நடிகர் ராஜ்கிரண் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் “நான் உடம்பு முழுக்க தங்க நகைகளை அணிந்து கொண்டு இளையராஜாவைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அப்போது அவர் ‘எதற்கு இத்தனை நகைகள்’ என்று கேட்டார். நான் ‘ஒரு ஆத்ம திருப்திக்காக’ என்று சொன்னேன். அதற்கு இளையராஜா 1/5
சட்டென்று ‘ஆத்மாவுக்கு ஏதப்பா திருப்தி?’ என்று கேட்டார். அவரது பதில் என் முகத்தில் அறைந்தது போல இருந்தது. அவரைப் போல பற்றற்ற வாழ்க்கை வாழ்கிறேனோ இல்லையோ, ஆனால், அன்றே நான் அணிந்திருந்த அத்தனை நகைகளையும் கழற்றி வைத்துவிட்டேன்” என்று…
நடந்த சம்பவம் உண்மையா இல்லையா 2/5
என்று தெரியாது. ஆனால் இளையராஜா அப்படிச் சொல்லக்கூடியவர்தான் என்பது நமக்கு வெளிப்படையாகத் தெரிந்த ஒன்றுதானே.
இப்போது இசைஞானி இளையராஜாவுக்கென என்னிடம் சில எளிய கேள்விகள் மட்டுமே மிச்சமிருக்கின்றன.
உங்கள் மேதமை என்ன, உங்கள் தகுதி என்ன, உங்களுடைய வாழ்நாள் ரசிகர்களில் 3/5
பெரும்பாலோரே எதிர்க்கும் ஒரு கட்சியின் ஆதரவில், உங்களுக்கு இப்படி ஒரு அலங்காரப் பதவி அளிக்கப்பட்டதில் உள்ளபடியே உங்களுக்கு மகிழ்ச்சியா, இவ்வளவுதானா நீங்கள், ‘ஆத்மாவுக்கு ஏதப்பா திருப்தி?’ போன்ற எலைட் சாமியார்த்தனமான உங்கள் உபதேசங்களெல்லாம் 4/5
ஊருக்கு மட்டும் தானா, உங்களுக்கில்லையா? - excerpts from the Facebook post of Elangovan Muthiah 5/5 #Ilaiyaraaja
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh