#நரகாசுரன்_யார்
இப்போது உள்ள நேபாளத்துக்கு அருகே உள்ள பிரக்யோதிஷ்பூர் என்ற பூமியின் மன்னனாக இருந்தவன்தான் நரகாசுரன். மக்களுக்கு மட்டும் அல்லாமல் தேவர்களுக்கும் பெரும் மிரட்டலாக, பயங்கர அச்சுறுத்தலாக இருந்தவன் நரகாசுரன். நரகாசுரன், பூதேவியின் மகன். கடும் தவம் இருந்த நரகாசுரன்,
பிரம்மனிடமிருந்து ஒரு வரத்தைப் பெறுகிறான். அதாவது, எனது தாயாரின் கையால்தான் எனக்கு மரணம் நிகழ வேண்டும். வேறு யாரும் என்னை அழிக்க முடியாது என்பதுதான் அந்த வரம். நரகாசுரனின் கடும் தவத்தை மெச்சிய பிரம்மனும், வேறு வழியின்றி அந்த வரம் கொடுக்கிறார். அதன் பிறகு நரகாசுரனின் அட்டகாசம்
அதிகரிக்கிறது. கடவுள்களின் அன்னை என்று கூறப்படும் அதிதியின் காது வளையங்களையே திருடியவன் நரகாசுரன். அது மட்டுமா, பல்வேறு கடவுளர்களின் 16 ஆயிரம் மகள்களை கடத்தி வந்து தன் அந்தப்புரத்தில் சிறை வைத்தவன். நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துப் போனதையடுத்து அனைத்து கடவுளரும்
ஒன்று சேர்ந்து கிருஷ்ணனை சந்தித்தனர். நரகாசுரனை ஒடுக்கி, அவனிடமிருந்து தங்களுக்கும், மக்களுக்கும் விடுதலை தர வேண்டும் என முறையிட்டனர். கடவுளர்களே வந்த முறையிட்டதால் நேரடியாக கிருஷ்ணர் களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் குறித்து அறிந்த கிருஷ்ணர், தனது ரத சாரதியாக மனைவி சத்ய
பாமாவை (இவர் பூதேவயின் மறு உருவம் என்பதால்) அழைத்துக் கொண்டு கிளம்புகிறார். நரகனுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே கடும் சண்டை தொடங்குகிறது. அப்போது நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணன் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து நரகாசுரனைக் குறி
பார்த்து தாக்குகிறார். நகராசுகரன் வீழ்கிறான். பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார்.
நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார். இதுதான்
இன்றளவும் தீபாவளியன்று அதிகாலையில் எண்ணை தேய்த்து குளிக்கும் பழக்கமாக தொடருகிறது.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
எண்ணெய்*
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#பார்வதி_மலை
ஒரே மலையில் ஐந்து கோவில்கள்
புனேவில் உள்ள பார்வதி மலையின் கோவில்கள், பேஷ்வாக்களின் தூணாகவும், மராத்திய கட்டடக்கலையின் உதாரணம் ஆகவும் நிற்கும் கோவில்களாகும். பேஷ்வ ராஜ்யத்தின் மத நெறிமுறைகளின் அடிப்படையில் கட்டமைத்த இந்தக் கோவில் 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
அவர்களின் ராஜ்யத்தின் தோற்றம் முதல் சிதைவு வரை அந்தக் கோவில் அவர்களின் பெரிய அடையாளமாக இருந்ததால், இன்றும் அந்தக் கோவிலின் பெயரைச் சொன்னால், பேஷ்வாக்களின் கோவில் என்றுதான் அந்த மக்கள் கூறுகின்றனர். ஏனெனில், இந்த மலையில் மொத்தம் ஐந்துக் கோவில்கள் உள்ளன. தேவ்தேவேஷ்வரர் கோவில்
(சிவன் பார்வதிக்கு அற்பணிக்கப்பட்டது), கார்த்திகேய கோவில், விஷ்ணு கோவில், வித்தல் கோவில், ராமர் கோவில் என ஐந்துக் கோவில்கள் உள்ளன. இத்துடன் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் சூரிய கோவில் மற்றும் பவானி மந்திர் கோவில் உள்ளன. ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு பேஷ்வ
#திருவெள்ளக்குளம்_ஸ்ரீநிவாசப்_பெருமாள்
#திருமங்கை_ஆழ்வார் #குமுதவல்லி #அண்ணன்_கோவில் #மிக_அற்புத_புராண_ஸ்தலம்
துந்துமாரன், சூரியகுலத்து வேந்தன். பல வருடங்களாகப் பிள்ளைப் பேறு இன்றி ஏங்கியிருந்த அவனது கவலையைப் போக்க இறைவன் அவனுக்கு ஒரு குழந்தையை பிரசாதமாக நல்கினான். இயல்புக்கு
மாறாக முற்றிலும் வெண்மை சருமத்துடன் திகழ்ந்தது. அதனாலேயே அக்குழந்தைக்கு சுவேதன் என்று பெயரிட்டான் மன்னன். ஸ்வேதம் என்றால் வெண்மை. அரண்மனையே குழந்தை பிறந்த வைபவத்தில் களித்திருக்கும் போது, குழந்தைக்கு ஆசி நல்க குலகுருவான வசிஷ்டர் வந்தார். சுவேதனின் அங்க அமைப்புகளை கவனித்த அவர்,
அவன் பிறந்த தேதியை, நேரத்தைக் கணக்கிட்ட அவர், அந்தக் குழந்தை பால பருவத்தை தாண்டாது என்றறிந்து, தனக்குத் தெரிந்த உண்மையை மறைக்கலாகாது என்ற நேர்மையுடன் அவர் துந்துமாரனிடமும், அவன் மனைவியிடமும் அதனைத் தெரிவித்தார். பெற்றோர் பதறிப் போனார்கள். ஏங்கி, தவமிருந்து பெற்ற அபூர்வமான
#கீழ்படப்பை_வீரட்டேஸ்வரர்
சென்னை
சந்திரன், இங்கு வழிபட்டதை உணர்த்தும் விதமாக, கோயில் முன் மண்டபத்தில் இரு கைகளில் மலருடன், சந்திரன் காட்சி தருகிறார். சந்திர பகவான் ஒரே கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டிருப்பது சிறப்பான அம்சம். பிரகாரத்தில் தாமரை பீடத்தில் நவக்கிரக மண்டபம்
அமைக்கப்பட்டு இருப்பது வித்தியாசமான அமைப்பு. அகோர வீரபத்திரர், தனிச் சன்னதியில் வடக்கு நோக்கியிருக்கிறார். பவுர்ணமி தோறும் இவருக்கு வெற்றிலைக் காப்பிட்டு, விசேஷ பூஜை செய்கின்றனர். சிவராத்திரியன்று இரவில் இவருக்கு நான்கு கால பூஜையும் நடக்கிறது. காளத்தீஸ்வரர், சனீஸ்வரர், வள்ளி
தெய்வானையுடன் சுப்பிரமணியர் ஆகியோரும் உள்ளனர். சித்திரை மாத சதயம் நட்சத்திரத்தில், திருநாவுக்கரசர் குருபூஜை, ஆடி மாத சுவாமி நட்சத்திரத்தில் சுந்தரர் குருபூஜை விழா நடக்கிறது. இந்த விழாக்களின் போது நாவுக்கரசர், சுந்தரருக்கு விசேஷ அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கில்
#விசேஷ_தர்மம் #நற்சிந்தனை #கர்ணன்
பூலோகத்தில் மரணத்துக்குப் பின் மேலுலகம் சென்ற கர்ணன் சூரிய லோகத்தில் உள்ள தன் தந்தை சூரியனின் இருப்பிடத்தை அடைந்தான். தந்தையே நான் என் நண்பன் துரியோதனனுக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்த்த தர்மத்தை காப்பற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தர்மத்திற்காக
துரியோதனன் பக்கம் இருந்து போர் புரிந்தேன். ஆனால் வஞ்சகன் கிருஷ்ணர் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டார். இதன் காரணம் எனக்கு புரியவில்லை என்று புலம்பினான். அதற்கு சூரிய பகவான் கர்ணா கிருஷ்ணரை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்து விட்டாய். செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த
தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் கிருஷ்ணர் விசேஷ/உயர்ந்த தர்மமாக விளங்குபவன். உயர்ந்த தர்மம் செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மம் என்ற இரண்டு தர்மங்களில் எதை காப்பாற்ற வேண்டும் என்று வருகையில் உயர்ந்த தர்மத்தையே கிருஷ்ணன் காப்பாற்ற எண்ணுகிறான். நீ சாமானிய
#ஶ்ரீபார்த்தசாரதி_பெருமாள்_கோவில்
திருவல்லிக்கேணி சென்னை
108 வைணவ திவ்ய தேசங்களுக்குள் 61-ம் திவ்ய தேசமாகப் போற்றப்படும் பார்த்தசாரதி கோயில் மூலவர் ஒன்பது அடி உயரமானவர். வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத அதிசயமாகப் பெருமாள் இங்கே வெண் மீசைக்காரராகக் காணப்படுகிறார்.
மூலவர் பெயர்
வேங்கடகிருஷ்ணன் என்றாலும் உற்சவர் பார்த்தசாரதியின் பெயரிலேயே கோயில் அழைக்கப்படுகிறது. பார்த்தசாரதி என்று சொன்னாலே திருவல்லிக்கேணி கோயில் பெருமாளே பக்தர்களால் நினைவு கொள்ளப் படுகிறார். இந்தக் கோயிலில் உள்ள பார்த்தசாரதியின் முகத்தில் வடுக்கள் காணப்படும். பார்த்தனுக்குச் சாரதியாய்
தேர் ஓட்டியபோது எதிரிகளின் அம்புகள் பட்டதால் ஏற்பட்ட காயங்களின் தழும்புகள் அவை. இந்த வடுக்கள் நீங்க வேண்டும் என்பதற்காகவே பெருமாளுக்கான நிவேதனத்தில் பெருமளவு நெய் சேர்க்கப் படுகிறது.
பிருகு முனிவரின் மகளாகப் பிறந்த வேதவல்லித் தாயாருக்கு இந்தக் கோயிலில் தனிச் சன்னிதி உள்ளது.
தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம்.
ஆகமம்: பாஞ்சராத்ரம்
விமானம்: சுயம்பு விமானம்
புராணபெயர்: ராஜமன்னார்குடி
ஸ்ரீ ராஜகோபால சுவாமியின் திருஉருவத்தின் உயரம் 12 அடிஆகும். திருக்கோவில் வளாகத்தில் 16 கோபுரங்களுடன் 7 தூண்கள் 24 சன்னதிகள் 7 மண்டபங்கள் மற்றும் 9 குளங்கள் உள்ளன.
உற்சவர் சோழர் காலத்தினைச் சேர்ந்த வெண்கல விக்ரகம் ஆகும்.
குடந்தைக்கு தென்கிழக்கே செண்பகவனம் ஒன்று இருந்தது. அங்கே 1008 முனிவர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களுள் தலைச்சிறந்தவராக வாஹி முனி என்னும் முனிவர் இருந்தார். அவருக்கு கோபிளர் கோபிரளயர் என இரு புதல்வர்கள். இருவரும் ஸ்ரீமன்