🔥🌀🐚
பொறுமையாக படியுங்கள் அன்பர்களே... 🙏

#பாஞ்சாலியின்_பாத அணிகளை கண்ணன் சுமந்தது ஏன்?

#குருக்ஷேத்திரத்தில்ந பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒன்பது நாள்கள் முடிந்துவிட்டன. Image
ஒன்பது நாள்கள் கடந்தும் பாண்டவர்களை வீழ்த்த முடியவில்லையே!' என்று நினைத்த துரியோதனன், மகாரதராக இருந்த பீஷ்மரிடம் தான் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டான். தாத்தா பீஷ்மர், பாண்டவர்களை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியுடன் போரிடவில்லை' என்றே நினைத்தான். Image
தன் எண்ணத்தை மிகக் கோபத்துடன் பீஷ்மரிடமும் தெரிவித்தான்.

#துரியோதனின் கடுமையைக் கண்ட பீஷ்மரும், அதே கடுமையுடன் மறுநாள் போரில் பாண்டவர்களை அடியோடு வீழ்த்துவதாக சபதம் செய்தார். ஆனால், துரியோதனனோ, 'பாண்டவர்களை வீழ்த்துவேன் என்று சொல்லாதீர்கள். Image
அவர்களைப் போரில் கொல்வேன்'' என்று சொல்லுங்கள்' என்றான். செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க வேண்டுமே என்பதற்காக பீஷ்மரும், ``அப்படியே ஆகட்டும்'' என்று கூறிவிட்டார். அதே தருணத்தில் பாண்டவர்களின் பாசறையில் இருந்த கண்ணன் லேசாகச் சிரித்தான். Image
🌀#அவனுடைய சிரிப்பின் காரணம் அங்கிருந்த பாண்டவர்களுக்குப் புரியவில்லை.

#சற்றைக்கெல்லாம், பீஷ்மர் செய்த சபதம் பாண்டவர்களுக்குத் தெரியவந்தது. அர்ஜுனன் உட்பட அனைவருக்கும் கலக்கம் ஏற்பட்டுவிட்டது. பிதாமகர் பீஷ்மர் எவராலும் வெற்றி கொள்ள முடியாதவர் ஆயிற்றே. Image
நன்றிக் கடனுக்காக அவர் துரியோதனன் பக்கம் இருந்தாலும், தர்மம் வெல்லும்' என்று நமக்கு ஆசி கூறியவர் ஆயிற்றே. அவரே இப்போது நம்மை ஒழிப்பதாக சபதம் செய்திருப்பதால், நிலைமை நமக்கு பாதகமாகத்தானே இருக்கும்'என்று நடுங்கினார்கள். 🙏🏼 Image
🏹#பாண்டவர்களின் இந்தச் சோர்வையும் கலக்கத்தையும் கண்ட பாஞ்சாலி, மிகவும் கவலை கொண்டாள். இனி தன்னுடைய சபதம் என்னாவது? போரின் திசையே மாறிவிடும் போலிருக்கிறதே. இந்தக் கண்ணன் என்ன ஆனார்... அவருக்கு இதெல்லாம் தெரியுமா?' Image
இப்படியெல்லாம் பாஞ்சாலி நினைத்துக்கொண்டிருந்தபோதே, கண்ணன் அங்கே வந்து சேர்ந்தான். 🙏🏼

💃#பாஞ்சாலியைப் பார்த்து, ``சத்தம் செய்யாமல் என் பின்னால் வா’’ என்று மிக மெல்லிய குரலில் கூறி, அந்த நள்ளிரவில் அவளை எங்கேயோ அழைத்துச் சென்றான். Image
போர்க்களத்தினூடே கண்ணன் நடந்து சென்றுகொண்டிந்தான். ரணகளமாக மாறியிருந்த யுத்தபூமியில் மரண அவஸ்தையில் வீரர்கள் எழுப்பிய அவலக் குரல்களின் ஒலி, அந்தப் பிரதேசத்தையே அமானுஷ்யமாக மாற்றியிருந்தது. ஆனாலும், Image
கண்ணன் உடனிருக்கிறான் என்ற தைரியத்தில் பாஞ்சாலிக்குச் சிறிதும் அச்சம் ஏற்படவில்லை. எதையும் பொருட்படுத்தாமல் கண்ணனின் பின்னால் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தாள்.

#சற்று_விலகியதும் மற்றொரு சத்தம் கேட்டது. அரசகுலத்தில் பிறந்தவள் ஆதலால், Image
பாஞ்சாலி அணிந்திருந்த விலையுயர்ந்த காலணிகள் எழுப்பிய ஓசைதான் அது. திடீரென்று ஓரிடத்தில் நின்ற கண்ணன், பாஞ்சாலியைப் பார்த்து, ``சகோதரி, உன் காலணிகள் மிகவும் சத்தமெழுப்புகின்றன. அவற்றைக் கழற்றிப் போடு’’ என்று கூறினான். பாஞ்சாலியும் அப்படியே காலணிகளைக் கழற்றி வீசினாள். Image
பின்னர், தொலைவிலிருந்த ஒரு கூடாரத்தைச் சுட்டிக் காட்டிய கண்ணன், ``பாஞ்சாலி, நீ எவரும் அறியாமல் அந்தக் கூடாரத்துக்குச் செல். உள்ளே குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருக்கும் மனிதரின் காலில் விழு. மற்றபடி ஏன், எதற்கு என்றெல்லாம் கேட்காதே’’ என்றான். Image
பாஞ்சாலியும் கண்ணன் சொன்னபடியே கூடாரத்துக்குள் சத்தம் செய்யாமல் நுழைந்தாள். அங்கே ஒரு மனிதர் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார். அவர் திரும்பிப் பார்ப்பதற்குள் அவருடைய காலில் விழவேண்டும் என்ற வேகத்துடன் அவருடைய கால்களில் விழுந்தாள் பாஞ்சாலி. Image
யாரோ ஒரு பெண் தன் காலில் விழுவதைக் கண்ட பீஷ்மர், ``தீர்க்கசுமங்கலியாக இரு பெண்ணே’’ என்று வாழ்த்தினார். பின்னர் அவளை எழுந்திருக்கச் சொன்னதுடன், அவள் யாரென்றும் கேட்டார்.

பாஞ்சாலி எழுந்தாள். அவளைப் பார்த்ததுமே பீஷ்மர் திடுக்கிட்டார். போயும் போயும் இவளையா வாழ்த்தினோம்?' Image
என்று தனக்குள் மருகினார். நாளைய போரில் யாரை ஒழித்துக்கட்டப்போவதாக துரியோதனனுக்கு வாக்களித்திருந்தாரோ, அந்தப் பாண்டவர்களின் பத்தினியை, தீர்க்கச் சுமங்கலியாக இரு' என்றல்லவா வாழ்த்திவிட்டார். தெய்வம் தன்னை மிகவும் சோதிப்பதாக எண்ணி வருந்தினார் பீஷ்மர். Image
💃#பாஞ்சாலியைப் பார்த்த பீஷ்மர், ``அம்மா பாஞ்சாலி, பிணங்கள் குவிந்திருக்கும் இந்த யுத்தக் களத்தினூடே நீ தனித்தா வந்தாய்? உன்னை யார் இங்கே அழைத்து வந்தார்கள்?’’ என்று கேட்டார். அப்போது கூடாரத்தின் வாயிலில் ஏதோ நிழல் அசைவதுபோல் தெரிந்தது. Image
அங்கே கண்ணன் நின்றுகொண்டிருந்தான். பீஷ்மருக்கு என்ன நடந்திருக்கும் என்பது புரிந்துவிட்டது.

``வா கண்ணா, வா. இது உன் வேலையாகத்தான் இருக்கும் என்று நான் நினைத்தேன். இது என்ன கையில் ஏதோ துணிமுடிச்சு?’’ என்று கேட்டார். Image
``ஓ, இதுவா? பாஞ்சாலியின் பாதணிகள்தாம் இவை. அதிக ஓசை எழுப்பவே கழற்றச் சொன்னேன். அதைத்தான் என் உத்தரியத்தில் முடிந்துவைத்திருக்கிறேன்’’ என்றான்.

கண்ணன் சொன்னதுதான் தாமதம்... திரௌபதி பாய்ந்து சென்று அதைப் பிடுங்கினாள். Image
``கண்ணா! இது என்ன சோதனை... என் காலணிகளை நீ சுமப்பதா?என்னை மகாபாவியாக்க வேண்டுமென்பதுதான் உன் எண்ணமா?’’ - அவள் கண்கள் கண்ணீரை உகுத்தன.

``தங்கையின் செருப்பை அண்ணன் தூக்குவது தவறல்ல. பேசாதிரு. பெரியவர் பீஷ்மரிடம் உன் கோரிக்கையைச் சொன்னாயல்லவா..." என்றான் கண்ணன். Image
பீஷ்மர் குறுக்கிட்டு, ``மாயவனே! அவள் ஏதும் என்னிடம் சொல்லவில்லை. ஆனால், நான் என்ன சொல்ல வேண்டுமென்று நீ தீர்மானித்திருக்கிறாயோ அதை நான் அந்தப் பெண்ணுக்கு ஆசிமொழியாகச் சொல்லிவிட்டேன். நீ பொல்லாதவன். உன்னை அபயம் என்றெண்ணியிருப்போரைக் காக்க, Image
அவர்களின் பாதணிகளைக்கூட தாங்கிக்கொண்டிருப்பாய். பாண்டவர்களுக்கு உன் அருள் இருக்கும்போது இந்த பீஷ்மனால் அவர்களை என்ன செய்துவிட முடியும்? கோபாலா, நீ யார் என்பதை நன்றாக அறிந்தவன் நான், ஏதோ உணர்ச்சிவசத்தில் என்னால் எல்லாம் ஆகுமென்று நினைத்துவிட்டேன். அந்தத் தவற்றைச் சுட்டிக்காட்ட, Image
பக்தர்களை ரட்சிக்கும் பக்தவத்சலனாக இப்படி பாஞ்சாலியின் பாதணிகளைச் சுமந்து வந்து நிற்க வேண்டுமா?’’என்று வினவினார்.

🔥#பிதாமகரின் கண்களிலும் நீரருவிகள் கொப்பளித்தன. மறுநாள் போரில் அந்தப் பழுத்த பழம் அம்புப் படுக்கையில் விழுந்ததைத்தான் பாரதம் சொல்லுமே..?!

சர்வம் கிருஷ்ண மயம் ImageImage

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Chowkidar Kaalabala🇮🇳

Chowkidar Kaalabala🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

May 19
1991ம் ஆண்டு மேமாதம் 21 இரவு 10.25 மணிக்கு அன்றைய பாரத பிரதமர் ராஜிவ் காந்தி குண்டு வெடிப்பின் மூலம் படுகொலை செய்யப்பட்டபோது அவர் அணிந்திருந்த லோட்டோ ஷூக்கள் மூலமே அவரது உடல் அடையாளம் காணப்பட்டது.

ஜூன் 11 வரை அதாவது 21 நாட்களாக கண்களை கட்டி காட்டில் விட்டது போல
துப்பு துலக்க முடியாமல் சிபிஐ தலையை பிய்த்து ஒரு வழியாக கொலைக்கு முன்னர் எடுக்கபட்ட புகைப்படம் ஒன்றை கைப்பற்றி நூலின் ஒரு முனையை மெல்ல பிடித்தது.

பின்னர் சரசரவென நூலின் ஒரு முனையை பிடித்து இழுக்க ஒவ்வொரு மீன்களாக சிக்க தொடங்கியது.
நேரடி குற்றவாளிகள் முதல் குற்றத்துடன் நேரடி தொடர்பில் இல்லாத இரண்டாம் குற்றவாளிகள் வரை மொத்தம் 41 பேர் சுமத்தப்படுகின்றனர்.

புலனாய்வு செய்து கைது நடவடிக்கையின் பொருட்டு சுற்றி வளைக்கும் தருணங்களில் 15 தற்கொலைகள் வேறு.

நன்கு கவனியுங்கள் இறந்த இந்த குற்றவாளிகளின் வாக்குமூலம்
Read 21 tweets
May 18
கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் எனும் இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற
#கிருஷ்ணர் கோவில் இதுவாகும்.

பூலோக வைகுண்டமாகவும் பூமியில் இறைவன் இருக்கும் இடமாகவும் கருதப்படும் அற்புத திருத்தலம் இது. ImageImageImageImage
கிருஷ்ண அவதாரத்திற்கு முன்பே தன் தாய் தந்தையருக்கு இக்கோவிலில் குழந்தை வடிவத்தில் கிருஷ்ணன் காட்சி கொடுத்த சிறப்பு இக்கோவிலுக்கு உள்ளது.

108 திவ்யதேசங்கள் வரிசையில் இந்த கோவில் சேராது என்றாலும் வைணவர்களால் பெரிதும் வணங்கப்பட்டு வரும் இந்திய அளவில் மிகப்பெரிய வைணவஸ்தலம் இது. Image
தேவ சிற்பியான விஸ்வகர்மாவால் குருவாயூர் கோவில் உருவாக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

குரு மற்றும் வாயுவால் பிரதிஷ்டை ஆனதால் குருவாயூர் என பெயர் பெற்றது.
மும்மூர்த்திகளின் அனுக்ரஹம் இந்த விக்கிரகத்துக்கு உண்டு என்பதால் Image
Read 21 tweets
May 17
ஞானவாபி மசூதி கிணற்றில் லிங்கம்😢😢
அடப்பாவி ஔரங்கசீப் கொள்ளையடிக்க வந்த உன்னையா பக்கம் பக்கமாய் படித்து மதிப்பெண்கள் எடுத்தேன்...

உனக்கு தேவையான தங்க வைர பொக்கிஷங்களை எடுத்துக்கொண்டு எங்கள் பொக்கிஷத்தை..அந்தக் கோவிலை விட்டு வைத்திருக்க கூடாதா???? Image
எம் மூதாதையர் எப்படி அழுதனரோ...எவ்வளவு பேர் உயிரை‌ விட்டனரோ...கிணற்றுக்குள் மூச்சுத்திணறிக் கொண்டிருப்பது எங்கள் முன்னோரின் உயிர்க்காற்று...

எவ்வளவு வைராக்கியத்துடன் அவர்கள் உயிரை விட்டிருந்தால் இத்தனை வருடம் கழித்து அவர் நம் கைகளுக்கு கிடைத்திருப்பார்... Image
பொன்னும் வைரமும் மணியும் பவளமும் முத்தும் வில்வமும் துளசியும் எண்ணாயிரம் மலர்களும் கொண்டு விதவிதமாய் அலங்கரித்து...பூஜித்த எங்கள் இறைவனுக்கு 356 ஆண்டுகள் ஒரு‌ வில்வம் கூட படைக்காமல் பாழுங்கிணற்றில் விட்டோமே!!!! ImageImage
Read 6 tweets
May 16
💖 #செந்தூரபூவே செந்தூர பூவே...

சுதந்திர இந்திய வரலாற்றில் மே மாதம் 16 ஆம் தேதியான இன்று மிக முக்கியமானதொரு நாள். சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற நந்நாளில் தான் #திரு_நரேந்திரமோதியின் தலைமையில், முதன் முதலில் தனிப்பெரும்பாண்மையுடன் இந்திய மத்திய அரசின் பொறுப்பை ஏற்றது. Image
இவர் பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாம் தலைமுறை தலைவர்.

முதல் தலைமுறை தலைவராக திரு.வாஜ்பாய் தலைமையில் அமைந்தது.

எத்தனையோ இடர்பாடுகள்...... எத்தெத்தனையோ எதிர்ப்புகள்..... இன்றுவரை சுணங்கவில்லை அவர். தலை தாழ்ந்து நின்ற இந்தியாவை பல துறைகளில் தலை நிமிர செய்தவர் இவர். Image
அதில் மிக முக்கியமான ஒன்று நமது இந்திய ராணுவம்.
இந்த அவனியில் அதற்கு நிகர் எவருமே இல்லை. 1962 களிலேயே சீனாவை கதிகலங்க செய்தவர்கள் அவர்கள். மேஜர் ஷைத்தன் சிங் ஒருவர் போதும் நமது எல்லையில் உள்ள ராணுவத்தினரின் பெருமையை பறைசாற்ற.... Image
Read 24 tweets
May 16
இது ஒரு வித்தியாசமான சாதனை

ஒருநாள் காலையில் ஒரு பெண் மணி ஆட்டோவில் ஏறி, "கிருஷ்ணா நகர் போப்பா" என்றாள். திரும்பி பார்த்த ஆட்டோ டிரைவர் தாஸ், "அடச்சீ..நீயா? எறங்கு. காலங்காத்தால சாவுகிராக்கி" என்றான்.
அவள் கலங்கிய கண்களுடன் இறங்கி நடந்தாள். காரணம் அவள் ஒரு திருநங்கை.

சிலகாலம் கழித்து அந்த ஆட்டோ டிரைவர் தாஸ் தன் மகளின் அட்மிஷனுக்காக பெண்கள் கல்லூரி சென்றான். "மேடம், நான் மிகவும் ஏழை. தயவுசெய்து என் மகளுக்கு அட்மிஷன் கொடுங்க" என்று கெஞ்சினான்.
"நிச்சயம் இந்த சாவுகிராக்கி உன் மகளுக்கு அட்மிஷன் கொடுக்கும்" என்று திரும்பினாள். அதிர்ந்து போனான் தாஸ். அன்று ஆட்டோவில் ஏறிய அதே திருநங்கை பிரின்ஸிபால் சீட்டில் அமர்ந்திருந்தாள்.

"என்னை மன்னிச்சிடுங்க மேடம்" என்று கையெடுத்து கும்பிட்டான்.
Read 4 tweets
May 16
சுதந்திர போராட்ட வீரர்
அ.வைத்தியநாத அய்யர் பிறந்த தினம் ..

1890 இல் புதுக்கோட்டையில் அருணாசலம் அய்யருக்கும் , லக்ஷ்மி அம்மையாருக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவர். 3 ஸஹோதரர்கள் 4 சகோதரிகள் தந்தை புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் கணித ஆசிரியர் ஒய்வு பெற்றபின் மதுரைக்கு மாற்றம்.
வைத்தியநாத அய்யர் மதுரைக் கல்லூரியிலும் , பிரசிடன்சி கல்லூரியிலும் படித்தவர் , திருச்சி எஸ் பி ஜி ஹைஸ்கூல், மசூலிப்பட்டினம் ஹிந்து ஹைஸ்கூலில் ஆசிரியர் பணி . 1912இல் வக்கீல் தொழிலை ஆரம்பித்தார் .
1922இல் வெற்றிகரமான வக்கில் என்று பெயர் பெற்றிருந்தும் தேசத்துக்கு ஸேவை செய்யத் தொடங்கிய ஐயர். கதர் ஆடை நூற்பதை புகழ் பெற்ற வக்கீலாக இருக்கும் போதிருந்தே தொடங்கியவர் . பாரதியின் பாடல்கள்தான் தன்னை தேஸ சேவைக்கு இழுத்தது என்கிறார் ஐயர்.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(