தருவது சாஸ்த்திர விரோதம் ...
அதனால் கண்டிப்பாக கொடுக்க மாட்டார் என்று..!

ஆனால்....இதை எப்படி நாசூக்காக சதாசிவத்துக்கு எடுத்துச் சொல்வது..?

இப்போது ரா.கணபதிக்கு திக் திக்....
ஆனால், சதாசிவமோ இதைப் பற்றி எதுவும் சிந்திக்காமல்,
ரொம்ப ரொம்ப சந்தோஷமாக, பெரியவரை நோக்கி கியூவில் .........
முன்னேறிக் கொண்டே இருக்கிறார்.

அவர் பக்கத்தில் நெருங்க நெருங்க , ரா.கணபதிக்கு “பக் பக்”....

மஹா பெரியவர் , சதாசிவத்துக்கு மட்டும் தீர்த்தம் கொடுக்காமல் விட்டு விட்டால் சதாசிவம் மனசு புண்பட்டுப் போவாரே..?

இந்த இக்கட்டான சூழ்நிலையை எப்படி இங்கிதமாக சமாளிப்பது?
ஊஹூம்..இனி அதைப் பற்றி யோசித்துப் பலன் இல்லை..!

வரிசை நகர்ந்து.......நகர்ந்து.....நகர்ந்து.....
இதோ... சதாசிவம் ,காஞ்சி மஹா பெரியவர் முன் ,
குனிந்து பணிவோடு பவ்யமாக தீர்த்தத்துக்காக கை நீட்டி நிற்கிறார்.

படபடக்கும் இதயத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறார் ரா.கணபதி...!
நீட்டிய கைகளோடு சதாசிவம் நின்று கொண்டிருக்க....

மஹா பெரியவர் , மிக இயல்பாக தீர்த்த பாத்திரத்தை கீழே வைத்து விட்டு ,
சற்றே திரும்பி ... அவருக்கு அருகிலிருந்த தேங்காயை எடுத்து தரையில் “பட்” என்று தட்டி உடைத்து....அதிலிருந்த இளநீரை சதாசிவத்தின் கைகளில் விட்டு விட்டு சொன்னாராம் :
“இன்னிக்கு உனக்கு ஸ்பெஷல் தீர்த்தம்!”

அசந்து விட்டாராம் ரா.கணபதி...!

ஆஹா...!!! என்ன ஒரு இயல்பான இங்கித சமாளிப்பு !!
நாகரிக நாசூக்கு .!

இளநீரை ஏந்தியபடி நின்ற சதாசிவத்தின் முகத்தில் ஏகப்பட்ட பூரிப்பாம்...!
பக்கத்தில் நின்ற ரா.கணபதியிடம் திரும்பி ..
திருப்தியோடு சொன்னாராம் :
“பாத்தியா..? இன்னிக்கு பெரியவா எனக்கு மட்டும் ஸ்பெஷலா தீர்த்தம் கொடுத்துருக்கா... ”

ரா.கணபதி , மஹா பெரியவர் முகத்தைப் பார்க்க ... அதில் மந்தஹாசப் புன்னகை...!
ஆம் .... மஹா பெரியவர் சாஸ்திரத்தையும் மீறவில்லை..!
மற்றவர் மனசு நோகும்படி நடந்து கொள்ளவும் இல்லை...!
இதற்குப் பெயர்தான் “நாசூக்கு”

இந்த நாசூக்கு மிக மிக அவசியம் ...
ஞானிகளுக்கு கூட...!
நமது பேச்சு , மற்றும் பழக்கவழக்கங்களில்
மற்றவரைப் புண்படுத்தாத தன்மை...
மென்மை..
இங்கிதம்..

அதுவே தெய்வீகம்...!

அதை அருமையாக வெளிப்படுத்திய அந்த மஹா பெரியவரை , மனமார வணங்குகிறேன்...!

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Chowkidar Kaalabala🇮🇳

Chowkidar Kaalabala🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Mar 31
ரெண்டு பேருக்கும் தோராயமா ஒரு 70 வயசு இருக்கும் .

அவரோட மனைவியை கைய புடிச்சிட்டு கூட்டிட்டு வந்தாரு அந்த பெரியவர்..
சொல்லுங்க பெரியவரே யாருக்கு என்ன பண்ணுது

~என் சம்சாரத்துக்கு மூணு நாள உடம்பு ஏதோ பண்ணுது ..ஆனா என்னனு தெரியல.. கொஞ்சம் என்னனு பாருங்க சார். Image
உங்களுக்கு புண்ணியமா போகும்..
கண்டிப்பா பெரியவரே ..

"BP, pulse, SUGAR, CHOLESTEROL எல்லாம் பாத்தாச்சு. எல்லாம் normal.."

உங்க சம்சாரத்துக்கு ஒன்னும் இல்ல பெரியவரே எல்லாம் நார்மல்.. சாப்பிடாம இருக்குறது நால கொஞ்சம் அப்படி இருக்கும் ..
சத்து ஊசிum,saline bottle um போட சொல்றன். போய் போட்டுக்கோங்க...

~ரொம்ப நன்றி சார் .நல்லா இருப்பீங்க நீங்க
இடையில அவங்க சம்சாரம்

~சார் அப்டியே அவருக்கும் ஒரு bottle போடுறீங்களா
ஏன் பாட்டி அவருக்கு என்ன ஆச்சு
Read 7 tweets
Mar 29
#சிவதனுசு

சிவபெருமானிடம் கோடிக் கணக்கான தனுசுகள் அதாவது வில்கள் உண்டு. இவை அனைத்தையுமே சிவதனுசு என்றே கூறுகின்றோம். மக்களின் சிற்றறிவுக்குத் தெரிந்த வரை சிவபெருமான் தன்னிடம் உள்ள மூன்று சிவதனுசுகளைச் சிவப் பிரசாதமாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அளித்துள்ளார்.
இதில் ஒன்று ராவணனுடைய தவத்தை மெச்சி அவனுக்கு அளிக்கப்பட்டது.

சிவபெருமாளே வழங்கிய வில் என்றால் அதன் மகிமை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும் அல்லவா? சிவ தனுசுவை வைத்திருக்கும் ஒருவனை எந்த உலகத்திலும் யாராலும் வெல்ல முடியாது. ஆனால்,
இந்த வில்லை முறையாகப் பயன்படுத்தும் வரைதான் அது சிவப் பிரசாதமாக இருக்கும். அதைத் தவறாகப் பயன்படுத்தினால் அது தன் சக்தியை இழந்து விடும்.

இதை பூரணமாக உணர்ந்தவன்தான் இராவணன், ஆனால், தான் என்ற அகங்காரம் காரணமாக சிவ வாக்கை மறந்து எல்லா லோகங்களுக்கும் சென்று
Read 21 tweets
Mar 29
🙏🙏மனுஷ வாழ்க்கை 🙏🙏

ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.. டிக்கெட் பரிசோதகரின் காலில் ஏதோ இடறியது.. குனிந்து அதை எடுத்தார்..

அது ஒரு பழைய மணி பர்ஸ்.. ஓரமெல்லாம் ஜீரணம் ஆகி, மெருகு குலைந்திருந்தது..

பர்ஸைத் திறந்தார்.. சில கசங்கிய நோட்டுகளும், சில்லறைகளும் Image
இருந்தன.. அத்துடன் ஸ்ரீகிருஷ்ணரின் படம் ஒன்றும் இருந்தது..

பர்ஸைத் தலைக்கு மேலே பிடித்துக் காட்டிய பரிசோதகர், "இது யாருடையது?" என்று குரலை உயர்த்திக் கேட்டார்..

ஒரு முதியவர், "அது என்னுடையது" என்றார்.. பர்ஸின் நிலையையும், முதியவரின் வயதையும் கண்டு
ஜோடிப் பொருத்தம் பார்த்தே பர்ஸைத் தந்திருக்கலாம்..

ஆனாலும் பரிசோதகர், "உம்முடையது தான் என்பதற்கு என்ன ஆதாரம்? "எனக் கேட்டார்..

"அதில் கிருஷ்ணர் படம் இருக்கும்.."

"இதெல்லாம் ஒரு ஆதாரமா? யார் வேண்டுமானாலும் கிருஷ்ணர் படம் வைத்திருக்கலாமே...?"
Read 13 tweets
Mar 28
"கிருஷ்ணார்ப்பணம்" என்பதன் அர்த்தம்..!!

ஒரு சிறிய கிராமம் மத்தியில் அழகான ஒரு கிருஷ்ணர் கோவில்
அர்ச்சகரும், அவரிடம் வேலைபார்த்துவரும் சிறுவன் துளசிராமனும் காலை 4 மணிக்கே கோவிலுக்கு வந்து விடுவார்கள். Image
துளசிராமனுக்கு கோவில் தோட்டத்து பூக்களையெல்லாம் பறித்து மாலையாகத் தொடுத்து தரவேண்டிய பணி.

கிருஷ்ண பகவானே கதி என்று கிடக்கும் துளசிராமனுக்கு, அந்தப் பூப்பறிக்கும் நேரமும் கிருஷ்ணனின் நினைப்புதான் ! ” கிருஷ்ணார்ப்பணம் ” என்று மனதுள் சொல்லியபடியே பூக்களைப் பறித்து, தொடுப்பான். Image
பத்து, பதினைந்து மாலைகள் கட்டி முடித்தவுடன், ஏதோ அவனே கிருஷ்ணருக்கு சூட்டிவிடுவது போன்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு, அர்ச்சகரிடம் கொடுத்து விடுவான்.

கிருஷ்ணரின் சிலைக்கு மாலை சூட்ட போனால்…..ஏற்கனவே ஒரு புதுமாலையுடன் கிருஷ்ணர் சிலை பொலிவு பெற்று இருக்கும். Image
Read 18 tweets
Mar 28
*விதி*
.
இந்திரன் மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாக வளர்த்து வந்தாள்.
.
ஒருநாள் அந்த கிளி நோய் வாய்ப்பட்டு விட்டது.
.
அதை பரிசோதித்த மருத்துவர்
இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார்.
உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி,
இந்த கிளியை எப்படியாவது காப்பாற்றுங்கள்.
கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்றாள்.
.
இந்திரன்,
கவலைப்படாதே!! இந்திராணி...

நான் உடனே பிரம்மாவிடம்சென்று முறையிடுகிறேன்...

ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே?
அவரிடம்சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றியெழுதி விடுவோம் என்று சொல்லிவிட்டு
பிரம்மாவிடம்
சென்று விஷயத்தை கூறினான்..

விஷயத்தைக்கேட்ட பிரம்மா ,
.
இந்திரா.... படைப்பது மட்டுமே என்வேலை.
.
உயிர்களை காப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவின் தொழில்.
.
நாம் அவரிடம்சென்று உதவிகேட்போம்...வா ...
நானும் உன்னுடன் வருகிறேன் என்று இந்திரனை அழைத்துக்கொண்டு மஹாவிஷ்ணுவிடம் சென்று விஷயத்தை
Read 11 tweets
Mar 28
அய்யர் என்று அழைத்தோம்.
ஆன்மீகம் தெரிந்தது.
தேவர் என்று அழைத்தோம்
தெய்வீகம் மணத்தது
கள்ளர் என்று அழைத்தோம்
வீரம் விளையாடியது
படையாட்சியார் என்று அழைத்தோம்
படைகளும் நடுங்கியது.
வன்னியர் என்று அழைத்தோம்.
வாய்மை வளர்ந்தோங்கியது.
முதலியார் என்று அழைத்தோம்.
முகமே அமைதி என அறிவித்தது
நாடார் என்று அழைத்தோம்.
நானிலம் முழுதும் வியாபாரம் பெருகியது.
பிள்ளைமார் என்று அழைத்தோம்.
பிறருக்கு உதவும் மனப்பான்மை தெரிந்தது.
செட்டியார் என்று அழைத்தோம்.
சிக்கனத்தின் உண்மை தெரிந்தது.
தேவேந்திரகுல வேளாளர் என்று அழைத்தோம்.
தன்மானத்தின் தன்மை புரிந்தது.
கொங்கு வேளாளர் என்று அழைத்தோம்.
உழைப்பின் உண்மை தெரிந்தது.
கோணார் என்று அழைத்தோம்.
குடும்பப் பாங்கு புரிந்தது
மூப்பனார் என்று அழைத்தோம்.
முகமலர்ச்சியோடு வரவேற்கும் வளமை புரிந்தது.
ஆதி திராவிடர் என்று அழைத்தோம்.
அவர்களின் அன்பு தெரிந்தது.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(