சங்ககால உணவின் பண்பாடு!

#உணவு என்பதைப் பண்பாடு என்னும் முழுமையின் ஒரு
பகுதி எனக் கொள்வோமானால், அதனைக் குறைந்தது இரண்டு வகையான கண்ணோட்டத்துடன் அணுகலாம்.

பண்பாடு என்பது ஒரு சமூகம் அது வாழ்வதற்காக ஏற்படுத்திக் கொள்ளும் தகவமைப்பு முறை என்று அணுகுவது ஒருமுறை.
மாறாக, வாழ்வதற்கான அறிவு முறையின் வெளிப்பாடு என்று அணுகுவது மற்றொரு முறை.

சங்ககால உணவு முறையிலும், அதன் அடிசில் கலையிலும் தொடர்ச்சியான பண்பாட்டுப் பொருண்மைகள் ஒன்றன் பின் ஒன்றாகப் பரிணமித்து இறுதியில் மருதத்திணையில் அது அறுசுவை உணவாகப் பரிமாணம் பெற்றது.
தொடக்கத்தில் சமைக்காத பச்சை இறைச்சியைத் தின்ற #பச்சூன் (பசுமையான ஊன்: பெரும்பாண். 283) தொடங்கி,

காட்டில் இயற்கையாக எழுந்த தீயில் இறைச்சியை #வக்கி (வதக்கி: மலைபடு. 247-250) உண்ட பின்னர்,

நெருப்பைக் கண்டுபிடித்து அதில் சுட்டுத் தின்னும் முறையை உருவாக்கினார்கள் (புறம். 319: 8).
இதன் பின்னர் புழுக்கலும் (பெரும்பாண். 100), பொரித்தலும் (புறம். 379), சமைத்தலும் (அகம். 119) விரிவு பெற்றன.

மேற்கூறிய படிமலர்ச்சியின் ஊடாக, உணவின் பரிமாணம் தொடர்ந்து விரிவு பெற்றதோடு,

உண்ணும் முறையிலும் பரிமாணங்கள் பல்கிப் பெருகின.
சங்ககாலத் தமிழர்கள் உணவுப் பண்பாட்டை உணர்வும் அர்த்தமும் கொண்டதாக வளர்த்தெடுத்துள்ளனர்.

உணவை உடலோடும் சமூகத்தோடும் சேர்த்திருக்கின்றனர்.

#தொல்காப்பியர் மரபியலில் "மெய்திரி வகையின் எண்வகை உணவில் தொய்தியும் உரையார்” என்கிறார் (பொருள். 623). இவர் #எண்வகை உணவைக் குறிப்பிடுகிறார்.
உணவை ஐவகை உணவாகக் கூறுவது ஒரு மரபு.

பெருங்கதை - "ஐவேறு அமைந்த அடிசிற் பள்ளியும்” என்கிறது.

பிங்கல நிகண்டு- "கறித்தல், நக்கல், பருகல், விழுங்கல், மெல்லல்" என ஐவகை உணவைக் கூறுகிறது.

வடமொழியில் “பஞ்ச பஷய பரமான்னம்” எனக் கூறும் வழக்கு தமிழ் மரபை ஒத்தது (பெருமாள், அ.கா. 2012:4)
ஐவகை உணவு முறையை நடைமுறையில் உண்பன,
தின்பன, கொறிப்பன, நக்குவன, பருகுவன என்பார்கள்.

இந்தப் பாகுபாடு உணவின் தன்மை, உண்ணும் முறை, சுவை முதலானவற்றின் அடிப்படையில் உருவானது என்கிறார் அ.கா.பெருமாள் (2012: 4).
சங்க காலத்தில் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட வகைகளில் உணவை உட்கொண்டுள்ளனர் என்பதை பின்வருமாறு அறியலாம்.

இது மிகவும் கருத்தூன்றி அறியவேண்டிய ஒன்றாகும் (மணி, ஆ. 2019: 24).

1) #அருந்துதல் - மிகக் குறைவாக உட்கொள்ளுதல்

2) #உண்ணல் - பசிதீர உட்கொள்ளுதல்
3) #உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு நீரியல் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளுதல்

4) #குடித்தல் - திரவ உணவைச் (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாகப் பசிநீங்க உட்கொள்ளுதல்

5) #தின்னுதல் - தின்பண்டங்களை உட்கொள்ளுதல்

6) #துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்
7) #நக்கல் - நாக்கினால் துழாவி உட்கொள்ளுதல்

8) #நுங்கல் - முழுவதையும் ஒரே வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்

9) #பருகல் - திரவப் பண்டத்தைச் சிறுகக் குடிப்பது

10) #மாந்தல் - பெரு வேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல் (கள் மாந்துதல்)
11) #மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்

12) #விழுங்கல் - பல்லுக்கும் நாக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்

உணவின் இப்பண்பாட்டுப் பரிமாணங்கள் உணவை வெறும் உடலாற்றலுக்கான கூறாகப் பார்க்காமல், பண்பாட்டின் சிந்தனைக்குரிய கூறாகவும் வார்த்திருக்கின்றன

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தஞ்சை ஆ.மாதவன்

தஞ்சை ஆ.மாதவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ThanjaiMadhavan

Apr 12
பண்டைய பெருவழிகளும், வைகைப் பெருவழியும்...!

வழிகளைக் குறிப்பதற்கு இலக்கியங்களும், கல்வெட்டுகளும் பல்வேறு சொற்களைக் குறிப்பிடுகின்றன.

அவற்றில் அத்தம், நெறி, வழி, இட்டுநெறி, பெருவழி ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களிலும், காவியங்களிலும் பயின்று வருகின்றன.
சங்க இலக்கியத் திணைக்குடி வாழ்வில் தலைவியைக் காண #இரவுக்குறி செல்லும் குறிஞ்சி நிலத்தலைவன் சென்று வந்த வழி பற்றிக் குறிஞ்சித் திணைப் பாடல்கள் பேசுகின்றன.

முல்லை நிலத்து ஆயர்கள் கால்நடைகள் மேய்த்து வந்த வழியும், முல்லை மகளிர் தயிர் விற்கச் சென்ற வழியும்...,
மன்னர்கள் போர் முடித்து நாடு திரும்பும் தேர் வழியும் முல்லைப் பாடல்கள் பேசுகின்றன.

தலைவியும் தலைவனும் உடன் போக்குச் சென்ற அத்தமும், தலைவன் பொருள் தேடச் சென்ற சுர வழிகளும், மொழிபெயர் தேயத்து வழிகளும், உமணர்களும், வணிகச் சாத்துகளும் சென்ற வணிக வழிகளும்....
Read 10 tweets
Apr 11
A Thread on Standards of Moral Conduct...!

Early Tamil society had evolved some conception of true love and norms of moral conduct. The lapses and the protests they provoked reveal the ideals held in view.

The virtues of immaculate love and true partnership in life between...
...the husband and wife find their echo in several verses of #Narrinai. One of these states that even poison offered by a real lover would not be rejected: (Stanza 355).

In passing it may be mentioned that below lines bear a tinge of similarity with the precept in Kural-586. Image
Love of a high order which promotes unbounded courage and unselfish sacrifice was known and appreciated.
Read 20 tweets
Apr 10
தாலிகட்டும் வரலாறு...!

#தாலிகட்டுதல் என்பது தமிழர்களிடையே வழிவழியாகப் பின்பற்றப்பட்டுவரும் ஒரு மரபாகும்.

பழந்தமிழர்களிடையே தாலி கட்டும் வழக்கம் இருந்து வந்ததாகச் சங்க இலக்கியத்தில் சான்றுகளில்லை.

அகநானூற்றில் திருமண நிகழ்ச்சியினைப் பற்றிய செய்திகள் பாடல்களில் கூறப்பட்டுள்ளன
இதில் திருமணத்தில் அரிசி, உழுந்து கலந்த உணவு உறவினர்களுக்கு வழங்கப்பட்டது.

மணமேடை அலங்கரிக்கப்பட்டு, மணமகள் பூவும், நெல்லும் கலந்த நீரில் நீராட்டப்பட்டாள்.

இந்நிகழ்ச்சி மணமான மற்றும் குழந்தைப்பேறு பெற்ற பெண்களால் நடைபெற்றது என்பதனை பின்வரும் அகநானூற்றுப் பாடலால் அறியலாம். Image
திருமணம் காதல் திருமணம், பெற்றோர் கொடுக்க மணத்தல் என இருவகையாக நடைபெற்றது.

இரண்டு திருமணங்களிலும் தாலிகட்டும் வழக்கம் இருக்கவில்லை.

திங்களை ரோகிணி கூடும் நல்ல நாளிலேயே திருமணம் நடைபெற்றது.

பெற்றோரின் விருப்பப்படியே திருமணம் நடைபெற்றதற்குச் சான்றாக, பின்வருமாறு இருக்கின்றன. Image
Read 8 tweets
Mar 27
ஐந்திணை மாப்பிள்ளைகள்...!

பெண்ணுக்கு ஏற்ற மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பெண்ணிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது என்பதைத் தமிழிலக்கியங்களின் வாயிலாக அறியமுடிகிறது.

மாப்பிள்ளையின் ஆற்றலும் திறமையும் வெளிப்படத்தக்க போட்டிகளை நிகழ்த்தி அவற்றில் வெற்றிபெறும் மாப்பிள்ளையையே...
... தன் கணவனாகத் தெரிந்தெடுக்கும் வழக்கத்தைத் தமிழினத்துப் பெண்கள் பின்பற்றி வந்தனர்.

குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் எனும் ஐந்து நிலங்களில் வாழ்ந்த பெண்கள் தம் நில இயல்புக்கு ஏற்ற மாப்பிள்ளைத் தெரிவும் போட்டிகளையும் நிகழ்த்தினர்.
வேட்டைத் தொழிலை முதன்மையாகக் கொண்ட மலை நிலமாகிய குறிஞ்சித் திணையில் புலியை வாய்பிளந்து கொன்று,

அதன் பல்லைத் தாலியில் கோத்துக் கொணர்ந்த மாப்பிள்ளையைத் தன் கணவனாக அந்நிலத்துப் பெண் ஏற்றுக்கொண்டாள் என பின்வருமாறு சிறப்பாகக் குறிப்பிட்டனர்.
Read 15 tweets
Mar 25
இலக்கியங்கள் கூறும் பண்டைத் தமிழர்களின் நம்பிக்கைகள்...!

பண்டைக்காலம் முதல் மனிதன் இயற்கையோடியைந்து வாழ்ந்து வருகிறான். இயற்கையின் மாறுதலுக்கேற்ப மனித மனமும் மாறுபடுகின்றது.

இயற்கையோடியைந்த மனித வாழ்வில் நம்பிக்கைகள் தோன்றலாயின.
பொ.பி. 6-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த #ஆசாரக்கோவை மூலமும், சங்க இலக்கியங்கள் மூலமும் பண்டைத் தமிழரின் நம்பிக்கைகளைப் பற்றி அறியமுடிகிறது.

1) தொல்காப்பியத்தில் 'நாளும் புள்ளும் பிறவற்றினி மித்தமும்' (தொல். பொருள். 91) எனக் குறிக்கப்பட்டுள்ளது.
#புள் என்பது முதலில் பறவையையும், பின்னர் சகுனத்தையும் குறிப்பனவாக அமைந்துள்ளதை #வாய்ப்புள், #பறவாப்புள் எனக் குறிப்பிடுவதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

2) #கூகை அலறினால் சாவு வரும் என்ற நம்பிக்கையினைப் புறநானூற்றில் காண்கிறோம்.

'அஞ்சுவரு குராற் குரலுந் தூற்றும்' (புறம். 280)
Read 12 tweets
Mar 24
கொலை - வீரத்தின் வெளிப்பாடு!

பண்டைக் காலங்களில் (சங்க இலக்கியங்களில், பின் அதையொட்டிய காலங்களில்) கொலை மனித இனத்தின் வீரத்தின் வெளிப்பாடாகக் காணப்படுகின்றது.

" பெருமையும் உரனும் ஆடூஉ மேன" என்று பழந்தமிழ் இலக்கணம் ஆடவனுக்கு இலக்கணம் காட்டுகிறது.
இந்தப் பெருமையும் நெஞ்சுரனும் மனிதக் கொலைகள் மூலமே வெற்றியாகவும், விழுப்புண்ணாகவும் மக்களிடம் வெளிப்பட்டன.

இங்கு மனிதக் கொலைகளே முதன்மை பெற்றன. நாடு பிடிக்கும் அரசியல் நோக்கங்களுக்காக நடைபெறும் போர்களில் மனித உடல்களே மன்னனுக்குக் கவசம்.
எதிரிகளில் எத்தனை பேர் இறந்துபட்டனர், தன் படைவீரர்களில் எத்தனை பேர் மடிந்தனர் என்பதை வைத்தே நடைபெற்ற போரை மதிப்பிட்டனர்.

அறநெறிக் காலங்கள் என்று குறிப்பிடப்பட்ட இந்தக் காலங்களிலெல்லாம் மனித உயிர்கள் வீரத்தின் அடையாளங்கள். இதைச் சமூகம் அன்று அங்கீகரித்திருந்தது என்பது வெளிப்படை.
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(