M.SivaRajan Profile picture
Sep 8 13 tweets 2 min read
*ஸ்ரீ குருப்யோ நம:*

*குருவிடம் எப்படி பழக வேண்டும்*

*ஆபஸ்தம்ப ரிஷிகள் சொன்னது..!*

1. குருவுக்கு முன் கால் நீட்ட கூடாது.

2. குரு நடந்தால், அவருக்கு பின்னால் நடக்க வேண்டும்.

3.குரு ஓடினால், அவரை தொடர்ந்து ஓட வேண்டும்.
4. குருவை சந்திக்கும் போது, காலில் செருப்போ, தலைப்பாகை வைத்து கொண்டோ போக கூடாது.

5. ஆனால், பயணத்திலோ, வேலையிலோ இருக்கும் போது, குருவை சந்திக்க நேர்ந்தால், தவறில்லை.

6. குருவுக்கு மிக அருகில் அமர கூடாது.
7. குருவை அணுகும் போது, தெய்வத்தை அணுகுவது போல அணுக வேண்டும். ப்ரயோஜனமற்ற பேச்சுக்கள், கதைகள் பேசவே கூடாது. அவர்கள் சொல்வதை கவனத்துடன், பணிவுடன் கேட்க வேண்டும்.

8. குருவுக்கு முன், ஒரு கால் மேல் போட்டு கொண்டு அமர கூடாது.
9. காற்று நம் மீது பட்டு பிறகு அவர் மீது படும் படி இருக்க கூடாது. உடனேயே அந்த இடத்தை விட்டு நகர்ந்து வேறு இடமாக பார்த்து அமர வேண்டும்.

10. குருவுக்கு முன்னால் உட்கார்ந்து இருக்கும் போது, கையை ஊன்றிக்கொண்டு இருக்க கூடாது.
11. குருவுக்கு முன்னால் உட்கார்ந்து இருக்கும் போது, எதிலும் சாய்ந்து கொண்டு இருக்க கூடாது.

12. குருவின் முகம் பார்த்து இருக்க வேண்டும். ஆனால், அதே சமயம் குருவின் முகத்துக்கு எதிரே இருக்க கூடாது.
13. குருவுக்கு மிக அருகிலோ, மிகவும் தூரத்திலோ அமர கூடாது.
குரு கையை உயர்த்தி கூப்பிடும் தூரத்தில் அமர வேண்டும்.

14. குருவுக்கு முன்னால் பலர் இருந்தால், அவரவர் சௌகர்யத்துக்கு அமர்ந்து கொள்ளலாம்.
15. குரு நிற்கும் போது, அமர்ந்து இருக்க கூடாது.
குருவுக்கு அமர இடம் இல்லாத சமயத்தில், தனக்கு இடம் கிடைத்தாலும் அமர கூடாது.

16. குரு ஏதாவது காரியத்தை செய்ய முனையும் போது, சிஷ்யனின் அனுமதியை பொறுத்து, தன்னால் முடிந்த வரை உதவி செய்யலாம்.
17. குரு இருக்கும் போது, அவருக்கு கீழ் உள்ள எவருக்கும் (பெரியோர்கள் ஆனாலும், தகப்பனே ஆனாலும்) காலில் விழ கூடாது

18. தன் கோத்திர பெருமையை குருவுக்கு முன் பேச கூடாது.
19.தன் குருவை தவிர அவரை விட தாழ்ந்த தகுதி உள்ள குருவை சந்திக்க கூடாது, அல்லது அவர்களை தன் குருவுக்கு இணையாக உயர்த்த கூடாது.
குருவின் குருவே வந்தாலும் சரி. இது தன் குருவுக்கு அவமதிப்பு செய்ததாகும்.
தேவைப்பட்டால், அமைதியாக அந்த இடத்தை விட்டு அப்போதைக்கு நகர்ந்து விடலாம். அல்லது, தன் குருவுக்கு கொடுக்கும் மரியாதை கொடுக்கலாம்.
20. வாயை திறந்து கொட்டாவி விட கூடாது.
அப்படி நேர்ந்தாலும் குனிந்து, வாயை கையால் மூடிக்கொள்ள வேண்டும்

21. குருவுக்கு கொடுத்ததை பெருமை பேசி கொள்ள கூடாது.
குருவுக்கு செய்த சம்பாவனையை மறந்து விடுவது நல்லது.
23. குரு கூப்பிடாமல், நல்ல விஷயத்தை தவிர மற்ற எதுவும் அவரிடம் சென்று பேச கூடாது

24. குருவிடம் உபதேசம் பெற்று, வீடு திரும்பினாலும், அவரிடம் பழகும் விதம் கடைசி மூச்சு வரை கடைபிடிக்க வேண்டும்.
25. குரு ஒரே ஊரில் இருந்தால், அவர் கூப்பிடாமலேயே காலையும் மாலையும் அவரை பார்க்க செல்ல வேண்டும்.

26. குரு வேறு ஊரில் இருந்தால், முடிந்தவரை அடிக்கடி அவரை பார்க்க செல்ல வேண்டும்.
தன் கையால் அவருக்கு ஒரு வேப்பங்குச்சியாவது பல் துலக்க கொடுக்க வேண்டும்.

#குரு

#குரு_நாதர்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Sep 8
#சிவ_அஷ்டோத்ரம்

01. ஓம் சிவாய நமஹ

02. ஓம் மஹேச்வராய நமஹ

03. ஓம் சம்பவே நமஹ

04. ஓம் பினாகிநே நமஹ

05. ஓம் சசிசேகராய நமஹ

06. ஓம் வாம தேவாய நமஹ

07. ஓம் விரூபாக்ஷாய நமஹ

08. ஓம் கபர்தினே நமஹ

09. ஓம் நீலலோஹிதாய நமஹ

10. ஓம் சங்கராய நமஹ
11. ஓம் சூலபாணயே நமஹ

12. ஓம் கட்வாங்கிநே நமஹ

13. ஓம் விஷ்ணுவல்லபாய நமஹ

14. ஓம் சிபி விஷ்டாய நமஹ

15. ஓம் அம்பிகா நாதாய நமஹ

16. ஓம் ஸ்ரீ கண்டாய நமஹ

17. ஓம் பக்த வத்ஸலாய நமஹ

18. ஓம் பவாய நமஹ

19. ஓம் சர்வாய நமஹ

20. ஓம் திரிலோகேசாய நமஹ
21. ஓம் சிதிகண்டாய நமஹ

22. ஓம் சிவாப்ரியாய நமஹ

23. ஓம் உக்ராய நமஹ

24. ஓம் கபாலிநே நமஹ

25. ஓம் காமாரயே நமஹ

26. ஓம் அந்தகாஸுர ஸூதநாய நமஹ

27. ஓம் கங்காதராய நமஹ

28. ஓம் லலாடாக்ஷõய நமஹ

29. ஓம் காலகாளாய நமஹ

30. ஓம் க்ருபாநிதயே நமஹ
Read 11 tweets
Sep 8
மந்திரம் உச்சாடனம் செய்தால்
ஆயுள் அதிகரிக்குமா?

அண்டத்தின் பிரதிபலிப்பே இந்தப் பிண்டம். எனவே அண்டத்தில் உள்ள ஒலி அலைகளிலுள்ள ஓசையின் மூலம் இயங்கும் சக்திகள் நம் பிண்டத்தில் உள்ள எல்லாச் சக்கரங்களைச் சுற்றிலும் அமைந்து செயல்படுகின்றன.
இதையே சித்தர்களும், ரிஷிகளும் சக்ரங்களை தாமரை மலராக வடிவமைத்து, அதை சுற்றி உள்ள சக்தி மையங்களை இதழ்களாகவும், அதில் ஒலிக்கும் ஓசையை அட்சரங்களைச் சேர்த்து மந்திரங்களாக்கித் தந்தார்கள்.
அந்த குறிப்பிட்ட அட்சரத்தை ஒலித்து ஓசையை இடைவிடாது எழுப்பும் போது, பிண்டத்திலுள்ள அந்த குறிப்பிட்ட சக்தி மையம் தூண்டப் பெற்று குறிப்பிட்ட சக்திகள் விழிப்படைந்து அந்த இயக்கம் வலுவடையும் போது காரிய சித்தி ஏற்படுகிறது.
Read 17 tweets
Sep 7
*ஶ்ரீராமஜெயம்*

*வாமன ஜெயந்தி ஸ்பெஷல்* 🙏🌹

🌼ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி..🌼

மகாபலி, பிரகலாதனனின் பேரன். 100 அசுவ மேத யாகங்கள் செய்தால் இந்திரப் பதவியை அடையலாம் என்று முடிவு செய்து யாகங்களை செய்யத் தொடங்கினான்.
அவ்வாறு அவன் யாகம் செய்துமுடித்துவிட்டால் தேவலோகம் முழுமையும் நிரந்தரமாக அவன் வசமாகி விடும் என்பதால் தேவர்கள் அனைவரும் மகா விஷ்ணுவிடம் சரண் அடைந்து தங்களைக் காக்குமாறு வேண்டினர்.
அதற்கு மகாவிஷ்ணு, "மகாபலி முறைப்படி யாகம் செய்கிறான். மேலும், அவனுக்கு குருவின் பரிபூரண அனுக்கிரகம் உள்ளது.

அவன் எப்போது அவன் குருவால் சபிக்கப் படுகிறானோ அப்போதே அவனை என்னால் வெல்ல முடியும்” என்று கூறினார்.
Read 21 tweets
Sep 7
ஜோதிட சாஸ்திரத்தில் மிக மிக முக்கியமானது நட்சத்திரம்.

நட்சத்திரங்கள் மொத்தம் 27 உள்ளன.

நட்சத்திரத்தை பொறுத்தே ராசிகள் அமைக்கின்றன.

அர்ச்சனை செய்ய கோயில்களுக்கு சென்றாலும் நட்சத்திரம் மிக முக்கியமாக இருக்கிறது.
அப்படிப்பட்ட நட்சத்திரத்திற்கு தமிழ் பெயர்கள் உண்டு. அதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

அஸ்வினி - புரவி

பரணி - அடுப்பு

கிருத்திகை - ஆரல்

ரோகிணி - சகடு

மிருகசீரிஷம் - மான்றலை

திருவாதிரை - மூதிரை
புனர்பூசம் - கழை

பூசம் - கொடிறு

ஆயில்யம் - அரவு

மகம் - கொடுநுகம்

பூரம் - கணை

உத்திரம் - உத்தரம்

அஸ்தம் - கை

சித்திரை - அனுபை

சுவாதி - விளக்கு

விசாகம் - முறம்

அனுஷம் - பனை

கேட்டை - துலங்கொலி

மூலம் - குருகு

பூராடம் - முற்குலம்

உத்திராடம் - கடைக்குலம்
Read 4 tweets
Sep 6
*கல்வியில் சிறந்து விளங்க ஹயக்ரீவர் வழிபாடு!*

#ஹயக்ரீவர்

கல்வியில் முன்னேற நம்முடைய முயற்சி இருந்தாலும், மறுபக்கம் இறைவனின் திருவருள் நிச்சயம் வேண்டும்.

அதற்கு திருமாலின் அவதாரங்களில் ஒன்றான ஹயக்ரீவரை வழிபட்டால் நிச்சயம் நல்ல பயன் கிட்டும். Image
காரணம், பிரம்மதேவனுக்கு வேதத்தை உபதேசித்து, அவருடைய மனைவியான கல்விக்கடவுள் சரஸ்வதி தேவிக்கே குருவாக இருந்தவர் ஹயக்ரீவர் என வைணவப் பெரியோர்கள் கூறுவர்.

மனித உடல் அமைப்பில், வெள்ளை குதிரை முகத்துடன் திருமால் எடுத்த இந்த அவதாரம் தசாவதாரங்களுக்கு முற்பட்டது.
இதை பூர்ணாவதாரம் எனவும் அழைப்பார்கள். அதாவது திருமால் தானே தன்னுடைய முழு சக்தியுடன் உலகில் அவதரித்து தர்மத்தைக் காக்கும் பணியை திறம்படச் செய்து முடித்தல் என்பதாகும். இந்த அவதாரத்தின் சிறப்பைப் பற்றி திருமொழியில்.
Read 16 tweets
Sep 6
*#அர்த்தபஞ்சகம் - அறிய வேண்டிய* *ஐந்து விஷயங்கள்*

வைணவத்தில் பல தத்துவக் கோட்பாடுகள் சம்பிரதாயமாக இருக்கின்றன.

அவற்றுள் ஒன்று *அர்த்தபஞ்சகம்*' என்பது.

மகாவிஷ்ணுவை முழுமுதல் கடவுளாக வழிபடுபவர்கள் வைணவர்கள்.
இவர்களால் சொல்லப்படும் சொல் அர்த்த பஞ்சகம். 

இதனை  ’ஐந்து நிலைகள்’ என்கின்றனர்.

அவை இறைநிலை அதாவது மகாவிஷ்ணு, உயிர்நிலை (ஜீவன்கள்), கடவுளை அடையும் வழி (உபாய நிலை), அதற்கு தடையாக இருப்பவை (பகை நிலை),
கடவுளை அடைந்தபின் அனுபவிக்கும் பயன் (உபயோக நிலை).

இவை பற்றிய அறிவை பெற்று பரம்பொருளை
அடைவதே மனிதப் பிறவியின் பயனாகும்.
Read 24 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(