எங்களுக்கு ஒரு கடவுள் -
உங்களுக்கு ஏன் பல கடவுள் ?

கவிஞர் #கண்ணதாசனிடம், வெளிநாட்டினர் ஒருவர் கேட்டாராம் :

"ஏன் உங்களுக்கு மட்டும் இத்தனை கடவுள்கள் சிவன், ராமன், கண்ணன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி, காளி, முருகன், பிரம்மா என பல பெயர்கள் வைத்திருக்கிறீர்கள்.? Image
எங்களை போல ஒரு கடவுள் என வைத்துக் கொள்ளாமல்?," என்று கேட்டாராம்.

இடம் தெரியாமல் வந்து விட்ட கேள்வி. மலையை சிறு ஊசியால் பெயர்க்கப் போகிறாராம்...!

அதற்கு மிக பொறுமையாக திருப்பி அந்த மனிதரிடமே, 'உன் பெற்றோர்க்கு நீ யார்.?' எனக் கேட்டார். Image
அதற்கு அவர், 'மகன்' என பதிலளித்தார்.
'உன் மனைவிக்கு.?' கேள்வி தொடர்ந்தது.
'கணவன்'.!

'உன் குழந்தைகளுக்கு.?'
'அப்பா, தந்தை.!'
உன் அண்ணனுக்கு.?'
'தம்பி.!'
'தம்பிக்கு.?'
'அண்ணன்.!'
'கொழுந்தியாளுக்கு.?'
'மச்சான்.!'
' Image
அண்ணன் குழந்தைகளுக்கு.?'
'சித்தப்பா.!'
விடவில்லை, கேள்விகள் நீண்டு கொண்டே நீண்டு கொண்டே போனது.

"பெரியப்பா, மைத்துனர், மாமன், மச்சான்"
என பல உறவுகளில் பதில் வந்து கொண்டே இருந்தது.

சில நிமிடங்கள் கண்ணதாசன் நிறுத்தினார். பின்பு ஆரம்பித்தார். Image
"வெறும் மண்ணை தின்னப் போகும் உன் சடலத்திற்க்கே இத்தனை பெயர் வைத்து அழைக்கும் போது,

"யாதுமாகி நின்று, எங்கெங்கும் நின்று உலகையே கட்டிக் காக்கும் என் அப்பன் பரம் பொருளை எத்தனை பெயர்களால் அழைத்தால் என்ன..?? Image
அவன் எதற்குள்ளும் அடங்காதவன், எதற்குள்ளும் இருப்பவன். உன்னுள்ளும் இருப்பவன், என்னுள்ளும் இருப்பவன். உன்னை அழைத்தாலும் அவனே, என்னை அழைத்தாலும் அவனே."

என முத்தாய்ப்பாக முடித்தார்.....🙏🙏🙏🙏 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #பாரதி_வாஞ்சி ( Kaalabala )🇮🇳

#பாரதி_வாஞ்சி ( Kaalabala )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Sep 14
*நாம் சர்வ சாதாரணமாகப் பேசும் வார்த்தைகளுக்கு இவ்வளவு அர்த்தமா?*

இன்பத்தமிழ்...
தொடர்ந்து படியுங்கள்...

1. *அந்தி, சந்தி*:

*அந்தி* : மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.

*சந்தி*: இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.
2. *அக்குவேர், ஆணிவேர்* :

*அக்குவேர்* : செடியின் கீழ் உள்ள மெல்லியவேர்.

*ஆணி வேர்* : செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர்.

3. *அரை குறை*:

*அரை* : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.

*குறை* : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது.
4. *அக்கம்,பக்கம்*:

*அக்கம்*: தன் வீடும், தான் இருக்கும் இடமும்.

*பக்கம்*: பக்கத்தில் உள்ள வீடும், பக்கத்தில் உள்ள இடமும்.

5. *அலுப்பு, சலிப்பு* :

*அலுப்பு*: உடலில் உண்டாகும் வலி.

*சலிப்பு*: உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும், சோர்வும்.
Read 16 tweets
Sep 11
ரொம்ப நாள் ஆசை!

பாற்கடலில் மகாவிஷ்ணு ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்தார்.

அப்போது கடலில் இருந்த ஒரு முதலை அவர் காலைத் தொட்டு வணங்க வேண்டும் என்ற ஆவலில் எம்பி எம்பி குதித்தது.

தண்ணீர்த் திவலைகள் தெறித்து அவர் காலில் பட்டதால், Image
உறக்கம் கலைந்து விடுமோ என்ற அச்சத்தினால் ஆதிசேஷன் சீறி எழுந்து முதலையை கொத்தாத குறையாக விரட்டிக் கொண்டிருந்தது.

நான் அவர் பாதம் தொட்டு வணங்கி விட்டுச் சென்றுவிடுகிறேன்.

அவர் உறக்கத்தைத் கலைக்கமாட்டேன் என்னைத் தடுக்காதே என்று முதலை எவ்வளவோ கெஞ்சியும் Image
ஆதிசேஷன் கொஞ்சமும் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

நீ ஒரு சாதாரண முதலை. உனக்கு அவர் காலைத் தொடக்கூடத் தகுதியில்லை.

ஆனால் என் படுக்கையில் அவர் படுத்து உறங்குகிறார் என கர்வமாக ஆதிசேஷன் கூறியது.

ஐயன் மெல்லிதாகப் புன்னகை புரிந்தார். திரேதாயுகத்தில் ராமனாக விஷ்ணுவும், Image
Read 9 tweets
Sep 6
🌷 #மீனாட்சி_அம்மன் 🌷

🌷 " அம்மாடி .. மீனாக்ஷி ..!! ராஜ உத்தரவு ..!! மடப்பள்ளில நிறைய நைவேத்யம் பண்ணனும் ..!! முடியல்லே ..!! சித்த தூங்கிக்கறேன் ..!! மறக்காத நேரத்துக்கு எழுப்பிடுடீ ..!! சித்த மறந்துடாதே ..!!."
🌷 மீனலோசனையின் மீதுள்ள அதீதமான உரிமையால் ஶ்ரீநிவாஸர் தேவிக்கே உத்தரவிட்டு .. மடப்பள்ளியை உள்பக்கமாய் தாழ் போட்டுக்கொண்டு உறங்கிப்போனார் ..!!.. தடதடவென சத்தம் ..!!

🌷 " யார் ..?? மடப்பள்ளி கதவை இப்படி உடைக்கறது ..??.."
🌷 கோபத்துடன் எழுந்த ஶ்ரீநிவாஸர் கதவைத் திறந்து பார்த்தால் .. ராஜ ஸேவகர்கள் ..!!

🌷 " என்னங்கானும் ..!?! ..
நீர் கதவை அடைச்சுண்டு .. உள்ள என்ன பண்றீர் ..??? காலத்துக்கு அம்பாளுக்கு நைவேத்யம் ஆக வேண்டாமா ..??
குருக்கள் காத்துண்ட்ருக்கார் ..!! நைவேத்யம் எடுத்துண்டு வாங்கோ ..!! "
Read 15 tweets
Sep 5
ஒருவர் கிருஷ்ணபகவானின் பக்தராக விளங்கினார். அவருக்குச் சொந்தமாக ஒரு மருந்துக் கடை இருந்தது.

அந்த கடையின் ஒரு மூலையில், பகவான் கிருஷ்ணரின் சிறிய படம் வைத்திருந்தார். தினம் கடையை அவர் திறந்த உடன்,
கடையை சுத்தம் செய்து விட்டு கிருஷ்ண பகவானின் படத்தையும் சுத்தம் செய்வார். மிகுந்த மரியாதையோடு அந்தப் படத்திற்கு தூபம் ஏற்றுவார்.

அவருக்கு ஒரு மகன், அவன், தன் படிப்பை முடித்துக் கடையில் உட்கார்ந்து கொள்வதை வழக்கமாக கொண்டு இருந்தான்.
அவருடைய அப்பா செய்து கொண்டு இருக்கும் இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருப்பான்.

ஆனால் கடவுள் நம்பிக்கை கிடையாது. இந்த விஷயம் பற்றி அவனிடம் வாதாட அல்லது விவாதம் பண்ண விரும்பாமல், பக்தர் அமைதி காத்தார்.
Read 17 tweets
Sep 5
#சிவபுராணம்_என்றால்_என்ன?

அதை தினமும் படிப்பதால் வரும் பயன்கள் என்ன?

சிவபுராணத்தின் பெருமைகள் :

1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.
2. வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.

3. மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.
3. எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு மறைந்து விட்டார்.

4. மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும்
Read 17 tweets
Sep 3
பாகம் 2/2

40. பொய்யடிமையில்லாத புலவர்: சைவம், தமிழ் வளர்த்து, சிவனையே பாடிய சங்ககாலப் புலவர் நாற்பத்தொன்பதின்மர்.

41. புகழ்ச் சோழர்: எறிபத்த நாயனாரை அணைந்து என்னையும் கொன்றருள்க என்ற அரசர். அதிகனுடைய போரில்,
தம் படையினர் வெட்டி கொணர்ந்த படைவீரர் தலை ஒன்று சடைமுடி தரித்திருப்பதை அறிந்து மனம் நொந்து தீப்புகுந்தவர்.

42. நரசிங்கமுனையரையர்: போலிச் சிவனடியாரிடமும் அன்பு காட்டி பொன் கொடுத்தும், தொண்டுபுரிந்த பெருந்தகையார்.
43. அதிபத்தர்: நாள் தோறும் தம் வலையில் அகப்படும் முதல் மீனை(தங்கமீனையும்) இறைவனுக்குப்படைத்த மீனவர்.

44. கலிக்கம்பர்: தமக்கு பணிவிடை செய்தவரையும் வழிபட்டவர். கரகநீர் தரமறுத்த மனைவி கையை வெட்டிய வணிகர்.
Read 20 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(