பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவியேற்றபோது தனது அமைச்சரவையில் 7 பேரை மட்டுமே சேர்த்து கொண்டார். அவர்களில் ஒருவர் கக்கன்.
இவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்...

போலீஸ்
பொதுப்பணி
விவசாயம்
சிறுபாசனம்
கால்நடை பராமரிப்பு
உள்துறை
சிறைத்துறை
நிதி
கல்வி
தொழிலாளர் நலம்
மற்றும்
மதுவிலக்கு.
இத்தனை துறைகளின் அமைச்சராக இருந்தவர். ஒரு முறை அவர் திருச்சி மாவட்டத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு இரவு ரயிலில் சென்னை செல்ல வேண்டும். நிகழ்ச்சிகளை முடித்து திருச்சி ஜங்ஷனுக்கு வந்த போது அவர் செல்ல வேண்டிய ரயில் கிளம்பி விட்டது. அடுத்த ரயில் அதிகாலையில்.
அமைச்சராக இருந்தாலும் யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை. ரயில்வே அதிகாரிகளையும் அணுகவில்லை, பேசாமல் ஒரு துண்டை விரித்து பிளாட்பார பெஞ்ச்சில் படுத்துவிட்டார்.
நடு இரவில் ரோந்து வந்த ரயில்வே போலிஸ்சார் யாரென்று தெரியாமல் லட்டியாய் இரண்டு தட்டு தட்டி எழுப்பினர்.
யார் நீங்கள்
எழுந்து செல்லுங்கள்
இங்கெல்லாம் படுக்கக்கூடாது
என்றனர்.

அதற்கு அமைதியாக பதிலளித்தார். அய்யா என் பெயர் கக்கன் நான் போலீஸ் மந்திரியாக இருக்கேன் அடுத்த ரயில் வந்தவுடன் சென்றுவிடுகிறேன் என்றார். அதிர்ந்தனர் போலீஸ்காரர்கள்.
அய்யா மன்னித்துவிடுங்கள் நீங்கள் முதல் வகுப்பு ஓய்வறையில் போய் படுங்கள் என்றனர்.

வேண்டாம் இந்த வசதியே எனக்கு போதும் என்று அந்த பெஞ்சிலேயே படுத்து உறங்கிவிட்டார்...
அவர் ரயில் ஏறும் வரை அங்கேயே போலீசார் நின்றிருந்து பத்திரமாக பார்த்துக் கொண்டனர்.

அது ஒரு பொற்காலம்.

எளிமையின் எடுத்துக்காட்டாக இப்படியும் சில மந்திரிகள் தமிழகத்தில் இருந்துள்ளனர்.

எப்பேர்பட்ட மகான்

இன்று அய்யாவின் பிறந்தநாள்

வணங்குகிறேன் ஐயா

#கக்கன்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #பாரதி_செல்லம்மா( Kaalabala )🇮🇳

#பாரதி_செல்லம்மா( Kaalabala )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Jun 17
அஞ்சிலே ஒன்று பெற்றான ; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான் .

- இது ஆஞ்சநேயரைக் குறிக்கும் துதிப் பாடல்.
இப்பாடலில் இடம்பெறும் ``அஞ்சிலே" எனும் சொல் ஒரே மாதிரியா க, ஒரே உச்சரிப்பை கொடுத்த போதிலும ், ஒவ்வொரு அடியிலும் அவை உணர்த்தும் பொருள் வெவ்வேறானவை.
முதல் வரியில் இடம்பெற்றுள்ள அஞ்சிலே என்னும் சொல் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவிற்குப் பிறந்தவன் அனுமன் என்பதனைக் குறிக்கும்.
அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது, பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரைத் (கடல்) தாண்டி அனுமன் இலங்கை சென்றான் என்று பொருள்படும்.

அஞ்சிலே ஒன்று ஆக ஆரியர்க்காக ஏகி- ஆகாய மார்க்கத்தில் இலங்கைக்குப் பறந்த ,
Read 7 tweets
Jun 17
மஹாபாரதத்தில்
இவர்களே ஆதாரம்
இவர்களைச் சுற்றியே
சுழலும் முழு பாரதமும்..
ஆறு வரிகளில் ஆண்கள் ஒவ்வொருவரும்..

The most powerful
Male characters
who had spun
" The Mahabharata "

*****************************
பீஷமர்
---------------
படைத்த பிரம்மனே
ஆச்சர்யப்பட்ட
பிரம்மச்சர்யன்,
பாரதத்தின் பீஷமர்,
கொடுத்த வாக்கது காக்க
படைத்த பிரம்மனே
ஆச்சர்யமாய் நோக்க
பிரம்மச்சர்யம் பூண்ட
மூத்த முதல்வன்,
மாபாரதத்தின்
கங்கையின் புதல்வன்....
துரோணர்
---------------------
ஆய கலைகள்
அறுபத்து நான்கும்
அதை நூற்று ஐவருக்கும்
அட்சரம் பிசகாமல்
அப்பியாசம் போதித்த துரோணரெனும் ஆசாரியன்
மஹாபாரத பேராசிரியன்
Read 14 tweets
Jun 17
அக்னி பாதை... விபரங்கள்...

நீங்கள் 10 ம் வகுப்பு பாஸ் செய்து விட்டு அக்னி பாதையில் இணைந்தால், 4 வருடங்கள் முடியும் சமயம் CBSE இன் 12 ம் வகுப்பு பாஸ் செய்த சான்றிதழ் உங்கள் கைகளில் தவழும்.

அதே போன்று...

நீங்கள் 12ம் வகுப்பு பாஸ் செய்து விட்டு அக்னி பாதையில் இணைந்தால்,
4 வருடங்கள் முடியும் சமயம் IGNOU - இந்திரா காந்தி நேஷனல் ஓபன் யூனிவர்சிட்டி மூலம் பட்டபடிப்பு GRADUATION சான்றிதழ் உங்கள் கைகளில் தவழும்..

தவிர #அக்னி_வீரன் என்ற பட்டமும் உங்கள் பெயருடன் போட்டுக்கொள்ளலாம்...

#அக்னிவீரன் பட்டம் இருப்பதானால்....
காவல் துறை / மற்ற மத்திய / மாநில அரசு/ வங்கி வேலைகள் உங்களுக்கு தான் முதலிடம்....

மேலும்.. சீருடை.... ஆஹா... இந்த... சீருடை போட முடியவில்லை....யே...என்று ஏங்கிய/ நொந்து நூலாய் போன எத்தனையோ கோடி இளைஞர்கள் இந்த நாட்டில் உண்டு...
Read 7 tweets
Jun 17
இந்த வாஞ்சிநாதனையும், ஜீன் 17 ஆம் தேதியையும் நினைக்கும் போதே.. எனக்குள் என்னையும் அறியாமல் ஏதோ ஒரு உணர்வு ஏற்படுவது இயல்பு..
சிறுவயதில் நாங்கள் புதுவை கருவடி குப்பத்தில் உள்ள சித்தானந்தா சாமி கோயில் அருகே உள்ள காலி இடத்தில் கிரிக்கெட் லிளையாடுவோம்..
ஒரு நாள் ஒரு பெரியவர் யாரிடமோ, "இங்கு தான் வாஞ்சிநாதன் துப்பாக்கி பயிற்சி எடுத்தான்.. பிறகு ஜீன் முதல் வாரத்தில் ஒரு பாரத மாதா சிலையில் நம் சாவர்க்கர், மேடம் காமா மூலம் அளித்த அந்த, துப்பாக்கியை பதுக்கி, வில்லியனுர் வழியாக பாகூரை தாண்டி,
பெண்ணையாற்றை கடந்து, பிறகு திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) சென்று ரயில் ஏறி சென்றான்.. பின் ஆஷ் துரையை கொன்றான்", என கூறினார்.. அவர் எதேச்சையாக சொல்லிவிட்டு சென்று விட்டார்.. ஆனால் என் மனதில் ,அன்றில் இருந்து இன்று வரை ஹீரோ வாஞ்சிதாதன் தான்..
Read 6 tweets
Jun 17
பசும்பொன்முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் சென்னை க்கு ஒருமுறை வந்த போது தனது உதவியாளரிடம் இரண்டு நல்ல ரக புடவைகள் வாங்கி வரச் சொல்லி உத்தரவிட்டார் தேவர்.

உதவியாளருக்கு குழப்பம்.

தேவர் பிரம்மச்சாரி. அவர் எதற்கு புடவை வாங்க - அதுவும் சென்னையில்.
குழப்பத்தோடு புடவை வாங்கி வர கூடவே கொஞ்சம் பழங்கள்.

தேவர் உதவியாளரோடு காரில் ஏறி சென்னை மயிலாப்பூரில் ஒரு சந்துக்கு முன் காரை நிறுத்தச் சொல்லி - உதவியாளர் புடவை மற்றும் பழ தட்டுடன் பின் தொடர சந்தில் இருக்கும் ஒரு வீட்டுக்குள் நொடிப் பொழுதில் நுழைகிறார்.
அங்கே அமர்ந்திருந்த பெண்மணியின் காலில் தேவர் நெஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்.
உதவியாளரிடமிருந்து புடவை/ பழ தட்டை வாங்கி தன் பையிலிருந்து ரூபாய் நோட்டுக்களை புடவையின் ஊடே நுழைத்து அந்த பெண்மணியின் முன்னே சமர்பித்து சற்று தள்ளி அமர்ந்து நலம் விசாரித்து
Read 16 tweets
Jun 17
வாஞ்சிநாதன் ஆஷ்சை கொன்று, தன்னை தானே சுட்டு கொண்டு இறந்த போது அவருக்கு வயது 25.

மணமானவர். மனைவி பொன்னம்மாள் நிறைமாத கர்ப்பிணி.

வெள்ளையனை ஒழிப்பதே தன் குறிக்கோள் என்று உயிர்துறந்த வாஞ்சிநாதன் என்ற பிராமணருக்கு குடும்பத்தைவிட நாடுதான் முக்கியமாக இருந்தது..
திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்சை வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்று, தானும் உயிர்நீத்த தினம் இன்று 1911, ஜூன் 17-ம் தேதி.

வீரன் வாஞ்சிநாதன் பிரேத விசாரணையில், அவர் போட்டிருந்த உள்சட்டையில் இருந்த துண்டுக் கடிதத்தில் இருந்து...
"அசோக சக்கரவர்த்தி முடிசூடி அரசோச்சிய பாரத மண்ணில், ஐந்தாம் ஜார்ஜ் மன்னன் முடிசூட்டி விழா நடத்துவதற்காக வர இருக்கும் இந்த வேளையில், அவரது ஆட்சியின் சின்னமான நெல்லை மாவட்ட ஆட்சியாளன் கொடுங்கோலன் ஆஷை சுட்டுப் பொசுக்கிப் பிணமாக்குகிறேன்!
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(