#சொர்க்கவாசல் 108 திவ்யதேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் இருக்கும். ஆனால் கும்பகோணம் #ஸ்ரீசாரங்கபாணி ஆலயத்தில் சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் கிடையாது. இதற்கு காரணம் இத்தலத்து சுவாமி நேரே வைகுண்டத்தில் இருந்து இங்கே வந்து மகாலட்சுமியின் அவதாரமான
கோமளவல்லியை மணமுடிப்பதற்காக திருமால், தான் எழுந்தருளியுள்ள ரதத்துடன் வைகுண்டத்தில் இருந்து இங்கு வந்து கோமளவல்லியை மணந்து கொண்டார். எனவே, இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி ) கிடைத்து விடும் என்பதால், இந்த ஆலயத்தில் சொர்க்கவாசல் கிடையாது. மேலும், இங்குள்ள உத்ராயண, தட்சிணாயண வாசலைக்
கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது. உத்ராயண வாசல் வழியே தை முதல் ஆனி வரையும், தட்சிணாயண வாசல் வழியே ஆடி முதல் மார்கழி வரையும் சுவாமியை தரிசிக்க செல்லவேண்டும். ஏதாவது ஒரு வாசல் தான் இங்கு திறக்கப்பட்டு இருக்கும். பெருமாள் தேரில் வந்து மணமுடித்ததால் கோவில்
தேர் வடிவில் அமைந்திருக்கும் சிறப்பைப் பெற்றுள்ளது.
இதே போன்று சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் இல்லாத ஆலயங்கள்:
1. காஞ்சிபுரம் பரமேஸ்வர விண்ணகரம் எனப்படும் ஸ்ரீ பரமபத நாதப் பெருமாள் கோவில்.
2. ராமானுஜர் அவதரித்த தலமான ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில்.
3. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜ பெருமாள் கோவில் திருக்கண்ணபுரம் பூலோகத்து விண்ணகரம் என்பதால் கோவிலில் பரமபத வாசல் கிடையாது.
4. திருச்சி அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீகாசன் பெருமாள் கோவிலில், ஸ்ரீதேவியை
மணமுடிப்பதற்காக பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேராக வந்ததால், இக்கோவில்
பூலோக வைகுண்டமாக திகழ்கிறது.
ஓம் நமோ நாராயணாய
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jul 29
#ஸ்ரீசதுரங்க_வல்லபநாதர்_கோவில் #பூவனூர் முற்காலத்தில் தென்பாண்டி நாட்டை ஆண்டு வந்த வசுசேனன் என்னும் மன்னனுக்கு வாரிசு இல்லாமல் இருந்தது. மன்னனும் அவர் மனைவி காந்திமதியும் சிறந்த சிவபக்தர்கள். பரிபூரண ஆயுள் கொண்ட இருவருக்கும் இந்த ஜன்மத்தில் குழந்தை பாக்கியம் இல்லை என்பதை அறிந்த Image
அன்னை பார்வதி தேவியார், "உங்களை அனுதினமும் மறக்காது பூஜிக்கும் பக்தர்களை இப்படி மனம் வாடவிடலாமா? அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் அருளக்கூடாதா?" என்று ஈசனிடம் கேட்டார். அதற்குச் சிவபெருமான், "இந்த ஜன்மத்தில் அவர்களுக்குக் குழந்தை இல்லை என்பது விதி. ஆனால், நீ பூலோகத்தில் பிறந்து,
அவர்களுடைய குழந்தையாக வளர்வாயாக. உரிய நேரத்தில் யாம் வந்து உம்மைத் திருமணம் செய்துகொள்வோம்!" என்று அருள் வழங்கினார். அதே தினத்தில், வசுசேனரும் காந்திமதியும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கும்போது, தாமரை மலர் மேல் ஒரு சங்கைக் கண்டெடுத்தார்கள். அவர்கள் கையில் எடுத்ததும் அது அழகிய பெண்
Read 12 tweets
Jul 29
#சதுரகிரி #ஶ்ரீசுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவில். மிக விசேஷமான மலை. போய் வந்தவர்களுக்கு இதன் பெருமை புரியும். சித்தர்கள் இன்றும் அருவமாக வாழும் மலை. திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு Image
64 ஆயிரம் ஏக்கர். மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை ‘சஞ்சீவி மலை' என்கின்றனர். சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது. ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய Image
நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும். பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக Image
Read 56 tweets
Jul 29
#Til #எள்ளு Black sesame seeds have the powers to absorb negative energies that are present both in the atmosphere and inside the body. Therefore, black sesame seeds are used for cleansing the surroundings during tarpanam and Sradham. By using the kala til or black sesame seeds
people invoke their dead ancestors who wander in the Pitru Loka, a zone between earth and heaven. People offer black sesame seeds with water to the Pitrus while chanting specific mantras. These mantras (sounds) have certain energies that, in turn, activate the sesame seeds to
start attracting the dead relatives to earth for accepting the Pinda daanam or our offerings. The ritual is done to relieve the ancestors from the vicious cycle of birth and death and also help them in getting liberated from worldly desires that keep troubling their souls. A
Read 4 tweets
Jul 29
#ஆடிவெள்ளி_ஸ்பெஷல் #ஸ்ரீஸுக்தம்
அர்த்தம் புரிந்து படிப்போம்

ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண - ரஜதஸ்ரஜாம்
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவகா

பொருள்
விஷ்ணு பகவானே ! தங்க நிறம் உடையவளும், பாவத்தைப் போக்குகிறவளும், பொன் - வெள்ளி ஆபரணங்களைத் தரித்தவளும், எல்லா மக்களையும் Image
சந்தோஷமாக வைத்திருப்பவளும், தங்க உருவமாகத் தோற்றமளிப்பவளும், எல்லாரும் ஆசைப்படுகிறவளுமான லக்ஷ்மி தேவியின் அருள் எனக்குக் கிட்டும்படி அருள வேண்டுகிறேன்.

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ - மநபகாமிநீம்
யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம் காமஸ்வம் புருஷாநஹம்

பொருள்
அந்த லக்ஷ்மி கடாட்சம் என்னிடம்
இருந்தால் நான் தங்கம் போன்ற உயர்ந்த பொருட்களையும் பசுக்கள், குதிரைகள், யானைகள் போன்றவற்றுடனான உயர்ந்த செல்வங்களையும், நல்ல சத்புத்திரர்களையும் உண்மையான சீடர்களையும் அடையமுடியும். அந்த லக்ஷ்மியின் அருட்கடாட்சம் என்னை விட்டுப் பிரியாமல் இருக்க அருள்புரியுங்கள்.
Read 28 tweets
Jul 29
#மகாபெரியவா ஒரு நாள் காஞ்சி மடத்தில் அதிகமான கூட்டம் பெரியவரைத் தரிசிக்க காத்திருந்தது. வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர்களின் மத்தியில் ராமலிங்க பட் என்பவரும் இருந்தார். அவரது கையில் பட்டுத்துணி போர்த்திய தட்டு இருந்தது. அருகில் வேதமூர்த்தி என்பவர் நின்று கொண்டிருந்தார். அவர் Image
ராமலிங்க பட்டிடம், தட்டில் என்ன வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார். ஓரிக்கையில்(காஞ்சிபுரம் அருகிலுள்ள கிராமம்) மகாபெரியவருக்கு மணிமண்டபம் கட்டுகிறார்கள் இல்லையா, அங்கே பிரதிஷ்டை செய்வதற்கு ஒரு ஜோடி பாதுகையும், என் வீட்டு பூஜையறையில் வைக்க ஒரு ஜோடி பாதுகையும் தயார் செய்து கொண்டு
வந்துள்ளேன். அது மட்டுமல்ல, என் தாயார் சுமங்கலியாக காலமாகி விட்டார். அவர் காலமெல்லாம் அணிந்திருந்த எட்டுபவுன் தங்கச் சங்கிலியையும் மணிமண்டப கட்டுமானப் பணிக்கு கொடுப்பதற்காக வைத்துள்ளேன் என்றார். வேதமூர்த்தி அவரிடம், அதெல்லாம் சரி! பாதுகைகளைச் செய்வதாக இருந்தால், மணிமண்டபம்
Read 9 tweets
Jul 29
#கனகதாரா_ஸ்தோத்திரம் மகாலட்சுமியின் மேல் #ஸ்ரீஆதிசங்கரர் அருளியது இந்த ஸ்லோகம். அவர் பாலகனாக பிக்ஷை எடுக்க சென்றபோது ஒரு வீட்டில் மிகவும் எழ்மையான நிலையில் இருந்த பெண்மணியிடம் பிக்ஷை இட ஒரு நெல் மணி கூட இல்லை. வந்து நிற்கும் குழந்தைக்கு கொடுக்க ஒன்றுமே இல்லையே என்று வீட்டில் தேடி Image
பார்க்க, ஓர் அழுகிய நெல்லிக்கனி மட்டுமே கிடைத்தது. அதை அவருக்கு பிக்ஷை இடுகிறார். அவள் நிலை கண்டு மிக மனம் வருந்திய சங்கரர் மகாலக்ஷ்மியின் மேல் மனமுருகி பாடுகிறார். அவர் வேண்டுதலுக்குச் செவி சாய்த்து, அப்பெண்மணியின் பாவங்களை மன்னித்து தங்க நெல்லிக்கனிகளாக வீட்டின் கூரையின் மேல் Image
பொழிகிறார் கருணையே வடிவான தாயார். ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திர ஸ்லோகங்களும் அதன் பொருளும்
1. அங்கம் ஹரே:புலக பூஷணமாச்ரயந்தீ
ப்ருங்காங்கனேவ முகுலாபரணம் தமாலம்|
அங்கீக்ருதாகில விபூதிரபாங்க லீலா
மாங்கல்யதாஸ்து மம மங்கல ததவதாயா:|l

'முகுலாபரணம் தமாலம்' - பச்சை வர்ணத்தில் இருக்கும் தமால Image
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(