M.SivaRajan Profile picture
| ஓம் நமசிவாய 🕉 | | என்றும் பொன்னம்பலத்தாரின் திருவடி நிழலில் அடியேன் 🙏 | | Temple Priest 🕉 ஜோதிடர் 🙏 | #சிவவழிபாடு #ஜோதிடம்அறிவோம்
2 subscribers
Oct 9 28 tweets 3 min read
#இடைக்காடர்_ஜீவசமாதி

திருவண்ணாமலை இடைக்காட்டு சித்தர் ஜீவ சமாதி பற்றிய சிறப்பு பதிவு...

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்துக்கு செல்பவர்கள் அண்ணாமலையாரின் அருளைப் பெறுவது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானது இடைக்காடர் சித்தரின் அருளையும் சேர்த்து பெறுவதாகும். Image இடைக்காடர் சித்தர் 600 ஆண்டுகள் இங்கு வாழ்ந்ததாக சுவடிகளில் குறிப்புகள் உள்ளன.

திருவண்ணாமலை ஆலயத்தில் அருள் அலைகள் நிரம்பி இருப்பதற்கு அங்கு அவரது ஜீவ சமாதி அமைந்திருப்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

இன்றும் திருவண்ணாமலையில் இடைக்காடர் சித்தர் அருள்புரிந்து வருகிறார்.
Sep 21 31 tweets 4 min read
#பூர்வ_புண்ணிய_ஸ்தானம்

பூர்வபுண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் தரும் யோக அவயோக பலன்கள் !

ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் ஜாதகரின் நல்லறிவு, சிந்தனை திறன், தனக்கு அமையும் வாரிசுகளின் நிலை, கலை துறையில் பெரும் வெற்றி, Image இயல் இசை நாடக துறையில் ஏற்ப்படும் தனிப்பட்ட திறமை மற்றும் புலமை, தனது குழந்தைகளால் ஏற்ப்படும் யோக வாழ்க்கை, தனது எண்ணத்தின் வலிமை அதனால் கிடைக்கும் வெற்றி என்ற அமைப்பில் இருந்தும்.

ஆய கலைகள் 64ல் தேர்ச்சி, தர்ம சிந்தனை , இறைசிந்தனை, இறை அருளின் கருணையை பெரும் யோகம்,
Sep 20 42 tweets 5 min read
#கூடலழகர்

புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பதிவு :

மதுரை கூடலழகர் திருக்கோவில் வரலாறு.

கொஞ்சம் பெரிய பதிவு பொறுமையாக படித்து பயன் பெறுங்கள்.

12 ஆழ்வார்களில் ஒருவரான #பெரியாழ்வார் "வல்லபதேவ பாண்டிய" மன்னனின் ஐயம் தீர்த்து பொற்கிழி அறுத்து "திருப்பல்லாண்டு" பாடிய தலமான , 108 வைணவத் திவ்ய தேசங்களில் பாண்டிய நாட்டுத் திருப்பதிகளில் ஒன்றான,

பெருமாள் மூன்று நிலைகளில் அஷ்டாங்க விமானத்தின் கீழ்
காட்சி தரும் தலமான,

வைணவத் தலங்களில் நவகிரக சன்னதி அமைந்த ஒரே தலமான , பழமையான
Sep 14 18 tweets 2 min read
#வைனாசிகம்

மிக முக்கியமான ஜோதிட பதிவு அனைவரும் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களின் நோயை குறி காட்டும் வைனாசிக நட்சத்திரம் ....!!!!!

முதலில் உங்கள் ஜென்ம நட்சத்திரம் எது என்பதை குறித்து கொள்ளுங்கள். Image அந்த ஜென்ம நட்சத்திரம் முதல் எண்ணி வரும் 22 வது நட்சத்திரம் வைனாசிகம் நட்சத்திரம் என்பதை அறிக...

இன்னும் தெளிவாக ஒருவருக்கு நோய் வருவது 22 வது நட்சத்திரத்தின் மூலமாகத் தான் என்பதனை மனதில் வைக்க.
Aug 6 17 tweets 2 min read
#குலதெய்வம்

குலதெய்வம், ஒரு ஜாதகத்தில், ஒரு ஜாதகருக்கு எந்தெந்த அமைப்பில், பாதிக்கப்பட்டு இருக்கும் பொழுது,
அவருக்கு வெளியே தெரியாமலே இருக்கும். Image பொதுவாக ஒரு மோசமான
தசா புக்தி ,கோட்சாரத்தில்
ஏழரை சனி, அஷ்டம சனி நடக்கக்கூடிய காலகட்டங்களில் , தன்னுடைய முயற்சிகள் தடுமாறி, பலனளிக்காமல் போகும் போது தான், ஒரு ஜாதகர் ,ஜோதிடரிடம் ஜாதகம் பார்க்க வருகிறார்.
Jun 23 31 tweets 4 min read
#பன்றி_மலை_ஸ்வாமிகள்

திண்டுக்கல் அருகில் கொடைக்கானல் மலை தொடரில் உள்ள பன்றிமலையைச் சேர்ந்தவர் ஆறுமுகம் பிள்ளை.

இவரது மனைவி அங்கம்மாள்.

இவர்கள் இருவரும் பழனி முருகன் மீது மிகுந்த பக்தி கொண்டவர்கள்.

ஆறுமுகம் பிள்ளை விவசாயம் தவிர மருத்துவ தொழிலையும் செய்து வந்தார். Image தியானம் மூலம் சில சக்திகளும் அவரிடம் இருந்தன.

அங்கம்மாள் கருவுற்ற சமயத்தில் தனது பெற்றோர் வீடு இருக்கும் பாலசமுத்திரம் கிராமத்துக்கு சென்று இருந்தார்.

அப்போது காசிலிங்க சுவாமி என்ற சன்னியாசி அவருக்கு ஆசீர்வாதம் செய்து,
Jun 20 10 tweets 2 min read
#ஸ்ரீ_ஹாசன_தேவி

*பெங்களுர் ஹாசன அம்மாள் கோவிலில் நடைபெறும் அதிசியம்!*

கடவுள் இல்லை என்பவர்கள் இந்த பதிவிற்கு என்ன பதில் சொல்ல போகின்றார்கள்?

பெங்களுர் அருகே *ஹாசன்* என்ற ஊரில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அதுவும் ஒரே ஒரு நாள் முழுவதும் கோவில் திறக்கப்படும். Image அங்கே மூன்று சின்ன சின்னதாக கற்கள் இருக்கும்.

இந்த ஸ்வாமியின் பெயர் *ஹாசன அம்மாள்* என்று அழைக்கப்படுகிறது.

மூன்று சிறு சிறு கற்கள் தான் அந்த ஹாசன அம்மாள்.

மூன்று கற்கள் மீதும் சிகப்பு வண்ணத்தில் சந்தனம் இருக்கும்.
Jun 19 21 tweets 3 min read
#குபேர_விளக்கு

*வியாழக்கிழமை மாலையில் மறக்காமல் இந்த விளக்கேற்றுங்க.

வீடு நிறைய செல்வம் சேரும்*

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், Image எப்போதும் நம் வீட்டில் செல்வம் நிலைத்திருக்கவும், நமது வீட்டிற்கு எப்போதும் செல்வத்தை ஈர்க்கும் சக்தி கிடைப்பதற்கும்,

நாம் முழு மனதுடன் செய்ய வேண்டிய ஒரு விசேஷ விளக்கு பூஜை உள்ளது.

செல்வம் பல மடங்காக பெருகுவதற்கு எளிமையான பரிகாரங்கள் உள்ளன.
Jun 17 19 tweets 2 min read
#ஸ்ரீ_சுயம்பு_முருகன்

சஷ்டி சிறப்பு பதிவு :

27 நட்சத்திரங்களுக்கும் பரிகாரம் வழங்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் முருகபெருமான்!

சுயம்பு முருகனை காண்பது அரிது.

அப்படியொரு சுயம்பு வேலவனை வணங்கும் பாக்கியத்தை வில்வாரணி என்னும் ஊரில், நட்சத்திரகிரி, நட்சத்திரக் குன்று என்றெல்லாம் அழைக்கப்படும் நட்சத்திரக் கோயிலில் நாம் பெறலாம்.

வில்வாரணி நட்சத்திரகிரியில் வீற்றிருக்கும் வள்ளி தெய்வானை சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோயில் தனிச்சிறப்பு பெற்றது.
May 15 14 tweets 2 min read
#மூன்று_நரசிம்மர்கள்

ஸ்ரீ விஷ்ணுபதி புண்ணிய காலம் சிறப்பு பதிவு :

காட்டழகிய, மேட்டழகிய, ஆற்றழகிய என மூன்று நரசிம்மர்களை பற்றி இந்த பதிவில் காணலாம் வாருங்கள் நண்பர்களே. Image காட்டழகிய சிங்கர், மேட்டழகிய சிங்கர், ஆற்றழகிய சிங்கர் ஆகிய மூன்று நரசிம்மர்கள் அருள் புரியும் தலமாக திருச்சி விளங்குகிறது.

திருச்சியில் ஒரே நாளில் தரிசிக்கக் கூடிய மூன்று நரசிம்மர் கோயில்கள்.

நமது ஜாதகத்தை மூன்று நரசிம்மர் கோவிலிலும் வைத்து எடுத்தால் உடனடி திருமணம் நடக்கும்.
Jan 21 12 tweets 2 min read
#தினம்_ஒரு_திருப்புகழ்

தனத்த தான தானான தனத்த தான தானான
தனத்த தான தானான ..... தனதான

......... #திருப்புகழ் .........

அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி
யடைத்து வாயு வோடாத .... வகைசாதித்

தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச
அசட்டு யோகி யாகாமல் .... மலமாயை Image செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார
சிரத்தை யாகி யான்வேறெ ...... னுடல்வேறு

செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீத
சிவச்சொ ரூபமாயோகி ...... யெனஆள்வாய்

தொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபால
சுதற்கு நேச மாறாத ...... மருகோனே
Jan 3 13 tweets 2 min read
#அகத்தியர்

அகத்தியர் சித்தர் பற்றிய சில தகவல்களை இந்த பதிவில் காணலாம் வாருங்கள் நண்பர்களே.

அகத்தியர் - ஓரு அதிசயம்! அபூர்வம்! ஆச்சர்யம்!

காசி மகராஜாவின் பெண் லோபமுத்ரா.

அவரைத் திருமணம் செய்து கொண்டு பொதிகைக்கு அகத்தியர் வரும் பொழுது, Image அங்கிருக்கும் யோகிகள், ஞானிகள், சித்தர்கள் அனைவரும் அகத்தியரின் திருமண நிகழ்வை காண வேண்டும் என்று வேண்டிக் கொண்டதால்,

அவர்களுக்கு அகத்தியர் தன் திருமணக் காட்சி தந்து அருளினார்.

அபூர்வமான இந்தப் படத்தில் நிறைய ஆச்சரியமான விஷயங்கள் உள்ளது.
Dec 21, 2024 12 tweets 2 min read
#பன்னீர்_இலை_விபூதி

சஷ்டி சிறப்பு பதிவு :

பன்னீர் இலையில் விபூதியை வைத்து எந்த கோவிலிலும் இப்படி வழங்குவது இல்லை.

ஆதி சங்கரர் இந்த இலை விபூதியை உண்டு காச நோயை நீக்கிக் கொண்டதாகவும், அதனாலேயே அவர் ஸ்ரீ சுப்பிரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது. Image இன்றும் இந்த விபூதி இலை தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது.

திருசெந்தூர் செல்பவர்கள் இதை தவறாது பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும் போது,
Dec 13, 2024 37 tweets 4 min read
#ஸ்ரீ_அருணாசலேஸ்வரர்

திருக்கார்த்திகை தீபம் சிறப்பு பதிவு :

திருவண்ணாமலை திரு அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்ற திருப்பணிகள் பற்றி இந்த பதிவில் காணலாம் வாருங்கள் நண்பர்களே. Image 1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம் :

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வெட்டுகள் கடந்த காலத்தைக் காட்டும் கண்ணாடி.
Nov 24, 2024 9 tweets 1 min read
#நீராஞ்சன_தீபம்

*கடன் தொல்லை அகற்றும் நீராஞ்சன தீப வழிபாடு!*

இரணியன் தன் மடியில் கிடத்தி,
வதம் செய்யும் திருக்கோலத்தில் ஸ்ரீநரசிம்மர் காட்சிக் கொடுக்கும் கீழப்பாவூரை,
`#தட்சிண_அஹோபிலம்’
என்று போற்றுவர். Image வெண்கொற்றக்குடை மற்றும் சாமரம் துலங்க வீற்றிருக்கும் ஸ்ரீ நரசிம்மருக்கு அருகில் பக்த பிரகலாதன்,
அவனுடைய தாயார், காசியப முனிவர் மற்றும் காசி மன்னன் ஆகியோரும்
காட்சி தருகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் வரும் சுவாதி நட்சத்திரத்தன்று, மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை இந்த நரசிம்மருக்கு,
Nov 12, 2024 7 tweets 1 min read
#முருகா_சரணம்

புலவர் காளமேகத்திடம் விதண்டாவாதம் செய்யும் வகையில் ஒரு புலவர் கேட்டார்.

" ஐயா, நீர் பெரிய புலவர் என்று பேசிக் கொள்கிறார்களே.

உம்மால் முருகனைப் புகழ்ந்து பாட முடியுமா?” Image "முருகன் அருளால் முடியும்.

வேலில் தொடங்கவா? மயிலில் தொடங்கவா?"

என்றார் காளமேகம்.

"வேலிலும் தொடங்க வேண்டாம்.

மயிலிலும் தொடங்க வேண்டாம்.

செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடித்தால் போதும்"

என்று விளையாட்டாகக் கூறிவிட்டார் போட்டிப் புலவர்.
Nov 9, 2024 7 tweets 1 min read
#திருச்செந்தூர்_முருகன்

சூரபத்மனை போரிட்டு வதம் செய்த முருகன்,

வீரமகேந்திரபுரியை கடலோடு கடலாக அழிந்து போகும் படி செய்கிறார்.

முருகபெருமானுக்கு போரில் பலரையும் வதம் செய்ததால் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகிறது.

பின்னர் அகத்தியர் பெருமானின் ஆணைப் படி தோஷம் தீர, Image திருச்செந்தூர் கடற்கரையில் இதற்காக பஞ்சலிங்கங்கள் எனப்படும் 5 சிவலிங்கங்களை மணலால் பிடித்து பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்து தோஷத்தில் இருந்து வெளிவருகிறார்.

நீராடி விட்டு தான் சிவபூஜை செய்ய வேண்டும் என்பதற்காக,

முருகப் பெருமான் தன்னுடைய வேலால் உருவாக்கிய தீர்த்தம் தான்,
Nov 2, 2024 27 tweets 3 min read
#ஸ்ரீ_சுப்ரமணிய_ஸ்வாமி

மஹா கந்த சஷ்டி திருவிழா சிறப்பு பதிவு :

*ராமபிரான் நிறுவிய சுப்பிரமணியர் ஆலயம்*

நாகதோஷம் போக்கும் ஆலயம்,

பாம்பு தெய்வங்களுக்கு முட்டையைப் படைத்து வழிபடும் தலமாகக் கேரள மாநிலம்,

பேரளச்சேரியில் உள்ள சுப்பிரமணியா கோவில் அமைந்திருக்கிறது. Image படைப்புக் கடவுளான பிரம்மனுக்குத், தன்னைத் தவிர வேறு எவராலும் படைப்புத் தொழிலைச் சிறப்பாகச் செய்ய முடியாது என்கிற கர்வம் ஏற்பட்டது.

இந்நிலையில் அவர், தன்னுடைய படைப்புத் தொழிலின் பெருமைகளைப் பற்றிச் சிவபெருமானிடம் சொல்லி,
Nov 1, 2024 52 tweets 5 min read
#கந்த_புராணம்

முதல் நாள் ( 02 - 11 - 2024 ) பாராயணம் செய்ய வேண்டிய திருப்பாடல்கள் :

2. #உற்பத்தி_காண்டம்.

சோதி சேரும் அத்தூமணி மண்டபத்து ஆதி யான அரியணை உம்பரில் காத லாகும் கவுரியொர் பாங்குற வேத நாயகன் வீற்றிருந் தானரோ. Image மன்னுயிர் புவனம் ஏனை மற்றுள பொருளுக்கு எல்லாம் அன்னையாய் உதவி நாளும் அவற்றினை வளர்த்து நிற்பாள் தன்னையும் வளர்ப்பார் உண்டோ வளர்ந்தது சழக்கே அந்தக் கன்னிதன் அருளின் நீர்மை காட்டினள் போலும் அன்றே.
Nov 1, 2024 43 tweets 4 min read
#கந்த_புராணம்

மஹா கந்த சஷ்டி திருவிழா நாளை முதல் ஆரம்பமாகிறது.

இந்த புனித நாட்களில் கந்த புராணம் படிப்பது மிகச்சிறந்த பலன்களை அளித்திடும்.

ஆனால் 10000 க்கும் மேற்பட்ட பாடல்களை கொண்ட கந்த புராணத்தை பாராயணம் செய்வது கொஞ்சம் சிரமம் தான். Image ஆகவே அனைவரும் கந்த புராணத்தை பாராயணம் செய்யும் வகையில் கந்த புராண ஞான சபை அமைப்பினர் கந்த புராணத்தில் உள்ள மிக முக்கியமான மந்திர பாடல்களை தொகுத்து உள்ளனர்.

மஹா கந்த சஷ்டி திருவிழா நாட்களில் ஒரு நாளைக்கு 51 பாடல்கள் வீதம் ஏழு நாட்கள் மொத்த கந்த புராணத்தை,
Nov 1, 2024 76 tweets 8 min read
#மஹா_கந்த_சஷ்டி_விரதம்

மஹா கந்த சஷ்டி திருவிழா சிறப்பு பதிவு :

ஐப்பசி மாதம் அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

ஆறாம் நாள் சூரனுக்கு அருளல்.

கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை முருக பக்தர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். Image சஷ்டி என்றால் ஆறு ஆகும்.

ஐப்பசி மாதம் சுக்கில பட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும்.

இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக அனுட்டிக்கின்றனர்.

செல்வங்கள், சுகபோகங்கள், நற்புத்திரப்பேறு என்பவற்றை முன்னிட்டு முருகனை குலதெய்வமாகவோ,