M.SivaRajan Profile picture
Jul 15, 2022 27 tweets 9 min read Read on X
🌹#ஆடி_மாத_பிறப்பு🌹

தக்ஷிணாயன புண்ணிய கால பிறப்பு சூரியன் தனது பாதையை தென் புறத்தை நோக்கி செலுத்த ஆரம்பிக்கும் நாள்.

தட்சிணாயன புண்ணிய காலம்

வடக்கு கிழக்கு திசையில் இருந்து சூரியனின் தென் கிழக்குப்பயணத்தை, தட்சிணாயன புண்ணிய காலம்’ என்று குறிப்பிடுவர்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சூரியன் தென் பகுதியுலும் வட பகுதிலும் வானில் காணப்படுவதே இந்த பக்க்ஷ மாறுதல் எனப்படுவது.

இன்றையில் இருந்து ஆறுமாதங்கள் “பிதுர் பக்ஷம் ” என அழைக்கப்படுகிற புண்ணிய மாதங்கள்
இன்று சூரியன் தெற்கு பகுதியான “பிதுர் உலகின் ” பக்கமாக பிரயாணத்தை தொடங்குவதால்! தென் புலத்தான் என்று யமனுக்கு பெயர்! அந்த உலகை தனது கதிர்க்காளால் சகதியூட்ட போக்கிற சூரியனை இன்று வழிபாட்டு நமது உடல் செயல் மற்றும் சுகங்களை அளிக்கும் பித்துர்களை வணங்கி போற்றுவோம்!
இந்த ஆறுமாதங்களில் நிறைய இறை வழிப்பாட்டு உற்சவங்கள் நடைபெறும் ஒவ்வொரு மாதங்களிலும் ஒவ்வொரு தெய்வங்களுக்கு ! இந்த தக்ஷிணாயனதில் “சாதுர் மாச்யம் ” எனப்படும் நான்கு மாதங்களில் இந்த இறை வழிபாட்டு திருவிழாக்களும் நிர்ணயக்கப்பட்டு இருக்கின்றன .
இந்த நான்கு மாதங்களில் சன்யாசிகள் “சதுர்மாஸ்ய சங்கல்பம் ” எடுத்துகொண்டு இருப்பார்கள் , சன்யாசிகள் பிதுர் உலகில் , வாரிசு இல்லாத , மிருகங்கள் மற்றும் தாவர பல வித உயிர் இனங்களுக்காக ..

இறைவனை வேண்டி தவம் இருக்கும் மாதங்கள் இவை .
நமது பிதுர்களையும் அவர்களுக்கு மேலான தெய்வங்களையும் வணங்கும் நான்கு மாதங்கள் ஆரம்பித்து விட்டன! ஆஷாட (ஆடி ) மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று தொடங்கி கார்த்திகை மாதம் வளர் பிறை ஏகாதசி அன்று முடியும் வரை இந்த அனைத்து திருவிழாக்களும் அமைக்கப்பட்டு இருக்கின்றன ..
தட்சிணாயன புண்ணிய காலத்தின் முதல் மாதம் ஆடி…!

ஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கின்றனர். பொதுவாக தமிழ் விழாக்கள் நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை.
நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டும், கிழமைகளையும் கொண்டே நடத்தப்படுகிறது.
ஆடி மாதத்தில் 18வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா இதுவாகும்.

தட்சிணாயன காலத்தில் பகலை விட இரவுப் பொழுது கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
குளிர்ச்சியான காலமாகவும் தட்சிணாயனம் கருதப்படுகிறது.

எனவே அதன் தொடக்க நாளான ஆடி மாதம் முதல் நாளன்று வீடுகளில் தேங்காய்ப்பால் செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்வது வழக்கம். ஆடி மாதம் முதல் நாளில் புதுமணத் தம்பதியரை மாமனார் இல்லத்துக்கு அழைத்து,
அவர்களுக்கு வெள்ளிப் பாத்திரத்தில் தேங்காய்ப்பால் வழங்கும் வழக்கமும் உண்டு.பொதுவாக, காலைப் பொழுதை விட மாலைப் பொழுது விழாக் கொண்டாட்டங்களுக்கு ஏற்றதாக இருக்கும். அவ்வாறே, தேவர்களின் மாலைப் பொழுது தட்சிணாயன காலத்தில் வருவதால்,
பெரும்பாலான பண்டிகைகள் தட்சிணாயன காலத்தில் இருப்பதைக் காணலாம்.

ஆடி மாதத்திலே ஆடிப் பூரம், ஆடிப் பெருக்கு, ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், வரலட்சுமி விரதம் ஆகியவை எல்லாம் மிகவும் விசேஷமானவை.

குறிப்பாக அம்பிகை மகாலட்சுமி போன்ற பெண் தெய்வங்களுக்குரிய மாதமாக ஆடி மாதம் போற்றப்படுகிறது.
அதைத் தொடர்ந்து ஆவணி மாதத்தில், விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜயந்தி, புரட்டாசி மாதத்தில் நவராத்திரி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி, ஐப்பசி மாதத்தில் தீபாவளி, கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபத் திருவிழா, கந்த சஷ்டி, மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம்
என இப்படிப் பலப்பல முக்கியமான பண்டிகைகள் யாவும் தட்சிணாயனக் காலத்துக்குள் வருவதைக் காணலாம்.

வேதம் பயிலத் தொடங்குதலாகிய உபாகர்மாவும், காயத்ரி ஜபமும் தட்சிணாயன காலத்தில் ஆவணி அவிட்டத்தை ஒட்டி அனுஷ்டிக்கப்படுகின்றன.
பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வதற்கு உகந்த காலமான மகாளய பட்சமும் தட்சிணாயன காலத்தில் புரட்டாசி மாதத்தில் வருவதைக் காண்கிறோம்.

புரட்டாசி சனிக்கிழமைகள் திருமலையப்பனுக்கு மிகவும் உகந்த நாட்களாக இருப்பதையும் காண்கிறோம்
தேவர்களின் இரவு பொழுதான தட்சிணாயனத்தின் கடைசி மாதமான மார்கழி தேவர்களின் பகலுக்கு முந்தைய காலமான பிரம்ம முகூர்த்த காலம் (பின்மாலைப் பொழுது) ஆகும்.

பிரம்ம முகூர்த்தம் இறைவழிபாட்டுக்கு உகந்த காலமாக இருப்பதால் மார்கழி மாதம் முழுக்க முழுக்க இறைவழிபாட்டுக்கு என்றே
அர்ப்பணிக்கபடுகிறது
உத்தராயண, தட்சிணாயன காலங்களுக்கு அதிபதிகளான தேவர்கள் உண்டு. அந்த தேவர்களுக்கென்று தனி உலகங்களும் இருப்பதாகச் சாத்திரங்கள் சொல்கின்றன. பகவத் கீதை எட்டாம் அத்தியாயம் இருபத்து நான்காவது ஸ்லோகத்தில்,
அக்னிர்ஜ்யோதிர: அஹச்சுக்ல:
ஷண்மாஸா உத்தராயணம்
தத்ர ப்ரயாதா கச்சந்தி
ப்ரஹ்ம ப்ரஹ்மவிதோ ஜனா:
என்று கண்ணன் குறிப்பிடுகிறான்.
ஒளியின் லோகம், பகல் தேவதையின் லோகம், வளர்பிறை தேவதையின் லோகம், உத்தராயண தேவதையின் லோகம் ஆகியவற்றைக் கடந்து செல்லும் பிரம்ம ஞானிகள் பரப்பிரம்மத்தை அடைகிறார்கள்.
அவர்கள் மீண்டும் வந்து பூமியில் பிறப்பதில்லை.

அடுத்து இருபத்தைந்தாம் ஸ்லோகத்தில்,
“தூமோ ராத்ரி: ததா க்ருஷ்ண:

ஷண்மாஸா தக்ஷிணாயனம்
தத்ர சாந்த்ரமஸம் ஜ்யோதி:
யோகீ ப்ராப்ய நிவர்ததே”
என்கிறான் கண்ணன். அதாவது,
புண்ணியம் செய்த நல்லோர்கள்
புகையின் லோகம், இரவு தேவதையின் லோகம், தேய்பிறை தேவதையின் லோகம், தட்சிணாயன தேவதையின் லோகம் ஆகியவற்றைக் கடந்து சென்று சந்திர சம்பந்தமான ஒளியை அடைந்து, மீண்டும் பூமியில் வந்து பிறக்கிறார்கள்.இப்படி மீட்சியில்லா வைகுண்டத்தை அடைபவர் உத்தராயண
தேவதையின் உலகம் வாயிலாகவும், புண்ணியம் செய்து நல்லுலகம் சென்று மீள்பவர்கள் தட்சிணாயன தேவதையின் உலகம் வாயிலாகவும் பயணிப்பதை இந்த கீதை ஸ்லோகங்கள் மூலம் அறிய முடிகிறது.

சில வைணவத் திருத்தலங்களில் பெருமாளின் கருவறைக்கு
உத்தராயண வாசல், தட்சிணாயன வாசல் என இரு வாசல்கள் இருப்பது வழக்கம். உத்தராயண காலத்தில் உத்தராயண வாசலும் தட்சிணாயன காலத்தில் தட்சிணாயன வாசலும் திறந்திருக்கும்.அதில் மிகவும் பிரசித்தமான உத்தராயண தட்சிணாயன வாசல்களைக் கொண்ட திருத்தலம் திருக்குடந்தை என்னும் கும்பகோணம்.
கும்பகோணத்துக்கு ‘பாஸ்கர க்ஷேத்திரம்’ (சூரியன் வழிபடும் க்ஷேத்திரம்) என்று பெயர். குடந்தையில் கோவில் கொண்டுள்ள சார்ங்கபாணிப் பெருமாளையும் சக்கரபாணிப் பெருமாளையும் சூரியன் தினந்தோறும் வழிபடுகிறார்.
அவர் வந்து வழிபாடு செய்து விட்டுச் செல்வதற்கு ஏதுவாக, உத்தராயண காலத்தில் சார்ங்கபாணி, சக்கரபாணி சுவாமி திருக்கோவில்களில் கருவறைகளின் உத்தராயண வாசல் திறந்திருக்கும்.
சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கும் அக்காலத்தில் வடக்கு வாசலான உத்தராயண வாசல் வழியே வந்து வழிபாடு நடத்தி விட்டுச் செல்வார்.

அவ்வாறே தட்சிணாயன காலத்தில் தெற்கு நோக்கிப் பயணிக்கும் சூரியன், தெற்கு வாசலான தட்சிணாயன வாசல் வழியே வந்து வழிபாடு நடத்தி விட்டுச் செல்வார்.
இன்றும் இந்த இரண்டு திருக்கோவில்களிலும் உத்தராயண புண்ணிய காலம் தொடங்கும் நாளில் உத்தராயண வாசல் திறக்கும் நிகழ்வும், தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கும் நாளில் தட்சிணாயன வாசல் திறக்கும் நிகழ்வும் வெகு விமரிசையாக நடப்பதைக் காணலாம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Jun 28
*#தினம்_ஒரு_திருப்புகழ்*

தத்தனா தானனத் ...... தனதான
தத்தனா தானனத் ...... தனதான

......... பாடல் .........

பத்தியால் யானுனைப் ...... பலகாலும்
பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி

முத்தனா மாறெனைப் ...... பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் ...... கருள்வாயே Image
உத்தமா தானசற் ...... குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் ...... கிரிவாசா

வித்தகா ஞானசத் ...... திநிபாதா
வெற்றிவே லாயுதப் ...... பெருமாளே.
#பொருள்

பத்தியால் யானுனை ... அன்பினால் உன்னை உறுதியாக

பலகாலும் பற்றியே ... பல நாட்களாக விடாது பற்றிக்கொண்டு

மாதிருப்புகழ் பாடி ... உயர்ந்த திருப்புகழைப் பாடி

முத்தனாம் ஆறெனை ... ஜீவன் முக்தனாகும் வழியிலே என்னை
Read 6 tweets
May 22
#திருப்புகழ்

வைகாசி விசாகம் சிறப்பு பதிவு :

ஸ்ரீ அருணகிரிநாத ஸ்வாமிகள் இயற்றிய திருப்புகழ் தொகுப்பில் இருந்து,

அனைவரும் பாராயணம் செய்யும் வகையில்,

மிகவும் சிறிய அளவிலான திருப்புகழ் இந்த பதிவில் பதியப்படுகிறது.

அனைவரும் இந்த பதிவை Retweet செய்யவும். Image
#திருப்புகழ்

அற்றைக்கு இரை தேடி அத்தத்திலும் ஆசை
பற்றி தவியாத பற்றை பெறுவேனோ
வெற்றி கதிர் வேலா வெற்பை தொளை சீலா
கற்று உற்று உணர் போதா கச்சி பெருமாளே
முட்டுப்பட்டு கதிதோறும் முற்ற சுற்றி பல நாளும்
தட்டுப்பட்டு சுழல்வேனை சற்று பற்ற கருதாதோ
வட்ட புட்ப தல மீதே வைக்கத்தக்க திரு பாதா
கட்டத்து அற்றத்து அருள்வோனே கச்சி சொக்க பெருமாளே
Read 23 tweets
Feb 21
#கோடி_அர்ச்சனை

மிக முக்கியமான பதிவு.

மிக நீண்ட பதிவு.

பொறுமையாக படித்து அருள் பெற வேண்டுகிறேன்.

*1,00,000,00 (ஒரு கோடி)* அர்ச்சனையின் நிறைவான,
*1,00,000 (ஒரு லட்சம்) ஹோமம்,*
*1008 + 1008 = 2016 கலசங்கள்,*
*108 தீட்சிதர்கள்,*
*9 யாக குண்டங்கள்,* Image
*2 (ஸ்ரீ நடராஜர், ஸ்ரீ சிவகாமி) பொற்குடங்கள்* அமையவுள்ள
*ஒரு யாகசாலை* பொன்மயமாக மின்னுகிறது.

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தின் கிழக்கு கோபுரத்திற்கும், ஆயிரங்கால் மண்டபத்திற்கும் அருகில் அழகுமிகு யாகசாலை அமைந்துள்ளது.
அனைத்து நிகழ்வுகளும், பொது தீட்சிதர்களுடைய சிறப்பான வழிகாட்டுதலில் இனிதே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

(நிகழ்வின் முழு விபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.)
Read 55 tweets
Feb 13
#பீஜ_மந்திரங்கள்

12 இராசிகளுக்கான மகா சக்தி பெற்ற பீஜ மந்திரங்கள் :

ஒவ்வொரு ராசிக்கும் ஒரு பீஜ மந்திரங்கள் உண்டு.

அவற்றை முறையாக ஜெபம் செய்தால் வாழ்வில் பல நற்பலன்களை பெறலாம். Image
இந்த பதிவில் 12 ராசிகளுக்கும் உரிய பீஜ மந்திரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.

பீஜ மந்திரங்களை தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்து விட்டு,

வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கேற்றி,

இறைவன் முன்பு தங்களால் இயன்ற அளவு ஏதேனும் ஒரு நிவேதனம் வைத்து,
கொடுக்கபட்டுள்ள பீஜ மந்திரங்களை தினமும் குறைந்தது 108 முறை, விருப்பம் உள்ளவர்கள் 1008 முறை ஜெபிக்கலாம்.

வாழ்வில் பல நற்பலன்களை கொடுக்கும் அதி அற்புதமான மந்திரங்கள் இவை.
Read 5 tweets
Jan 28
#பைரவர்_மந்திரம்

பன்னிரண்டு இராசி அன்பர்களே!

இன்று முதல் தினமும் பைரவ மந்திரம் எழுதுங்கள்.

10 - 02 - 2024 முதல் 10 - 06 - 2024 வரை ஒவ்வொருவருக்கும் சில பல துயரங்கள், இழப்புகள், நஷ்டங்கள் வரும் சூழ்நிலை உருவாக உள்ளது. Image
அசைவம் சாப்பிடாமல்,

மது அருந்தாமல்,

கர்ம வினைகளை வேகமாக நீக்கும் பைரவ மந்திரம் எழுதி வருவது நல்லது.

கடன் தீர்ந்து விட்டால்,நோய் குணமடைந்து விட்டால்,

போதிய அளவில் வருமானம் கிடைத்து விட்டால் நிம்மதி வந்து விடும்.
சனியின் குரு கால பைரவர்.

ஈசனின் சார்பாக உலகம் உயிர்கள் பிரபஞ்சம் நவக்கிரகங்கள் அனைத்தையும் நிர்வாகம் செய்து வருபவர் இவர் தான்!!!

உங்களின் ஜென்ம நட்சத்திர பைரவ மந்திரம் தினமும் 108 முறை எழுதி வரவும் அல்லது ஒரு மணி நேரம் வரை தினமும் ஜெபித்து வாருங்கள்.
Read 14 tweets
Jan 12
#திருப்பள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சி - பாடல் - 07.

அது பழச்சுவையென அமுதென
அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும் Image
மதுவளர்பொழில் திருவுத்தரகோசமங்கை உள்ளாய்
திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
#பொருள் :

தேன்சிந்தும் மலர்களையுடைய சோலைகளைக் கொண்ட உத்தரகோசமங்கை தலத்தில் எழுந்தருளிய சிவனே!

திருப்பெருந்துறையில் வசிக்கும் தலைவனே!

உன் பெயர் சொன்னால் அது பழம் போல் இனிக்கிறது.

பால் போல் சுவையாக இருக்கிறது.
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(