திமுகவை வசைபாடும் 5அறிவு ஜீவன்கள்🐖🐕🐮🐩🙉 கவனத்துக்கு

#கலைஞர்_கருணாநிதி என்ன செய்தார் தமிழ்நாட்டிற்கு? என்று BBC அளித்துள்ள tv செய்திக் கட்டுரையில் இருந்து. கவனிக்க முரசொலி வெளியீடோ, தினகரன் வெளியீடோ அல்ல. பிரிட்டனின் அதிகரப் பூர்வ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கட்டுரை.
சிறிய அளவிலான பெரிய பெரிய சாதனைகளின் கோர்வை.

BBC news செய்தியில் இன்று தலைவர் பற்றி வந் கட்டுரை .............
தமிழகஅரசியல் வரலாற்றில் தனது பேராற்றலாலும் பெரும் பணிகளாலும் அயராத உழைப்பினாலும் ஆற்றல்மிக்க படைப்புகளாலும் தனி முத்திரை பதித்தவர் கலைஞர்.
திராவிட இயக்கமானது, இடஒதுக்கீடு கொள்கை, பெண் சமத்துவம், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் முன்னேற்றம், கல்வி, வேலை வாய்ப்புகளில் அனைவருக்கும் சம வாய்ப்பு உள்ளிட்ட உயர் நெறிகளை நீதிக்கட்சி காலத்தில் இருந்து பின்பற்றி, டாக்டர் நடேசனார், சர். பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் போன்ற
பல பெரும் தலைவர்களை உருவாக்கியது.
தந்தை பெரியார் காங்கிரசிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கம் கண்டார். 1944ல் திராவிடர் கழகம் என்ற அமைப்பை உருவாக்கி அறிஞர் அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன் போன்ற இளம் தலைவர்களை உருவாக்கி,
திராவிடர் இயக்கத்திற்கு அடித்தளம் அமைத்தார் பெரியார். 95 வயதுவரை வாழ்ந்து ஒரு மாபெரும் சமூகப் புரட்சியாளராகப் பெரியார் மறைந்தார்.
அறிஞர் அண்ணா பெரும் சிந்தனையாளராக திராவிட முன்னனேற்றக் கழகத்தை 1949ல் தோற்றுவித்தவராக, தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவராக
அரசியலில் தனித்தன்மையோடு இயங்கி 1969ல் மறைந்தார். அறிஞர் அண்ணா பிரிவினைக் கோரிக்கையை 1961ல் கைவிட்டாலும் மாநிலங்கள் முழு உரிமையோடு இந்திய ஒன்றியத்தில் இணைந்து செயல்பட வேண்டும் என்று விரும்பினார். தனது இறுதிக் கடிதத்திலும் அக்கருத்தையே வலியுறுத்தினார்.
1969ல் அண்ணா மறைந்த பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டிக்காக்கும் பெரும் சுமை கலைஞருக்கு 45 வயதிலேயே ஏற்பட்டது. ஒரு கட்சியின் தலைவராக 50 ஆண்டுகள் தொடர்ந்து இருந்த சாதனையிலும் உலக நாடுகளின் தலைவர்களைக் கலைஞர் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
பெரியார், அண்ணா ஆகிய இரு பெரும் தலைவர்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து செயல்பட்ட திராவிட இயக்கத் தலைவர்களில் முதன்மையானவராக கலைஞர் விளங்குகிறார்
62 ஆண்டுகள் சட்டமன்றப் பணி 50 ஆண்டுகள் கட்சியின் தலைவர் பணி, 5 முறை முதலமைச்சர் பணி,
13 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்த கலைஞரின் சாதனைகள் எண்ணிலடங்கா. இத்தனை பணிகளுக்கிடையே அவர் எழுத்துப் பணியையும் விடவே இல்லை. நாடகம், திரைப்படம், இலக்கியம், ஊடகம், சின்னத்திரை, அரசியல் களம் என அவர் தொடாத் துறையே இல்லை எனலாம்.
1969ல் மத்திய - மாநில உறவுகளை ஆய்வதற்கு நீதிபதி ராஜமன்னார் தலைமையில் குழு அமைத்து, அக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று 1973ல் மாநில சுயாட்சித் தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் இயற்றினார். இந்தத் தீர்மானத்தை அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி மாநில உரிமைகளுக்கு வித்திட்ட
முதல் முதல்வர் கலைஞர் என்பது அவர் ஆற்றிய அரசியல் பணிகளில் முதன்மையானது என்று குறிப்பிடலாம்.இன்று மாநிலங்களுக்கு உரிமைகள் வேண்டும் என்று ஆந்திரம் தொடங்கி தில்லி வரை முழக்கங்களைக் கேட்க முடிகிறது.இதற்கு முன்னோடி கலைஞர்.
சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றியதில் அவரின் சாதனை அளப்பரியது.
சான்றாக, கை ரிக்ஷா ஒழிப்புத்திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டம், எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள், கலை அறிவியல் கல்லூரிகள் பல பல்கலைக்கழகங்கள் எனப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர்.
இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி, 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப் பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், 3 விழுக்காடு அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும், 1 விழுக்காடு,
மலைவாழ் மக்களுக்கும் அளித்து அனைத்து சமூகத்திலும் அடித்தட்டு மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளை உறுதி செய்ததனால் மானுட மேம்பாட்டுக் குறியீட்டில் இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.
நீர்ப்பாசனம், மின்சாரம், வேளாண்மை, தொழிலாளர் நலன், நிலச் சீர்த்திருத்தம் ஆகிய துறைகளில் மேம்பாட்டுத் திட்டங்களை வளர்த்ததால் தமிழ்நாடு உணவு தானிய உற்பத்தியில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதாலும், தொழில் துறை முதலீடுகளை ஈர்ப்பதற்கு
கலைஞரின் ஆட்சிக்காலங்களில் செயல் திட்டங்களை அறிமுகப்படுத்தியதாலும் தமிழகம் தொழில் துறையிலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் ஒரு சீரான வளர்ச்சியை பெற்றிருக்கிறது.
மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைத்தது, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அளித்தது,
விதவைகளுக்கு மறுமண உதவித் திட்டங்களை அளித்தது, கலப்பு திருமணங்களை ஊக்குவிக்க நிதியுதவி அளித்தது ஆகியன பெண்ணுரிமைக்கான, சமூகப் புரட்சிக்கான அடையாளங்களாகும்.
கல்வித்துறையில் பாரதிதாசன் பல்கலைக் கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம், ஆசியாவிலேயே முதன்முறையாக
கால்நடைப் பல்கலைக்கழகம் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களை அமைத்துக் கல்விப் புரட்சி செய்ததும் கலைஞரின் மாபெரும் சாதனைகளாகும்.
விவசாயத் துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்துள்ள ஆறுகள், குளங்கள், கால்வாய்களில் தூர்வாரும் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டன.
நூற்றுக் கணக்கான உழவர் சந்தைகள் உருவாக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களுக்கு உரிய விலையைப் பெற்றனர்.
வருமுன் காப்போம் திட்டம், கால்நடைப் பாதுகாப்புத் திட்டம் கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தன.
ஹுண்டாய், ஃபோர்டு கார் தொழிற்சாலைகள், செயின்ட் கோபைன் கண்ணாடி தொழிற்சாலை ஆகியன தமிழகத்தின் தொழில் துறையை மேல்நிலை வளர்ச்சிக்கு எடுத்துச் சென்றன. வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதில் தமிழகம் முன்னிலை பெறும் மாநிலமாகத் திகழ்கிறது.
பணித்துறை சிறப்பான வளர்ச்சியைப் பெறுவதற்கு
குறிப்பாக தகவல் தொழில்நுட்பப் புரட்சி தமிழகத்தில் உருவாவதற்கு டைடல் பூங்கா என்ற கட்டமைப்பை உருவாக்கினார். இதன் வழியாக தமிழ்நாடு மென்பொருள் உற்பத்தியில் பெரும் வளர்ச்சியை எட்டியது. இவ்வாறு, எல்லாத் துறைகளிலும் கலைஞர் ஆட்சிக்காலத்தில் ஊக்கப்படுத்தியதால் இயைந்த வளர்ச்சியை
தமிழ்நாட்டில் காண முடிகிறது.சமூக நலத்துறையில் முன்னோடியான திட்டங்களை நிறைவேற்றியதால்,வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்ததாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிபல ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சிக்கு சமம் என்று பொருளியல் அறிஞர்கள் அமெர்தியாசென்னும் ஜீன் த்ரெசும் குறிப்பிட்டுள்ளனர்.
விமர்சனமே இல்லாத அரசியல் தலைவர்கள் உலகில் எங்கும் கிடையாது. ஆனால், கலைஞரைத் தனிப்பட்ட முறையில் தாக்கியவர்கள் தமிழக அரசியலில் ஏராளம். அப்படித் தாக்கியவர்களையும் நேரில் கண்டால் நலம் விசாரிப்பது கலைஞரின் உயரிய பண்பாகும்.
இலக்கியவாதிகளை, கல்வியாளர்களை மதித்துப் போற்றிய மாண்பும் கலைஞருக்கே உரித்தானது.
பண்பாட்டுத் துறையில் அவர் படைத்த சாதனைகள் ஓர் அரும்பெரும் செயலாகும்.133 அடி உயரத்தில் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் வள்ளுவருக்குச் சிலை அமைத்த சாதனை காலத்தை வென்று நிற்கும். 1330 குறளுக்கும்
உரை எழுதியும் உள்ளார்.இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் ஒரு மாநிலத்தின் முதல்வராக 5வது முறை பணியாற்றி 95 அகவையை எட்டி சுயமரியாதை,பகுத்தறிவு, சமதர்ம, சமூகநீதி சார்ந்த பொருளியல் கொள்கைகளையும், திட்டங்களையும் தீட்டிய கலைஞர், இந்திய அரசியல் வானில் மங்காமல் உலா வரும் ஒரு ஒளிச்சுடர்.... ImageImage

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with C.KATHIRAVAN (சி.கதிரவன்)MA 🖤❤️

C.KATHIRAVAN (சி.கதிரவன்)MA 🖤❤️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kathir15061980

Nov 9
#மெக்காலே வை பாப்பனர்கள் வில்லனாக சித்தரிப்பதன் காரணம் பாகம்-2

வில்லியம் பெண்டிங் பொறுப்பேற்ற பிறகு இயற்றிய முதல் சட்டம்
பெங்கால் சதி தடை சட்டம்.
ஆங்கிலேயருக்கு இந்தியாவில் ரொம்பவே பிடிக்காத காட்டுமிராண்டுத்தனம் ஒன்று உண்டு என்றால் அது“சதி ஏறுதல்”எனும் கொடூரமான சம்பிரதாயம்.
இங்கிலாந்தில் கணவன் இறந்துவிட்டால்,
மனைவி விரும்பினால் மறுமணம் செய்து கொள்ளலாம். அல்லது தனி பெண்ணாய் தன் பிள்ளை குட்டியை வளர்த்து ஆளாக்கி சுயமாய் வாழலாம்.
ஆனால் இந்தியாவிலோ கணவன் இறந்தால்,
அதற்கு மேல் பெண்ணுக்கு மறுமணம் செய்தாரில்லை. அந்த பெண்ணை சுயமாக வாழ விட்டாரும் இல்லை. அந்த பெண், கணவனின் சிதையில் தானும் குதித்து செத்தே ஆக வேண்டும் என்பதை கட்டாயமாக்கி இருந்தார்கள்.
Read 19 tweets
Nov 9
#மெக்காலே வை பார்ப்பனர்கள் வில்லனாக சித்தரிப்பதன் காரணம் என்ன? பாகம்-1

“1813 துவங்கி 1833 வரை கிழக்கிந்திய கம்பனி, இந்தியாவில் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சிக்காக, வருடம் தோறும் வழங்கிய ஒரு லட்சம் ரூபாய் மானியம் என்ன ஆயிற்று?என்று பிரிட்டிஷ் பாராளுமன்ற குழு ஆய்வு நடத்தியது.
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, 20 லட்சம் ரூபாய் என்றால் இன்றைய மதிப்பில் எத்தனை பில்லியன் என்று பாருங்கள்!

அவ்வளவு பணமும் இந்திய பொதுமக்களுக்கு போய் சேரவில்லை. கல்வியோ, பொது அறிவோ, முக்கியமாக அறிவியலோ வளரவே இல்லை. 🤔🤔
அந்த இருபது லட்சத்தையும் வேத பாட சாலை நடத்தி சமஸ்கிருதம் வளர்க்கவும், மதராசாவில் அரபி கற்பிக்கவும் தான் செலவாயிற்று என்று தெரிய வந்தபோது அது பிரிட்டிஷாருக்கு அதிருப்தியைத் தந்தது.

காரணம்
பிரிட்டனில் கல்வி என்பது மதசார்பற்றது,
எல்லா மனிதருக்கும் பொதுவானது,
Read 14 tweets
Nov 9
கேள்வி :
தமிழ்நாட்டில் அனைத்துச் சாதியினருமே
நாங்கள் தான் ஆண்ட பரம்பரையினர் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
இது எந்த அளவிற்கு உண்மை?

'தமிழாய்வாளர்'
தொ.பரமசிவன் பதில் :
வரலாற்று ஆசிரியர்கள் வேடிக்கையாகச் சொல்லுவார்கள், "இராஜா என்பவன் சாதி கெட்டவன் "என்று. ஏனென்றால் அரசியல் காரணங்களுக்காக எல்லா சாதியிலும் ஒரு பெண்ணை எடுத்துக் கொள்வார்கள்.
ஓர் அரசியல்வாதி அரசியல் செல்வாக்குள்ள சாதியிலே பெண் எடுத்துக் கட்டுவான். அந்த சாதியின் வாக்கெல்லாம் அவனுக்குக் கிடைக்கும்.

இதே போல் தான் அப்போதும்.
எனவே ராஜாக்கள் ஒரே ஜாதி இல்லை என்பதை விட உண்மை இருந்திருக்க முடியாது.
Read 4 tweets
Nov 9
"பாஸ் பாஸ் பெரியார் என்னத்த பாஸ் செய்தாரு.

தமிழ்நாட்டுல் எங்க சாதி ஒழிஞ்சது பாஸ். இன்னமும் இருக்கு பாஸ் சாதி”

“ஜி நீங்க ஒரு வீட்டுக்கு போறீங்க. அதாவது மூணு வருசமா பூட்டிக் கிடக்கிற வீடு”

“பாஸ் நான் பெரியாரப் பத்தி பேசுறேன்”

“நான் பாழடைஞ்ச வீட்டப் பத்தி பேசுறேன் ஜி”
“சரி பாஸ் நீங்க சொல்றதுக்கே வர்றேன். மூணு வருசமா பூட்டிக்கிடக்குற வீடு இருக்கு சரி, அதுக்கென்ன”

“அத எப்படி சுத்தப்படுத்துவீங்க ஜி”

“இது ஒரு கேள்வியா பாஸ்”

“அட சொல்லுங்க ஜி. ஒண்ணு ஒண்ணா சொல்லுங்க”
முதல்ல ஒட்டடை அடிப்பேன்.அப்புறம் எலிப்புழுக்கை,வவ்வால் புழுக்கை எல்லாம் அள்ளுவேன்,அப்புறம் இந்த பூனை பேண்டு கீண்டு வெச்சிருந்தா அத அள்ளுவேன் பாஸ்”

“வாங்க ஜி வந்துட்டே இருங்க”
“எல்லாம் அள்ளியாச்சா. அப்புறம் கரையான் அரிச்சி மண்ணா தரையில இருக்குமா அத எல்லாம் கூட்டிப்பெருக்குவேன்”
Read 11 tweets
Nov 7
நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது. இந்த வழக்கும் விசித்திரமானது அல்ல வழக்காடுபவர்களும் விசித்திரமானவர்கள் அல்ல..

உயர்சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும். இதோடு முடித்திருந்தால் கூட மனது சற்று..ஆனால் ஒருபடி மேலே போய் இது சமூகநீதி என்று சொல்லுகிறார்கள்
இப்ப பின்னோக்கி போகலாமா?

இந்த நாட்டில் பெரும்பான்மை மக்கள் யார்? பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்டவர்களுமே. யாரால்? எப்படி? தாழ்த்தப்பட்டார்கள் என்பதை விளக்க எனக்கு 1 லட்சம் பக்கம் தேவைப்படும் twitterல் but அது இப்ப வேணாம் ... நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
1943 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ்காரர்கள் தலைமையிலான அரசாட்சியில் அண்ணல் அம்பேத்கர் வைசிராய் குழுவில் உறுப்பினரான பின்புதான் தான் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வரலாற்றிலேயே முதல்முதலாக 8.3 % இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வருகிறது.
Read 25 tweets
Nov 7
மனிதன் நான் ஒரு மனிதன்

*நான்* *இறந்துவிட்டேன்!*

என் சாவுக்கு யாரும் அழாதீர்கள்! உங்கள் துயரங்களைச் சுமந்து செல்ல நான் விரும்பவில்லை!

சாவு எனக்கான தண்டனையும் அல்ல;
எனக்கான பரிசும் அல்ல; எல்லோருக்கும் நடக்கும் ஓர் சம்பவம்!
மலர்களை என் பிணத்தின் மீது போட்டு அதை நாறடித்து விடாதீர்கள். பாடையில் கட்டி சாலையையும் குப்பையாக்கி விடாதீர்கள்!

எனது மரணம் என்பது ஓர் அழகிய பயணம்! அதில் மலர்கள் பூத்து குலுங்குவதையே விரும்புகிறேன்!
என் வாழ்வின் அர்த்தம் மிதிபடும் குப்பைகளில் இல்லை! அது
உங்கள் நினைவுகளில் மட்டுமே வாழ்கிறது!

வெடி வைத்து என்னை எழுப்ப முயலாதீர்கள்! எனது அமைதியை அது குலைத்துவிடும்!

தென்றல் என் உடம்பைத் தழுவிட அனுமதியுங்கள்! கந்தகப் புகையால் என்னைக் காயப்படுத்தாதீர்கள்!
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(