#காமராசர்

முதல்வராக இருந்த சமயம்.*

அவரை காண அலுவலகம் தேடி ஒரு எளிய மனிதர் கையில் ஒரு மஞ்சள் பையுடன் வருகிறார்.

சிறிது நேரத்தில் முதல்வரைகாண அனுமதி கிடைத்ததும், முதல்வரின் அறைக்குள் செல்கிறார் அந்த நபர்.

உள்ளே வந்த நபரை சட்டென அடையாளம் கண்டுகொண்ட முதல்வர். ImageImage
*"என்ன ரெட்டியாரே, செளக்கியமா என்ன சேதி? இல்ல சும்மா பார்க்க வந்தீரா?* என அழைத்து அருகில் அமரச் செய்தார்.

இவருக்கோ தயக்கம். வந்த சேதியை எப்படி சொல்ல, முதல்வரோ அவரின் தோளில் கைவைத்து.

*"பரவா இல்லை. என்ன சேதியானலும் சொல்லுங்க ரெட்டியார்"*
*"இல்ல என் மகனுக்கு கல்யாணம் வச்சிருக்கேன்."* என தயங்க,

*"அடடே நல்ல சேதிதானே, இதுக்கு ஏன் ரெட்டியாரே தயக்கம். சரி, நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க"* என்று தோளில் தட்ட......

*இல்ல, கல்லாணத்துக்கு நீங்க வரனும்.* நீங்கதான் தலைமை தாங்கனும். ஊரெல்லாம் சொல்லிட்டன்.
பத்திரிகை கொடுத்துட்டு சொல்லதான் நேர்ல வந்தேன்.

நீங்க எப்படியும் வருவீங்கன்னு எனக்கு நம்பிக்கை. அதனால அப்படி சொல்லி முடிவெடுத்துட்டன். தப்பா நினைச்சுக்காதீங்க, என்று ரெட்டியார் இழுக்க.....

காமராஜருக்கு பட்டென்று கோபம். முகம் இறுகிப்போனது.
*"எந்த நம்பிக்கையில நீங்க முடிவெடுத்தீங்க. யாரைக்கேட்டு இப்படி மத்தவங்ககிட்ட சொன்னீங்கன்னேன்"* என்று கடுமை கூட்டினார்.

ரெட்டியாருக்கு கண்கள் கலங்கியது.

*"தப்பா நினச்சுக்காதீங்க. அன்னைக்கு உங்களுக்கு வேலூர்ல ஒரு கூட்டம் இருக்கு. பக்கத்துலதான் என் ஊர்.
அதனால கல்யாணத்துக்கு கூப்பிட்டா கட்டயாம் வருவீங்கன்னு நினைச்சுட்டேன்"* என்றார்.

பெருந்தலைவருக்கு கோபம்.

*"உங்க வீட்டு கல்யாணத்துக்கு வர்றதா முக்கியம். அதுவா வேலை. வேற வேலை இல்லையா? போங்க, வரமுடியாது. நீங்க போய்ட்டு வாங்க"* என்று பட்டென்று கூறி அனுப்பி வைத்துவிட்டார்.
முகத்தில் அடித்ததை போல் ஆனது ரெட்டியாருக்கு.

நடந்ததை வெளியில் சொல்லிக் கொள்வில்லை. *முதல்வர் வரமாட்டார்* என்று எப்படி சொல்வது?

பேசாமல் கல்யாணத்தை அவரது வீட்டிலேயே எளிமையாக நடத்துகிறார். அவரது வசதிக்கு அப்படித்தான் நடத்த முடியும்.
கடைசியில் *காமராஜர் வரமாட்டார்* என்பதும் ஜனங்களுக்கு புரிந்தது, வந்தவர்கள், போனவர்கள் எல்லாம் புறம் பேசினார்கள்.

_*"என்னமோ நானும் காமராஜரும் ஒன்னா சிறையில் இருந்தோம். கூட்டாளிங்க. என்வீட்டுக் கல்யாணத்துக்கு வருவார்னு"*_
பெரிசா தம்பட்டம் அடிக்சுகிட்டாரு…பார்த்தீங்களா அலம்பல. என்ற ஏளனப் பேச்சு கூடியது.

மனம் உடைந்துபோன ரெட்டியாருக்கு உடல் கூனிப்போனது. அப்படியே வீட்டிற்குள் சுருண்டு படுத்துவிட்டார். எப்படி வெளியில் தலை காட்ட முடியும்.
_"*காமராஜரும் நானும் பலவருஷம் ஒன்னா சிறையில் இருந்த நண்பர்கள்"*_ என்று ஊரில் நட்புக் கதையை சொன்னவராயிற்றே.

_*திருமணத்திற்கு முதல்வர் கட்டாயம் வருவார் என்று நம்பியவாயிற்றே*_

அழுதபடி படுத்துக்கிடந்தார். அந்த கல்லாயான வீடே வெறிச் சோடிப்போனது.
_*திடீரென ஒரு கார் அங்கு வந்தது. வந்தவரோ.....*_

*"முதல்வர் காமராஜர் கொஞ்ச நேரத்தில் வரபோகிறார்"* என்ற செய்தியைச் சொல்லி போய்விட்டார்.

ரெட்டியாருக்கு நம்பிக்கையில்லை. எந்த நம்பிக்கையில் திரும்ப ஊருக்குள் சொல்வது! நம்பிக்கையற்று உட்கார போன வேளையில்.
சட்டென ஓர் கார் வந்து நின்றது. பெருந்தலைவரே வந்து இறங்கினார். இரண்டு, மூன்று பெரிய சாப்பாட்டு கேரீயரில் சாப்பாட்டோடு.

ரெட்டியாரால் நம்பமுடியவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் காமராசர் வந்த செய்தி காட்டுத் தீயாய் பரவி கூட்டம் சேர்ந்துவிட்டது.
ரெட்டியார் முதல்வரை கட்டித்தழுவிக் கொண்டார். குலுங்கி, குலுங்கி அழுதார். தட்டிக் கொடுத்து சமாதானம் சொன்ன காமராஜர்.

*"உங்க கஷ்டம் எனக்குத் தெரியும் ரெட்டியாரே. சுதந்தரம் போராட்டம், ஜெயில்னு எல்லாத்தையும் இழந்துட்டீங்க.* எனக்குத் தெரியும்.
அதான் பையனுக்கு கல்யாணம்னு சொன்னப்பவே பட்டுனு யோசிக்காம அப்படிச் சொன்னன். நான் வர்றதா சொல்லியிருந்தா நீர் இருக்கிற இந்த நெலமில கடன் வாங்குவீர்.

*"முதல்வர் வர்றார்னு ஏதாவது பெரிசா செய்யனும்னு போவீர். அதான் அப்படிச் சொன்னன். மன்னிச்சுடுப்பா,
உன் வீட்டுக் கல்யாணத்துக்கு வர்றாம எங்க போவேன்"* - என்று ஆரத்தழுவி கண்ணீர் சிந்தினார்.

பிறகு வாசலிலேயே பாய்விரித்து எடுத்து வந்த சாப்பாட்டை எல்லோருக்குமாக போடச் சொல்லி அந்த குடும்பத்தாரோடு தானும் உட்கார்ந்து சாப்பிட்டார்.
_*"இந்த சாப்பாட்டு சுமையைக்கூட அவருக்கு கொடுத்துவிடக்கூடாது"*_ என்று தன் பணத்தைக்கொடுத்து வாங்கி வந்தாரென்றால். ரெட்டியாரின் நிலை எப்படியிருக்கும் என்பதை கூறத்தேவையில்லை.

நட்பை போற்றியவர் காமராஜர்"*_ என்பதற்கு இந்த நிகழ்வைக் காட்டிலும் வேறு எடுத்துக்காட்டு தேவையில்லை.. Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #பாரதி_செல்லம்மா( Kaalabala )🇮🇳

#பாரதி_செல்லம்மா( Kaalabala )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Jul 17
#பாரதம்
#மகா_பாரதம்

பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் மகாபாரதப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

18 நாட்கள் நடைபெற்ற இந்தப் போரின் 14 ஆம் நாள் போர் தொடங்க இருந்தது.

அதற்காக பஞ்ச பாண்டவர்கள் ஐவரும், போர்க்களம் புறப்பட்டுக் கொண்டி ருந்தனர். Image
அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக இருந்த
ஸ்ரீ கிருஷ்ணரும் அங்கே இருந்தார்.

அவரிடம் திரவுபதி ஒரு கேள்வியைக் கேட்டாள்.

“கிருஷ்ணா..

நீ அனைத்தும் அறிந்தவன்.

உலகில் நடக்கும் செயல்களை மவுனமாக பார்த்துக் கொண்டிருப்பவன்.

இந்தப் போரில் வெற்றிபெறுபவனும் நீ..

வீழ்பவனும் நீயே.. Image
எல்லாம் அறிந்த உன்னிடம் நான் ஒன்றை கேட்க வேண்டும்.

அது யாதெனில்..

இன்றையப் போரில் வெற்றி யார் பக்கம் இருக்கும்.?”

அதைக் கேட்டு புன்னகைத்த கிருஷ்ணன்,

“எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் உனக்கு என்ன அவ்வளவு ஆர்வம் திரவுபதி.? Image
Read 23 tweets
Jul 15
சீடன் ஒருவன், “குருவே! இறைநம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா?” என்று சந்தேகம் கேட்டான்.

“சமயம் வரும்போது சொல்கிறேன்” என்றார் குரு.

சில நாட்கள் கழித்து அந்தச் சீடன், ஆஸ்ரமப் பசு ஒன்றை மேய்ச்சல் முடிந்து தொழுவத்தில் கட்டி வைக்க கூட்டிச் சென்றான். Image
அச்சமயம் அங்கு வந்த குருநாதர், “சீடனே… பசுவுடன் நீ வருகிறாயா? அல்லது பசு உன்னுடன் வருகிறதா? பசுவை நீ ஓட்டுகிறாயா? பசு உன்னை அழைத்துச் செல்கிறதா?” எனக்கேட்டார்.

குழம்பிய சீடன், “சுவாமி என்ன சொல்ல வருகிறீர்கள்?” எனக்கேட்டான். Image
“இந்தப் பசுவை நீதானே பராமரிக்கிறாய்? இது உன் பேச்சைக் கேட்காதா? ஏன் கயிறு கட்டி இழுத்துச் செல்கிறாய்?”

“கயிறை விட்டால் அது ஓடிவிடும்!”

“அப்படியென்றால் பசு உன் கட்டுப்பாட்டில் இல்லைதானே?”

“குருவே, பசு எனக்குப் பழக்கம்தான். பன்னிரண்டு வருடங்களாகப் பராமரிக்கிறேன். Image
Read 8 tweets
Jul 15
விருதுப்பட்டி ஓட்டு வீட்டில் பிறந்தவன்...

நாடாளுமன்றக்
கூரைக்கு அடியில் அரியாசனத்தில்
யார் அமர வேண்டும் என்பதை இரண்டு முறை தீர்மானித்தான்!

ஏழைத் தாய்க்குக்
குழந்தையாகப் பிறந்தவன்
பாரதத் தாய்க்குத்
தவப் புதல்வன் ஆனான்! Image
அவன் கட்டி வைத்த பள்ளியில்
படித்த தற்குறிகளே
அவனைக் குறிவைத்து
அரசியலில் வீழ்த்தினர்!

அவன் எந்த ராணியை
ஏணியாக மாறி
அரியணையில் ஏற்றினானோ
அந்த ராணியே வில்லியாகி
ஏணியை எட்டி உதைத்தாள்!
உணவுக்கு வழியின்றி
உழவுக்குப் போன
பிள்ளைகளை
அழைத்து வந்து
பள்ளிக் கூடத்தையே
உணவுக் கூடமாக்கி
அன்னத்தோடு அறிவையும் படைத்தவன்!

அவன் கட்டிப்போட்ட
அரசுக் கல்லூரிகளே
மாடு மேய்த்தவர்களைப் பட்டதாரிகள் ஆக்கின!

கல்லூரி மதில்சுவரைத் தொட்டுப் பார்க்கவும் வசதியற்ற பலபேர்...
Read 8 tweets
Jul 14
*சிவ_சிவ*

இப்போதே சொல்லிவிடுகிறேன்.... இப்பதிவை வரி விடாமல் தொடர்ந்து படிப்பவருக்கு சிவபெருமானின்
"சிறப்பு பம்பர் பரிசு" காத்திருக்கிறது ஐயா....!

#அருள்மிகு_விருத்தாம்பிகை_பாலாம்பிகை_உடனுறை_அருள்மிகு_விருத்தகிரீஸ்வரர்_திருக்கோவில்,
#விருத்தாசலம். Image
ஆராய்சியாளர்களால்
3 1/2 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என கணிக்கப்பட்ட தலம்.
3000 ஆண்டுகள் பழமையான வன்னிமரத்தை தலவிருட்சமாக கொண்ட தலம்.
பிரளயகாலத்திலும் அழியாத தலம்.
நடுநாட்டின் 22 சிவதிருத்தலங்களில் 9வது தலம்.
சைவ சமயத்தின் 28 ஆகமங்களுக்கும் 28 லிங்கங்களை Image
முருகபெருமானே நிலைநிறுத்தியதாக அறியப்படும் ஒரே தலம்.
இல்லற வாழ்விலும் ஈசனை இடைவிடாது வழிபட்ட நாதசர்மாவும் அனவர்த்தியும் சிவகணங்களாகவே ஆன தலம்.
சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனை வேண்டி பெற்ற பன்னீராயிரம் பொற்காசுகளை மணிமுத்தாற்றில் இட்ட தலம். Image
Read 12 tweets
Jul 14
ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான்.

அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான்.

அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர்.

இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே,
வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான்.

நேரம் போய்க்கொண்டே இருந்தது. இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள்.
சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள்.

இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம்.

எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு?

எவ்வளவு போராட்டம்?

எவ்வளவு இழிசொல்?
Read 15 tweets
Jul 13
ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க, ஒரு சிற்பியை அணுகி சென்றார். அவர் சென்ற நேரம் அந்த சிற்பி ஒரு பெண் கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார்.
கொஞ்ச நேரம் அவர் செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர், சிற்பி செதுக்கிய இன்னொரு சிலை அதே மாதிரி இருப்பதை கவனித்தார்.
உடனே பணக்காரர், ”ஒரே கோவிலில் எப்படி ஒரே மாதிரி சிலைகள் வைப்பார்கள்? இல்லை... இந்த இரண்டு சிலைகளும் வெவ்வேறு கோவிலுக்காக செதுக்குகிறீர்களா?” என்று சிற்பியிடம் கேட்டார்
சிற்பி சிரித்துக்கொண்டே, “இல்லை ஐயா. கீழே கிடக்கும் சிலையானது உடைந்து போனது...” என்றார்.
பணக்காரர் ஆச்சரியத்துடன், ”என்ன சொல்றீங்க... மிகவும் அழகாக தானே இருக்கிறது அந்த சிலை. எந்த பாகமும் உடையக்கூட இல்லையே!” எனக் கேட்டார்
“அந்த சிலையின் மூக்கில் சின்ன கீறல் இருக்கிறது... பாருங்கள்” என்றார் சிற்பி.
“ஆமாம்!.அது சரி....
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(