M.SivaRajan Profile picture
Oct 13 10 tweets 2 min read
*#பாஞ்சஜன்யம்*

பாஞ்சஜன்யம் என்பது ஒரு அபூர்வமான சங்கு!

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் கைகளில் இருப்பது இந்த சங்கு தான்!

ஒரு சங்கில் உள்ளே 4 சங்கங்கள் இருக்கும்!மொத்தத்தில் ஐந்து சங்குகள்!

ஆகவே பாஞ்சஜன்யம் என்பார்கள்.
பாஞ்சஜன்யம் பற்றிய தகவல்கள் :

பாஞ்சஜன்யம் என்பது கடலில் கிடைக்கும் ஒரு சங்கு தான்.

ஆனால் அந்த சங்கு சாமான்யமாக கிடைப்பதில்லை.

ஆயிரம் சிப்பிகள் சேருமிடத்தில் ஒரு இடம்புரி சங்கு கிடைக்குமாம்.

ஆயிரம் இடம்புரி சங்குகள் விளையும் இடத்தில் ஒரே ஒரு வலம்புரி சங்கு கிடைக்குமாம்.
வலம்புரி சங்குகள் ஆயிர கணக்கில் எங்கு இருக்கிறதோ அங்கே அரிதான சலஞ்சலம் என்ற சங்கு கிடைக்குமாம்.

சலஞ்சலம் சங்கு பல்லாயிர கணக்கில் உற்பத்தியாகும் இடத்தில் அரிதினும் அரிதான பாஞ்சஜன்ய சங்கு கிடைக்கும்.

சங்கொலி என்பதே பிரணவ ஓசையை வெளிப்படுத்தும் ஒரு இயற்கை வாத்தியம்.
அதிலும் சுத்தமாக அக்ஷரம் பிசகாமல் பிரணவ மந்திரத்தை ஒலிப்பது பாஞ்சஜன்யம் சங்கு மட்டும் தான்.

அந்த சங்கு கிருஷ்ண பரமாத்மா கையில் மட்டும் தான் இருக்கும் !!
ஸ்லோகம் :

|விஷ்ணோர் முகோத்தா நில பூரிதஸ்ய|

|யஸ்ய த்வநிர் தானவ தர்ப்பஹந்தா:|

|தம் பாஞ்ச ஜன்யம் சசி கோடி சுப்ரம்

சங்கம் ஸதா(அ)ஹம் சரணம் ப்ரபத்யே|
பொருள் :

மகாவிஷ்ணுவின் பவளச் செவ்வாய்வழியே வெளிவரும் காற்றினால் ஒலி எழுப்பப்படுவதும்

தன் கம்பீர ஒசையால் அசுரர்களுக்கு ஒலி அச்சத்தைக் கொடுக்கக் கூடியதும்,
வெண்மை வண்ணத்தில் ஒரு கோடி நிலவுகளின் ஒளிக்கு ஈடானதுமான பாஞ்சஜன்யம் என்ற சங்கை வணங்குகின்றேன்!

எப்போதும் சரணடைகின்றேன்!🙏
கீழ்காணும் இந்த படத்தில் காணும் சங்கு உள்ளே நான்கு சங்குகள் இருக்கின்றன!
.
இது மிக மிக அபூர்வமானது! இந்த சங்கின் நுனியிலும் அடியிலும் விளிம்பிலும் தங்க வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.
சங்கின் நுனியில் ரத்தினங்கள் கொண்டு அழகு படுத்தப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட அபூர்வமான பாஞ்சஜன்ய சங்கு மைசூரில் உள்ள ஸ்ரீசாமுண்டீஸ்வரி தேவியின் ஆலயத்தில் அன்னையின் அபிஷேகத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சங்கு மைசூர் சமஸ்தான மன்னர்களால் மைசூர் சாமுண்டீஸ்வரி அன்னைக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது!

ஒம் நமோ நாராயணாய. 🙏

#பாஞ்சஜன்யம்_சங்கு

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Oct 14
#சர்ப்ப_தோஷ_நிவர்த்தி

*பாம்புரநாதர் கோவில், திருப்பாம்புரம்*

கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. Image
அதனால் கோபமடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார்.

அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல் பட்டன.

சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க
இறைவனும் மனமிரங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருப்பாம்புரம் 
தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார்.

அவ்வாறே ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் சிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும்,
Read 18 tweets
Oct 14
கண்பார்வை குறைபாடுகளை நீக்கும் மாங்காடு வெள்ளீஸ்வரர் கோவில்

திருமால் வாமன அவதாரத்தின் போது மகாபலி சக்கரவர்த்தி தானதர்மங்கள் செய்யும்போது திருமால் வாமன வடிவத்தில் வந்து தானம் கேட்டார். Image
அசுர குருவாகிய சுக்கிராச்சாரியார் தானம் கேட்க வந்திருப்பது சிறுவனல்ல மகாவிஷ்ணவே என்பதை உணர்ந்து மகாபலி சக்கரவர்த்தியிடம்
“தானம் கொடுக்காதே” என்று கூறுகிறார்.
வாமன வடிவில் வந்த திருமால் மூன்றடி மண் கேட்க, “நீங்கள் கூறும் தானத்தைக் கொடுக்கிறேன்” என்று கூறி கெண்டியிலிருந்து நீரை வார்த்துக் கொடுக்க முனைய அந்த கெண்டியின் துளை வழியில் அசுரகுரு சுக்கிராச்சாரியார் கருவண்டு வடிவத்தில் உருமாறித் தடுத்தார்.
Read 14 tweets
Oct 14
*நானும் சிவன் தான் என்று ஆணவம் பிடித்த*

தேங்காய் கதை தெரியுமா?

பக்தி திருவிளையாடல் கதைகள் மூலம் நம் முன்னோர்கள் நமக்கு அளித்த பயனுள்ள கருத்துகள் ஏராளமாக இருக்கின்றன.

அவை அனைத்தும் மனிதனை நெறிபடுத்தும் வகையில் அமைந்திருக்கும். Image
இவ்வகையில் ஆணவம் கொண்ட தேங்காய் எம்பெருமான் ஈசனிடமே கர்வமாக பேசி வாங்கி கட்டிய கதை தான் இது.

‘யாகவாராயினும் நாகாக்க’, என்ற வள்ளுவன் கூற்றை கடைபிடிக்க தவறியவர்கள் யாராக இருந்தாலும் இறுதியில் அவமானப்பட்டு தான் போக வேண்டி இருக்கும்.
ஒரு முறை கைலாயத்தில் சபை கூடிய போது அங்கு இருந்த தேங்காய் நடப்பவற்றை எல்லாம் பார்த்து கொண்டும், கேட்டு கொண்டுமாய் இருந்தது.

கூட்டம் கலைந்து அனைவரும் சென்றதும் ஆணவம் கொண்ட அந்த தேங்காய் சிவனை நோக்கி திரும்பி பார்த்து நானும் சிவன் தானே? என்றது.
Read 15 tweets
Oct 14
ஆண் பெண் இடையே ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கும் வழிபாடு

மூன்றாம் பிறைச் சந்திர தரிசன நாட்களிலோ, கிருத்திகை, ரோஹிணி நட்சத்திர நாட்களிலோ சந்திரசேகரபுரத்தில் அருள்புரியும் Image
கிருத்திகை ரோகிணி சமேத சந்திர பகவானுக்கு தாமே கையால் அரைத்த சந்தனத்தை சாற்றி வழிபடுதலால் மனம் சம்பந்தமான பிரச்னைகளும் உறவுப் பிரச்னைகளும் தீர்வடையும்.
பெண் உறவு முறைகளில் ஆண்கள் சந்திக்கும் இடர்களும், ஆண் உறவு சம்பந்தங்களில் பெண்கள் அடையும் வேதனைகளும் விடிவு பெற குறிப்பாக உயர் பெண் அதிகாரிகளால் ஆண்கள் அடையும் துன்பங்களும், ஆண்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளும் தணியும்.
Read 6 tweets
Oct 14
#வராஹி_பூஜை

பூர்வ புண்ணிய படி யாருக்கு வராஹி பூஜை கைகூடும்.

வராஹி அன்னை கரிய நிறம் உடையவள்.

கையில் “உலக்கையும்”, “கலப்பையும்” ஏந்தியவள்.

வேதவடிவாகி பூமியை நோக்கும் வடிவம் கொண்டு கூரிய இரு பற்களை உடையவள் இந்த வராஹி. Image
வாராகி உதித்த நட்சத்திரம்:- ஆயில்யம்

வாராகி உதித்த திதி :- பஞ்சமி (வளர்பிறை)

வாராகி உதித்த மாதம் :-ஆடி

வாராகிக்கு உகந்த நிறம் :-

நீலம், கருப்பு, பவள நிறம் ஆனால் நீல நிற வஸ்திரமே முதன்மையானது.
வாராகிக்கு உகந்த மலர் :- நீல சங்கு பூ, கருந்துளசி, வில்வம்
வாராகிக்கு வலிமை கூடும்

நாள் :- பவுர்ணமி, தேய்பிறை பஞ்சமி, அஷ்டமி, தசமி திதி சிறப்பு
வாராகி வந்து நம்மோடு பேசும் நேரம் :- இரவு 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் பூஜை செய்ய சிறப்பு.
Read 6 tweets
Oct 13
சங்கடஹர சதுர்த்தி விரத மகிமை..!!

நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சவுபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம்.

ஆவணி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி தினத்தில் இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும். Image
இரவு சந்திரன் உதயமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாஸ்திரம். 

அன்று சந்திரன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்யவேண்டும்.

மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி மிக மிக உயர்வானது.
அதுவும் செவ்வாய்க்கிழமை அந்நாள் அமைவது மிகவும் விசேஷம். 

அது மகா சங்கடஹர சதுர்த்தி என்றழைக்கப்படுகிறது.

அந்நாளில் காலையிலிருந்து உபவாசம் இருந்து கணபதியைத் தியானிக்க வேண்டும்.

இரவு பூஜை முடித்த பின் கணேச நிவேதனத்தை மட்டும் உண்டு தனிமையில் உறங்க வேண்டும்.
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(