சங்க காலப் போர் முறைகளும், அறங்களும்...!

போரானது ஒரு நாட்டாரின் வீரத்தைப் பறைச்சாற்றுவதற்காக
இருந்ததால், பண்டைத் தமிழர்கள் போரினைப் பெரிதும் போற்றினர்.

போரானது மிக முக்கியத்துவம் பெற்றிருந்த காரணத்தினால், தமிழர்கள் போர்முறைகளைப் பலவாறாகப் பிரித்திருந்தனர்.
வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை முதலியன போருக்குரிய புறத்திணைகளாக வகுத்தனர். ஒவ்வொரு திணையும் பல துறைகளைப் பெற்றிருந்தது.

#வெட்சி - ஒரு நாட்டின் மீது படையெடுக்க விரும்பும் வீரர்கள் முதலில், அந்நாட்டு ஆநிரைகளைக் கவரும் முயற்சி.
#கரந்தை - ஆநிரைகள் பகைவரிடம் சிக்காதவாறு காக்கும் முயற்சி

#வஞ்சி - பகைவர் நாட்டின் மீது படையெடுத்துச் செல்லுதல்

#காஞ்சி - அங்ஙனம் படையெடுத்து வருவோரை, எதிர்த்துப் போரிடுதல்

#உழிஞை - கோட்டையை முற்றுகையிடுதல்.
#நொச்சி - கோட்டைக்கு உள்ளிருந்து பகைவரை எதிர்த்தல்

#தும்பை - இவை அனைத்திற்கும் அப்பால், வெட்ட வெளியில் போரிடுதல்

#வாகை - போரில் வெற்றி பெறுதல்

ஒவ்வொரு திணை நிகழ்வையும் மேற்கொள்பவர்கள், அத்திணைப் பெயர் கொண்ட பூவைச் சூடிக்கொள்ளுதல் மரபாகும்.
• போர்க்குரிய காரணங்கள்:

நாடு பிடிக்கும் வேட்கையே போருக்கு முக்கிய காரணமாகும். தம் ஆட்சிக்கு உட்பட்ட #சிற்றரசர்கள் திறை செலுத்தத் தவறிய போது, அரசன் போர் புரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், அரசர்கள் தங்கள் நாடுகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியைத் தம் ஆதிக்கத்தில்...
வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவலாலும் போர்கள் நிகழ்ந்துள்ளன.

அரசனது மண்ணணாசையும், புகழ்வேட்கையும் போர்க்குரிய காரணங்களாகப் பெரிதும் சுட்டப்படுகின்றன.

•போர் அறங்கள்:

வீரமும், மானமும் கொண்டு போரிட்ட அரசர்கள் போர் அறங்களைக் கட்டிக்காத்தனர்.
படையெடுக்கும் முன் #பறை அறைந்து, தன் படையெடுப்பினைப் பகைவர்க்குத் தெரிவித்தல் மரபாகும்.

சான்றாக, கீழ்காணும் புறநானூற்றுப் பாடலின் வழி, போரின் மரபினை அறிந்து கொள்ள முடிகின்றது.

வன்மை உடையரோடு எதிர்த்துப் போரிடுவதே ஆற்றல் உடையவரின் இயல்பாகும்.
எனவே பாண்டியன் 'பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி',

தான் முற்றுகையிடும் நகர்களில் உள்ள வன்மையற்றாரைப் பாதுகாவலான இடத்தில் சேருமாறு முதலில் எச்சரிப்பான் என்கிறார் புலவர்.

அவ்வாறு எச்சரிக்கப்படுவோர் பயன்தரும் ஆவினம், அவ்வியல்புடைய மக்கள், பெண்டிர், பிணி உடையவர்...
புதல்வரைப் பெறாதோர் ஆவர்.

இத்தகு போர் அறமானது சங்ககால மன்னரிடையே பின்பற்றப்பட்டு வந்துள்ளது என்பதனை இலக்கியங்கள் நமக்கு உணர்த்தி நிற்கின்றன.

- நன்று.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தஞ்சை ஆ.மாதவன்

தஞ்சை ஆ.மாதவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ThanjaiMadhavan

Jun 10
கோட்டாற்றுச் சிற்பிகள்...!

#கோட்டாறு என்ற ஊர்ப்பகுதி #கன்னியாகுமரி மாவட்டத்தில் #நாகர்கோயில் அருகில் அமைந்துள்ள பகுதியாகும்.

இவ்வூர் வரலாற்றில் மிகச்சிறந்த இடத்தைப் பெற்று வந்திருக்கின்றது.

முற்காலப் பாண்டியர், சோழர், சேரர் கல்வெட்டுக்களில் இவ்வூர் இடம் பெற்றிருக்கின்றது.
'மும்முடிச் சோழபுரம்', 'மும்முடிச் சோழநல்லூர்', 'சோழ கேரளபுரம்' என்று இவ்வூருக்குப் பல பெயர்கள் இருந்திருக்கின்றன.

இது சமயம், அரசியல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப்பெற்று வந்திருப்பதை, #சோழபுரம், #கோட்டாறு, #நாகர்கோயில் இடங்களில் காணப்படும் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன.
இவ்வூரில் சமண சமயத்தைச் சார்ந்த முனிவர்கள் முற்காலப் பாண்டியர் காலத்தில் வாழ்ந்திருக்கின்றனர்.

சோழர்களது படைத்தலைவர்கள் முகாமிட்டுத் தங்கி, காவல் பணி புரிந்திருக்கின்றனர்.

இதே போன்று இவ்வூரில் கல்வெட்டு பொறிக்கும் கற்சிற்பிகளும், கோயில் திருப்பணி செய்யும் சிற்பிகளும்...
Read 12 tweets
Jun 10
மக்கள் வாழ்வியலில் #புடவை...!

பழைய கற்காலத்தில் மனிதன் மலைகளிலும், காடுகளிலும் அலைந்து திரிந்தான்.

விலங்கோடு விலங்காக வாழ்ந்து வந்தான்.

விலங்கின் தோல்களையும், மரப்பட்டைகளையும், மரத்தழைகளையும் ஆடையாக அணிந்து கொண்டான்.
புதிய கற்காலத்தில் மனிதன் ஒரு இடத்தில் தங்கி வாழத்தலைப்பட்டான்.

அப்பொழுது பயிர்த் தொழிலையும் மீன் பிடித்தலையும், நெசவுத் தொழிலையும் கற்றுக் கொண்டான். இதுவே மனிதனின் முன்னேற்றத்தின் முதற்படியாக அமைந்தது.
புதிய கற்காலத்தில் மனிதன் ஏதோ ஒருவகை வாழ்ந்த ஆடையினை உடுத்தியிருக்கின்றான் என்பது தெரிகிறது.

#ஆடை அணிகின்ற பழக்கம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தே வந்திருக்கிறது.

'ஆடையைக்’ குறிக்கின்ற சொல் தொடக்க காலத்தில் #புடவை என்ற பெயரில் வழங்கி வந்திருக்கிறது.
Read 31 tweets
Jun 9
சங்ககால மக்கள் வாழ்வியலில் மது வகைகள் - 3). #தோப்பி

தினையிலிருந்து வார்க்கப்பட்டது 'தினைக் கள்'. பனை மரத்திலிருந்து பெறப்பட்டது 'பனைக் கள்'. 'தோப்பிக் கள்' எவ்வாறு பெறப்பட்டது? அகநானூற்றின் மூன்று பாடல்களும் (35, 265, 348), பெரும்பாணாற்றுப் படையும் (141-142) இதனை விளக்குகின்றன.
வீட்டின் முற்றத்தில் கோடையில் பழுத்த நல்ல மணம் கமழும் மாம்பழத்துடன்,

பிசின் தன்மையுடைய நன்கு விளைந்த பலாச்சுளையும் சேர்த்து, அவற்றைத் தேனுடன் கலந்து,

வண்டுகள் மொய்க்கும் அரியலுடன், மூங்கில் குழாயில் ஊற்றி முற்ற வைப்பார்கள்.
'பாம்பு கடுப்பன்ன தோப்பி' எனும் தொடர் நன்கு முதிர்ந்து விளைந்த இந்தக் கள்ளைக் குடிக்கும்போது, பாம்பின் சீற்றத்தை ஒத்த வெறி ஏற்படும் என்கிறது.

#தோப்பி என்பது நெல்லிருந்து பெறப்படுவது என்கிறார் #நச்சினார்க்கினியர்.

அகநானூற்றின் 265-ஆம் பாடல் வேறொரு வர்ணனையைக் காட்டுகிறது.
Read 7 tweets
Jun 8
#நெய்த்தோர்ப்பட்டி...!

நாட்டைக் காக்கவோ, ஊரைக் காக்கவோ உயிர் நீத்த வீரருக்கு, ஊரார் #நடுகல் எடுத்து, அவருடைய குடும்பத்தாருக்கு கொடையாக நிலம் வழங்கினர்.

இந்நிலக்கொடையை #நெய்த்தோர்பட்டி என்றழைத்தனர்.

வீரரின் நினைவாக ஊர் மக்களோ, உறவினர்களோ, அரசனோ, தலைவனோ நடுகல்லை எடுத்தனர். Image
#நெய்த்தோர் எனுஞ்சொல் #இரத்தம் என்ற பொருளில் இலக்கியங்களிலும், இலக்கண நூலிலும் பின்வருமாறு பயன்படுத்தப்பட்டுள்ளது. Image
புறப்பொருள் வெண்பாமாலையும் #நெய்த்தோர் என்ற சொல்லை #இரத்தம் என்ற பொருளில் மேற்கூறியவாறு கையாண்டுள்ளன.

பெருங்கதையில் வீரனுக்கு தானமாக வழங்கியக் கொடையை
‘நெய்த்தோர்ப் பட்டிகை' எனப் பின்வருமாறு குறிப்பிடுகிறது. Image
Read 14 tweets
May 31
சங்ககால மக்கள் வாழ்வியலில் மது வகைகள் - 1). #கள்

பண்டைத் தமிழர் வாழ்வியலில் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட வகையான #மதுபானங்கள் குடிக்கும் வழக்கம், நீண்ட நெடுங்காலமாக இருந்துள்ளது.

சங்க இலக்கியங்களில், #கள்ளுண்ணுதல் பற்றிய குறிப்புகள் பரந்து கிடக்கின்றன.
நாம் இன்று காப்பி, தேநீர் குடிப்பதுபோலச் சங்க காலத்தில் #மது எல்லோராலும் விரும்பிக் குடிக்கப்பட்ட பானமாக இருந்துள்ளது.

அன்றாட உணவின் ஒரு பகுதியாகவும், முக்கியமான உணவுப் பண்டமாகவும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
மது வகைகள் பற்றிய சங்க இலக்கியப் பாடல்களைத் தொகுத்துப் பார்க்கும்போது,

அது தேனிலும், தினையிலும், பனையிலும், பழத்திலும், அரிசியிலும் செய்யப்பட்டதைக் காணமுடிகிறது.

சங்க காலத்தில் #மது பல்வேறு பெயர்களில் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.
Read 31 tweets
May 30
சங்க கால பாண் சமூகத்தாரின் வாழ்வியல்...!

சங்க காலத்தில் #அலைகுடிகள் என அதிகம் அறியப்பட்டவர்கள் #பாண் சமூகத்தினர்.

பாணர், பொருநர்,துடியர், வயிரியர், கண்ணுளர், கோடியர், சென்னியர், இயவர், இனைஞர், குறுங்கூளியர், நகைவர், அகவர், அகவுநர், அகலவன், வேலன், கட்டுவிச்சியர், கடம்பர்...
முழவன், பறையன் எனப் பல்வேறு பாண் குடியினர் கலைச் சேவை செய்து வந்தார்கள்.

சங்க காலத்தில் ஒவ்வொரு திணையிலும் நிலையான குடிகள் வாழ்ந்து வந்தனர். இவர்களே #திணைக்குடியினர் எனப்பட்டனர்.

இந்தத் திணைக் குடிகளையும், சீறூர் மன்னர்களையும், முதுகுடி மன்னர்களையும், குறுநில மன்னர்களையும்...
சிற்றூர்களில் வாழ்ந்த கிழார்களையும் ஆதரவுச் சமூகத்தாராக ஏற்றுக்கொண்டு அவர்களை அண்டிப் பாண் சமூகத்தார் வாழ்ந்தார்கள்.

அதனால் இவர்கள் #அலைகுடிகள் எனப்பட்டனர்.

சங்க காலம் வீரயுகக் காலம். இக்காலகட்டத்தில் உலகம் முழுக்கப் பாண் சமூகத்தாரின் தேவை இருந்தது.
Read 35 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(