#HBDarignaranna
#MupperumVizha2022
#முப்பெரும்விழா
#DravidamisaLifestyle
#திராவிடம்_ஒரு_வாழ்க்கைமுறை

இன்றைய விருது நகர் முப்பெரும்விழாவில் பொதுச் செயலாளர் நினைவூட்டலிருந்து

தேசிய அரசியலில் கருனாநிதி
1999ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் திமுகவும் இடம் பெற்றது. 2001ம் ஆண்டு அதிமுக அரசால் கலைஞர் கைது செய்யப்பட்ட போது, போலீசாரால் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் தாக்கப்பட்டார்.
இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டார். பல நாட்கள் இலாகா இல்லாத அமைச்சராக அவர் இருந்து, இறந்து போனார்.

ஜெயலலிதாவால் பாதிக்கப்பட்ட கலைஞர், மாறன் ஆகியோர் அதிமுக ஆட்சி மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னார்கள். ஆனால் வாஜ்பாய் அதை செய்யவில்லை.
இதனால் திமுக அதிருப்தியில் இருந்தது. அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைக்க, மாநில கட்சிகள் தயங்கி வந்தன. அகில இந்திய அளவில் தமிழகத்தில் இருந்து திமுகதான் முதன் முதலில் கூட்டணியை அறிவித்தது. அதன் பின்னரே மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி உருவானது.
காங்கிரஸ் கட்சிக்கு வலுவான கூட்டணி அமைய கருணாநிதிதான் காரணமாக இருந்தார். இதனாலேயே சோனியாவுக்கு கலைஞர் மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டது. இந்த கூட்டணி பத்தாண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தது. இந்த காலகட்டத்தில்தான், ‘சொக்கத்தங்கம் சோனியா’ என்று கலைஞர் சோனியாவை அழைத்தார்.
இது மட்டுமல்ல… கலைஞரின் 81 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 1969ம் ஆண்டு அவரால் மறக்க முடியாது. ஆம்… அந்த ஆண்டில்தான் அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். முதல்வராக பதவி ஏற்றதும் டெல்லி சென்றவர் இந்தியா முழுவதும் அறிந்த ஹீரோவாக திரும்பி வந்தார்.
ஆம்… முதல்வர் பதவி ஏற்றதும் மத்திய நிதி அமைச்சர் மொரார்ஜி தேசாயை சந்தித்தார். அப்போது, ‘தமிழக வறட்சியைப் போக்க ரூ.5 கோடி நிதி வேண்டும்’ என்று கேட்டார்.

‘‘என் தோட்டத்தில் பணம் காய்க்கும் மரம் இல்லையே’’ என்று கோபமாக பதில் சொல்லியிருக்கிறார், நிதி அமைச்சர்.
‘‘பணம் காய்க்கிற மரமே இல்லையே… இல்லாதது எப்படி உங்கள் தோட்டத்தில் இருக்கும்’’ என்று அதே வேகத்தில் பதில் சொல்லியிருக்கிறார், கலைஞர்.

நிதி அமைச்சர் சந்திப்பு முடிந்து வெளியே வந்த கலைஞர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
மாநில சுயாட்சி

அப்போது, ‘‘மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிக அதிகாரம் கொடுக்க வேண்டும். மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் நல்லுறவு வளர அதிக அதிகாரங்கள் வழப்பட வேண்டியது அவசியம். மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிந்து கிடக்கின்றன.
‘‘அவற்றை மாநில அரசுக்குப் பகிர்ந்து கொடுத்தால், மத்திய அரசின் சுமை குறையும். மாநிலத்திற்கு அதிக அதிகாரங்கள் கிடைக்க அரசியல் சட்டத்தை திருத்த வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறோம்.
‘‘எந்தெந்த அதிகாரங்களை மாநிலங்களுக்குத் தரலாமென்று ஆலோசித்துப் பரிந்துரைக்கும் அறிக்கை தந்திட, கல்வி நிபுணர்கள், ஒய்வு பெற்ற நீதிபதிகள், சட்ட நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றை அமைப்பதென்று தமிழகத்தில் கழக அரசு முடிவு செய்துள்ளது.
‘‘அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும்மென்று நாங்கள் வலியுறுத்தும் போது இந்திய ஒருமைப்பாடும் ஒற்றுமையும் பலமாக இருக்க வேண்டுமென்பதையும் கருத்தில் கொண்டுதான் சொல்கிறோம்.

‘‘அதிக அதிகாரங்களை மாநிலங்களுக்கு அளிப்பதால், ஒற்றுமை பாதிக்கப்பட்டுவிடாது.
நட்பு முறையிலேயே இந்த பிரச்னை திர்ப்பதையே நான் பெரிதும் விரும்புகிறேன்.’’ என்றார்.

டெல்லியில் சொன்னதோடு நின்றுவிடாமல், நீதிபதி ராஜமன்னார் தலைமையில் குழு அமைத்து மத்திய மாநில அரசுகளுக்கான உறவை ஆராய அமைத்தார்.
இன்று மாநில சுயாட்சியின் தத்துவம் அங்கிங்கெனாதபடி எங்கும் அரசியலில் எதிரொலித்து நிற்கிறது என்றால், அந்த கொள்கைகளுக்கு அகில இந்திய அங்கீகாரம் பெற்றுத் தந்தவர் கலைஞர் தான்.

இந்தியாவே திரும்பி பார்க்கும் முடிவை பிரதமராக இருந்த இந்திரா எடுக்க காரணமாக இருந்தார்
என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா.

வங்கிகள் தேசிய மயம்
பிரதமர் இந்திரா காந்தியின் ’வங்கிகள் தேசிய மயம்’ திட்டத்துக்கு அடிகோலியது கலைஞர் தான்.

டெல்லியில் நடந்த பிரதமர், மாநில முதல்வர்கள் கலந்து கொண்ட தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் (20.4.69) பேசிய கலைஞர்,
‘‘வங்கிகள் தேசிய மயமாக்கப்பட வேண்டும்’’ என்ற கோரிக்கையை வைத்தார். ‘‘இது நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்’’ என்றும் குறிப்பிட்டார்.

அன்றைய நிதி அமைச்சர் மொரார்ஜி தேசாய், ‘‘வங்கிகளை தேசிய மயமாக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டால்,
சொர்க்கத்தையே இங்கே கொண்டு வந்துவிடலாம் என நினைப்பது தவறு’’ என்று ஏளனம் செய்தார்.

ஆனால் முதல்வர் கலைஞரின் கருத்தை ஏற்று அன்றைய பிரதமர் இந்திராகாந்தி ஏற்றுக் கொண்டு 14 வங்கிகளை தேசிய மயமாக்கினார்.
அதற்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் கலைஞர், பிரதமர் இந்திராவை சென்னைக்கு அழைத்துப் பாராட்டுவிழா எடுத்து 14 பொருட்கள் பரிசாக கொடுத்தார்.

இதோடு கலைஞர் நின்றுவிடவில்லை. ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய பிரதமர் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுவார்.
ஜனவரி 26ம் தேதி குடியரசுத் தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவார். ஆனால் மாநிலங்களில் இந்த இரண்டு நாட்களிலும் ஆளுநரே கொடியேற்றுவார். இது நியாயமா?

பிரதமரைப் போலவே முதல்வர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்.
ஏன் பிரதமருக்கு இருக்கிற அந்த வாய்ப்பு மாநில முதல்வர்களுக்கும் வழங்கக் கூடாது என்று முதன் முதலாக குரல் கொடுத்தவர் கலைஞர் தான்.

அதோடு நின்றுவிடாமல், அனைத்து மாநில முதல்வர்களும் ஆகஸ்டு 15ம் தேதி தேசிய கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தார்.
மே தினத்துக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாள் என்று முதன் முதலில் அறிவித்தவர் கலைஞர் தான். கம்யூனிஸ்டுகள் அளும் மாநிலங்களில் கூட இப்படியொரு அறிவிப்பை செய்யவில்லை.
மே தின விடுமுறை

தமிழகத்தில் அறிவித்த திட்டத்தை இந்தியா முழுவதும் அறிவிக்க வைத்ததும் கருணாநிதிதான். வி.பி.சிங் பிரதமராக இருந்த போது, மே தினத்தை இந்தியா முழுவதும் சம்பளத்தோடு கூடிய விடுமுறை நாளாக அறிவிக்க வைத்தார்.
கலைஞரின் சாதனைகள் அதோடு முடிந்துவிடவில்லை. 1969 மே மாதம் ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ஜாகீர் உசேன் மரணம் அடைந்தார். அப்போது பிரதமர் இந்திரா காந்திக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கும் கருத்து வேறுபாடு நிலவியது.
மூத்த தலைவர்கள் அனைவரும் துணை ஜனாதிபதியாக இருந்த விவி.கிரியை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று சொன்னார்கள். காங்கிரஸ் கட்சியின் தலைவர் நீலம் சஞ்சீவ் ரெட்டியை குடியரசு தலைவர் பதவிக்கு அறிவித்தனர்.
வி.வி.கிரி தானும் போட்டியிடுவேன் என களத்தில் குதித்தார். காங்கிரஸ் கட்சியில் குழப்பம். எதிர்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண கலைஞரை டெல்லிக்கு அழைத்தார்கள், மாசானியும் நாத்பாயும், துவேதியும், பி.ராமமூர்த்தியும்.
கலைஞரோடு பல்வேறு மாநில கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது எடுத்த முடிவை கலைஞர் டெல்லியில் அறிவிக்கக் கூடாது. சென்னையில்தான் அறிவிக்க வேண்டும் என்று முடிவானது.
அதன்படி கலைஞர் ஜூலை 26ம் தேதி, ‘‘வி.வி.கிரியை ஆதரிப்போம்’’ என்று கருணாநிதி அறிவித்தார்.

அதன்படி வி.வி.கிரியே குடியரசு தலைவரானார். வி.வி.கிரிக்காக குடியரசு தலைவர் மாளிகையின் பிரமாண்டமான கதவு கோபாலப்புரத்தில் இருந்து திறந்து வைத்தவர் கலைஞர்.
1982ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலிலும் கலைஞரின் பங்கு முக்கியமானது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என கலைஞரிடம் ஆலோசனை நடத்தினார்.
கியானி ஜெயில் சிங்

ஆர்.வெங்கட்ராமன், நரசிம்மராவ், வி.பி.சிங் ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. கருணாநிதியோ, ‘பிரதமரான நீங்களும் உயர் சாதி. நீங்கள் பரிந்துரைக்கும் 3 பேரும் உயர் சாதியினர். பிறபடுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கியான ஜெயில் சிங்யை அறிவிக்கலாம்’’ என்றார்.
கலைஞர் சிபாரிசு செய்ததாலேயே கியானி ஜெயில் சிங் ஜனாதிபதியானார்.

இதோடு அவரின் தேசிய பணி முடிந்துவிடவில்லை. ராஜிவ் காந்தியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசில் இருந்து வெளியேறிய வி.பி.சிங், பிரதமராக உறுதுணையாக இருந்தார்.
ஐ.கே.குஜரால், தேவகவுடா பிரதமராகவும் கலைஞர் காரணமாக இருந்தார் என்பது வரலாறு.
ஒரு மாநில கட்சியின் தலைவர், ஒரு மாநில முதல்வர் என்ற நிலையில் நின்றாலும், அகில இந்தியப் பிரச்னையை, இந்தியக் குடிமகன் என்கின்ற நிலையில் அனுகி, அகில இந்திய கட்சித் தலைவர்களுக்கே தலைவராக விளங்கியவர்தான், திமுக தலைவர் கலைஞர். Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

Sep 18
"ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமக" என்றும் மந்திரம் இருக்கிறது.

இதற்கும் ஒரு தாய்க்கும் பல தந்தைகளுக்கும் பிறந்த சூத்திரன் என்றுதான் அர்த்தம்.

இப்படி மந்திரங்கள் எல்லாமே பெண்களை பல ஆடவர்களோடுதான் தொடர்பு படுத்தி பேசுகிறது. அது திருமணம் என்றாலும் சரி,
கோயில் என்றாலும் சரி, சாவு வீடு என்றாலும் சரி, பெண்ணுக்கு அங்கே பல புருசர்கள்தான்.

ஆனால் சிலர் பிழைப்பு நாறிப் போய்விடும் என்ற அச்சத்தில் ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் சொல்லி தப்பிக்கப் பார்ப்பார்கள்.
மந்திரம்:
ஏக மாதா பகு பிதா
ஸர் சூத்திரா சமர்பயாமே

கோயிலில் பார்ப்பானிடம் அர்ச்சனை செய்ய சொல்லும் போது அவன் சொல்லும் மந்திரம்

அர்த்தம்: ஒரு தாய் பல தந்தைக்கு பிறந்த சூத்திர (தேவ***பய) உனக்கு படைக்க சொல்கிறான்

இதுக்குமேலயும் சமஸ்கிருதத்தில் படைக்க சொல்பவன்
ஏகமாதா
பகுபிதா தான்
Read 24 tweets
Sep 18
தாயைச் சந்தேகித்து விபச்சாரி என்று கூறி பார்ப்பான் சொல்லும் மந்திரம் தான் திதி.

ரத்தக் கண்ணீர் நாடகத் தில் ஒரு காட்சி! நடிகவேள் எம்.ஆர். ராதாவின் அப்பாவுக்கு திவசம் செய்வதற்குப் புரோகித பார்ப்பான் வருவான். அப்பொழுது நடிகவேள் கேட்பார். Image
அய்யர்வாள் உங்களுக்குக் கொடுக்கும் இந்தப் பொருள்கள் எங்க அப்பாவுக்குப் போய்ச் சேருமா? என்று கேட்பார் - பேஷா சேரும் என்பான் அந்தப் புரோகிதன்; ஓ புரோகிதன் வயிறு பரலோகத்துக்குத் தபால் பெட் டியோ?
யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா, த்னமே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா. ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம. கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண.
Read 5 tweets
Sep 18
கோடை கால வெப்பத்தால் உடல் சூடு அதிகரித்து, தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. சுரைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதால் உடல் சூடு குறையும், வெப்பத்தால் ஏற்படும நோய்கள் தாக்காமல் காக்கும்.

சுரைக்காய் ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது. Image
ஏனெனில் சுரைக்காய் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு வெளியேற உதவுகிறது. அடிக்கடி சுரைக்காயை உணவில் சேர்த்து கொண்டால் கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுத்தன்மை முற்றிலும் நீங்கி விடும்.
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் பழுத்த சுரைக்காயை ரசமாக்கி, அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தினால் சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகளில் சிறந்த முன்னேற்றம் கிடைக்கும்.
Read 5 tweets
Sep 18
பலாப்பழச் சுளையை சாப்பிடுவதால் நம் உடலில் நடக்கும் அற்புதங்கள்!!

பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகமிருப்பதால், இது உடலில் சோடியத்தின் அளவை சீராக பராமரிக்கும். இதனால் உடலில் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும். Image
பலாப்பழத்தில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், இதனை சீசன் போது தினமும் உட்கொண்டு வாருங்கள். மேலும் இது பருப்பு வகைகளுக்கு சிறந்த மாற்றாக விளங்கும். இதனால் பருப்புகளின் மூலம் ஏற்படும் வாய்வு தொல்லையை தவிர்க்கலாம்.
பலாப்பழத்தில் டயட்டரி கொழுப்புகள் அதிகம் இருப்பதால், அவை குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, குடல் புற்று நோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். பலாப்பழத்தில் ஆன்டி-ஆக்சிடன்ட், பைட்டோ நியூட்ரியன்டுகள் மற்றும் பிளேவோனாய்டுகள் உள்ளது. இவை புற்று நோய் தாக்கத்திலிருந்து
Read 5 tweets
Sep 17
தமிழ் சினிமா எப்போ திருந்துமோ ?

சாதா ஆட்டோ வேகமாகச் செல்லுமா அல்லது ஷேர் ஆட்டோ வேகமாகச் செல்லுமா என்பதை எல்லாம் ஓட்டிக் காட்டி நம்மை அசரடிக்கும் காட்சி ஒரு சோறு பதம்.அதிலும் இப்படியான ஒரு சம்பவத்துக்குப் பின்னரும் கூட, அதைக் குடும்பத்தில் இருக்கும் யாரும் கவனிக்கவில்லை Image
என்பதெல்லாம் நிறைய லாஜிக் மீறல்கள் ஏன்?அந்தப் பெண் காவல் துறையில் பணியாற்றும் நபருக்குச் சொந்தமாய் இருந்து,அவரே அந்த வழக்கை விசாரிக்கும் அரிய வாய்ப்பும் கிட்டினால் மட்டுமே பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முடியும் என இயக்குநர்
அதே போல், ஒருவன் மைனராக இருக்கும்போது பாலியல் குற்றம் செய்தால், அவன் பெரியவன் ஆன பின்பும் அதையேதான் இந்தச் சமூகத்தில் செய்யப்போகிறான் எனக் காட்டுவதும் முதிர்ச்சியின்மை, சமூகத்தின் மீதான அக்கறையின்மை ஆகியவற்றின் வெளிப்பாடே!
Read 7 tweets
Sep 17
பீப் போர்ட்டில் இல்லை .

சங்பரிவாரங்கள் போற்றும் இந்துமதத் துறவி விவேகானந்தர், மாட்டிறைச்சிப் பற்றிய தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். ‘இராமன்-சீதை’ மாட்டிறைச்சியை விரும்பி உண்டனர் என்று கூறும் விவேகானந்தர், மாட்டிறைச்சி உணவை நிறுத்தி யதால்தான், இந்த நாடு ஆண்மை இழந்து போனது
என்றும் கூறுகிறார். மாட்டுக் கறி உணவுப் பழக்கத்தை கைவிட முடியாமல் திணறியதால்தான் அதன் நினைவாக பார்ப்பனர்கள் மாட்டுப் பாலையும், மாட்டு ‘மூத்திரத்தை’யும் (கோமியானம்) உணவாக்கிக் கொண்டனர் என்று அம்பேத்கர் கூறுகிறார். Image
“நான் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். நமது பழங்கால பழக்க வழக்கத்தின்படி மாட்டுக் கறியை சாப்பிடாதவன் நல்ல இந்துஅல்ல.(He is not a good Hindu whodoes not eat beef) - (தொகுதி-3 - அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ‘ஷேக்ஸ்பியர் கிளப்பில்பிப்.2, 1900 அன்று ஆற்றிய உரை).
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(