KRISHNAKUMAR MA Profile picture
உலகில் எங்கேனும் நடக்கும் அநீதிக்கு எதிராக நீ குரல் கொடுத்தால் நீயும் என் தோழனே.... 🤝🤝🤝 தோழர்-சேகுவேரா 💪💪💪 belongs to the dravidian stock🖤❤️
KRISHNAKUMAR MA Profile picture Madhan Kolappan Profile picture 2 subscribed
Mar 4 18 tweets 2 min read
பார்ப்பீனியத்துக்கு பலமான சாவுமணி அடித்த களப்பிர மன்னர்கள் வரலாறு பற்றிய ஆழ்ந்த வாசிப்பில் நான் அறிந்து கொண்ட வரலாற்று உண்மைகளே
இந்த பதிவு ....

களப்பிரர்கள் தமிழகத்தை ஏறக்குறைய கி.பி. 300 - கி.பி. 600 காலப்பகுதியில் ஆண்டுள்ளார்கள். தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களையும் கலங்கடித்த புரட்சியாளர்கள் இந்த களப்பிரர்கள். இவர்கள் ஆட்சி செய்த (கி.பி.250-கி.பி 600) 350 ஆண்டுகள் மட்டுமே தமிழகம் பார்ப்பீனியத்தில் இருந்து விடுபட்ட காலகட்டம். பார்ப்பீனி யத்தை அடக்கி ஒடுக்கி உட்கார வைத்த ஒரே காரணத்திற்காகவே👇
Nov 17, 2023 18 tweets 2 min read
நாங்க
நாடாருங்கோ கோடாருங்கோ...

ஆரியன் பொடனில மிதிச்சி தள்ளிய வரலாறு தெரியாத தற்குறி
சங்கிங்கோ...

அட மெண்டல் கூட்டமே...

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறிய ஊர் கமுதி, கிட்டதட்ட 6483 மக்கள் தொகையை கொண்டது (1855ல்)குறிப்பிட தக்க எண்ணிக்கையில் நாடார்கள் வாழ்ந்து வந்தார்கள். 1855-நவம்பர் மாதம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் நாடார்கள் நுழைய ஆலயத்தின் பரம்பரை அறங்காவலர் திரு. பாஸ்கர சேதுபதியிடம் உரிமைகேட்ட போது மறுக்கப்பட்டது.

1897 ஆம் ஆண்டு,மே மாதம் 14ம் நாள் மாலை ஆறுமணிக்கு மேல் ஒன்பது மணிக்குள் சில நாடார்கள் மேளாதாள ஆரவாரத்துடன்....👇👇
Oct 30, 2023 9 tweets 2 min read
இன்று லார்ட் மெக்கலே அவர்களின் பிறந்த நாள்.
அவரை நமக்கு ஒரு வில்லனாகத்தான் அறிமுகப்படுத்தினார்கள்.

“இந்தியாவின் பாரம்பரிய கல்வி முறையை சிதைத்து, வெள்ளைக்காரனுக்கு பியூன் வேலைப்பார்க்க ஆங்கிலத்தை கற்பித்த கயவன்” என்று தான் எனக்கும் அவர் அறிமுகம். அப்புறம் நானே யோசித்தேன். அரிதாக சில வீடுகளில் மட்டுமுள்ள பாட்டியும் கொள்ளுப்பாட்டியும் எப்படி படித்த பெண்களாக முடிந்தது? அதுவும் பெண்கள் படிக்கவே கூடாது குருக்குலக்கல்வி என்பது பிராமண மாணவர்களுக்கு மட்டும் தான் என்றிருந்த அந்தக் காலத்தில் இந்த பெண்கள் எப்படி கல்வி பெற்றார்கள்?
Jul 22, 2023 11 tweets 2 min read
கீழே
இருப்பது பெரியார் தன் இதழில் வெளியிட்ட கார்டூன்.ராஜாஜியின் இந்தித் திணிப்புக்கு எதிராக அவர் உருவாக்கிய இந்தக் கார்டூனில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு

ஒன்று: தமிழர்களை ஒன்றுபடுத்தும் சக்தி என்கிற அளவில் பெரியார் தமிழ்த்தாய் உருவகத்தை ஏற்று வழிமொழிந்திருக்கிறார். இரண்டு : தமிழுக்கு உரிய விஷயங்களாக அவர் தொல்காப்பியம் , திருக்குறள் போன்ற காலத்தால் முந்தைய இரு தமிழ் நூல்களை அடையாளப்படுத்தியிருக்கிறார்..( இலக்கணம் + இலக்கியம்)

பெரியாருடைய துண்டு துண்டான வரிகளை எடுத்து அவரை தமிழுக்கு , தமிழருக்கு , தமிழிலக்கியத்திற்கு எதிரானவராகக்.....
Jul 17, 2023 22 tweets 3 min read
பாரி மன்னன் ஒரு முல்லைக்காக தேரை கொடுத்தது முட்டாள்தனமான கொடையா?

இல்லை.இல்லை!!அப்படி இல்லை!

அப்படியென்றால் வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரை,அவர் மனதை என்னவென்பது ?

பாரி மன்னர் செய்தது அந்த வகை கொடை தான்!அதில் தவறில்லை ஒருபோதும். பாரி வள்ளலின் குணங்களை முல்லைக்கு தேர் கொடுத்தமைக்காக மட்டும் பெருமைப்படுத்தவில்லை .மேற்கொண்டு படியுங்கள் மக்களே !!

வண்டுகள் உண்ணுமாறு தேன் வழங்கும் நறுமண மலர்களை உடைய நாகமரம் நிறைந்த வழிப்பாதையில், பற்றிப் படர்வதற்குக் கொழுகொம்பு இல்லாமல் தவித்த முல்லைக் கொடிக்குத்தான்....👇👇
Mar 23, 2023 20 tweets 8 min read
இதோ......

பிரிட்டிஷ்அரசுக்கு லாகூர் சிறையிலிருந்து #பகத்சிங்கும் ஒரு கடிதம் எழுதினார். அது பின்வருமாறு...

#உங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களை #போர்க்கைதிகளாக வகைப்படுத்துகிறது. #ஆம் #நாங்கள் போர்க்கைதிகள் தான். ஆகவே எங்களைத் #தூக்கில் #போடாமல் #துப்பாக்கித் #தோட்டாக்களால் #சுடவேண்டும்.

எங்களைச் சுடப் போகும் ராணுவ வீரர்களை எப்போது அனுப்பப் போகிறீர்கள்....
Mar 23, 2023 8 tweets 4 min read
தமிழ்நாட்டில் #அண்ணா அளவுக்குத் தொண்டர்கள் உரிமையோடும் பாசத்தோடும் அணுகிய ஒரு தலைவர் கிடையாது;

தலைவர்-தொண்டர் உறவில் அவர் உருவாக்கிய புது இலக்கணத்துக்கு உதாரணம் இச்சம்பவம்.

#அண்ணா மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காலம் அது. மதுரையில் ஒரு கூட்டத்தில், “கசங்கின வேட்டி சட்டையோடு இந்த ஆள் போனா, டெல்லிக்காரன் தமிழனைப் பார்த்தாலே சிரிப்பான்” என்று #காங்கிரஸார் பேசிய தொனி, #அண்ணாவின் தம்பியர் இருவரைக் காயப்படுத்தியது.

அதற்குப் பின் என்ன நடந்தது ?

இருவரில் ஒருவரான அ.குருசாமி (87) நம்மிடம் சொன்னார்.
Mar 18, 2023 12 tweets 10 min read
#பெரியார் இந்துவாக இறந்தாரா?

ஒருவன் #கிறிஸ்தவன் என்றால் அவன் இயேசு கிறிஸ்துவை நம்புகிறவனாக இருக்க வேண்டும்.

பைபிளை ஏற்றுக் கொண்டவனாக இருக்க வேண்டும்.

சர்ச்சுக்கு போகிறவனாக பாவமன்னிப்பு கேட்கிறவனாக இருக்க வேண்டும்.

அவன் தான் கிறிஸ்தவன். அதேபோல ஒருவன் #இஸ்லாமியனாக இருக்கிறான் என்றால் #அல்லாஹ்வை நம்ப வேண்டும்.
#குர்ஆனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஐந்து வேளை #தொழுகை நடத்த வேண்டும் .
குல்லாய் அணிந்து கொள்ள வேண்டும்.

அவன் தான் இஸ்லாம் என்கிறது இஸ்லாமிய மதம் .
Mar 16, 2023 6 tweets 3 min read
சட்டமன்றத்தில் •••• 🖤❤

#கலைஞா் உரையாற்றிக்கொண்டிருக்கிறாா். ஆளுங்கட்சி காங்கிரஸை வறுத்து காயப்போட்டுக்
கொண்டிருந்தாா்.

கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் கருவறைக்குள் செல்ல முடியவில்லை,
அந்தணர்களைத் தவிர இதர ஜாதியினா் அா்ச்சகராக ஆக முடியவில்லை என தொடா்ந்து......👇👇👇 காங்கிரஸ் ஆட்சியின் மீது புகாா்களை அடுக்கிக் கொண்டிருந்தாா்.

காங்.உறுப்பினா் டி.என். அனந்த நாயகிக்கு மின்னல் போல ஒரு பிடிப்பு கிடைத்தது, #கலைஞரை மடக்க....

எழுந்தாா்.

#கலைஞரின் பேச்சை இடைமறித்து,
Mar 16, 2023 8 tweets 3 min read
14.03. 23 அன்று வெளிவந்துள்ள 👶"துக்ளக்" இதழில் இடம் பெற்றுள்ள இரண்டு கேள்வி பதில்கள் இவை

1. மதம் மாற உரிமை உண்டு. ஆனால் ஜாதி மாற முடிவதில்லையே, ஏன் இந்த முரண்பாடு? இதற்கான ஆடிட்டர் குருமூர்த்தியின் பதில் - "மனம் சம்பந்தப்பட்ட மதம் மாறலாம்.ரத்தம் சம்பந்தப்பட்ட ஜாதி மாறாது."😏 2. கேள்வி பதில் -
அண்ணா பல்கலைக்கழகத்தில்
மனித உரிமை கவுன்சில் என்ற பெயரில் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது குறித்து...

இதற்கான விடை இப்படித் தொடங்குகிறது

"மனித உரிமை என்றாலே மோசடிதான்".

ஜாதி ரத்தத்தோடு தொடர்புடையதாம்.மனித உரிமை மோசடியோடு தொடர்புடையதாம்.
👶கொழுப்பு
Mar 15, 2023 4 tweets 3 min read
பெரியார் நாகம்மை அவர்களைத் திருமணம் செய்தது குழந்தை திருமணமாம் .

#சங்கீஸ் உளறல்

அட லூசு, #சங்கியே முட்டாள்
#சங்கியே

பெரியாருக்கு வயது 19 நாகம்மையாருக்கு வயது 13.

இந்த திருமணம் நடந்தது 1898 ல் .... அந்த காலகட்டத்தில் உங்களுடைய முன்னோர்கள் எத்தனை வயசுல திருமணம் செஞ்சுக்கிட்டாங்க?

உங்க #ராமகிருஷ்ண_பரமஹம்சர் 23 வயசுல அஞ்சு வயசு #சாரதா என்கிற குழந்தையை திருமணம் பண்ணிக்கிட்டாரு.

உங்க #திலகர் எட்டு வயசு பொண்ண திருமணம் பண்ணிட்டாரு.

#பாரதியாருக்கு எட்டு வயசுல திருமணம் ஆச்சு.
Mar 14, 2023 7 tweets 1 min read
“ உங்களுக்கும் கடவுளுக்கும் என்ன பிரச்சனை ?”- ஆன்மீகப் பெரியவர் மெல்லக் கேட்டார் .

(இது ரசினி அல்ல)

“ இல்லாதவரோடு எனக்கு என்ன பிரச்சனை ?” அவன் சிரித்துக் கொண்டே சொன்னான் . “ ஊர் உலகமே அவர் இருப்பை ஒப்புக் கொள்ள நீங்கள் மட்டும் நிராகரிப்பது சரியா ?”

“ ஊர் உலகமே பூமி தட்டை என்ற போது ஒருத்தன் மட்டுமே பூமி உருண்டை என்றான் ; இன்று உலகமே பூமி உருண்டை என ஒப்புக்கொண்டுவிட்டதே ..” அவன் உறுதியாகச் சொன்னான்.
Mar 14, 2023 15 tweets 3 min read
நம் நாட்டில் கடுமையான பஞ்சம். பட்டினி சாவு சுமார் 50 லட்சத்தை தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட சாப்பாடு இல்லாத நிலைமை..!!

அதனால், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள் நமக்கு மருத்துவ சிகிச்சை, உணவு தருவதற்காக கப்பலில் இந்தியா வந்தன. அப்படி நம்முடைய ராணிப்பேட்டைக்கு வந்தவர்தான் டாக்டர் ஜான். இவரது 14 வயது மகள் ஐடா ஸ்கடர்..!

ஒரு நாள் இரவு கதவு தட்டப்படுகிறது. ஐடா கதவை திறக்கிறார். ஒரு பார்ப்பனர் நின்று கொண்டிருந்தார். "அம்மா, என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள்..
உதவி வேணும் உடனே வாங்க" என்று பதறுகிறார்..!
Mar 13, 2023 4 tweets 1 min read
கடவுள் இல்லை என்று சொல்கிறார்கள்.
ஒரு சொட்டு ரத்தம்
தயாரிக்க முடியுமா? என்று கேட்டிருக்கிறீர்கள்

சூப்பர் ஸ்டார்
அவர்களே!

உங்களுக்கு ஒரு உதாரணத்தை சுட்டிக்காட்டுகிறேன்

பல ஆண்டுகளுக்கு முன்பே விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் செயற்கை ரத்தம் கண்டு பிடித்து விட்டார்கள். பிரிட்டன் பழ்கலைகழகம் , பிரிஸ்ட்ல் பழ்கலைகழகம் மட்டுமல்ல, நம்ம ஊர் ஐஐடி மாணவர்கள் கூட செயற்கை ரத்தம் கண்டு பிடித்திருக்கிறார்கள்

அறிவியலை கொஞ்சம் படிங்க @JayRamSiva

உங்கள் மீது அதிக அன்புண்டு சார்🙏🙏🙏

அறிவியல் முன் மதம் மண்டியிட்ட வரலாறை புரட்டிப்பாருங்கள்
ரசினி சார்.....
Mar 13, 2023 11 tweets 3 min read
@KasthuriShankar அவர்களே!

#தேவதாசி முறை யாதெனில்👇

20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்-பார்ப்பனர் களுக்கு...அடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது. கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர 👉👉👉பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.
Mar 11, 2023 12 tweets 2 min read
சிவக்கொழுந்து தோளில் உள்ள துண்டை எடுக்காதே !'' - அஞ்சாநெஞ்சன் அழகிரி.

(சுயமரியாதைக்கான போரில் "திராவிடர் இயக்கம்" வரலாற்றில் செய்த சாதனைகளுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்று.) 1923-ஆம் ஆண்டில் சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்பற்றி முடிவெடுக்க தந்தை பெரியார், டாக்டர் வரதராசலு நாயுடு முதலியோர் கானாடு காத்தானில் சுயமரியாதை இயக்க வீரர் வை.சு. சண்முகம் இல்லத்தில் கூடியிருந்தனர்.
Mar 5, 2023 8 tweets 1 min read
இந்தியாவுக்கு மட்டுமான கண்டுபிடிப்பாளர்கள் பார்பனர்கள்..!!!

தெரியுமா? மாப்ள.....🤣🤣

இவர்கள் கண்டுபிடிப்பவை எல்லாம் இந்தியாவுக்கும் இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானவை!

மற்றநாடுகள் இந்த கண்டுபிடிப்புகளுக்கு எந்தவகையிலும் சொந்தங்கொண்டாட முடியாது.🤭🤭 👉அர்ச்சனை செய்தால் வேலை கிடைக்கும்

👉அபிஷேகம் செய்தால் மாப்பிள்ளை கிடைக்கும்

👉கும்பாபிஷேகம் செய்தால் மழை பெய்யும்

👉தீபாராதனை செய்தால் நல்ல பெண்கிடைக்கும்

👉ஹோமம் செய்தால் செல்வம் பெருகும்

👉யாகம் செய்தால் பதவி கிடைக்கும்

👉அங்கப்பிரதட்சணம் செய்தால் நோய்தீரும்
Mar 5, 2023 4 tweets 2 min read
ஒருமுறை ஒரு பாராட்டு விழா. அந்தப் பாராட்டு விழாவில் என் பேராசிரியர் க.ப.அறவாணன் ஒன்று சொன்னார், ஆங்கிலத்தில் ஒரு தலைவனுக்கு ஐந்து விதமான குணநலன்கள் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அவை A-B-C-D E என்று வரிசைப்படுத்தப்படுகிறது”- என்று சொன்னார். A for ABILITY
B for BEAUTY
C for CLARITY
D for DIGNITY
E for EDUCATIVE

இவை ஐந்தும் அமையப் பெற்ற தலைவர் முத்தமிழ் அறிஞர் #கலைஞர் தான் என்று அவர் சொன்னார்.*

இவ்வளவு பெரிய பாராட்டுக்கு எப்படி பதில்
சொல்ல முடியும் என்று வியந்த போது #கலைஞர் மேடைக்கு வந்தார்.
Mar 4, 2023 5 tweets 1 min read
பூசாரிகள் (பார்ப்பனர்கள்) பக்தர்களிடம் தட்டேந்துவது ஆகம மீறல்.

சைவ, வைணவக் கோவில்களில் ஸ்மார்த்த பிராமணர்கள் பூசாரிகளாக இருப்பது ஆகம மீறல்.

ஸ்மார்த்தரான சங்கராச்சாரிக்கு சைவ, வைணவ கோவிலுக்குள் சிலையோ படமோ வைப்பதும் ஆகம மீறல். ஒரு கடவுளின் சிலையை இன்னொரு கடவுளின் சிலை என்று ஏமாற்றி அர்ச்சனை செய்வது ஆகம மீறல். அந்த வரிசையில் சபரிமலை, திருப்பதி உள்ளிட்ட பல பிரபல கோவில்களில் நடப்பது ஆகம மீறல்.

சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் ஒரே கோவிலில் பூசை செய்வது ஆகம மீறல்.
Mar 4, 2023 14 tweets 4 min read
1971 ல் தலைவர் #கலைஞர் முதலமைச்சராய் இருந்த காலம்
அவரைப் பற்றி ஒரு மோசமான அவதூறை ஒரு வார இதழ்
கட்டுரையாய் வெளியிட்டது.

அதை எழுதியவர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாயிருந்து காரோட்டி வேலைத் தவிர அனைத்துப்பதவிகளையும் அனுபவித்த ராஜாஜி (ராசகோபாலச்சாரி),என்ற ஒரு மூன்றாம் தர வக்கீல்! முதல்வர் பதவியிலிருக்கும் #கலைஞரைப் பற்றிய இந்தக் கடுமையான அவதூறுக்காக் கலைஞர் மான நட்ட வழக்குத் தொடுத்திருக்கலாம். #கலைஞர் செய்யவில்லை.

ஆனால் கடற்கரையில்
👉👉தந்தை பெரியார் கூட்டம் போட்டு ராசகோபாலாச்சாரியை மிகக்கடுமையாக கண்டித்தார்.
Mar 3, 2023 19 tweets 10 min read
#கலைஞர் ஏன் தான் போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வியே கண்டதில்லை?

காமராஜர், அண்ணா கூட தோற்றுப் போனது வரலாறு.

இவரிடம் என்ன சிறப்பு?

Determination & Perseverance எதையும் செய்ய முடியும் என்ற உறுதியும் வெற்றிக்கு அவர் மேற்கொள்ளும் விடாமுயற்சியும் கூடுதல் பலம். 1957 ஆம் ஆண்டு தனது முதல் தேர்தலில் குளித்தலை எம்எல்ஏவாக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட #கலைஞர்.

சிறந்த முறையில் பணியாற்றி கொண்டிருந்த காலகட்டம் .....

1959 தஞ்சையில் #காங்கிரஸ் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றுக்
கொண்டிருந்தது.