M.SivaRajan Profile picture
Oct 14 18 tweets 3 min read
#சர்ப்ப_தோஷ_நிவர்த்தி

*பாம்புரநாதர் கோவில், திருப்பாம்புரம்*

கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது.
அதனால் கோபமடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார்.

அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல் பட்டன.

சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க
இறைவனும் மனமிரங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருப்பாம்புரம் 
தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார்.

அவ்வாறே ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் சிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும்,
இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும்,

மூன்றாம் சாமத்தில் திருப்பாம்புரம் பாம்புர நாதரரையும்,

நான்காம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர்.
ராகு – கேது தோஷம் நீக்கும் கோவில்:

திருப்பாம்புரம் ஒரு ராகு – கேது நிவர்த்தி ஸ்தலம்.

குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், 
காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன் திருப்பாம்புரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்பது ஸ்தலமகாத்மியம்.
ராகுவும் கேதுவும் ஏக சரீரியாக அதாவது ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக விளங்கிகிறது.

மேலும் சிவராத்திரி அன்று இரவில் ஆதிசேஷன் வழிபடும் நான்கு தலங்களில் இத்தலம் மூன்றாவதாகும்.
மேலும் ஆதிசேஷன், பிரம்மன், பார்வதிதேவி, அகத்தியர், தட்சன், சூரியன் போன்றோர் பூஜை செய்த தலம், இந்திரன் சாபம் நீங்கிய தலம், கங்கை பாவம் தொலைந்த தலம்,

சந்திரன் பழி நீங்கிய தலம் என்று எண்ணற்ற பெருமைகளைக் கொண்ட தலம் இதுவாகும்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 122 வது தேவாரத்தலம் ஆகும்.

 ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசை நடந்தால், 7 வருட கேது தசை நடந்தால்,
ராகு புக்தி கேது புக்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணம் தடைபடுதல், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் ஆகிய தோஷங்கள் நீங்க இத்தலத்திற்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி
கோவில் அர்ச்சகர் வழி நடத்தும் வண்ணம் பரிகாரங்கள் செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இவ்வாலயத்தின் இராஜகோபுரம் 3 நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
இராஜகோபுரத்தின் எதிரே ஆதிசேஷ தீர்த்தம் இருக்கிறது.

இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள பாம்புரேஸ்வரரை வழிபட்டால் எல்லா வகையான நாக தோஷங்கள் விலகி விடுகின்றன.

மூலவர் பாம்புரேஸ்வரர் கிழக்கு நோக்கி நாக கவசம் சாற்றப்பட்டு காட்சி தருகிறார்.
அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது.

அம்பாள் ஒரு கையில் தாமரை மலரையும் மற்றொரு கையில் ருத்திராக்ஷ மாலையுடனும் அபய முத்திரையுடன் காட்சி தருகிறாள்.

இக்கோவிலில் உள்ள சட்டநாதர் சந்நிதியும், மலையீஸ்வரர் சந்நிதியும் மிகவும் விசேஷமானது.
தலவிநாயகர் ராஜராஜ விநாயகர் சந்நிதி, தேவார மூவர் சந்நிதி, சனீஸ்வரன் சந்நிதி ஆகியவை இங்குள்ள மற்ற சந்நிதிகளாகும்.

திருவீழிமிழலை என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இங்கிருந்து அருகில் இருக்கிறது.
இத்தலத்து கோவிலின் பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பார்த்தால் திருவீழிமிழலை கோவில் விமானம் தெரியும் என்று கூறப்படுகிறது.

ஆதிசேஷன் வழிபட்ட கோவில் ஆதலால் இன்றும் கோவிலின் உள்ளே பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக கூறுகிறார்கள்.
ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகளில் திருப்பாம்புரம் கோவிலுக்குள் மல்லிகையின் மணமோ, தாழம்பூவின் மணமோ வீசுவதாகவும் அச்சமயம் பாம்பு கோவிலுக்குள் எங்கேனும் உலாவிக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.

இத்தலத்தில் பாம்புகள் யாரையும் கடிப்பது இல்லை என்கிறார்கள்.
விஷம் தீண்டாப் பதி என்ற சிறப்பு இத்தலத்திற்கு உள்ளது.

திருஞானசம்பந்தர் 
இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 1-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது.
கும்பகோணம் – காரைக்கால் சாலை வழிப்பாதையில் கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி தெற்கே 2 கி.மி. சென்றும் இத்தலத்தை அடையலாம்.

அருள்மிகு பாம்புரேஸ்வரர் திருக்கோவில்,

திருபாம்புரம், சுரைக்காயூர் அஞ்சல்,

குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Oct 15
#திவ்ய_தேசங்கள்

*அது என்ன 108 திவ்ய தேசங்கள் ?*

ஒரு முறை பிரம்மா வைகுண்டத்தில் இருக்கும் பெருமாளிடம்,

""வைகுண்டம் தவிர வேறு எங்கெல்லாம் நீர் இருக்கிறீர்?'' என்று கேட்க,

""ஸதம்வோ அம்ப தாமானி ஸப்தச்ச'' என்று வேதவாக்கியத்தின் மூலம் உணர்த்தினார். Image
ஸதம் என்றால் நூறு. ஸப்த என்றால் ஏழு. ஆக பெருமாள் இருக்கும் இடங்கள் 107. பெருமாள் நித்யவாசம் செய்யும் வைகுண்டத்தை சேர்த்தால் 108.

இந்த திவ்யதேசங்களை எல்லாம் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
நாலு வரிகளில் 108 திவ்யதேசங்கள் : --

ஸ்ரீ பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் 108 திவ்யதேசக் கணக்கை நான்கு வரிகளில் கீழ்காணும் பாடல் மூலம் தருகிறார்;
Read 10 tweets
Oct 15
அதிகம் சாப்பிட்டால் 'சாப்பாட்டு ராமன்' என்று ஏன் கூறுகிறார்கள்?

ராமனுக்கும் சாப்பாட்டிற்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?

ஒருவர் சாப்பாட்டை அதிகமாக சாப்பிடும் பொழுது அல்லது விரும்பி சுவைத்து, ரசித்து, ஆக்ரோஷமாக சாப்பிடும் பொழுது அவர்களை நாம் சரியான ‘சாப்பாட்டு ராமன்’ என்பர். Image
போதும் போதும் என்கிற அளவிற்கு வயிறு முட்ட சாப்பிடும் இந்த சாப்பாட்டு பிரியர்களை இப்படி கூறுவதற்கும், சாப்பாட்டு ராமன் என்கிற பெயரில் இருக்கும் ராமனுக்கும் என்ன சம்பந்தம்?

இதற்கு பின்னணியில் இருக்கும் கதை காரணம் என்ன? என்கிற தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
14 ஆண்டுகள் வனவாசம் சென்ற ஸ்ரீ ராமர் ராவணனைப் போரில் வென்று விட்டு அயோத்தி திரும்பும் சமயத்தில் தன் குருவாகிய பரத்வாஜ முனிவரை காண விழைந்தார்.

அவருடைய ஆசியைப் பெற்றுக் கொண்டு பின்னர் அயோத்தி திரும்புவதாக முடிவு செய்தார்.
Read 13 tweets
Oct 15
#திருப்பதி_வடை !

திருப்பதி லட்டு அனைவருக்கும் தெரியும்.

அது என்ன திருப்பதி வடை❓

வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

திருமலையில் வானவர்கள் சந்தி செய்ய நின்ற என் அப்பனுக்கு " வடை நைவேத்தியம் " மிகப் பிரசித்தமானது !

" தோல் பருப்பு வடை " என்றே அதனை வழங்குவர்கள் ! Image
தோலோடு கூடிய பருப்பினை ஊற வைத்து அரைத்து, உப்பு சேர்த்து, நெய்யில் பொரித்து எடுத்து இறைவனுக்குப் படைப்பர்கள் !

படிக்கும் போதே நமக்கும் அந்த "அப்பன் வடை " பிரசாதமாகக் கிடைக்காதா என்கிற எண்ணம் ஏற்படுவதியல்பு !
ப்ரஸாதம் என்றால் இறையருள் என்றே பொருள் !

எதனை உட்கொள்ளுவதால் அவன் அருள் நமக்குச் சுலபமாகக் கிட்டுமோ அதுவே ப்ரஸாதம் !

கிடையும் நடையும் காட்டிடும் அரங்கனே இத்திருமலையில் , நமக்கு வடையைக் கொடுத்து ,
Read 5 tweets
Oct 15
#மஹாலக்ஷ்மி_சிறப்பு_பதிவு

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் தகவல் :

*அனைத்து*
*வளங்களையும் நமக்கு அள்ளித் தரும் 16 வகையான மகாலக்ஷ்மி அன்னை*
🪔🌻🪔🌻🪔🌻🪔🌻🪔
*ஸ்ரீதனலட்சுமி*

நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.
*ஸ்ரீவித்யாலட்சுமி*

எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.

அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும்.

யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.
Read 19 tweets
Oct 15
அற்புதம் நிறைந்த மூன்று
ஸ்ரீராமர் திருத்தலங்கள்...

சயன நிலையில் ஸ்ரீராமர் அருள்பாலிக்கும் ஸ்ரீ ஆதி ஜெகனாத பெருமாள் கோவில்

திருப்புல்லாணி ராமநாதபுரம் அருகே 8 கிமீ தொலைவில் இக்கோவில் உள்ளது.

108 வைணவ ஸ்தலங்களில் இது ஒன்றாகும். Image
திருமங்கையாழ்வாரால் மங்களாசனம் செய்யப்பட்ட ஸ்தலம் இது.

அதில் பள்ளிகொண்ட சயன நிலையில் ராமர் காட்சியளிக்கிறார்.

இவ்வூரில் தர்ப்பையில் படுத்திருந்ததால் இப்படியான அமைப்பு இக்கோவிலில் காணப்படுகிறது.

மற்ற கோவில்களில் பெருமாள் மட்டுமே இவ்வாறு காட்சியளிப்பார்.
ராமர் கோவில்களில் இந்த கோவிலில் மட்டுமே இப்படி ராமர் சயன நிலையில் இருப்பது போன்ற அமைப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read 16 tweets
Oct 15
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் :

வருடத்தின் 365 நாட்களில் 450 திருவிழாக்களும், உற்சவங்களும் இவருக்கன்றி வேறு எந்த தெய்வத்துக்கும் நடைபெறுவதில்லை.

அதனால்தான் என்னவோ திருப்பதியை, ‘பூலோக வைகுண்டம்’ என்று கூட சிலர் சிறப்பித்திருக்கிறார்கள். Image
திருப்பதி நகரத்தை ஒட்டியுள்ள திருவேங்கட மலையின் மீதுதான் ஏழுமலையான் கோயில் கொண்டிருக்கிறான்.

சேஷாத்திரி,
நீலாத்திரி,
கருடாத்திரி,
அஞ்சனாத்திரி,
வ்ருஷபாத்ரி,
நாராயணாத்ரி,
வேங்கடாத்ரி
ஆகிய ஏழுமலைகளுக்கும் அதிபதி என்பதால் பெருமாளுக்கு ‘ஏழுமலையான்’ என்ற திருநாமம்.
திருவேங்கடமும், பத்மாவதி தாயார் குடியிருக்கும் திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும்,

பொதுவில் திருப்பதி என்று ஒரே பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

மலைக்கு மேலுள்ளதை மேல் திருப்பதி என்றும், மற்றதை கீழ் திருப்பதி என்றும் அழைக்கிறார்கள்.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(