M.SivaRajan Profile picture
Nov 8 9 tweets 2 min read
#சகஸ்ர_லிங்கம்

அரியனூரில் உள்ள ஆயிரத்தெட்டு லிங்கம் கோயில்

சேலத்தின் புகழ்பெற்ற கோயில்களுள் ஒன்றாகும்.

இது அமையப்பெற்றுள்ள குன்றில், ஆயிரத்தெட்டு லிங்கங்கள் விரவிக் கிடப்பதையும், முன் பகுதியில் புனிதப் பசுவான நந்தியின் சிலையையும் காணலாம்.
கோயிலின் அடிவாரத்தில் பிரம்மாண்டமான கணேசர் சிலை உள்ளது.

இது அமைந்துள்ள இடம் கண்கவர் காட்சிகள் சூழ்ந்து அமைதியாகவும் ரம்மியமாகவும் விளங்குகிறது.

இக்கோயிலின் மூலவர் ஸ்ரீ உமையாம்பிகை சமேத ஸ்ரீ அருணாச்சல சுந்தரேஸ்வரரின் திருவுருவச்சிலை இம்மலைக் குன்றின் மேல் நிறுவப்பட்டுள்ளது.
இச்சிலையை காண்பதற்காகவே, மலையேற்றத்தையும் பொருட்படுத்தாது ஏறிப் போய் தரிசித்து வரலாம்.

ஆகம விதிப்படி கட்டப்பட்ட ஆயிரக் கணக்கான கோயில் நிறைந்திருந்தாலும், பல்வேறு காரணங்களை உத்தேசித்து, நவீன பாணியில் புதிதாக கோயில்கள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இப்பாணியில், தமிழகத்திலும் கூட பல நவீன கோயில்கள் கட்டப்பட்டுள்ளன

அத்தகைய கோயில்களில் ஒன்று, சேலத்தில் உள்ள 1008 சிவலிங்கம் கோயில். சேலம் வினாயகா மிஷன் நிறுவனத்தால்,

அவர்களது நிறுவனத்தின் அருகிலேயே, ஒரு சிறிய குன்றின்மேல், சேலம்-சங்ககிரி சாலையில்
அமைக்கப் பட்டுள்ளது, இந்தச் சிவலிங்கங்கள்.

1008 என்றால், நிஜமாகவே 1008! ஆவுடையோடு கூடிய சிவலிங்கங்கள்!

எதிரே ஒரே மாதிரியான அளவில் 1008 நந்திகள்.

1008 மண்டபங்கள்.

மலையின் அடிவாரத்தில் ஆரம்பித்து உச்சியில் முடியும் பொழுது 1008 வந்து விடுகிறது.
அடிவாரம் முதல் உச்சி வரை, சிவலிங்கங்களை தரிசித்தபடியே வாகனத்திலேயே பயணிக்கலாம் தான்.

இருந்தாலும், நேரம் இருந்தால், சிவனின் ஆயிரம் நாமாக்களை உச்சரித்தவண்ணம், ஒவ்வொரு சிவலிங்கத்தினையும் தரிசித்த வண்ணம் மேலே செல்லலாம்.
பின்னனியில் பச்சைப் பசேல் என்ற மலைகளும், சரிவுகளும் அழகும் அமைதியும் தரவல்லன.

1008 லிங்கங்கள் மட்டுமல்ல; ஐயப்பன் சன்னிதி, அறுபடைவீடுகளின் பிரதிகளாக மூர்த்தங்கள் (சிற்பங்கள்), ஆஞ்சனேயர், ராமர் பட்டாபிஷேக சிற்பங்கள்,
ராஜ ராஜேஸ்வரி, மஹாலக்ஷ்மி, பெருமாள் என கண்ணைக் கவரும் கோயில்கள் யாவும் வெகு சுத்தமாக, அற்புதமாக அமைத்தது மட்டுமல்லாமல், அதை அப்படியே நிர்வகித்தும் வருகிறார்கள்.

1008 லிங்கங்களையும், பிரம்மாண்டமான மற்ற கோயில்களையும் பராமரிப்பது சாமாண்ய காரியமா என்ன?
அதுவும் மலைச் சரிவில்! எல்லாவற்றிகும் உச்சமாக, உமையாம்பிகை சமேத, அருணாசல சுந்தரேஸ்வர் மூர்த்தமும் அழகும் பிரமிக்க வைக்கும் பேரழகு.

இந்த சிவலிங்கம் பதினேழு அடி உயரம்.

இந்த கோயில், உங்களை நிச்சயம் மலைக்கவைக்கும்.

#சகஸ்ர_லிங்கம்

#ஓம்_சிவாய_நமஹா

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Nov 9
எந்த கோவிலுக்கு சென்றால், என்ன பலன்?

#பரிகார_தலங்கள்

#பரிகார_ஆலயங்கள்

ஆயுள் பலம் வேண்டுதல்:
~~~
1.அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், திருக்கடையூர்.
2.அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி
3.அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம்.
4.அருள்மிகு சித்திரகுப்தசுவாமி திருக்கோவில், காஞ்சிபுரம்.
5.அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி.
6.அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில். திருப்பைஞ்ஞீலி.
7.அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், வாஞ்சியம்.
2.ஆரோக்கியத்துடன் வாழ..
~~~~~
1.அருள்மிகு தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை.
2.அருள்மிகு பவஒளஷதீஸ்வரர் திருக்கோவில், திருத்துறைப்பூண்டி.
3.அருள்மிகு பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோவில், குணசீலம்.
4.அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.
Read 25 tweets
Nov 9
27 நட்சத்திரங்களுக்குரிய  உருத்ராட்சம் 

சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் சிவபெருமானை அண்ட சராசரத்தை ஆட்கொள்ளும் தலைவனாக கொண்டு,

ருத்ராட்சத்தை அணிந்து தினம்தோறும் சிவனை தியானித்து பூஜைகள் செய்வர்.
சிவபெருமான் கருணையின் ஊற்று. அவரிடம்போய் கண்ணீர் மல்க நம் கஷடங்களை,துயரங்களை சொன்னால் நம் வாழ்வில் இன்பமழையை பொழிவார்.

பல முகம் கொண்ட ருத்ராட்சங்கள் இருந்தாலும் , உலகிலுள்ள ஒவ்வொரு மனிதருக்கும் அவர்கள் பிறந்த நட்சத்திரங்களின்படி, ருத்ராட்சத்தை அணிந்தால்
சிவபெருமானின் அருளை விரைவில் பெறலாம்.

நட்சத்திரங்கள் 27 உள்ளன.27நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணியவேண்டிய ருத்ராட்சம் மாறுபடும்.

எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த ருத்ராட்சத்தை அணிய வேண்டும்?
Read 6 tweets
Nov 8
#16_கர_நரசிம்மர்

16 கரங்களுடன் கீழப்பாவூர் நரசிம்மர்

மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் தனிச்சிறப்பு மிக்கது நரசிம்ம அவதாரம்.

இதர அவதாரங்கள் எல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க எடுக்கப்பட்டவை.

நரசிம்மம் மட்டுமே பக்தனுக்காகவே எடுக்கப்பட்டது. Image
திருநெல்வேலி மாவட்டத்தில் எவ்வித சிரமமும், பயமும், தயக்கமும் இன்றி சுலபமாக தரிசனம் செய்வதற்காக, கீழப்பாவூரில் நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டுள்ளார்.

இந்த ஆலயத்தில் அருள்புரியும் நரசிம்ம மூர்த்தியானவர்,
16 கரங்களுடன் இரணியனை மடியில் கிடத்தி வதம் செய்யும் விதமாக திரிபங்கி நிலையில் அபூர்வ வடிவத்தோடு சிறப்புடன் காட்சியளிக்கிறார்.

சூரியனும், சந்திரனும் வெண் சாமரங்கள் வீச, வெண் கொற்றக் குடையுடன் தியானித்தபடி இவர் வீற்றிருக்கிறார்.
Read 9 tweets
Nov 8
#குங்குமம்

*குங்குமம் வைத்து கொள்ளும் முறையும்,

அதன் பலன்களும்.

சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீ மகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது. Image
வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப்பெருக்கும்.

குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும்.

குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.
பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும்.

திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.
Read 6 tweets
Nov 8
#நின்றசீர்_நெடுமாற_நாயனார்_குருபூஜை

#நின்றசீர்_நெடுமாற_நாயனார்_வரலாறு

நின்றசீர் நெடுமாற நாயனார் சமண சமயத்தலிருந்து சைவ சமயத்திற்கு மாறிய பாண்டிய மன்னன் ஆவார்.

இவருக்கு ஏற்பட்ட வெப்பு நோயையும் கூனையும் திருஞானசம்பந்தர் இறைவனை வேண்டிப் பதிகம் பாடி போக்கினார். Image
இவரின் மனைவியான மங்கையர்கரசியாரும் அமைச்சரான குலச்சிறை நாயனாரும் 63 நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுவது சிறப்பு ஆகும்.

மங்கையர்கரசியார் மற்றும் குலச்சிறையாரின் பெரும் முயற்சியாலும் திருஞானசம்பந்தரின் அருளாலும் சமணராக விளங்கிய நின்றசீர் நெடுமாறர் சைவராகினார்.
மதுரையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த புகழ் பெற்ற பாண்டிய மன்னர்களில் ஒருவர் அரிகேசரி.

இவருக்கு பிறப்பிலேயே முதுகில் கூன் இருந்தது.

இவர் திருவிளையாடல் புராணத்தில் சுந்தர பாண்டியன், கூன் பாண்டியன் போன்ற பெயர்களில் அறியப்படுகிறார்.

அரிகேசரி பராங்குசன் என்பது இவரின் சிறப்பு பெயர்.
Read 14 tweets
Nov 8
#லிங்க_வடிவில்_முருகன்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா வில்வாரணி என்னும் ஊரில் உள்ளது ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவில்.

கிட்டதட்ட 1000 வருடங்கள் பழமையான இந்த கோவிலில் முருகன் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.
சிவனும் முருகனும் வேறல்ல என்பதை உலகத்திற்கு உணர்த்தும் வகையில் அவர் இங்கு காட்சி தருகிறார்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் வாழ்ந்த குருக்கள் இருவர் வருடா வருடம் ஆடி கிருத்திகை அன்று திருத்தணிக்கு சென்று முருகப்பெருமானை தரிசிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.
ஆனால் அவ்விருவராலும் ஒரு வருடம் சில காரணங்களால் திருத்தணிக்கு செல்ல இயலவில்லை. இதனால் அவர்கள் மனமுடைந்து போனார்கள்.

அன்றிரவு அவர்கள் இருவரின் கனவிலும் வந்த முருகன், தான் நாக வடிவில் சுயம்புவாக நட்சத்திர மலையில் எழுந்தருளி இருப்பதாகவும்,
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(