இந்த ஊர்ல #சிவாலயம் 
எங்கே இருக்கு?'' கேட்டார் பெரியவா

இந்தக் கேள்விக்கு, கூட்டத்தில் எவரிடம் இருந்தும் பதில் இல்லை.

அவர்களில் பழுத்த பழமான ஒரு முதியவர் மட்டும், 'இங்கே ஒரு பெருமாள் கோயில் இருக்கு. Image
அதுபோக, மாரியம்மன் கோயிலும் அய்யனார் கோயிலும் உண்டு. ஊர் எல்லையில் ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு.
அவ்வளவுதான். மத்தபடி இங்கே சிவன் கோயில் எதுவும் இருக்கிறதா தெரியலையே?'' என்றார். 90 வயது மதிக்கத்தக்க அந்தப் பெரியவருக்கே சிவாலயம் குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை என்றால், மற்றவர்களுக்குத் தெரிந்திருக்க வழி இல்லையே.
மகா பெரியவா மறுபடியும் ஏதோ சைகையால் கேட்டார்... 'மேல் கோடியில பெருமாள் கோயில் இருந்தா, கீழ்க் கோடியில சிவன் கோயில் இருந்திருக்கணுமே?''
நிச்சயம் இருந்திருக்கும். ஆனால், தற்போது அங்கே சிவாலயம் இல்லை. முன்னொரு காலத்தில் இருந்ததா என்றால், அதுகுறித்தும் அந்த ஊர்க்காரர்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. அனைவரும் மௌனமாக இருந்தார்கள்.
அந்த நேரத்தில் ஓர் இஸ்லாமிய தம்பதி அங்கே வந்தனர். தன்னை லத்தீஃப் பாய் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த இஸ்லாமிய அன்பர், தன் மனைவியின் பெயர் மெகருன்னிசா என்றும் தெரிவித்தார்.
தாம் கொண்டு வந்திருந்த இரண்டு சீப்பு பேயன் பழங்களையும், ரோஜாப் பூக்களையும் மகாபெரியவா முன் சமர்ப்பித்தார்.
அவர்களை தலை முதல் பாதம் வரை ஏற இறங்கப் பார்த்தது நடமாடும் தெய்வம். கருணை மிகுந்த அந்தப் பார்வையில் மெய்ம்மறந்து போனார்கள் அந்த இஸ்லாமிய தம்பதியர். ஒருவாறு சுதாரித்துக்கொண்டு, சிலிர்ப்பான அந்தத் தருணத்தில் இருந்து மீண்டு, லத்தீஃப் பாய் பேசத் தொடங்கினார்.
அற்புதமான ஒரு தகவலை விவரித்தது அவரது பேச்சு.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால், அங்கே சிவன் கோயில் ஒன்று இருந்திருக்கிறது.
காலமாற்றத்தில் கோயில் சிதிலமாகி, மண்ணுக்குள் புதையுண்டு போனது. கோயில் இருந்த இடமும் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டு, பலப் பல கைகள் மாறி, இப்போது லத்தீஃப் பாயின் வசம் இருக்கிறது.
'எங்க வாப்பா பள்ளிவாசல் நிலங்களைக் கவனிச்சுக் கும்போது, கூடவே கோயில் நிலங்களையும் குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்தாக. ஒரு மரக்கால்கூட குறையாம அளந்து கொடுப்பாக.
'சிவன் சொத்து குலம் நாசம்’னு அவுகளுக்கு இருந்த அதே நேர்மையையும், நல்ல எண்ணத்தையும், புத்தியையும் எனக்கும் கொடுத்திருக்கான் இறைவன். ஆனாலும் என்ன... எனக்குப் பொறந்த ஒரு பெண் பிள்ளை யும் மன வளர்ச்சி இல்லாம இருந்து, பத்து வருஷத்துக்கு  முன்னாடி இறந்தும் போச்சு.
சரி... நாம அறிந்தோ அறியாமலோ பாவம் செஞ்சிருக்கோம்போல; அதனால்தான் அல்லா நமக்கு இப்படியரு தண்டனையைக் கொடுத் திருக்காருன்னு சமாதானம் பண்ணிக்கிட் டோம். காலமும் அப்படியும் இப்படியுமா ஓடிப் போயிடுச்சு. நேத்திக்கு கொல்லைப்பக்கம் மண்ல வேலை செஞ்சுட்டிருந்தேன்.
அப்ப... மண்வெட்டி ஏதோ கல்லுல பட்ட மாதிரி 'ணங்’குனு ஓசை கேட்டுச்சு. கவனமா மண்ணை விலக்கிப் பார்த்தால்... பெரிய சிவலிங்கம்! ராத்திரி முழுக்க உறக்கம் வரல்லே சாமி! 'அல்லா... இப்ப என்ன பண்றது!’ன்னு புரியாம, விசனத்தோட உட்கார்ந்திட்டிருந்தோம்.
விடிஞ்சதும் தான், சாமி இங்கே வந்திருக் கிறதா பக்கத்துல இருந்த ஜனங்க பேசிக்கிட்டாங்க. உடனே இங்கே ஓடி வந்துட்டோம். இதுக்குமேல நான் என்ன செய்யணும்னு சாமி தான் வழி காட்டணும்.
மனசார என் நிலத்தை எழுதித் தர்றேன். இதுக்காக எனக்கு பணம், காசு எதுவும் வேணாம். முன்னே இருந்த மாதிரியே அங்கே சிவன் கோயில் கட்டிக்கலாம்.
ஊர் ஜனங்களுக்கு அது பயன்பட்டுதுன்னா, அதனால ஊர் ஜனங்க சந்தோஷப்படுவாங்கன்னா, அதுவே அல்லாவையும் சந்தோஷப்படுத்தும்!'' என்று நெகிழ்ச்சியோடு, கண்ணீர் மல்கப் பேசி முடித்தவர், அப்படியே இன்னொரு காரியத்தையும் செய்தார்.
''இந்தாங்க, கோயில் கட்ட எங்களோட காணிக்கையா நூத்தியரு ரூபாய். முதல் வரவா இதை வாங்கிக்குங்க!' என்று வெற்றிலை பாக்குத் தட்டில் வைத்துக் கொடுத்தார். அங்கிருந்த அனைவருக்கும் உடம்பு சிலிர்த்துப் போட்டது.
அதுவரை மௌனமாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த மகா பெரியவா, புன்னகையோடு சைகையால் அந்த இஸ்லாமிய அன்பரை ஏதோ கேட்டார்.
அது அவருக்குப் புரியாமல் போகவே, ஒரு சிலேட்டும் பலப்பமும் கொண்டு வந்து மகாபெரியவாளிடம் தந்தார்கள். அவர் சிலேட்டில் எழுதிக் காண்பித்தார்... 'மார்க்கக் கடமையை முடித்துவிட்டீர்களா?’ என்று.
படித்துப் பார்த்த இஸ்லாமிய அன்பர், ''இன்னும் இல்லே சாமி! அதுக்கான பண வசதியை அல்லா இன்னும் எங்களுக்குக் கொடுக்கலை. எத்தனையோ வருஷம் முயற்சி பண்ணியும் மக்கா- மதீனா போகும் பாக்கியம் இன்னும் வாய்க்கலை'' என்றார் கண்ணீர் மல்க.
உடனே பெரியவா, வைத்தியநாதன் நின்றிருந்த பக்கமாகத் திரும்பினார். ''இத்தனை உசத்தியான மனுஷர் நிலத்தைத் தரேன்கிறார். அவாளுக்கு நாம எந்த ஒத்தாசையும் செய்ய வேண்டாமா?'' என சைகையால் கேட்டார். தொடர்ந்து, என்ன செய்ய வேண்டும் என்பதையும் சைகை யாலேயே உத்தரவு பிறப்பித்தார்.
பெரியவாளின் விருப்பத்தை அப்படியே கூட்டத்தாரிடம் எடுத்துச் சொன்னார் வைத்தியநாதன்.

அவ்வளவுதான்... ஒட்டுமொத்த ஊரும் சேர்ந்து ஒரே குரலில் ஒப்புக்கொண்டது... ''அவங்க புனித யாத்திரை போய்வர ஆகற செலவு மொத்தமும் நம்மளோடது!''
அதைக் கேட்டு இஸ்லாமிய தம்பதிக்கு மனம்கொள்ளா மகிழ்ச்சி! அவர்களுக்கு மட்டுமில்லாமல், அங்கிருந்த எல்லோருக்குமாக, கை தூக்கி ஆசீர்வாதம் செய்தது மானுட தெய்வம்.
பிறகு, மெள்ள எழுந்த மகாபெரியவா, தூணில் சாத்தியிருந்த தண்டத்தை கையில் எடுத்துக்கொண்டார். அப்படியே நடந்து வந்து பல்லக்கில் ஏறி உட்கார்ந்துகொண்டார். மீண்டும் ஊர்க்காரர்களைப் பார்த்து ஒரு புன்னகை; கரம் உயர்த்தி ஆசீர்வாதம்!

பரிவாரங்கள் பின்தொடர, பல்லக்குப் புறப்பட்டது.
ஊர்வலத்துடன் வந்த அன்பர் மகாலிங்கம் சொன்னார்... 'எனக்கு இப்பத்தான் தெரியுது... மகாபெரியவா ஏன் திடீர்னு இந்த ஊருக்கு வர முடிவு பண்ணினார்னு!'' காரணம் இன்றிக் காரியம் இல்லையே.

மகா பெரியவாளின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு காரணம் உண்டு !!!

ஜெய ஜெய சங்கர 🙏🇮🇳
ஹர ஹர சங்கர 🙏🇮🇳🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

May 29
கேரளா பல்லசேனா ஶ்ரீ மீன்குளத்தி அம்மன் திருக் கோயில்
இத்திருத்தலம் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம்பசுமையான அழகிய நெல் வயல்களுக்கு மத்தியில்பல்லசேனா எனும் இடத்தில் அமைந்துள்ள்து.
🇮🇳🙏1 Image
பல்லசேனா கிராமம் பால்காட் நகரத்திலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது. திருச்சூர் 56 கி.மீ. கொடுங்கல்லூர் 93 கி.மீ. சோட்டானிக்கரை 120 கி.மீ.பொள்ளாச்சி 42 கி.மீ. கொயம்புத்தூர் 68 கி.மீ. தூரம் உள்ளது.   🇮🇳🙏2
இக்கோயில் மண்ணடியர் குடும்பத்தால் நிறுவப்பட்டது. இந்தக் குடும்பம் தமிழ்நாட்டின் சிதம்பரத்தைச் சேர்ந்தது. தொழில் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து, கேரளாவுக்கு குடிபெயர முடிவு செய்தனர். கேரளாவுக்கு  கோயிலுக்குச் சென்றனர். 🇮🇳🙏3
Read 27 tweets
May 28
காஞ்சி மகா பெரியவர் அற்புதங்கள்

காஞ்சிப் மகா பெரியவர் கனவில் மாங்காடு காமாட்சி அம்மன் தோன்றி அற்புதம் செய்தாள். மாங்காடு காமாட்சி அம்மன் ஆலயம் புதுப்பிக்கப்படுவதற்கும், அருகேயே ஒரு வேத பாடசாலை ஆரம்பிப்பதற்கும் காஞ்சிப் பெரியவர் காரணமாக இருந்தார்.
அது 1952-&ம் வருஷம். ஒவ்வொரு வியாழக்கிழமையும், பெரியவாளைப் பார்க்க லட்சுமி நாராயணன் என்பவர் காஞ்சிபுரம் செல்வது வழக்கம்.
அப்படி ஒரு வியாழக்கிழமையன்னிக்கு வந்தப்போது, ”நேத்திக்கு எனக்கு ஒரு சொப்பனம். ‘பஞ்சாக்னி ஜுவாலையால எனக்கு ஒடம்பெல்லாம் எரியறது. இங்கே புனருத்தாரணம் பண்ணணும்’னு அம்பாள் சொப்பனத்துல பேசினா.
Read 20 tweets
May 28
வீர் சாவர்க்கர் பிறந்த தினம் இன்று...

பூரண அரசியல் சுதந்திரத்தை 1900லேயே துணிவுடன் பிரகனபடுத்திய முதல் அரசியல் தலைவர்...

1905ல் அந்நியத் துணிகளை தீரமுடன் பகிஷ்க்கரித்த முதல் அரசியல் தலைவர். Image
இந்திய நாட்டின்  சுதந்திரத்திற்காக  1906ல் சர்வதேச  அளவில்  புரட்சி  இயக்கத்தை  ஏற்பாடு செய்த முதல் இந்தியர்.
தேசவிடுதலைக்கான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்ததினால் சட்டம் பயின்று அதற்க்கான தேர்வுகளில் தேர்ச்சியுற்றும் ஆங்கிலேய வழக்குரைஞர் அவையில் (பார் கவுன்சில்) சேர அனுமதி மறுக்கப்பட்ட முதல் இந்திய மாணவர்.
Read 10 tweets
May 28
மூத்த விநாயகர்... ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சிவசூரியன்...!!

அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில்...!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கூழையகவுண்டன்புதூர் என்னும் ஊரில் அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

🇮🇳🙏1 Image
கோயம்புத்தூரில் உள்ள கூழையகவுண்டன்புதூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இக்கோயில் உள்ளது.

இக்கோயிலில் மூலவரான மொக்கணீஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

🇮🇳🙏2
கொள்ளு வைக்கும் பைக்கு 'மொக்கணி" என்று பெயர். எனவே இத்தல சிவன் 'மொக்கணீஸ்வரர்" என்று பெயர் பெற்றார்.

இக்கோயிலில் அம்பிகை மீனாட்சி தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் காட்சியளிக்கிறாள்.

இக்கோயில் சுந்தரரால் பாடல் பெற்ற தேவார வைப்புத்தலம் ஆகும்.

🇮🇳🙏3
Read 9 tweets
May 27
ஆசார்யா காஞ்சிபுரத்துல இருந்த காலகட்டம் அது. 

ஒருநாள் ராத்திரி வழக்கமான மடத்துக் காரியங்கள் எல்லாம் முடிஞ்சு எல்லாரும் தூங்கப் போறதுக்கு தயாராகிண்டு இருந்த நேரம் அது. Image
கிட்டத்தட்ட பத்தரை.... பதினொரு மணி இருக்கும் அந்த சமயத்துல ரொம்ப தொலைவுல இருக்கற ஒரு ஊர்ல இருந்து வயசான பெண்மணி ஒருத்தர். பரமாசார்யாளை தரிசனம் பண்ண வந்தா.

பரமாசார்யாள் அந்தப் பெண்மணிக்கு ஆசிர்வாதம் பண்ணிட்டு., மடத்துல கைங்கர்யம் செஞ்சுண்டிருந்த ஒருத்தரை கூப்பிட்டார்.
"எனக்கு ரவா தோசை திங்கணும் போல இருக்கு... பண்ணித் தர்றியா..?" அப்படின்னு கேட்டார்.

எல்லாருக்கும் ஆச்சரியமான ஆச்சர்யம்...

அமிர்தமாவே இருந்தாலும் ஆசைப்படாத பெரியவா., ரவாதோசை வேணும்னு கேட்கறார். அதுவும் எனக்கு திங்கணும்போல இருக்குன்னு சொல்றார்.
Read 22 tweets
May 27
*திருசெம்பொன் செய்கோயில் திவ்யதேசம் | பேரருளாளன் திருநாங்கூர் சீர்காழி*

*மூலவர் : பேரருளாளன்*

*உற்சவர் : செம்பொன்னரங்கன், ஹேரம்பர்*

*அம்மன்/தாயார் : அல்லிமாமலர் நாச்சியார்*

*தல விருட்சம் : -*

*தீர்த்தம் : நித்ய புஷ்கரணி, கனகதீர்த்தம்*

🇮🇳🙏1 Image
*ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ர ஆகமம்*

*பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்*

*புராண பெயர் : செம்பொன்செய் கோயில்*

*ஊர் : செம்பொன்செய்கோயில்*

*பாடியவர்கள் : மங்களாசாசனம்*

🇮🇳🙏2
பிறப்பொடு மூப்பொன்றில்லவன் தன்னைப் பேதியா இன்ப வெள்ளத்தை இறப்பெதிர் காலக்கழிவுமானானை ஏழிசையின் சுவை தன்னை சிறப்புடைமறையோர் நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோவிலினுள்ளே மறைப்பெரும் பொருளை வானவர் கோனைக் கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே.

திருமங்கையாழ்வார்.

🇮🇳🙏3
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(