*ஶ்ரீராம_நவமி சிறப்பு பதிவு*

#துக்கிரிப்_பாட்டி

தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தில்‌ லக்ஷ்மி என்பவர் வசித்துவந்தார். மிக இளம் வயதிலேயே திருமணம் நடந்து ஐந்து வயதிலேயே கணவரையும் இழந்துவிட்டார்.

விவரம் தெரிவதற்குள் வாழ்க்கையை இழந்துவிட்ட அந்தப் பெண்ணை எல்லோரும்
துக்கிரி அதிர்ஷ்டம்‌ கெட்டவள் என்று அழைக்கத் துவங்கினர். வீட்டை விட்டு எதற்காகவும் வெளியே வர இயலாது.

பெற்றோர் இருந்தவரை அவளைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டே காப்பாற்றி வந்தனர். நாளடைவில் பெற்றோரும் காலகதியை அடைந்துவிட்டனர்.
நிர்கதியாக இருக்கும் பெற்றோர்களுக்கு தூரத்து உறவினர்கள் உணவிடும் பழக்கம் இருந்ததால், தூரத்து உறவினர், லக்ஷ்மிக்கு வேண்டியதை அவள் வீட்டிற்கே அனுப்பிவிடுவர்.
யாரும் இல்லை. பேசவும் ஆளில்லை. வெளியிலும் போக முடியாது.
போனாலும் யார் கண்ணிலாவது பட்டுவிட்டால் துக்கிரி என்று திட்டுவார்கள். போடி...துக்கிரி... உன்னைப் பார்த்தாலே செல்லும் காரியம் கெட்டுவிடும் என்று கூறும் பொது மக்கள், அப்படி நினைக்கும் சமூகக் கட்டமைப்பு.
அவள் விடியும்‌முன்பே சென்று காவிரியில் ஸ்நானம் செய்துவிட்டு வந்து வீட்டிற்குள் புகுந்துகொள்வாள். பொழுது போகவில்லை. தாயும் தந்தையும் சிறு வயதில் சொன்ன கதைகளிலும், ஸ்லோகங்களிலும் அவளுக்கு ராம நாமம் மிகவும்‌பிடித்து விட்டது.
வீட்டில் ஒரு ஊஞ்சல் இருந்தது. அதில் அமர்ந்து ஆடிக்கொண்டே அனவரதமும் ராம நாமத்தைச் சொல்லத் துவங்கினாள்.
சில நாட்கள் சொன்னதும், நாமம் அவளைப் பிடித்து க் கொண்டது.

பொழுது போகாதபோதெல்லாம் நாமம் சொல்லிக்கொண்டிருந்தவள் எப்போதுமே நாமம் சொல்லத் தொடங்கினாள்.
ஆயிரம் நாமம் ஆனதும் சுவற்றில் கரிக்கட்டையால் ஒரு சிறிய கோடு கிழித்து வைப்பாள் லக்ஷ்மி.

இப்படியாக வீட்டுச் சுவரில் இடமே இல்லாத அளவுக்கு நாமத்தைச் சொல்லி சொல்லிக் கோடு கிழித்து வைத்திருந்தாள்.இப்படியே அவளுக்கும் வயதாகியது.
அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் சில இவளைத் தேடி வரத் துவங்கின. அவர்களுக்கு தனக்குத் தெரிந்த கதைகளும், பாட்டும் சொல்லிக் கொடுத்தாள்.

ஒருநாள் ஒரு குழந்தை அழுதுகொண்டே இருந்தது.
ஏம்மா அழற? அப்பாவுக்கு உடம்பு சரியில்ல பாட்டி.
வைத்தியர் பிழைக்க மாட்டார்னு சொல்றாராம். அம்மா அழுதுண்டே இருக்காங்க..சரி, அழாத.. இங்க வா..

ராம நாமத்தை விடப் பெரிய மருந்தே இல்ல. உங்கப்பாவுக்காக நான் ஜபம்‌பண்ணி வெச்சிருக்கறதிலேர்ந்து 1000 நாமா கொடுத்தேன்னு போய்ச் சொல்லு. சரியாப் போயிடும்
என்று சொல்லி ஒரு கோட்டை அழித்தாள்.
சரி பாட்டி....என்று கண்ணைத் துடைத்துக் கொண்டு ஓடிய குழந்தை சற்று நேரத்தில் தாயுடன் திரும்பி வந்தது.

அந்தக் குழந்தையின் தாய் ஓடிவந்து லக்ஷ்மி பாட்டியின் காலில் விழுந்து உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலமா....
நீங்க நாமா கொடுத்தேள்னு குழந்தை சொன்னதும் மாசக் கணக்கா படுத்த படுக்கையா இருந்தவர் சட்டுனு எழுந்து உக்காந்துட்டார்.

வைத்தியரும் எல்லா நாடியும் இப்போ சுத்தமா இருக்கு. இனி வ்யாதியே வராதுன்னு சொல்லிட்டு போயிட்டார்.என்று ‌கூறி மீண்டும் மீண்டும்‌ நமஸ்காரம் செய்தாள்.
விஷயம் காட்டுத் தீ போல் ஊர் முழுதும் பரவியது.யார் கஷ்டம் என்று வந்தாலும் தான் ஜபம் செய்து வைத்த நாமத்தின் சிறு பகுதியைக் கொடுத்து அவர்கள் கஷ்டத்தைப் போக்கி விடுவாள் பாட்டி.

கொடுத்ததை அன்றே ஜபம் செய்து சமன் செய்து விடுவாள்.
யார் எதிரில் வந்தால்
அபசகுனம் என்று நினைத்துக் கரித்துக் கொட்டினார்களோ, அந்த துக்கிரிப் பாட்டி வராமல் ஊரில் ஒரு நிகழ்ச்சியும் நடப்பதில்லை.
துக்கிரிப் பாட்டி மாங்கல்யம் எடுத்துக் கொடுத்தால்தான் திருமணம், அவள் வந்தால்தான் க்ருஹப்ரவேசம் எல்லாம்.
லக்ஷ்மி அதிருஷ்டமில்லாதவள் என்று அனைவராலும் ஒதுக்கப்பட்டவரை அனைவரும் வரவேற்கும்படி செய்தது ராமநாமம் அல்லவா...

இன்று பலரும் ஒவ்வொரு
தருணத்திலும் நம்மை நாமே
குறைத்து மதிப்பிட்டு கொள்கிறோம், என்னால் முடியாது, இயலாது, நான் ராசியாற்றவன்/ள் , நேரம் சரியில்லை....
குழந்தை பாக்கியம் இல்லாதவன்/ள்.... சொந்த வீடு வாசல் இல்லை...சொந்த பந்தந்கள் இல்லை... உறவுகள் என்னை மதிப்பதில்லை/ கண்டு கொள்வது இல்லை என பல நேரம் நொந்து கொள்கிறோம்,
இல்லைகளை தவிர்த்து என்றும் இவ்வுலகில் நீக்கமற நிறைந்து இருக்கும் பரந்தாமன் ஸ்ரீராமபிரானை நெஞ்சில் நிறுத்துவோம், தினம் 1000, ஆயிரம் ராம, கிருஷ்ண, நாராயண நாமாக்களை சொல்லி நம்மை சுற்றி உள்ள அனைவருக்கும் பரிசுகளாய் கொடுப்போம்...

ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம🙏🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Chowkidar Kaalabala🇮🇳

Chowkidar Kaalabala🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Apr 10
ஸ்ரீராமரின்_68தலைமுறை முன்னோர்களை பற்றி #ராம_நவமி ஆன இன்று தெரிந்து கொள்வோம்..!!

1. பிரம்மாவின் மகன் -மரீசீ
2. மரீசீயின் மகன்- கஷ்யபர்
3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான்
4. விவஸ்வானின் மகன்- மனு
5. மனுவின் மகன் -இஷ்வாகு
6. இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி
7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா Image
8. புரண்ஜயாவின் மகன் அணரன்யா
9. அணரன்யாவின் மகன் -ப்ருது
10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா
11. விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா
12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1
13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட்
14. ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா
15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா Image
16. குவலஷ்வாவின் மகன் - த்ருதஷ்வா
17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத்
18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா
19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப்
20. நிகும்பின் மகன் -சன்டஷ்வா
21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா
22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத்
23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா-2 Image
Read 9 tweets
Apr 10
#இறந்த_குழந்தையை
#உயிர்ப்பிக்கும்_ராம_நாமம்.

புல்லரிக்கும் இந்த உண்மை கதையினை படித்து முடித்த பின் கண்ணீருடன் உங்களை அறியாமல் சொல்வது.
ஸ்ரீ ராம்.. ஆம் ஸ்ரீ ராம்..

நாமம் ஒன்றே போதுமே..

ராம யோகி !

கோபன்னா என்பவர் சிறந்த ராம பக்தர். மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். Image
வருடாவருடம் ஸ்ரீ ராம நவமியை மிக விமரிசையாகக் கொண்டாடுவார்.
கோபன்னா நடத்தும் ஸ்ரீ ராம‌நவமி உற்சவம் என்றால் ஏராளமான பாகவதர்கள்‌ வந்துவிடுவர். பத்து நாள்களுக்கு இரவு பகல்‌ பாராமல் பஜனை நடந்துகொண்டே யிருக்கும். வருபவர்கள்‌ அனைவருக்கும் Image
உண்வுப் பந்தி நடந்துகொண்டே இருக்கும்.
கோபன்னாவுக்கேற்ற குணவதி அவர் மனைவி.

ஒரு சமயம் ஸ்ரீ ராம நவமி உற்சவத்தில் காலை பஜனை நடந்து கொண்டிருந்த சமயம்.
அன்னத்தை வடித்து வடித்து சமையலறையில் உள்ள முற்றத்தில் ஒரு தொட்டியில் கொட்டி வைப்பது வழக்கம். Image
Read 21 tweets
Apr 10
*ஶ்ரீராம_நவமி* சிறப்பு பதிவு

ராவணனை அழித்த பிறகு,

போர்க்களத்தில் ராமபிரான் ஓய்வாக தரையை நோக்கியபடி அமர்ந்திருந்தார்....!!

அப்போது ஒரு பெண்ணின் நிழல் தெரிந்தது.....!!

அந்த நிழலுக்குச் சொந்தக்காரியான பெண், Image
அவரது திருப்பாதங்களைத் தொட முயற்சிப்பதை,

ராமபிரான்.... நிழலின் அசைவின் மூலம் புரிந்து கொண்டார்...!!

உடனே தனது காலை உள்ளிழுத்துக் கொண்டார்....!!

“நீ யாரம்மா?” என்றார்....!!

“நான் ராவணனின் மனைவி மண்டோதரி....!! Image
என் கணவரை யாராலும் வெல்ல முடியாது என இருமாந்திருந்தேன்....!!

ஆனால்,
அவரையே ஒருவன் கொன்று விட்டான் என்றால்,

அவனிடம் ஏதோ உயர்ந்த குணம் இருக்க வேண்டும் என நினைத்தேன்.....!!

மேலும்.
சத்திரிய குல தர்மப்படி, Image
Read 11 tweets
Apr 10
"ஶ்ராம_நவமி" பதிவு

‘ராமன்’ என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்; மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம். எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும் அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே அநுசரித்துக்கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ஸ்ரீ ராமன்தான்.
வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளேயே ஆனந்தமாகவே இருந்தான்.

சுக துக்கங்களில் சலனமடையாமல், தான் ஆனந்தமாக இருந்துகொண்டு, மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவது தான் யோகம். அப்படியிருப்பவனே யோகி.
இவ்வாறு மனசு அலையாமல் கட்டிப்போடுவதற்குச் சாமானிய மனிதர்களுக்கான வழி வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு, கட்டுப்பாட்டோடு பின்பற்றி வாழ்வது தான். சொந்த விருப்பு வெறுப்புக்கு இலக்காகாமல் வேதம் விதிக்கிற தர்மப்படி வாழ ஆரம்பித்துவிட்டால்,
Read 17 tweets
Apr 10
"ஶ்ரீராம_நவமி" சிறப்பு பதிவு

ஜெய் ஸ்ரீராம்

காவல்துறையில் சாதாரண காவலராக பணிபுரிந்தார் ராம கிருஷ்ண தாஸ்.

ராம பக்தியில் தலைசிறந்தவர், ராமாயணம் சொற்பொழிவு எங்கு நடந்தாலும் அதைக் கேட்கப் போய் விடுவார் அவரின் ராம பக்தியை ஊரே புகழ்ந்தது.
ஒருநாள் வீட்டின் அருகில் ராமாயண உபன்யாசம் நடப்பதை அறிந்து கேட்க போய்விட்டார்.
நிகழ்ச்சி முடிந்தது, அப்போதுதான்,
அடடா.. இன்று நமக்கு காவல் நிலையத்தில் வேலை போட்டிருக்கின்றனர்.
அதை மறந்து, இங்கு ராமாயணம் கேட்க வந்து விட்டேனே.. என்று ராமகிருஷ்ணர் தாசுக்கு நினைவு வந்தது.
அவசர அவசரமாக வீடு திரும்பி,
சீருடைஅணிந்து காவல் நிலையத்திற்கு வந்தார். இவர் போன நேரம்,
காவல் நிலைய உயர் அதிகாரி ஆங்கிலேயர், தன் அறையில் இருந்தார். அதிகாரியிடம் போய், தயவு செய்து, என்னை மன்னிக்க வேண்டும்.
இன்று நான் வேலை பார்க்கத் தவறிவிட்டேன்.
Read 10 tweets
Apr 9
நாளை ஸ்ரீ ராம நவமி..!

இப்போது நான் ஒரு ராம தரிசனம் பற்றிய கதை சொல்லப்போகிறேன்..!

இதை கேட்டாலே / படித்தாலே ஸ்ரீராமரை நேரில் தரிசித்த உணர்வு ஏற்படலாம் அல்லது ஸ்ரீராம லட்சுமணர்களையே தரிசிக்கவும்கூட செய்யலாம்..அவரவர் பக்தியை பொருத்தது..!

*ஸ்ரீராமஜெயம் 🙏..!!*
துளசிதாசருக்கு
உதவிய அனுமன்..!!

ஒருமுறை துளசிதாசர் ஆஞ்நேயரிடம் உங்களுக்கு ராம் - லட்சுமணரின் அனுக்கிரகம் கிட்டியது போல் எனக்கும் அவர்களின் தரிசனம் கிட்ட வேண்டும்..

அதற்கு நீங்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மனமுருகப் பிரார்த்தித்தார். ..!
துளசிதாசரின் வேண்டுகோளை ஏற்ற அஞ்சனை மைந்தன் அவரிடம், இதுதான் சித்ர கூடம்.. இந்த இடத்திற்கு ராமகிரி என்று பெயர்..!

ராமன் வனவாசம் செய்த இடம்..அங்கே பாரும் மந்தாகினி..இங்கே உட்கார்ந்து,ராமஜபம் செய்யும்..ராம தரிசனம்கிட்டும் என்று கூறினார்.!
Read 20 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(