சங்ககால மக்கள் வாழ்வியலில் மது வகைகள் - 7). #வெப்பர், #வேரி, #கந்தாரம்

#வெப்பர் - வீரன் ஒருவன் அதிரல் எனும் புனலிக்கொடியின் மலரைத் தலைமுடியில் சூடிக்கொண்டு, புலியன் கண் போன்ற நிறத்தையுடைய மதுவை (வெப்பர்) ஓரிருமுறை மாந்தியப் பின்னர் பசுவைக் கவர்ந்து சென்றோரிடம் போரிட்டு மீட்டான்
#வேரி - மலைநாடன் 'வல்வில் ஓரி' வேட்டையில் கொன்ற மான் தசைப் புழுக்கையும் பசுவின் நெய்யுருக்குப் போல் மதுவையும்,

தன் மலையில் உண்டாகிய குற்றமில்லாத நல்ல பொன்னையும் மணிகளையும், கொல்லிப் பொருநனுக்குத் தந்தான்.
#பாண் சமூகத்தார் தன்னை நாடி வந்தபோது, வல்வில் ஓரிக்கு #வேரி எனும் மதுவைத் தந்து மகிழ்வித்தான் என்பதை மேற்காணும் #புறநானூறு வழி அறிகிறோம்.

#கந்தாரம் - #புறநானூறு வெட்சித் திணைப் பாடல் ஒன்று (258) #கந்தாரம் எனும் #கள் வகையைப் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
#மறவர் கூட்டத்தில் ஒருவன் பகைவரின் #ஆநிரை கவர்ந்து வந்தபோது, வழியில், #கந்தாரம் எனும் #கள் விற்பவரைக் கண்டான்.

விலையாகப் பசுக்களைக் கொடுத்துக் கள்ளுண்டு களித்தான். ஊனுண்டும் மகிழ்ந்தான். கை கழுவவும் எண்ணாது, எச்சில் கையை வில்லின் மேற்புறத்தில் துடைத்தவாறு...
மீண்டும் பகைப்புலம் நோக்கிப் புறப்பட்டான் என்கிறது #புறநானூற்று பாடல்.

பிறர்க்கு வார்த்தது போதும்; எஞ்சிய கள்ளை அப்படியே வைத்திருப்பாயாக.

திரும்பி வரும்போது கள் வேட்கையுடன் வரக்கூடும்.

அதனால் புளித்த பழைய கள்ளுள்ள சாடியைப் பாதுகாத்து வைப்பாயாக என்கிறது, இப்பாடல்.

- நன்று

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தஞ்சை ஆ.மாதவன்

தஞ்சை ஆ.மாதவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ThanjaiMadhavan

Jun 20
மரபுவழிக் கலங்களும், அவற்றைச் செலுத்தும் நுட்பங்களும்...!

கப்பற்கலையில் பழந்தமிழர்கள் சிறந்து விளங்கி இருக்க வேண்டுமென்பதை அவர்கள் தொன்றுதொட்டே மேற்கத்திய நாடுகளுடனும், கிழக்கத்திய நாடுகளுடனும் கொண்டிருந்த கடல் வணிகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. Image
அதற்குக் காரணம் தமிழகம் மூன்று பக்கங்களிலும் கடலாற் சூழப்பெற்றுள்ளமையேயாகும்.

பழந்தமிழ் இலக்கியங்கள், வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகள், வரலாற்றுச் சான்றுகள், கல்வெட்டுகள், தொல்பொருள் சான்றுகள் ஆகியன நமக்கு இவ்வுண்மையைத் தெளிவுப்படுத்துகின்றன.
தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட #கலங்கள் கடல் வணிகத்திற்கு மட்டுமல்லாமல் மீன் பிடிப்பதற்கும், நீர் வழிப் பயணத்திற்கும், நீர்நிலை விளையாட்டிற்கும், கடற்கொள்ளைக்கும், போட்டிப் பந்தயங்களுக்கும், கடற்போருக்கும் தொழில் திறம்பெற்ற வல்லுநர்களால் ஆக்கப்பட்டுச் செலுத்தப்பட்டு வந்துள்ளன.
Read 27 tweets
Jun 19
சங்ககால மக்கள் வாழ்வியலில் மது வகைகள் - 5). #நறவு, #நறா, #நனை

சங்க இலக்கியத்தில் #நறவு எனும் சொல் 47 இடங்களில் வந்துள்ளது.

பெரிய மலைகளில் விளைந்த மூங்கில் குப்பிகளில் நிரப்பி முற்ற வைத்த நறவினைக் குறிஞ்சி மக்கள் உண்டதை,

‘வாங்கமை பழுனிய நறவு உண்டு' என்கிறது #நற்றிணை (276:9).
தேறலையும், புளித்த கள்ளையும் உண்டதால் மக்கள் மயங்கி இன்புற்றிருந்தனர் என்பதை,

‘தேறுகள் நறவு உண்டார் மயக்கம் போல்' என்கிறது #கலித்தொகை (147: 2).
#ஆநிரை கவர்ந்து வரும் களைப்புற்ற தலைவனின் களைப்பினைப் போக்க;

'நறவைப் பிழியுங்கள்,
கடா வெட்டுங்கள், பந்தர்க்கீழ் இளமணல் பரப்புங்கள்'

- என்று முழக்கமிடும் சூழலை #புறநானூறு பின்வருமாறு பதிவிடுகிறது.
Read 6 tweets
Jun 10
கோட்டாற்றுச் சிற்பிகள்...!

#கோட்டாறு என்ற ஊர்ப்பகுதி #கன்னியாகுமரி மாவட்டத்தில் #நாகர்கோயில் அருகில் அமைந்துள்ள பகுதியாகும்.

இவ்வூர் வரலாற்றில் மிகச்சிறந்த இடத்தைப் பெற்று வந்திருக்கின்றது.

முற்காலப் பாண்டியர், சோழர், சேரர் கல்வெட்டுக்களில் இவ்வூர் இடம் பெற்றிருக்கின்றது.
'மும்முடிச் சோழபுரம்', 'மும்முடிச் சோழநல்லூர்', 'சோழ கேரளபுரம்' என்று இவ்வூருக்குப் பல பெயர்கள் இருந்திருக்கின்றன.

இது சமயம், அரசியல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப்பெற்று வந்திருப்பதை, #சோழபுரம், #கோட்டாறு, #நாகர்கோயில் இடங்களில் காணப்படும் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன.
இவ்வூரில் சமண சமயத்தைச் சார்ந்த முனிவர்கள் முற்காலப் பாண்டியர் காலத்தில் வாழ்ந்திருக்கின்றனர்.

சோழர்களது படைத்தலைவர்கள் முகாமிட்டுத் தங்கி, காவல் பணி புரிந்திருக்கின்றனர்.

இதே போன்று இவ்வூரில் கல்வெட்டு பொறிக்கும் கற்சிற்பிகளும், கோயில் திருப்பணி செய்யும் சிற்பிகளும்...
Read 12 tweets
Jun 10
மக்கள் வாழ்வியலில் #புடவை...!

பழைய கற்காலத்தில் மனிதன் மலைகளிலும், காடுகளிலும் அலைந்து திரிந்தான்.

விலங்கோடு விலங்காக வாழ்ந்து வந்தான்.

விலங்கின் தோல்களையும், மரப்பட்டைகளையும், மரத்தழைகளையும் ஆடையாக அணிந்து கொண்டான்.
புதிய கற்காலத்தில் மனிதன் ஒரு இடத்தில் தங்கி வாழத்தலைப்பட்டான்.

அப்பொழுது பயிர்த் தொழிலையும் மீன் பிடித்தலையும், நெசவுத் தொழிலையும் கற்றுக் கொண்டான். இதுவே மனிதனின் முன்னேற்றத்தின் முதற்படியாக அமைந்தது.
புதிய கற்காலத்தில் மனிதன் ஏதோ ஒருவகை வாழ்ந்த ஆடையினை உடுத்தியிருக்கின்றான் என்பது தெரிகிறது.

#ஆடை அணிகின்ற பழக்கம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தே வந்திருக்கிறது.

'ஆடையைக்’ குறிக்கின்ற சொல் தொடக்க காலத்தில் #புடவை என்ற பெயரில் வழங்கி வந்திருக்கிறது.
Read 31 tweets
Jun 9
சங்க காலப் போர் முறைகளும், அறங்களும்...!

போரானது ஒரு நாட்டாரின் வீரத்தைப் பறைச்சாற்றுவதற்காக
இருந்ததால், பண்டைத் தமிழர்கள் போரினைப் பெரிதும் போற்றினர்.

போரானது மிக முக்கியத்துவம் பெற்றிருந்த காரணத்தினால், தமிழர்கள் போர்முறைகளைப் பலவாறாகப் பிரித்திருந்தனர்.
வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை முதலியன போருக்குரிய புறத்திணைகளாக வகுத்தனர். ஒவ்வொரு திணையும் பல துறைகளைப் பெற்றிருந்தது.

#வெட்சி - ஒரு நாட்டின் மீது படையெடுக்க விரும்பும் வீரர்கள் முதலில், அந்நாட்டு ஆநிரைகளைக் கவரும் முயற்சி.
#கரந்தை - ஆநிரைகள் பகைவரிடம் சிக்காதவாறு காக்கும் முயற்சி

#வஞ்சி - பகைவர் நாட்டின் மீது படையெடுத்துச் செல்லுதல்

#காஞ்சி - அங்ஙனம் படையெடுத்து வருவோரை, எதிர்த்துப் போரிடுதல்

#உழிஞை - கோட்டையை முற்றுகையிடுதல்.
Read 9 tweets
Jun 9
சங்ககால மக்கள் வாழ்வியலில் மது வகைகள் - 3). #தோப்பி

தினையிலிருந்து வார்க்கப்பட்டது 'தினைக் கள்'. பனை மரத்திலிருந்து பெறப்பட்டது 'பனைக் கள்'. 'தோப்பிக் கள்' எவ்வாறு பெறப்பட்டது? அகநானூற்றின் மூன்று பாடல்களும் (35, 265, 348), பெரும்பாணாற்றுப் படையும் (141-142) இதனை விளக்குகின்றன.
வீட்டின் முற்றத்தில் கோடையில் பழுத்த நல்ல மணம் கமழும் மாம்பழத்துடன்,

பிசின் தன்மையுடைய நன்கு விளைந்த பலாச்சுளையும் சேர்த்து, அவற்றைத் தேனுடன் கலந்து,

வண்டுகள் மொய்க்கும் அரியலுடன், மூங்கில் குழாயில் ஊற்றி முற்ற வைப்பார்கள்.
'பாம்பு கடுப்பன்ன தோப்பி' எனும் தொடர் நன்கு முதிர்ந்து விளைந்த இந்தக் கள்ளைக் குடிக்கும்போது, பாம்பின் சீற்றத்தை ஒத்த வெறி ஏற்படும் என்கிறது.

#தோப்பி என்பது நெல்லிருந்து பெறப்படுவது என்கிறார் #நச்சினார்க்கினியர்.

அகநானூற்றின் 265-ஆம் பாடல் வேறொரு வர்ணனையைக் காட்டுகிறது.
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(