M.SivaRajan Profile picture
Oct 23 13 tweets 2 min read
#ஸ்ரீ_தன்வந்திரி_ஜெயந்தி

திருமால் மருத்துவராக தோன்றிய நாளே தன்வந்திரி ஜெயந்தியாகும்.

நோய் வராமல் நல்ல உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கிடைக்க தன்வந்திரி வழிபாடு செய்யப்படுகிறது.
ஸ்ரீ தன்வந்திரி விஷ்ணு அம்சமாக

பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும்

முன் வலக்கையில் அட்டைப்பூச்சியை ஏந்தியும்,

இடக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி  அளிக்கிறார்.
அக்கால மருத்துவமுறையில் நோயாளியின் உடலிலிருந்து கெட்ட  ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப்பூச்சிகள் பயன்படுத்தப்பட்டன.
தன்வந்திரி அவதாரம்

பாற்கடலை கடையும்போது ஆலகால விஷம் வந்தது.

அதை சிவபெருமான் எடுத்து கொண்டதால் , அதனை அடுத்து காமதேனு, கற்பக விருட்சம், ஐராவதம், மூதேவி, மகாலக்ஷ்மி தோன்றினர்.

கடைசியாக அமிர்தத்துடன் விஷ்ணுவின் அவதாரமான தன்வந்திரி தோன்றினார்.
இவரின் திருக்கரத்தில் உள்ள கலசத்திலிருந்து வழங்கிய அமிர்தத்தை தேவர்கள் உண்டதால் சாவாவரம் பெற்றனர்.

தனதிரயோதசி

"ஹிமா"என்ற அரசனுக்கு திருமணமான நான்காவது நாள் பாம்பு கடித்து இறக்க நேரிடும் என்ற சாபம் இருந்தது.
இதை அறிந்த அவள் மனைவி அந்த நாள் (தன் திரேயாஸ்)  இரவில் கணவனைச் சுற்றிலும் ஏராளமான விளக்கு ஏற்றி,

நடுவே ஆபரணங்களையும் வைத்து கணவனுக்கு புராணக் கதை கூறி தூங்காது பார்த்து கொண்டாளாம்.
பாம்பு உருவத்தில் வந்த எமன் தீப எண் ணெயில் ஆபரணங்களின் பிரகாசத்தில் கூசவே,

காலைவரை காத்திருந்து விட்டு திரும்பி சென்றதாகவும்,

மனைவி யமனிடம் இருந்து காப்பாற்றியதாகவும்  கதை உள்ளது.
தன்வந்திரி  நாளன்று தன்னை சுற்றிலும் தீபங்கள் ஏற்றி தன்  மனைவி காப்பாற்றியது  தன்வந்திரி கடவுளே காரணம் என மன்னன் நம்பினான்.

மக்கள் அனைவரையும்  தன்திரேயாஸ்  தினத்தன்று, இரவில் யமதீபம் ஏற்றி  வழிபடவேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஐப்பசி மாத அமாவாசை 2 நாட்களுக்கு முன்பாக வரும் திரியோதசி நாளன்று தீபாவளி திருநாள் துவங்கி விடுகிறது.

அன்று தன்வந்திரி ஜெயந்தி தன்திரேயாஸ் என்றும் சொல்வர்.
தன்வந்திரி  மந்திரம்

ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே
அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய
த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூப
ஸ்ரீ தன்வந்த்ரி ஸ்வரூப ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஔஷத சக்ர நாராயணாய நமஸ்தே.’
விளக்கம்:

ஸ்ரீ மஹாசுதர்சனராகவும், வாசுதேவராகவும் விளங்குபவரும்; 
அமிர்த கலசத்தைக் கரங்களில் ஏந்தி,  அனைத்து பயங்களை போக்குபவரும்;
எல்லா நோய்களுக்கும் நிவாரணம் அளிப்பவரும்;  மூன்று உலகங்களுக்குத் தலைவராக விளங்குபவரும்;
அனைத்துச் செல்வங்களுக்கும் அதிபதியாக விளங்குபவருமான  ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூபியான ஸ்ரீ ஔஷத (மருந்து) சக்ர நாராயணரான ஸ்ரீ தன்வந்திரிப் பெருமானை வணங்குகிறேன்.
தன்வந்திரி ஜெயந்தியன்று கோதுமை மாவும், வெல்லமும் சேர்த்து தயாரித்த  பிரசாதத்தை நெய்வேத்தியம் படைக்கலாம். 

தன்வந்திரி போற்றி சொல்லி நோய்களிலிருந்து விடுபடலாம்.

#தன்வந்திரி_வழிபாடு

#தன்வந்திரி_ஜெயந்தி

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Oct 24
#தீபாவளி_லேகியம்

செய்முறை :

1 - சுக்கு -50 -கிராம்
2 - சித்தரத்தை 25 - கிராம்
3 -ஓமம் 10 - கிராம்
4 - அரிசி திப்பிலி -25 - கிராம்
5 - கண்டந் திப்பிலி -25 -கிராம்
6 - விரலி மஞ்சள் - 1 துண்டு
7 -நெய் - 50 - கிராம்
8 - நல்லெண்ணெய் -50- கிராம்
9 - பனை வெல்லம் - 200 -கிராம் Image
மருந்து சரக்குகளை வெயிலில் நன்றாக உலர்த்தி அம்மியில் போட்டு இடித்து பொடித்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது நீர் விட்டு வெல்லத்தை தூள் செய்து போட்டு கரைந்ததும் பாகுபதம் வரும் போது மருந்து பொடியை போட்டு கிளறவும்
லேகியம் போல் இறுகி வரும் பொது நெய்,எண்ணெய் விட்டு கிளறவும்,சிறிது எடுத்து விரல்களில் உருட்டிப் பார்த்தால் ஒட்டாத பதத்தில் இறக்கவும்.
Read 5 tweets
Oct 24
#லட்சுமி_குபேர_பூஜை

செல்வ செழிப்புடன் வாழ வைக்கும் லட்சுமி குபேர பூஜையை பற்றிய பதிவு :*

ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வரும் அமாவாசை அன்று மாலை 6 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாக இந்த பூஜையை நாம் செய்ய வேண்டும். Image
ஏனென்றால் இந்த நேரத்தில் தான் குபேர மகாலட்சுமி தேவியை வணங்கி இந்த செல்வத்திற்கான அதிபதி வரத்தை பெற்றார்.

எனவே நாமும் அதே நேரத்திலே அவர்களை வணங்க வேண்டும் என்பது தான் இந்த நேரத்திற்கான காரணம்.
இந்த பூஜைக்கு நமக்கு தேவையான பொருட்கள் மஹாலட்சுமி தாயார் படம் மற்றும் குபேர படம்.

படத்தை பூஜை அறையில் வடக்கு திசையை பார்ப்பது போல் வைக்க வேண்டும்.

இரண்டு குத்து விளக்கு, அல்லது இரண்டு அகல் விளக்கு அதில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள்.
Read 11 tweets
Oct 23
*தீபாவளி பண்டிகையின் ஆன்மீக அறிவியல் விளக்கம்..!*

இந்து மத கலாச்சார பழக்க, வழக்கங்களில் சாஸ்த்திரம்,சம்பிரதாயம், திருவிழாக்கள், பண்டிகைகள், போன்றவைகள் மனிதகுல வாழ்க்கையின் நல் வாழ்விற்காக உருவாக்கப்பட்டவைகள் ஆகும்..
ஆனால் அதன் உண்மையான அறிவியல் விளக்கங்களை மறைத்து இதிகாசம், புராணங்கள் போன்ற கதைகளாக வடித்துள்ளனர்.

இதனால் காலப்போக்கில் இதன் பெருமைகளும், மகத்துவங்களும் மறைந்து போவதற்கு இடமுண்டு.
இதில் இன்றைய கால சூழ்நிலையில் தீபாவளி பண்டிகையைப் பற்றி அறிவியல்பூர்வமான விளக்கங்கள் அளிப்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தில் இரண்யாசனை வதம் செய்து பூமாதேவியைக் காப்பாற்றி பூமியை வராகப் பெருமான் தன "தெற்றுப் பல்லால்"
Read 39 tweets
Oct 23
*#ஸ்ரீ_ரங்கம்_தீபாவளி_சிறப்பு*

*தீபாவளி கொண்டாடும்*
*மாப்பிள்ளை* *ஸ்ரீ ரங்கநாதப்பெருமாள்*

புதுமணத் தம்பதியர் மட்டும்தான் தலை தீபாவளி கொண்டா வேண்டுமா என்ன?

*திருவரங்கத்தில்* *திவ்ய தம்பதியான அரங்கநாதன் தாமும் சிறப்புற மாப்பிள்ளை மிடுக்கோடு தீபாவளி கொண்டாடுகிறாரே*!
*ஆம்* !!  *ஸ்ரீரங்கநாதர்* !!

*பெரியாழ்வாரின்* *மாப்பிள்ளை அல்லவா* !!

*ஆண்டாளை மணம் செய்து கொடுத்த பெரியாழ்வார் அரங்கனின் மாமனார் ஆயிற்றே* !!

வருடந்தோறும் அரங்கன் தீபாவளி கொண்டாடும் விதமே அலாதியானது தான்.
முதல் நாள் மாலை எண்ணெய் அலங்காரம், மேள தாளத்தோடு பெரிய பெருமாளுக்கு கண்டருளப் பண்ணுவர்.

மேலும் கோவில் சிப்பந்திகளுக்கு நல்லெண்ணெய், சிகைக்காய்த் தூள் ஆகியவையும் வழங்கப்படும்.
Read 9 tweets
Oct 23
தீபாவளியன்று வீட்டில் மகாலட்சுமி பூஜை செய்வது எப்படி?

எதைப் பின்பற்றலாம்?

இருளின் மீது ஒளி வெற்றி கொண்ட நாளாக கருதப்படும் இந்த தீபாவளி திருநாளில் வீடுகளில் பெருமளவிலானோர் லக்ஷ்மி தேவி வழிபாட்டில் ஈடுபடுவர்.
தீபாவளியின் போது மகாலட்சுமி பூஜை அல்லது லட்சுமி குபேர பூஜை முக்கியத்துவம் வருகிறது.

தீபாவளியன்று மகாலட்சுமியை வீட்டிற்கு வரவழைக்க எவ்வாறான பூஜை முறைகளை செய்யலாம் என பார்க்கலாம்.

தீபாவளியை வரவேற்க வீடுகள் முழுவதும் வண்ணமயமான ஒளி விளக்குகளால் அலங்கரிக்க படுகின்றன.
பல வகையான பாரம்பரிய இனிப்பு பலகாரங்கள் செய்யப்பட்டு தீபாவளி கொண்டாடப்படுகிறது.

இந்துக்களின் மிக முக்கியமான கொண்டாட்டங்களில் ஒன்றுதான் இந்த தீபாவளி திருநாள்.

வீடுகள் அனைத்தும் புதுப்பொலிவு பெற்று வண்ணமயமான மின் விளக்குகளின் வெளிச்சத்தில் காட்சியளிக்கும்
Read 15 tweets
Oct 22
#மஹா_பிரதோஷ_சிறப்பு

இன்று அபூர்வமான சனி மஹாப்பிரதோஷம்...

*சனி மஹாப்பிரதோஷம்..!!*

🙏 சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும்.

அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானதாகும்.
பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு.

எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் தோஷங்கள் அகன்றுவிடும்.
🙏 சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை.

எனவே, சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் சனி மஹாப்பிரதோஷம் ஆகும்.

🙏 ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது.
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(