மீள் பதிவு:

நண்பர் ஒருவர் கலைஞர் முதல்வராக இருந்த போது அவரை வரவேற்க வந்திருந்த மாணவர் ஒருவர் கண்கலங்கி நிற்பதை பார்த்த கலைஞர் தாயுள்ளத்தோடு அது பற்றி விசாரித்து அந்த மாணவரை மருத்துவர் ஆக்கிய வரலாறு ஒன்றை பற்றி பதிவிட்டிருந்தார்.
கலைஞர் கருணை வடிவானவர் என்பது உண்மை தான் என்றாலும், அவரின் அன்பு மகன் மட்டும் சளைத்தவரா என்ன???? அவரின் அன்பு மகன் கருணையில் ஏசுநாதரை விட ஒருபடி உயர்ந்தவர் என்று அருகில் இருந்து பார்த்தவர்கள் உறுதியாக சொல்கிறார்கள்.
கடந்த வாரம் கலைஞரின் அன்பு மகன் கொரோனா முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்பார்வையிட சென்னையில் உள்ள கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அங்கு ஆய்வுகளை செய்து முடித்துவிட்டு,
மருத்துவமனை வளாகத்தில் தேனீர்கடையில் தேனீர் அருந்தலாம் என்று வந்த முதல்வரின் கண்களில், ஒரு ஓரமாக நின்று தேம்பி, தேம்பி அழுது கொண்டிருந்த அந்த வாலிபர் கண்ணில் பட்டிருக்கிறார். மனம் பதைத்து போன அன்பே வடிவான கலைஞரின் அன்பு மகன், அந்த வாலிபரை அருகில் அழைத்து,
அழுவதை நிறுத்துமாறு கூறிவிட்டு, தன்னுடைய வேட்டியால் அவர் முகத்தை துடைத்து விட்டு விட்டு, அவரிடம் அழுவதற்கான காரணத்தை பற்றி விசாரித்து இருக்கிறார்.

அன்பே வடிவான முதல்வரை அருகில் இருந்து பார்த்தாலும், அவரே தனது வேட்டியால் முகத்தை துடைத்து விட்டதால்
திக்குமுக்காடி போயிருந்த அந்த வாலிபருக்கு மூச்சே நின்றுவிடும் போல் ஆகிவிட்டது. கலைஞரின் அன்பு மகனின் பரிவான கவனிப்பில் பேச்சு மூச்சு இல்லாமல் உறைந்து போய் நின்றிருந்த அந்த வாலிபருக்கு பேச்சே வரவில்லையாம். அவரது நிலையை உணர்ந்து கொண்ட தளபதியாரும்,
தன் கையாலேயே தேனீர் வாங்கி அந்த வாலிபரை பருக வைத்து, அவரை ஆசுவாசப்படுத்தி விட்டு மீண்டும் அவர் அழுவதற்கான காரணத்தை பற்றி விசாரித்து இருக்கிறார்.

முதல்வரின் கவனிப்பால் சற்று ஆறுதல் அடைந்திருந்த அந்த வாலிபர், ஒருவாறாக தன்னை தேற்றிக்கொண்டு, திக்கி திணறி, நீட், தேர்வு, தோல்வி,
குடும்ப கஷ்டம் என்று ஒரு சில வார்த்தைகள் மூலம் தனது நிலமையை விளக்க முயன்றிருக்கிறார். அவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் போனதால், மருத்துவ கல்லூரியில் சீட்டு கிடைக்காமல் போனதை எண்ணி தான் இப்படி கண்ணீர் விட்டு அழுகிறார் என்று தானாகவே புரிந்து கொண்ட கலைஞரின் அன்பு மகன்,
இந்த கொடுமையை காண சகிக்காமல் தானும் கண்ணீர் சிந்தினாராம். இதற்காக தான் தானும் தன் அரசாங்கமும் நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வருவதாக அறிவித்த தளபதியார், தன்னுடன் வந்திருந்த அதிகாரிகளை உடனே அழைத்து அந்த வாலிபரை டாக்டர் ஆக்க என்ன வழி என்று கேட்டிருக்கிறார்.
முதல்வருடன் வந்திருந்த அதிகாரிகள், நீட் தேர்வை எழுதி தேர்ச்சி அடையாமல் மருத்துவர் ஆக வழியில்லை என்று திமட்டவட்டமாக கூறிவிட, அப்படியானால் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டமாவது அளித்து இவரை டாக்டர் ஆக்க முடியுமே என்று மடங்கி கேள்வி கேட்க, அவரது சமயோஜித புத்தி, அறிவுக்கூர்மை
ஆகியவற்றை கண்டு கூட வந்த அதிகாரிகள் ஆச்சரியப்பட்டு போனார்களாம். அதன் பின்னர் உடனடியாக எதோ ஒரு பல்கலைக்கழகம் அந்த வாலிபருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க, முதல்வர் அத்தோடு நில்லாமல் அந்த வாலிபரை அதே மருத்துவமனைக்கு தலைமை டாக்டராக அறிவித்து, இனி நீ கலங்க வேண்டாம்.
தலைமை டாக்டராக உன் பணியை செவ்வனே செய்து கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தான் நீ எனக்கு செய்யும் கைமாறு என்று பெருந்தன்மையுடன் கூறி விட்டாராம்.

கலைஞரின் அன்பு மகன் காட்டிய கருணையால் உருகி போய் விட்டிருந்த அந்த வாலிபரும்,
இந்த உதவியை தான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என்றும் முதல்வர் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை கண்டிப்பாக காப்பாற்றுவேன் என்றும் உறுதியளித்தாராம். பின்னர் முண்டகளப்புகளிடம் பேசிய அவர், தற்காலிக ஸ்வீப்பர் வேலைக்கு வந்த தனக்கு வேலை நீட்டாக செய்ய வரவில்லை என்று கூறி
தனக்கு வேலை இல்லை என்று கூறிய அந்த திமிர் பிடித்த அதிகாரியின் கொட்டத்தை அடக்கி தன்னை அதே மருத்துவமனைக்கு முதல்வராக ஆக்கி முதல்வர் சமூக நீதியை காப்பதில் தான் ஒரு கோப்பெருஞ்சோழன் என்று நிரூபித்து விட்டார் என்று கண்ணீர் மல்க கூறினாராம்.
அது ஏன் கோப்பெருஞ்சோழன் என்று கூறுகிறீர்கள் என்று கேட்டதற்கு, வழக்கமாக அனைவரும் மனுநீதிச் சோழன் பெயரை தான் குறிப்பிடுவார்கள். ஆனால் மனுநீதி சமூக நீதிக்கு எதிரான ஒன்று என்பதால் தான் கோப்பெருஞ்சோழன் என்று குறிப்பிட்டேன் என்று சொன்னாராம்.

ஸ்ஸாப்பா முடில

#HBDFatherOfCorruption

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Chowkidar Kaalabala🇮🇳

Chowkidar Kaalabala🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Jun 3
திராவிட கருஞ்சூரியனால் இருண்டு கிடக்கும் தமிழகத்தை பௌர்ணமி நிலவாய்
அலங்கரிக்க வந்திருக்கும்
தேய்பிறையே காணாத
காண முடியாத
அன்பு அண்ணா @annamalai_k
அன்பு சகோதரனின்
மனமார்ந்த ஆசிகளோடு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

🧁💐🧁💐🧁💐🧁💐🧁💐🧁 Image
மது போதையில் தள்ளாடி கிடக்கும் தமிழகத்தை
மதுவை ஒழித்து
தெளிய வைக்க வந்திருக்கும்
உத்தமனே
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

💐🧁💐🧁🙏🧁💐🧁🙏🧁💐

ஊழல் மண்டி கிடக்கும்
திராவிட அலங்கோல ஆட்சியை
அகற்ற வந்திருக்கும்
ஆதர்ஷ நாயகனே
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

🧁💐🧁💐🧁 Image
நாத்திகத்தை புகுத்தி
நாரசமாய் தமிழகத்தை
நாற வைத்த திராவிடத்தை
நாறடித்து
மீண்டும் ஆத்திகத்தின் அருமைகளை பெருமைகளை
உணர வைத்து
தமிழகத்தை தழைக்க வைக்க
மலர்ந்திருக்கும்
குறிஞ்சி மலரே
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .....

💐🧁💐🧁💐🧁💐🧁💐🧁💐 Image
Read 7 tweets
Jun 3
நம்ம ஹீரோ கட்டுமர பூபதி சோழநாட்டில் ஒரு மிகப்பெரிய சிற்றரசருக்கு மகனான பிறந்தார். அவரது மகனே கூறியது போல சிறிய வயதில் அரிய பல பாலாட்டங்களுக்கு பிறகு தான் பள்ளியில் சேர்ந்தார். பள்ளியில் சேரும் போது தலையை சுற்றி காதை தொட சொன்னார்களாம். நம்ம கட்டுவும் தலையை சுற்றி காதை தொட, Image
அருகில் இருந்த மாணவனின் காதில் இருந்த கடுக்கன் காணாமல் போய் விட்டதாம்.

சிறுவனாக இருந்த கட்டு, தன் அறிவுக்கு ஏற்ற வகையில் பாடங்கள் இல்லாததால், படிப்பை பாதியிலேயே தியாகம் செய்து விட்டு சென்னைக்கு சென்று மக்கள் சேவையாற்ற வேண்டும் என்ற பேராவல் கொண்டார்.
இதை அவர் தன் தந்தையிடம் கூற, தன் மகன் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்த அவர் தந்தை, புதியதாக ஒரு இரயில் வண்டியையே விலைக்கு வாங்கி அதில் தன் மகனை சென்னைக்கு அனுப்பி வைத்தார். இந்த வரலாற்றை தான் சில விஷமிகள் திரித்து,
Read 9 tweets
Jun 1
Thanks to Mahavishnu info

ஸ்ரீலஷ்மி நரசிம்ஹாய நமஹ

ஒரு தந்தை தன் மகனுக்குச் சர்க்கரை போடாத வெறும் பாலை மட்டும் கொடுத்தார்.

“இதன் சுவை எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

“இனிப்பு குறைவாக உள்ளது!” என்றான் மகன். Image
அடுத்தபடியாக, சர்க்கரையை மட்டும் தன் மகனுக்குக் கொடுத்து, “இது எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

“இது பாலை விட இனிப்பாக உள்ளது!” என்றான் மகன்.

அடுத்து, பாலில் சர்க்கரையைக் கலந்து கொடுத்து, “இது எப்படி இருக்கிறது!” என்று கேட்டார் தந்தை. Image
“தந்தையே! வெறும் பாலை விடவும், வெறும் சர்க்கரையை விடவும், சர்க்கரை கலந்த பால் தான் இனிப்பாக உள்ளது,"என்றான்.

"இனி எனக்கு வெறும் பாலும் வேண்டாம், வெறும் சர்க்கரையும் வேண்டாம். சர்க்கரை கலந்த பாலை மட்டும் தாருங்கள்!” என்றான் மகன். Image
Read 13 tweets
Jun 1
By நீ லிங்கேஸ்வரன்

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் கேஜரிவால்
முதல்வர் மம்தா
முதல்வர் பினராய் விஜயன்

இந்த நால்வருக்கும் எழுதப்பட்ட பதிவு இது . அவர்களைப்பற்றிய பதிவல்ல .ஆனால் அவர்கள் படிக்கவேண்டுமென்ற ஆசையில் பதியப்பட்டது

யாரவது அவர்களிடம் இந்தப்பதிவை காட்டினால் தன்யனாவேன். Image
பிரதமர் சமீபத்தில் புயல் சேதங்களை பார்வையிட கிழக்கிந்தியா சென்றார் .அவசரமாக முடிவெடுத்ததால் தாமதமாகத்தான் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு தகவல் சொல்லப்பட்டது.

எனினும் தன்னுடைய நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு பிரதமருடன் ஏரியல் சர்வேயில் கலந்துகொண்டார் நவீன்.
முடிந்ததும் ரிவியூ மீட்டிங்கில் கவர்னருடன் கலந்துகொண்டார் .எதிர்க்கட்சி தலைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது . ஆனால் உடல்நலமில்லாததால் அவர் கலந்து கொள்ளவில்லை .
Read 8 tweets
May 29
தாம்பத்யம்

அந்த முதியவர் தடுத்தடுமாறியபடி தெருவில் நடந்து கொண்டிருந்தார். எனது டூ வீலரை நிறுத்தி, அருகில் சென்று பார்த்தேன். அவரது காலில் கட்டை விரல் நசுங்கி ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

"என்னங்க ஆச்சு"னு கேட்டேன்.
"வேகமாக வந்த ஆட்டோ சக்கரம் காலுல ஏறிடுச்சு தம்பி" என்றார்.

"வாங்க ... எனக்கு தெரிந்த டாக்டர் பக்கத்துல தான் இருக்கார், கட்டுப் போட்டு மொதல்ல ரத்தம் கசியறத நிறுத்தணும். கூடவே டி.டி இஞ்செக்‌ஷனும் போட்டுக்கலாம்!" என்றேன்.

வேண்டாம் என்று மறுத்தவரை விடாப்பிடியாக அழைத்து சென்றேன்.
எல்லாம் முடியவும்.... "மணி என்ன தம்பி.... நேரமாயிடுச்சே.. நேரமாயிடுச்சே...!" என்று பறந்தார் பெரியவர்.

"அப்படி என்னங்க அவசரம்..?! என்றேன் நான்.

"என் பெண்டாட்டி பசியோட வீட்டில இருக்கா. அவளுக்கு இட்லி வாங்கிட்டு போகணும்..!" என்றார்.
Read 6 tweets
May 29
யுத்த களத்தில் கர்ணணின் கேள்விக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் விளக்கம்!

மகாபாரதம் யுத்த களத்தில் கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான் - "என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டுவிட்டார் முறைதவறிப் பிறந்த குழந்தை என்றார்கள் இது என் தவறா?
நான் சத்ரியன் அல்ல என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு கல்வியைக் கற்றுத்தரவில்லை இது என் தவறா?

பரசுராமர் எனக்கு கற்றுக் கொடுத்தார், ஆனால் சத்ரியன் எனக்கூறி நான் படித்த எல்லாவற்றையும் மறக்க என்னை சாபம் கொடுத்தார் இது என் தவறா?
ஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது அதன் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார்.

திரௌபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக நான் அவமானப்படுத்தப்பட்டேன்
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(