1/ படியளக்கும் பெருமாள் என்ற பெயர் எப்படி வந்தது, தெரியுமா...? சிறப்பு பதிவுபுரட்டாசி தமிழ் மாதம் 20ந் தேதி இன்று... 06.10.2022#ஸ்ரீரங்கம்.தமிழில் திருவரங்கம்.தென்னரங்கம் இவர் அந்தரங்கம்.பல விசேஷமான வைபவங்களை கொண்டவர். வருடம் 365 நாளும் திருவிழா காணும் பெருமாள் அநேகமாக
2/ இவராகத்தான் இருப்பார்.இவர் மீது கொண்ட பக்தியாலும், பிரம பாசத்தாலும் பலரும் பல விதங்களில் பல வழிகளில் இவரை ராஜா போலவே பாவித்து பணிவிடை செய்து வருகின்றனர். இவருக்கான #தளிகை அதாவது சமையல் முறை அலாதியானது. இவருக்கு ஹம்சை செய்யும் பிரசாதங்கள், பலகார பட்சணங்களை தயாரிக்கும் முறைகளும்
3/ வெகு பிரசித்தமானது.பாத்திரங்களும் ஒரு முறை மாத்திரமே பயன்படுத்துவர், மண் பாண்டங்களே பிரதானம். அவ்வளவு ஏன் ஊறுகாய் கூட அன்றே தயாரிக்க படும். இவருக்கு அமுது ஹம்சை பண்ணப்படும் பட்டியல் நீண்டது, கண் படும் என்பதால் இங்கு விரிவடைய எழுதிடவில்லை. ஆனால் தளிகை தயாரிப்பு முறைகளை அன்றே
4/ கல்வெட்டுகளில் செதுக்கி வைத்து சென்றுள்ளனர். இஃது பலருக்கும் தெரியாது.விடாய் பருப்பு, எரி துரும்பு இவைகள் என்னவென்று சொல்லுங்கள் பார்க்கலாம், உங்களால் இது என்ன என்று ஊகிக்க முடிகிறதா.????விடாய் பருப்பு என்றால் மொச்சைக்காய், எரி துரும்பு என்றால் விறகு .... இவையெல்லாம்
5/ கல்வெட்டுகளில் உள்ள வார்த்தைகள். வெள்ளிக்கிழமைகளில் மத்திய வேளையில் தளிகை ஹம்சைக்கு மொச்சை அவசியம், ஆனால் அன்று துவாதசி என்றால் கிடையாது. திருவோணம் நட்சத்திரமானால் கட்டாயம் மிளகு சேர்க்க வேண்டும். இப்படி ஏகப்பட்டது அதில் சொல்லப்பட்டுள்ளது.துவாதசி பரணை என்றால் 21 காய்கறிகள்.
6/ இஃது மத்திய வேளையில் மாத்திரமே.மற்றைய நாட்களில் வேறு முறை. ஸ்ரீ ரங்கத்தில் மாத்திரம் செடி ஐந்து, கொடி ஐந்து,காய் ஐந்து,கனி ஐந்து தாவர பச்சீயம் (கீரை வகைகள்) ஐந்து என வகைப்படுத்தி தளிகை ஹம்சை நடக்கிறது.சில தளிகைகளுக்கு மா கல் பாத்திரம் பயன்படுத்துவர்.ஆச்சரியமாக
7/ இருக்கிறதா?????இதற்கே அசந்தால் எப்படி, காலை மற்றும் இரவு நேர தளிகை வேறுவகை. இரவில் வெகு நிச்சயமாக தயிர், பச்சீயம், ஊறுகாய் வெண்ணெய் கிடையாது. அதுபோலவே காலை வேளையில் தானிய வகைகள் கிடையாது.இதில் கவனிக்க தக்க அம்சம் ஒன்று உண்டு. தக்காளி, கேரட், பீன்ஸ்,சோயா, முள்ளங்கி, முட்டைகோஸ்,
8/ பீர்க்கங்காய், சுரைக்காய் போன்றவை இதில் கிடையாது.கிழங்குகளில் மஞ்சளை தவிர்த்து மற்ற உருளை, சேனை, கருணை கூட கிடையாது. இன்றளவும் இப்படி தான்.செடி ஐந்து காய்கள் சமைக்கும் சமயத்தில் கொடி ஐந்தில் உள்ள காய்கள் பயன்படுத்திடமாட்டா.உதாரணமாக செடி ஐந்து காய்களில் வெண்டை, சுண்டை, கத்தரி
9/ யோடு கொடி ஐந்து காய்களான அவரை மொச்சை கோவை எதுவும் இடம் பெறாது. மலைப்பாக இருக்கிறதல்லவா..... எப்பேர்ப்பட்ட வாழ்வியல் நெறியை கடைப்பிடித்து வந்துள்ளனர் அவர்கள். இதற்கு நா ருசி காரணம் அல்ல. நாராயணன் நாமத்தின் பால் உள்ள #ருசி.நாராயணனே நமக்கே பறை தருவான் என்கிறது கோதை சொன்ன
10/ வார்த்தை. இங்கு #பறை என்பது மேளம் அல்ல அளவை முறை. இன்றளவும் ஸ்ரீ ரங்கத்தில் நம்பெருமாள் நெல் அளவையை நேரில் வந்து பார்த்து செல்கிறார். பிரமோத்சவ காலங்களில் பத்து நாள் உத்சவத்தில் திருக்கொட்டாரம் வந்து நெல் அளவையை பார்வையிடுகிறார்.இஃது உணவு பிரதானம் என்று காட்ட அல்ல,
11/ உன்னதமானவற்றையே உட்கொள்ள செய்ய வேண்டும் என்று பார்த்து பார்த்து நம்மை ஒரு தாயை போல பார்த்து கொள்கிறார். அவரை நாம் எப்படி கொண்டாட வேண்டும்.ஸ்ரீ ராமாநுஜர் இதனை காட்டிக்கொடுக்கிறார். எப்படி??? அரங்கன் இரவு வேளையில் சுக்கு திப்பிலி மிளகு தட்டி போட்டு பால் ஹம்ஸை நடக்கிறது. இதற்கு
12/ உண்டான பால் சுவையாக தித்திப்புடன் இருக்க வேண்டும் என எண்ணுகிறார். இளம் கரும்புகளை மாடுகளுக்கு உட்கொள்ள கொடுத்து அதன் மடியில் கறக்கும் பால் இனிப்பான விதத்தில் இருக்கும் என்று அவ்விதம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார். இதற்கு பெயர் என்ன????ஸ்ரீ ரங்கம் முழுவதுமே இப்படி பார்த்து
13/ பார்த்து கட்டமைத்து உள்ளனர். ஏதோ உட்கொள்ளும் விஷயம் மாத்திரம் அல்ல....ஸ்ரீ ரங்கத்தின் மதில் சுவற்றில் ஏகப்பட்ட பொந்துகள் இருக்கும். இவை ஏதோ நீர் வரும் வழி என்றோ அல்லது பராமரிப்பு செய்ய உள்ள வழியோ இல்லை. பிறகு அஃது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒன்று என்றால் உங்களுக்கு
14/ ஆச்சரியமாக இருக்கும்.ஆம் அவைகளை குறிப்பிட்ட வடிவில், அகலத்தில் குறிப்பிட்ட இடைவெளிகளில் செம்பூரான் கற்களைக் கொண்டு உள்ளே கடுக்காய் சித்திரத்தை அம்மான் பச்சரிசி இவைகளை கொண்ட கலவைகளை பூசி உண்டாகியுள்ளனர் எதற்கு புறாக்கள் தங்க, அதுவும் #மரகதப்புறாக்கள். இந்த வகை புறாக்கள் தான்
15/ இன்று நம் தமிழகத்தின் மாநில பறவை❤️.சரி இதற்கு இத்தனை முனைப்பு. இந்த புறாக்கள் அவ்வளவு சுலபமாக தன் இருப்பிடத்தை தேர்ந்தெடுக்காது. பல்வேறு விஷயங்கள் பரிசீலித்து பார்க்கும் அது. இஃது தன் கூட்டில் எச்சமிடாது. எதற்காக இந்த பறவை???இது மழைக்கு மூன்று நாழிகை முன்பாக அகவையிடும்,
16/ (கத்தும்) அந்திசந்தி வேளையில் கத்தாது, மண் கறையான், சிலந்தி பாம்பு இவற்றை அண்ட விடாது. அதுபோலவே தேள் பூரான் குளவி இவற்றை விரட்டி விடும். மற்ற எச்சம் இடும் பறவையினங்களை கிட்ட சேர்க்காது. ஒரு வேளை பறவை எச்சத்தில் விதைகள் இருந்து கல் இடுக்குகளில் விழுந்து முளைத்தால்
17/ கட்டிடத்திற்கு பாதிப்பு என்பதால் இந்த ஏற்பாடு.இப்போது சொல்லுங்கள் இஃது வெறும் பக்தி மாத்திரமா??????உயர்ந்த உயிரியல் தத்துவமல்லவா, எப்பேர்ப்பட்ட அவதானிப்பு இருந்திருந்தால் இது சாத்தியப்படும்.இதை தானே இன்று #பல்லுயிரியம் என்று உலகம் கொண்டாடுகிறது. அதனை அன்றே சாதித்த நம்மவர்களை
18/ நாம் என்னவென்று சொல்வது.அவர்களை நாம் எப்படி எல்லாம் கொண்டாட வேண்டும் என்பதனை நீங்களே சொல்லுங்கள்.🙏🌹ஓம் நமோ நாராயணா நமஹாஓம் நமோ நாராயணா நமஹாஓம் நமோ நாராயணா நமஹா

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அகத்தியர்

அகத்தியர் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @aghathiyar

Oct 7
1/ இவெரா வை தூக்கி பிடிக்கும் காரணம் !!!!🔥🔥 இதை 👇 அறிந்தால் நீ யார் ❓ஈ.வே.ராமசாமி என்ற மிகச் சாதாரண, சராசரி மனிதனைவிட கேடுகெட்ட வாழ்க்கை வாழ்ந்த ஒருவன் எப்படி தந்தை பெரியாராக, லட்சம் கோடி சொத்துக்களுக்கு அதிபதியானார்?-பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்தது பிடிக்காததால்
2/ தி.கவிலிருந்து பிரிந்து தி.மு.கழகத்தை ஆரம்பித்த அண்ணாவும், கருணாநிதியும் அதற்குப் பிறகு ஈவேராவை நாக்கூசும் வார்த்தைகளால் அர்ச்சித்துள்ளனர்-ஆனாலும், தி.மு.க ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபிறகு ஈவேராவைத் தூக்கி வைத்துக் கொண்டாடினர், தமிழகம் முழுவதும் ஈவேரா சிலைகள், தெருக்களுக்கு, பஸ்
3/ நிலையங்களுக்கு ஈவேரா பெயர் என்று ஈவேராவை முன்னிலைப்படுத்தியே வருகின்றனர் ஏன்?-பெரியார் என்ற பிம்பத்தை உருவாக்கியதும், அதை இன்றுவரை காத்து வருவதும் பண்னாட்டு மிஷநரிகளின் சதி என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா?-உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்பினால் முழுவதும் படியுங்கள்-கடந்த
Read 19 tweets
Oct 6
1/ #RSS#WeStandWith_RSS ஆர்எஸ்எஸ்.ஐ அழிப்பேன் ஒழிப்பேன் எனக்கூறும் விபரமறியா தற்குறிகளுக்கு, ஆர்எஸ்எஸ் யை எவராலும் அசைக்க முடியாத பிரம்மாண்டத்தை பற்றி தெரிந்து கொள்ளவும்.குடியரசுத் தலைவர்பிரதமர்உள்துறை அமைச்சர்மத்திய அமைச்சர்கள்துணைக் குடியரசுத் தலைவர்பாராளுமன்ற
2/ சபாநாயகர்மற்றும்18 முதலமைச்சர்கள்29 கவர்னர்கள்417 எம்பிக்கள்1600 க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள்1 லட்சம் கிளைகள்15 கோடி தன்னார்வத்தொண்டர்கள்2 லட்சம் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளிகள்5 லட்சம் ஆசிரியர்கள்1 கோடி மாணவர்கள்42 கல்லூரிகள்13 உயர் கல்வி நிறுவனங்கள்3 ஆராய்ச்சி நிறுவனங்கள்120
3/ படுக்கை வசதி கொண்ட இந்தியாவிலேயே மிகப்பெரிய தொழுநோயாளிகளுக்கான ராஜமுந்திரி ஆஸ்பத்திரி2 கோடி பாரதீய மஜ்தூர் சங்கத்தின் உறுப்பினர்கள் (தொழிற்சங்கம்)1 கோடி ABVP செயலாளர்கள் (மாணவர் அமைப்பு)15 கோடி பிஜேபி உறுப்பினர்கள்16000 பள்ளிகளை நடத்தும் வித்யா பாரதி.1200 ப்ரகாஷன் சமூகம்
Read 12 tweets
Oct 6
1/ *யார் பணக்காரன்?யார் ஏழை?* இதென்ன கேள்வி ... பணம் நிறைய வைத்திருப்பவன் பணக்காரன் .துன்பப்படுபவன் ஏழை. *அது தானே நமது விடை?*இந்த விடை சரியா ? *நிகழ்வு.. 1.*ஒரு பெரிய சீமாட்டி ஒரு புடவைக் கடைக்குச் செல்கிறார் புடவை எடுக்க."எனக்குக் கொஞ்சம் பட்டுச்சேலைகள் காட்டுங்கள் ...விலை
2/ மலிவாக இருக்கட்டும்.என் மகனுக்குத் திருமணம்என் வீட்டு வேலைக்காரிக்குக் கொடுக்கவேண்டும்.. "என்கிறார். விற்பனையாளர் எடுத்துப் போட்ட புடவைகளில் *மலிவானதாக* ஒன்றைத் தேர்வு செய்து பணத்தைக் கட்டிவிட்டு எடுத்துச் சென்றார். சற்று நேரம் கழித்து அந்த வேலைக்காரி வருகிறார். "என்
3/ முதலாளியம்மா பையனுக்குக் கல்யாணம்,*நல்ல சேலையா* ஒன்னு அவங்களுக்கு எடுத்து கொடுக்கணும்,விலை கொஞ்சம் கூட இருந்தாலும் பரவாயில்லை, நல்ல டிசைனா எடுத்துப் போடுங்க என்றார்.*நிகழ்வு..2.*ஒரு பெரிய இடத்துப் பெண், ஒருமுறை பிக்னிக்கிற்கு சென்ற இடத்தில ஒரு ஸ்டார் ஓட்டலில்
Read 18 tweets
Oct 6
1/ #youth.comஇளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.. !அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், என்ரான் என்ற பிரபல நிறுவனம், மகாராஷ்டிரா மாநிலம் தபோல் பகுதியில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டது...!ஆனால்,உள்ளூர் மக்களின் எதிர்ப்பால் இது நடக்கவில்லை. இதன் விளைவாக, கோபமடைந்த
2/ என்ரான்,இந்திய அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் ₹38,000 கோடி இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்தது.இந்திய அரசின் வழக்கறிஞராக ஹரிஷ் சால்வே, குல்பூஷண் ஜாதவ் இருவரையும் வாஜ்பாய் நியமித்தார்.!இந்தியாவுக்கு எதிராக, என்ரானின் வழக்கறிஞர் யார் தெரியுமா காங்கிரஸ் பசிதம்பரமே
3/ தான்.வழக்கு, இந்தியாவுக்கு ஆதரவாக, வாஜ்பாய் அரசு வெற்றி பெற்றது..!! , காலம் கடந்தது..!!பின்னர் வாஜ்பாய் அரசு முடிந்து காங்கிரஸ் அரசு அமைந்தது...!! மன்மோகன் சிங் பிரதமர். கேபினட் அமைச்சர் சிதம்பரம்,என்ரான் சார்பில் வழக்கு மேல்முறையீடு செய்யபட்டது..!என்ரான் சார்பில் வழக்கில்
Read 11 tweets
Oct 5
1/ C P தான்சிதம்பரம், நடராஜருக்கே வெளிச்சம் 😳காங்கிரஸ் ஆட்சியின் (2004 - 2014) யோக்யதையை இன்று விஜய் மல்லையா வழக்கை லண்டனில் விசாரித்த அந்த ஊர் ஜட்ஜ் ஓவர் டைம்போட்டு காரித் துப்பியிருக்கிறார். இதில் நம்ம ஊர் லிபரல்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது லண்டன் கோர்ட்
2/ பாரதத்திலிருந்து 6500 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. அதோடு அந்த கோர்ட்டுகளை பிஜேபியோ.. மோதிஜி-அமீத்ஷாஜியோ.. மிக மிக முக்கியமாக ஆர்.எஸ்.எஸோ கட்டுப்படுத்துவதில்லை. கட்டுப்படுத்தவும் முடியாது. இரண்டு மாதங்களுக்குமுன் ஒரு வெள்ளிக் கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திரு.ஜஸ்டிஸ்
3/ எம்மா அர்பனாட் (Justice Emma Arbaughnott) கூறியதாவது.. “இந்தியாவில் இருக்கும் வங்கிகள் தாங்களே தங்களின் வங்கி விதிகளையும் அதன் விதிமுறைகளையும் விஜய் மல்லையாவின் ஏர்லைன் கம்பெனியான கிங்ஃபிஷருக்குக் கடன் கொடுத்தபோது முழுமையாக மீறியுள்ளனர். இதனை யாரும் கண்ணை மூடிக் கொண்டு
Read 9 tweets
Oct 4
1/ 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥அந்த முதல்வர் புதிதாக பொறுப்பேற்ற உடனே ஒரு உத்தரவு இடுகிறார் அதாவது அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் கேட்பாரற்று இத்துப் போய்க் கொண்டிருக்கும் வாகனங்களை உடனே ஏலம் விட வேண்டும் என்று -அதில் கிடைத்த 50 கோடி ரூபாய் பணத்தை அப்படியே கழிப்பிடம் இல்லாத
2/ வீடுகளுக்கு கழிப்பிடம் கட்டிக் கொடுங்கள் என்று கூறிவிட்டார் -அவர்தான் மோடி -பிரதமராக பதவியேற்ற பின் ஒரு வேண்டுகோள் விடுத்தார் அதாவது, கேஸ் மானியம் தேவைப்படாதவர்கள் தானாக முன் வந்து விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது -இன்றும் மானியம் என்பது அம்பானி முதல் அடிமட்ட மக்கள் வரை ஒன்று
3/ போலவே தான் இருக்கிறது - ( ஜெயலலிதா, கருணாநிதி எல்லாருமே வருடம் 12 சிலிண்டர் மானியத்தில் அணுபவித்து வந்த ஏழைகளே)இதை ஏற்றுக்கொண்ட இரண்டு கோடி நல்ல உள்ளங்கள் தங்கள் மானியத்தை விட்டுக் கொடுத்தனர்(அதில் தமிழகத்தில் இருந்து 8 லட்சம் பேர்)அதை அப்படியே சிலிண்டர் இணைப்பு இல்லாமலிருந்த
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(