M.SivaRajan Profile picture
Oct 30 37 tweets 6 min read
#ஸ்ரீசுப்பிரமண்ய_அஷ்டோத்திரம்.

{தமிழ் விளக்கத்துடன்}

1.ஓம் ஸ்கந்தாய நம:

{மேகத்திலிருந்து மின்னல் வெளிபடுவது போல்} சிவ ஜோதியிலிருந்து ஆறு பொறிகளாக வெளிப்பட்டு பிறகு ஒன்று சேர்ந்து ஒரு வடிவம் கொண்டதால் “ஸ்கந்தன்” என்று பெயர் அந்த ஸ்கந்தனுக்கு நமஸ்காரம்.
2. ஓம் குஹாய நம: - பக்தர்களின் இரு தயமாகிய குகையில் ஆத்ம சொரூபமாக இருக்கும் குகனுக்கு வணக்கம்.

3. ஓம் ஷண்முகாய நம: {தாமரை போன்ற} ஆறுமுகங்களுடைய கடவுளுக்கு வணக்கம்.

4. ஓம் பாலநேத்ரஸுதாய நம: - சிவனின் கண்களிலிருந்து தீப்பிழம்பாக வந்ததால் சிவனின் பிள்ளை.
5.ஓம் பிரபவே நம: - அனைத்தையும் அடக்கி ஆள்பவர்.

6.ஓம் பிங்களாய நம: - பொன்னிறம் கலந்த சிவப்பு நிறம் கொண்டவர்.

7. ஓம் க்ருத்திகாஸூநவே நம: - கிருத்திகை தேவதைகள் {கார்த்திகை பெண்கள்} என்ற ஆறுபேர் அவரை எடுத்து பாலூட்டினார்கள். எனவே கிருத்திகை பெண்களின் புதல்வன்.
8. ஓம் சிகி வாஹநாய நம: - மயிலை வாகனமாக உடையவர்.

9. ஓம் த்விஷட்புஜாய நம: - பன்னிரண்டு {வலிமை பொருந்திய} தோள்களை உடையவர்.

10.ஓம் த்விஷண்ணேத்ராய நம: - பன்னிரண்டு விதமான தெய்வீக குணங்களைத் தமது பக்தர்களுக்கு அருளும் மகிமை பெற்ற பன்னிரண்டு கண்களை உடையவர்.
11.ஓம் சக்திதராய நம :- பராசக்தியின் ஞான சொரூபமாகிய வேல் என்ற ஆயுதத்தைக் கையில் ஏந்தியவர்.

12.ஓம் பிசிதாச-பிரபஞ்ஜனாய நம: - பிசாசு, நரமாமிசம் உண்ணும் அரக்கர்கள் போன்றவர்களின் பலத்தைத் தகர்த்து எறிந்து அழிப்பவர்.

13.ஓம் தாரகாஸூர-ஸம் ஹாராய நம: - தாரகன் என்ற அசுரனை அழித்தவர்.
14. ரக்ஷோபல விமர்த்தனாய நமஹ: - ராக்ஷஸ சேனையின் பலத்தை அழித்தவர்.

15. ஓம் மத்தாய நமஹ: - மதம் பிடித்தவர் போல் யுத்தம் செய்பவர்.

16. ஓம் ப்ரமத்தனாய நமஹ: - மிகவும் வெறி பிடித்தவர் போல் பயங்கரமாக யுத்தம் செய்து எதிரி சேனைகளை அழித்தவர்.
தன்னிடம் சரண் புகுந்தவர்களின் பக்தியில் சிறிதேனும் ஊக்க குறைவு ஏற்பட்டால் அவர்களை காப்பாற்றி கைத்தூக்கிவிடும் இயல்புடையவர்.

17. ஓம் உன்மத்தாய நமஹ: - தனது பராக்கிரமத்தில் மிகவும் தன்னம்பிக்கையுடன் போர் புரிபவர்.அல்லது {யோக நிஷ்டையில் யோகேஸ்வர்ராக இருப்பவர்.}
18.ஓம் ஸுர ஸைன்ய ஸுரக்ஷகாய நமஹ: - தேவர்களின் சேனையை நன்றாக காப்பாற்றியவர்.

19.ஓம் தேவசேனாபதயே நமஹ: - தேவசேனையின் {தெய்வானையின்} கணவர்.

20.ஓம் ப்ராஜ்ஞாய நமஹ: - ஆத்ம ஞானத்தின் வடிவமாக இருப்பவர்.

21. ஓம் கிருபாளவே நமஹ: - பெரிதும் தயையும் கருணையும் மிக்கவர்.
22.ஓம் பக்தவத்ஸலாய நமஹ: - பக்தர்களிடம் பெரிதும் அன்புள்ளவர்.

23.ஓம் உமாஸுதாய நமஹ: - உமாதேவியின் புதல்வர்.

24.ஓம் சக்திதராய நமஹ: - சிவசக்தி ஜோதியில் பிறந்து அசுரர்களை கொல்லும் வலிமைக்கும், ஞானத்திற்கும் இருப்பிடமானவர்.
25.ஓம் குமாராய நமஹ: - சிவனுக்கும் பார்வத்க்கும் மத்தியில் செல்லக் குழந்தையாக இருப்பதால் குமாரன் எனப்படுவர்.

26.ஓம் க்ரௌஞ்சதாரணாய நமஹ: - க்ரௌஞ்ச மலையைப் பிளந்தவர்.

27.ஓம் ஸேனான்யே நமஹ: - தேவர்களின் படைத் தலைவர்.

28.ஓம் அக்னி ஜன்மனே நமஹ: - அக்கினிச் சுடராக பிறந்தவர்.
29.ஓம் விசாகாய நமஹ: - விசாக நக்ஷத்திரத்தில் உதித்தவர்.

30.ஓம் சங்கராத்மஜாய நமஹ: - எல்லோருக்கும் மங்களத்தைக் கொடுக்கும் ஈசனின் புதல்வர்.

31.ஓம் சிவஸ்வாமிநே நமஹ: - தந்தையாகிய சிவனுக்கு உபதேசம் செய்ததால் சிவஸ்வாமி என பெயர் பெற்றவர்.
32. ஓம் கணஸ்வாமிநே நமஹ: - சிவ கணங்களை கொண்ட சேனையின் தலைவர்.

33. ஓம் ஸர்வஸ்வாமிநே நமஹ: - ஜீவர்கள், ஜடப்பொருள்கள் உட்பட உலகம் முழுவதையும் தமது சொத்தாக்க் கொண்டிருப்பவர். எல்லோருக்கும் அருள் புரிபவர், எல்லோருக்கும் அருள் புரியும் உயர்ந்த தெய்வம் என்று கொண்டாடப்படுபவர்.
ஏற்ற தாழ்வு இல்லாத ஸர்வஸ்வாமி {உலக அதிபதி} என பெயர் பெற்றவர்.

34.ஓம் ஸநாதனாய நமஹ: - மிகவும் பழமையானவர்.

35. ஓம் அனந்த சக்தயே நமஹ: - அளவற்ற ஆற்றல் படைத்தவர்.

36. ஓம் அக்ஷோப்பியாய நமஹ – விருப்பு-வெறுப்பு போன்றவைகளால் {அல்லது எதிரிகளால் சலனமடையாதவர்.}
37.ஓம் பார்வதி ப்ரிய நந்தனாய நமஹ: - பார்வதியின் அன்புக்குரிய செல்லக் குழந்தை.

38.ஓம் கங்காஸுதாய நமஹ: - சிவனின் கண்களிலிருந்து தோன்றி தீப்பொறிகள் கங்கையச் சென்றடைந்ததால் கங்கையின் மைந்தன் என்று பெயர்.

39.ஓம் சரோத்பூதாய நமஹ: - சரவணப் பொய்கையில் பிறந்தவர்.
40. ஓம் ஆஹுதாய நமஹ: - யாகங்களால் போற்றப்படுபவர்.

41. ஓம் பாவகாத்மஜாய நமஹ: - அக்கினியின் புத்திரர்.

42.ஓம் ஜ்ரும்பாய நமஹ: - எங்கும் நிறைந்திருப்பவர்.

43.ஓம் ப்ரஜ்ரும்பாய நமஹ: - பக்தர்களின் உள்ளத்தில் புகுந்து உயர்ந்த எண்ணங்களைத் தோற்றுவித்து மலரச் செய்பவர்.
44. ஓம் உஜ்ஜ்ரும்பாய நமஹ: - பக்தர்களுக்கு நல்ல புத்தியையும் {உலக விசயங்களில் நல்ல அனுபவங்களையும்} முக்தியையும் ஞானத்தையும் அருளி அவர்களை வளரச் செய்பவர்.

45. ஓம் கமலாஸன-ஸம்ஸ்துதாய நமஹ: - தாமரையில் வீற்றிருக்கும் பிரம்மாவாலும் துதிக்கப்படுபவர்.
46.ஓம் ஏக வர்ணாய நமஹ: - ஒரே தத்துவமாகிய பரம்பொருள்.

47.ஓம் த்விவர்ணாய நமஹ: - சிருஷ்டிக்குக் காரணமான பிரகிருதியாகவும்,புருஷனாகவும் திகழ்பவர்.

48. ஓம் த்ரிவர்ணாய நமஹ: - சத்வம்,ரஜஸ்,தமஸ் என்ற மூன்று குணங்களுக்கும் அதிபதியாக விளங்குபவர்.
49. ஓம் ஸுமனோஹராய நமஹ: - அளவு கடந்த ஆனந்த வடிவமாக மனதை கவர்பவர்.

50.ஓம் சதுர் வர்ணாய நமஹ: - மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்ற நாங்கு உருவங்களாக இருப்பவர்.

51.ஓம் பஞ்ச வர்ணாய நமஹ: - பஞ்ச பூதங்களின் வடிவமானவர்.
52. ஓம் ப்ரஜாபதயே நமஹ: - உயிர்த் தொகுதிகளுக்குத் தலைவர்.அல்லது உலக ஸ்ருஷ்டிக்குக் காரணமாக இருப்பவர்.

53.ஓம் அஹஸ்பதயே நமஹ: - பகலை உண்டாக்கும் சூரியனைப்போல் மிகுந்த ஒளியுடன் விளங்குபவர்.

54.ஓம் அக்னிகர்ப்பாய நமஹ: - அக்னியில் பிறந்தவர்.
55.ஓம் சமீ கர்ப்பாய நமஹ: - எரியும் கட்டையிலிருந்து நெருப்புப் பொறிகள் கிளம்புவது போல் சிவனின் கண்களிலிருந்து கிளம்பிய பொறிகளிலிருந்து தோன்றியவர்.

56. ஓம் விஸ்வ ரேதஸே நமஹ: - உலகத்திற்கு வித்தாகிய பரம்பொருள்.

57. ஓம் ஸுராரிக்னே நமஹ: - தேவர்களின் பகைவர்களை அழிப்பவர்.
58.ஓம் ஹரித்வர்ணாய நமஹ: - மஞ்சள் நிறமாகவும் பொன்னிறமாகவும் காணப்படுபவர்.

59.ஓம் சுபகராய நமஹ: - பக்தர்களுக்கு நன்மையே செய்பவர்.

60.ஓம் வடவே நமஹ: - பிரம்மசாரி விரதம் பூண்டு ஆண்டியானவர்.

61. ஓம் படுவேஷப்ருதே நமஹ: - எதிரிகளிடம் மிகவும் கொடுமையானவர் போல் நடிப்பவர்.
62. ஓம் பூஷ்ணே நமஹ: - எல்லோரையும் பாதுகாப்பவர்.

63. ஓம் கபஸ்தயே நமஹ: - ஒளி வீசும் சூரியன் போல் பிரகாசிப்பவர்.

64. ஓம் கஹானாய நமஹ: - மற்றவர்களால் அறிய இயலாத ஸ்வரூபமும் சக்தியையும் செயல்களும் கொண்டவர்.

65. ஓம் சந்திர வர்ணாய நமஹ: - பூரண சந்திரனைப் போன்ற நிறமுள்ளவர்.
66.ஓம் கலாதராய நமஹ: - சந்திரனின் கலைகளைப் போல் குளிர்ந்த சுபாவமுள்ளவர்.

67. ஓம் மாயாதராய நமஹ: - மாயையை அடக்கியாள்பவர்.

68. ஓம் மஹாமாயினே நமஹ: - பக்தர்களுக்கு மாயையைக் கொடுப்பவரும் நீங்குபவருமான ஈஸ்வரன்.

69. ஓம் கைவல்யாய நமஹ: - ஒன்றேயாகிய கைவல்யம் என்ற முக்தியை அளிப்பவர்.
70. ஓம் சங்கராத்மஜாய நமஹ: - பரமேஸ்வரனிடம் ஜோதிமயமான ஆத்மாவாக பிறந்தவர்.

71. ஓம் விஸ்வ யோனயே நமஹ: உலகம் அனைத்திற்கும் பிறப்பிடம்.

72. ஓம் அமேயாத்மனே நமஹ: - அளவிட இயலாத மகிமையுள்ளவர்.

73. ஓம் தேஜோ நிதயே நமஹ; - ஒளியின் பொக்கிஷம் என்று சொல்லும் வகையில் ஒளி பொருந்தியவர்.
74. ஓம் அனாமயாய நமஹ: - வினைப்பயனால் உள்ளும் புறமும் பீடிக்கும் நோய்களால் பீடிக்கப் படாதவர் பிறவிப்பிணி இல்லாதவர்.

75. ஓம் பரமேஷ்டினே நமஹ: - தந்தைக்குப் பிரணவ உபதேசம் செய்த ஆச்சாரியனாக இருந்தவர்.

76. ஓம் பரப்ரஹ்மணே நமஹ: - பரம்பொருளாக இருப்பவர்.
77. ஓம் வேத கர்ப்பாய நமஹ: - வேதங்களின் தலைவர்.

78. ஓம் விராட்ஸுதாய நமஹ: - விராட் சொரூபமான பரமேஸ்வரினனின் புதல்வன்.

79. ஓம் புலிந்த கன்யா பர்த்ரே நமஹ: - வேடன் மகளான வள்ளி தேவியின் கணவர்.

80. ஓம் மஹா ஸாரஸ்வதாவ்ருதாய நமஹ: - அழகாகவும்,இனிமையாகவும் பேசுவதயே விரதமாக இருப்பவர்.
81. ஓம் ஆஸ்ரிதாகிலதாத்தே நமஹ: - தன்னைச் சரணைந்தடைவர்களுக்கு எல்லா நலங்களையும் வழங்குபவர்.

82. ஓம் சோரக்னாய நமஹ: - பக்தர்களின் பிறப்பு இறப்பு என்ற நோயைத் தவிர்ப்பவர்.

83. ஓம் ரோக நாசனாய நமஹ: - விலிப்பு, குஷ்டரோகம், க்ஷயரோகம் போன்ற மிகப் பெரிய வியாதிகளையும்
நாசம் செய்து பக்தர்களுக்கு அருள் புரிபவர்.

84. ஓம் அன்ந்த மூர்த்தயே நமஹ: - இடம் காலம் போன்ற எல்லைக் கடந்த ஸ்வரூபமானவர்.

85. ஓம் ஆனந்தாய நமஹ: - ஆனந்தமே வடிவானவர்.

86. ஓம் சிகண்டினே நமஹ: - சேவற்கொடி உடையவர்.
87.ஓம் டம்பாய நமஹ: - {குழந்தைக் கடவுள் என்று சொல்லப்பட்டாலும்} பகைவர்களை பயமுறுத்தித் துன்புறுத்தும் சாமர்தியம் உள்ளவர்.

88. ஓம் பரம டம்பாய நமஹ: - எதிரிகளிடம் போர் செய்வதில் நிகரற்ற சாமர்த்தியமும் வலிமையும் உள்ளவர்.

89.ஓம் மஹா டம்பாய நமஹ: - மிகுந்த உறுதியும் ஆற்றலும்
திறமையும் கொண்டு போர் செய்பவர்.

90. ஓம் விருஷாகபயே நமஹ: - எல்லா உடல்களிலும் உயிராக இருந்து செயல் புரிபவர்.

91. ஓம் காரணோபாத்த தேஹாய நமஹ: - மற்றவர்களால் வெல்ல முடியாத அசுரர்களை அழிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக உடல் எடுத்தவர்.
92. ஓம் காரணாதீத விக்ரஹாய நமஹ: - காரணம் கடந்த பிரம்ம ஸ்வரூபமானவர்.

93. ஓம் அநீஸ்வராய நமஹ: - தன்னை விட உயர்ந்தவர் எவரும் இல்லாதவர்.

94.ஓம் அம்ருதாய நமஹ: - அழிவற்றவர்.

95.ஓம் ப்ராயணாய நமஹ: - எல்லோரிடமும் உயிருக்கு உயிரானவர்.
96. ஓம் ப்ராணாயம பராயணாய நமஹ: - ப்ராணாயாம்ம் போன்ற யோக சாதனைகளுக்குப் புகலிடமாக இருப்பவர்.

97. ஓம் விருத்த ஹந்த்ரே நமஹ: - விரோதம் செய்பவர்களை அழிப்பவர்.

98. ஓம் வீரக்னாய நமஹ: - சூர பத்மன்,தரகாசுரன் போன்ற அசுரர்களை கொன்றவர்.
99. ஓம் ரக்த ஸ்யாமகலாய நமஹ: - கரும் சிவப்பான கழுத்தை உடையவர்.

100. ஓம் சுப்ரமண்யாய நமஹ: - சிறப்பான பிரம்ம ஸ்வரூபம் பெற்று உலகம் முழுவதற்கும் ஞான செல்வம் அருளும் ஸ்வாமி.

101. ஓம் குஹாய நமஹ: - மாயையால் எல்லாவற்றையும் மறைப்பவர்.
102. ஓம் ப்ரீதாய நமஹ: - பக்தகளிட்த்தில் மிகவும் அன்பாக இருப்பவர்

103. ஓம் ப்ரம்மண்யாய நமஹ: - தவத்திற்கும் வேதத்திற்கும் சான்றோர்களுக்கும் அனுகூலமாக இருப்பவர்.

104. ஓம் ப்ராஹ்மண ப்ரியாய நமஹ: - ப்ராம்னர்க்களுக்கு பிரியமுள்ளவர்.
105. ஓம் வம்ச விருத்தி கராய நமஹ: - பக்தர்களின் வம்சத்தை விருத்தி செய்து அருள் புரிபவர்.

106. ஓம் வேத வேத்யாய நமஹ: - எல்லா வேதங்களையும் நன்கு அறிந்தவர்.

107. ஓம் அக்ஷயபல ப்ரதாய நமஹ: - பக்தர்களுக்குக் குறைவற்ற நலங்களை தருபவர்.
108. ஓம் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஓம் ஸ்ரீ சுப்ரமண்யாய நமஹ: - வள்ளி தேவசேனையுடன் எழுந்தருளியிருக்கும் சுப்ரமண்ய ஸ்வாமிக்கு நமஸ்காரம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Nov 1
#பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வார் ஜெயந்தி இன்று.

இவரே பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார் என்ற சிறப்பினைப் பெறுகின்றார்.

இவர் காஞ்சிபுரத்தில் திருவெஃகா என்னுமிடத்தில் உள்ள பொய்கையில் தோன்றியவர்.

பொய்கையில் தோன்றியதால் பொய்கையாழ்வார் என்று அழைக்கப்படுகிறார். Image
இவரே திருமாலின் பத்து அவதாரங்களையும் முதலில் சிறப்பித்துப் பாடியவர் ஆவார்.

இவர் திருமாலின் கையிலுள்ள பாஞ்சஜன்யம் என்னும் சங்கின் அம்சமாகத் தோன்றியவர் என்று கருதப்படுகிறார்.

இவர் கவிஞர் தலைவன் என்று வைணவர்களால் சிறப்பிக்கப்படுகிறார்.
இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் திருவந்தாதி எனப் போற்றப்படுகிறது.

ஹரியும் சிவனும் ஒன்றுதான்.

ஹரியை வணங்குபவர்கள் சிவனை வெறுக்க வேண்டாம்.

சிவனை வழிபடுபவர்கள் ஹரியை பழிக்க வேண்டாம். இதை மக்களிடம் கூறிக்கொண்டதோடு ஹரியிடம் மாறாபக்தி கொண்டும்
Read 11 tweets
Nov 1
#கண்_நோய்_விலக

*கண் நோய் போக்கும் நேத்ரபதீஸ்வரர்!*

தஞ்சை மாவட்டம், ஒரத்தூருக்கும் மேகளத்தூருக்கும் இடையில், செம்பியன்களரியில் அமைந்துள்ளது அருள்மிகு நேத்ரபதீஸ்வரர் திருக்கோயில். Image
ஒவ்வொரு மாதமும் மூன்றாம் பிறை நாளன்று இந்த ஈஸ்வரருக்கு தசாவனி தைலக்காப்பிட்டு, சாம்பிராணி தூபம் காட்டி, அத்திப் பழம் நிவேதனம் செய்து வழிபட, கண் தொடர்பான அனைத்து நோகளும் நீங்கி, பூரண நலம் பெறலாம் என்பது பக்தர்களின் அனுபவக் கூற்றாகத் திகழ்கிறது.
கல்லணைக்கு கீழே சற்றே உள்ளடங்கிய கிராமம் செம்பியன்களரி.

ஒரு காலத்தில் வரலாற்று புகழ் பெற்றிருந்த இந்த ஊரிலிருந்து தான் சோழ அரசின் சில நிர்வாக அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டன.

அச்சமயம் அரசின் நிர்வாக அலுவலகங்களும் இங்கு இருந்துள்ளன.

ராஜ ராஜ சோழனின் தாய் செம்பியன் மாதேவி கட்டியது,
Read 16 tweets
Oct 31
#கந்த_சஷ்டி_திருவிழா

#முருகன்_சிறப்பு_தகவல்கள்

முருகனைக் குறித்துக் குமார சம்பவம் என்கிற பெயரில் காவியம் இயற்றியவர் மஹாகவி காளிதாசர்.
முருகப் பெருமானின் திருவருளால் சாப விமோசனம் பெற்ற பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள் தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி முதலியோர்.

இவர்கள் மீனாய் இருந்து, முருகன் அருளால் மீண்டும் மனிதர் ஆகினர்.
முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.

பிரம்மசரிய - கிருகஸ்த - சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும்.

பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.
Read 11 tweets
Oct 31
சூரசம்ஹாரம் நடக்காத ஒரே ஒரு முருகன் தலம்.

கந்தசஷ்டி விரதமும், சூரசம்ஹார நிகழ்வும் முருகனின் படைவீடுகளில் மிக கோலாகலமாக கடைபிடிப்பது வழக்கம். Image
ஆனால் முருகனின் ஒரு படைவீட்டில் மட்டும் இந்த கந்தசஷ்டி விழா நடக்காமல் மிக அமைதியாக இருக்கும்.

அப்படிப்பட்ட முருகனின் படைவீடு தான் திருத்தணி. முருகனின் 5 ஆம் படைவீடு.
முருகப்பெருமான் சினம் தணிந்து, வள்ளியை மணம் புரிந்து மிக அமைதியாக அமர்ந்து காட்சி தரக்கூடிய தலம் தான் திருத்தணி கோவில் ஆகும்.

தணிகை என்பது சினம் தணிதல்.

திருத்தணி முருகன் கோயிலில் முருகப்பெருமான் சினம் தணிந்து பக்தர்களுக்கு அருளுகின்றார்.
Read 5 tweets
Oct 31
#சூரசம்ஹாரம்_உணர்த்தும்_தத்துவம்

🌟முருகக் கடவுளின் பராக்கிரமங்களைச் சொல்வது சூரசம்ஹாரம்.

🌟சூரபத்மன் ஆணவத்தில் முருகக் கடவுளோடு போர் புரிந்தான்.

தன் வலிமையாலும் மாயையாலும் முருகனை வெல்ல நினைத்தான்.

ஆனால்,ஆதி முதல்வானான ஈசனின் மகனுக்கு முன்பாக அவை தோற்றன.
🌟முருகனின் கை வேலுக்கு #சக்திவேல் என்று பெயர்.

அன்னையே தன் அம்சமாக அந்த வேலை முருகக் கடவுளுக்கு வழங்கினார்.

அந்த சக்திவேல் சூரர் படையை அழித்தது.

🌟வீரத்தால் முருகனை வெல்ல முடியாது என்றுணர்ந்த சூரபத்மன்,இறுதியில் தன் மாயையால் வெல்ல நினைத்து மாமரமாகி நின்றான்.
🌟வீரத்தை வெல்ல சக்தியாக நின்ற வேல், மாயையை வெல்ல ஞானவேலாக மாறியது.மாயையை இருகூராகக் கிழித்தது.

🌟ஞானத்தின் தீண்டுதலால் மாயை அகல அந்த மாமரம், மாயை அற்ற சேவலாகவும் மயிலாகவும் மாறியது.

🌟சூரசம்ஹாரம், ஞான உபதேசமாக மாறிப் போக பகைவனான சூரபத்மன்
Read 11 tweets
Oct 31
#பாவாடை_தரிசனம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று பாவாடை தரிசனம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சூரசம்ஹாரமும் நடந்தது.
இன்று காலையில் சட்ட தேரோட்டம்  நடைபெறும் . 

இந்த நிலையில் வழக்கம் போல சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமானின் உக்ரம் (கோபம்) தணிக்கும் பொருட்டாக பாவாடை தரிசனம் நிகழ்வு மாலையில் நடைபெறும்.
இதனையொட்டி 100 படி அரிசி சாதம் படைத்து அதில் 20 லிட்டர்தயிர் கலந்து கருவறையில் முருகப்பெருமானுக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும் .
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(