#நம்பி_நாராயணன் ,
தமிழ் முதலியார் சமூகத்தில் நாகர்கோவிலில் பிறந்து, மதுரை தியாகாராஜா இன்ஜினீயரிங் காலேஜில் இன்ஜினீயரிங் படிச்சவர். அதுக்கப்புறம் நாசாவோட Fellowship ஓட அமெரிக்காவின் பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டில படிச்சவர். அதுக்கப்புறம் இஸ்ரோவில் முக்கியமான சயின்டிஸ்டா உயர்ந்தவர்.
இந்திய விண்வெளி ஆய்வுத் துறையின் தந்தை என்று போற்றப்படும் விக்ரம் சாராபாயால் அடையாளம் காணப்பட்டவர். மற்றொரு முன்னோடியான சதீஷ் தவான், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் உள்ளிட்டோருடன் பணியாற்றிய பெருமை கொண்டவர். அப்படிப்பட்டவரின் வாழ்க்கையில் 53 வயதில் விதி விளையாடியது.
1994 நவம்பர் 30-ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்த நம்பி நாராயணன் வீட்டுக்கு கேரள போலீஸ் 3 பேர் வந்திருக்கிறார்கள். தங்களுடன் ஜீப்பில் வரச் சொன்ன அவர்கள், என்ன வீட்டுக்கு வந்திருக்கிறார்கள் என்பதை அறியாத நம்பி,
`என்னைக் கைது செய்திருக்கிறீர்களா?’ என்று அப்பாவியாய் கேட்டிருக்கிறார். இல்லை என்று சொல்லி ஜீப்பின் முன்சீட்டில் அமரவைத்து அவரை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போய்ருக்காங்க. அங்க உயரதிகாரிங்ககிட்ட பேசிக்கோங்க என்று சொல்லி பெஞ்சில் உட்கார வைத்திருக்கிறார்கள்.
இரவு நீண்ட நேரமாகியும் எந்தவொரு உயரதிகாரியும் வராததால், அன்றைய இரவை பெஞ்சிலேயே கழித்திருக்கிறார் இஸ்ரோவின் கிரையோஜெனிக் புராஜெக்ட் டீமின் தலைமைப் பொறுப்பில் இருந்த நம்பி.

காலை கண் விழித்தவரிடம், இந்திய ராக்கெட் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக,
தேசத்துரோக குற்றத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள் கேரள போலீஸார். அதிர்ந்துபோயிருக்கிறார் நம்பி. அதன்பின்னர், உளவுத் துறையினர் விசாரணையில் மனதளவிலும் உடலளவிலும் கடுமையான சித்திரவதைக்கு ஆளாகியிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் சுமார் 30 மணி நேரம் நிற்கவைக்கப்பட்ட நிலையிலேயே விசாரிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், எந்தவொரு குற்றமும் இழைக்காத அவர், பொய் குற்றச்சாட்டுகளை எந்தவொரு சூழலிலும் ஏற்றுக்கொள்ளவே இல்லை. தான் ஒரு நிரபராதி என்பது மட்டுமே அவரது பதிலாக இருந்திருக்கிறது.
#Nambi_Narayanan

நம்பியின் கைதுக்கு முன் 1994 அக்டோபரில் மாலத்தீவைச் சேர்ந்த மரியம் ரஷீதா என்கிற பெண் கைது செய்யப்பட்டார். அவர், இந்திய ராக்கெட் என்ஜின்களின் வரைபடங்களை ரகசியமாக பாகிஸ்தானுக்கு விற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்தக் கைதுக்குப் பிறகே,
அந்த வரைபடங்களை பல லட்ச ரூபாய்க்கு ரஷீதா மூலம் பாகிஸ்தானுக்கு விற்க முயன்றதாக நம்பி மீது குற்றம்சாட்டப்பட்டது. அதன்பிறகு, நம்பியுடன் பணிபுரிந்த சசிக்குமாரன், சந்திரசேகர் மற்றும் லேபர் காண்ட்ராக்ட் எடுத்திருந்த சுதிர் குமார் ஷர்மா.
இதில், சுதிருக்கு இஸ்ரோ என்பதற்கான விளக்கம் கூடத் தெரியாது என்கிறார்கள். அதேபோல், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரஷீதா மற்றும் அவரது தோழி பௌஃசியா ஹூசைன் ஆகிய இருவரையும் அதற்கு முன்பு நம்பி ஒருமுறை கூட சந்தித்ததில்லை. ஒருவழியாக இந்த வழக்கு சிபிஐ கைக்குப் போகவே,
1996-ல் நம்பி மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று கேரள ஹைகோர்ட்டில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது. பின்னர், 1998-ல் நம்பி உள்ளிட்ட 6 பேர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுவித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கு விசாரணையின்போது ஒவ்வொருமுறை நீதிமன்றத்தில் ஆஜரான போதும் ‘தேசத்துரோகி’ என்ற பட்டத்தோடு அவருக்கு எதிராகப் போராட பெரும் கூட்டமே திரண்டிருக்கிறது. இவரது கைது குடும்பத்தினரையுமே கடுமையாகப் பாதித்திருக்கிறது. எந்த அளவுக்கு என்றால்,
ஒரு முறை கடுமையான மழையில் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த நம்பி நாராயணனின் மனைவியை அடையாளம் கண்டுகொண்ட டிரைவர், அவரை நடுரோட்டில் இறக்கிவிட்டுச் சென்றிருக்கிறார். விடுதலையான பின்னர், மீண்டும் இஸ்ரோவில் பணியில் சேர்ந்த அவர் 2002-ல் பணி ஓய்வுபெற்றார்.
#Nambi_Narayanan

அதேநேரம், தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைப் புனைவு செய்ததற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று 25 ஆண்டுகளுக்கு மேலாக சட்டப்போராட்டத்தைத் தொடர்ச்சியாக நடத்தி வந்திருக்கிறார் நம்பி. இந்த விசாரணையில்,
கடந்த 2018 செப்டம்பர் 14-ம் தேதி உச்ச நீதிமன்றம் முக்கியமானதொரு உத்தரவைப் பிறப்பித்தது. நம்பியின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய குழு ஒன்றை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நம்பி கைது செய்யப்பட்டபோது உளவுத் துறையில் துணை இயக்குநராக இருந்த ஸ்ரீகுமார், சமீபத்தில் அகமதாபாத் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். வழக்குகளைப் பொய்யாக ஜோடித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நிலையில்,
தனது வழக்கிலும் இதையே அவர் செய்ததாக நம்பி நாராயணன் கருத்துத் தெரிவித்திருக்கிறார். நம்பிக்கு, ரூ.1.3 கோடி அளவில் இழப்பீடு வழங்க கேரள அரசு முன்வந்திருக்கிறது. இருந்தும், இதற்குப் பின்னணியில் இருப்பவர்கள் இன்னும் சுதந்திரமாகவே இருக்கிறார்கள்.
அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இழப்பீடு என்பது எனக்கு இரண்டாம்பட்சம்தான் என்கிறார் நம்பி…

இந்திய உணர்வுள்ள தமிழனுக்கு துரோகம் செய்தது ஒரு கட்சி வெளிநாட்டு சதிகளுடன்..
நம் துறையிலும் பல நம்பி நாராயணன் கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால்,அவர்கள் எல்லோராலும் 20 வருடங்கள் உச்ச நீதிமன்றம் சென்று போராட முடியுமா?

" சதிச்செயல் செய்தவன் புத்திசாலி "..

"அதை சகித்துக் கொண்டிருந்தவன் குற்றவாளி"..

"உண்மையைச் சொல்பவன் சதிகாரன்"..

"இது உலகத்தில் ஆண்டவன்(கண்டவன் காங்கிரஸ்) அதிகாரம்"!

ஜெய்ஹிந்த்

அதிகம் பகிருங்கள்
நன்றி @ActorMadhavan

தங்களின் படைப்பிற்கு அனந்த கோடி நமஸ்காரம்

திரைப்படம் வெற்றி பெற அன்னை அபிராமி மற்றும் அரங்கன் துணை இருந்து வழி நடத்தட்டும்

ஜெய்ஹிந்த்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #பாரதி_செல்லம்மா( Kaalabala )🇮🇳

#பாரதி_செல்லம்மா( Kaalabala )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Jul 4
அட அவசர குடுக்கைகளா...

😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄

கதவைத் திறந்துகொண்டு இண்டர்வியு ரூமின் உள்ளே தலையை நீட்டினான் ரமேஷ்.

‘பிளீஸ் கம் இன்’ என்றார் ஒருவர்.

போனான்.

‘சிட் டவுன்’

உட்கார்ந்தான்.

அது ஒரு பெரிய ஹால். வலப்பக்கக் கோடியில் பெரிய திரை.
சீலிங்கிலிருந்து டிஜிட்டல் புரஜக்டர் தொங்கியது. கீழே உயர்ந்த கார்ப்பெட். நாற்காலிகள் ஒவ்வொன்றும் அக்பர் சக்கரவர்த்தியின் அரியாசனம் போல் இருந்தன. ஸ்பிளிட் ஏஸிக்கள் ஓசையின்றி ஓடிக் கொண்டிருந்தன. இடப் பக்கச் சுவரின் ஓரம் கசக்கிப் போட்ட காகிதம் ஒன்று உறுத்தலாக இருந்தது.
ஒரு நீள்வட்ட மேசையின் எதிர்ப் புறத்தில் நான்கு பேர் உட்கார்ந்திருந்தார்கள். ரமேஷ் வருவதைப் பார்த்ததும் இடது கோடியில் இருந்தவரைப் பார்த்து கொஞ்சம் பவ்யமாக மற்ற மூவரும் ‘ஐயா, நீங்க கேக்கறீங்களா?’ என்பது போல் வளைந்தார்கள்.
Read 17 tweets
Jul 3
கிறிஸ்தவ மதத்திலே குழப்பம் விளைவித்தேனாம்? -
சர்ச்சுகளைப் சபித்தேனாம் -
பாதிரியார்களை பழித்தேனாம் -
கன்னிகாஸ்திரிகளை கடுமையாகத் திட்டினேனாம் -

இப்படியெல்லாம், குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் நான் -
ஆம், கிறிஸ்துவ மதத்திலே குழப்பம் விளைவித்தேன் -
மதங்கள் கூடாது என்பதற்காக அல்ல -
மதம் மாற்றும் பக்கிகளின் துண்டுச் சீட்டு ரோதனை கூடாது என்பதற்காக -

ஆம், சர்ச்சுகளைச் சபித்தேன் -
சர்ச்சுகள் கூடாது என்பதற்காக அல்ல -
சர்ச்சுகள் நவீன யுகத்தின் லாட்ஜ்சுகள் ஆகி விடக் கூடாது என்பதற்காக -

பாதிரிகளைப் பழித்தேன் -
அவர்கள் பாதிரிகள் என்பதற்காக அல்ல -
நிஜமாகவே ஃபாதர் ஆக தினம், தினம் முயல்கிறார்கள் என்பதற்காக -

கன்னிகாஸ்திரிகளை கடுமையாகத் திட்டினேன் -
Read 14 tweets
Jul 3
#nambinarayanan
#Rockertery

சரித்திரம் நம் கண் முன்னே கடந்து செல்லும் போது சாமான்யனின் கண்களுக்கு தெரிவதில்லை!

சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய விஞ்ஞானியும் அஞ்சாத நெஞ்சுரம் கொண்டவருமான நம்பிநாராயணனை வணங்குகிறேன்.
🙏🙏🙏🙏🚩🚩🚩🙏🙏🙏
நாம் சரித்திர பாட புத்தகத்தில் படிக்கும் அத்தனை தேச பக்தர்களுக்கும் சற்றும் குறைவில்லாதவர் இவர்.

கோபுரத்தில் வைத்து அடுத்த 10 தலைமுறைகளுக்கு தலையில் வைத்து கொண்டாட வேண்டியவரை நம் நாடும் அதில் இருந்த உண்மையான தேசதுரோகிகளும்
காசுக்காக எப்படி முடக்கினர் என்பதை உலகுக்கு வெளிப்படுத்திய B.M. Nair மற்றும் நடிகர் இயக்குனர் மாதவனுக்கு நன்றிகள்.🙏

ஒவ்வொரு பிறவிக்கும் ஒரு காரணம் இருக்கும். மாதவன் தன் பிறவி காரணத்தை கண்டுபிடித்து முடித்து விட்டார் என்றே தோன்றுகிறது.
Read 5 tweets
Jul 2
கடனா? சொத்தா?

கதை

2ஆம் பகுதி

2/2

அதுதான் கொஞ்சம் மனசை இம்சிக்கிறது.... சரி இப்போ எனக்கு ஒரு யோஜனை தோணறது.... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்...." என்று நான் நினைத்ததை, என் மனசுக்கு சரின்னு பட்டதை,
அதுதான் எங்களுக்கு ஏற்ற மீதிவாழ்க்கைக்கு வழி என்று தோன்றியதை சொன்னேன்....

"தனம்மா....நம்மால முடியுமா....இந்த வயசுக் காலத்திலே...." அவருடய தயக்கத்தையும் பயத்தையும் போக்கித் தெளியவைப்பதற்காக நான் அவருக்கு நிறைய பேசி கவுன்சிலிங் செய்து
சம்மதிக்க வைத்தேன். அடுத்த இரண்டு நாட்களும் வெளியே போக வரன்னு எங்களுக்கு வேலை சரியாக இருந்தது.நாங்களும்தான் பிஸி....

நாங்கள் திட்டம் போட்டபடி எல்லாம் எங்களுக்கு சாதகமாகவே அமைந்தது.... "ஆனாலும் உனக்கு நெஞ்சுதைர்யம் ஜாஸ்திதான் தனம்...."
Read 20 tweets
Jul 2
கடனா? சொத்தா?

நீண்ட பதிவு

இரண்டு பாகமாக

1/2

"அடியேய் தனலட்சுமி, அமெரிக்காவிலிருந்து நம்ம பையன் ரகு கூரியரில் லெட்டர் அனுப்பியிருக்கிறான்....வாவா...." அவசரமாக கணவர் கத்தினார்.நான் என்ன வாசுகியா....
வள்ளுவர் கூப்பிட்டதும் கிணற்று வாளியை அப்படியே அந்தரத்தில் நிறுத்திவிட்டு ஓடுவதுபோல்....கேஸ் அடுப்பில் இரும்புக் கரண்டியில் ரசத்துக்குத் தாளிக்க நெய் ஊற்றி வைத்திருக்கிறேன்....அப்படியே ஓடினால் என்ன ஆகும்....நெய் பத்திண்டு....அய்யய்யோ வேண்டாண்டா சாமி....
வயசானதுகள் ரெண்டும் இப்படியா கவனமில்லாமல் இருப்பான்னு ஏச்சும் பேச்சும் கேட்டுக்கணும்....இருக்கட்டுமே கொஞ்சநாழி....

நெய் காய்ந்ததும் கடுகைப் போட்டேன். பட பட வென்று வெடித்து முடித்ததும் காத்திருந்து.... சிலருக்கு என்ன அவசரமோ....
Read 25 tweets
Jul 1
காலம் மாறிப் போச்சு
¶நட்பு உடைந்து
முகநூலானது ...
¶சுற்றம் உடைந்து
வாட்சப் ஆனது ...
¶வாழ்த்துக்கள் உடைந்து
ஸ்டேட்டஸ் ஆனது ...
¶உணர்வுகள் உடைந்து
ஸ்மைலியாய் ஆனது ...
¶குளக்கரை உடைந்து
குளியலறை ஆனது ...
¶நெற்களம் உடைந்து
கட்டடமானது ...
¶காலநிலை உடைந்து
வெப்ப மயமானது ...
¶வளநிலம் உடைந்து
தரிசாய் ஆனது ...
¶துணிப்பை உடைந்து
நெகிழியானது ...
¶அங்காடி உடைந்து
அமேசான் ஆனது ...
¶விளைநிலம் உடைந்து
மனைநிலம் ஆனது ...
¶ஒத்தையடி உடைந்து
எட்டு வழியானது ...
¶கடிதம் உடைந்து
இமெயிலானது ...
¶விளையாட்டு உடைந்து
வீடியோ கேம் ஆனது ...
¶புத்தகம் உடைந்து
இ-புக் ஆனது ...
¶சோறு உடைந்து
'ஓட்ஸ்'சாய்ப் போனது...
¶இட்லி உடைந்து
பர்கர் ஆனது ...
¶தோசை உடைந்து
பிட்சாவானது ...
¶குடிநீர் உடைந்து
குப்பியில் ஆனது ...
¶பசும்பால் உடைந்து
பாக்கெட் ஆனது ...
¶வெற்றிலை உடைந்து
பீடாவானது ...
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(