M.SivaRajan Profile picture
Nov 12 6 tweets 2 min read
#விஷ்ணு_சஹஸ்ரநாமம்

மன பாரம் நீக்கும் பெயர்*

மகாவிஷ்ணுவின் சகஸ்ர நாமங்களில் (ஆயிரம் திருப்பெயர்கள்) ஒன்று, பூகர்ப்பாயர்' என்பதாகும்.

பூமாதேவியை தாங்கும் பெருமாளை இப்பெயரால் அழைப்பார்கள்.

சென்னை அருகே உள்ள கோவளத்தில் இருந்து 1 கிலோமீட்டரில் உள்ளது, திரு விடந்தை.
இங்கு நித்ய கல்யாணப் பெருமாள், தனது மடியில் தாயாரை சுமந்தபடி இருப்பார்.

இந்தப் பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஒருவர், தினமும் குதிரையில் இந்த ஆலயத்திற்கு வந்து சுவாமியை தரிசனம் செய்து விட்டுச் செல்வார்.

ஆலயத்திற்கு போகும்போது ஒரு குதிரையும்,
தரிசனம் முடிந்து அரண்மனை திரும்பும் போது ஒரு குதிரையும் பயன்படுத்துவார்.

ஏனெனில் குதிரையால் தன்னை நீண்ட நேரம் சுமக்க முடியாது என்பதால் அப்படிச் செய்வார்.
ஒரு முறை மன்னன், நித்ய கல்யாணப் பெருமாளை தரிசிக்கும்போது, "இறைவா.. எப்போதும் தாயாரை இடது கையால் தாங்கி நிற்கிறீரே.. உமக்கு வலிக்கவில்லையா?" என்று வருந்தினார்.
அப்போது இறைவன் அசரீரியாக, "தனக்கு ஏற்படும் சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு கருவுற்ற தாய் எப்படி குழந்தையை சுமக்கிறாளோ, அதுபோல தாயாரும் பூமியில் வாழும் உயிர்களை தாங்குகிறாள்.

அவளின் பெருமையை உலகிற்கு உணர்த்தவே, நானும் தாயாரைச் சுமந்தபடி இருக்கிறேன்" என்று விளக்கினார்.
தாயாரைச் சுமக்கும் பெருமாளின் நாமமான 'பூகர்ப்பாய நமஹ' என்று சொல்லி வழிபட்டால் மன பாரம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

#ஓம்_பூகர்ப்பாய_நமஹா

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Nov 12
*#சங்கடஹர_சதுர்த்தி*

*#ஸ்ரீ_கணநாயக_அஷ்டகம்*

1.ஏக தந்தம் மஹா காயம் தப்த காஞ்சனா சந்நிபம்
லம்போதரம் விஸாலாக்ஷம் வந்தே ஹம் கண நாயகம்.

2.மௌஞ்ஜி கிருஷ்ணா ஜினதரம் நாக யக்னோப வீதினம்
பாலேந்து சகலம் மெளளம் வந்தே ஹம் கண நாயகம்.
3.சித்ரா ரத்னா விசித்ராகம் சித்ரா மாலா விபூஷிதம்
காம ரூப தரம் தேவம் வந்தே ஹம் கண நாயகம்.

4.கஜவக்த்ரம் ஸுர ஸ்ரேஷ்டம் கர்ண சாமர பூஷிதம்
பாஸாங்குச தரம் தேவம் வந்தே ஹம் கண நாயகம்.

5.மூஷ கோத்தம மாருஹ்ய தேவா ஸுர மஹா ஹவே
யுத்த காமம் மஹா வீர்யம் வந்தே ஹம் கண நாயகம்.
6.யக்ஷ கின்னர கந்தர்வ சித்த வித்யா தரை: சதா
ஸ்தூய மானம் மஹா பாஹும் வந்தே ஹம் கண நாயகம்.

7.அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபீ: பரி வேஷ்டிதம்
பக்த ப்ரியம் மதோன் மத்தம் வந்தே ஹம் கண நாயகம்.

8.சர்வ விக்ன ஹரம் தேவம் சர்வ விக்ன விவர்ஜிதம்
சர்வ சித்தி பர்தா தாரம் வந்தே ஹம் கண நாயகம்.
Read 4 tweets
Nov 12
#சிவலிங்கம்

சிவபெருமானை ஏன் லிங்க உருவில் பூஜிக்கிறார்கள்❓

சிவபெருமானை சிவன் உருவில் பூஜை செய்யாமல் ஏன் அவரை லிங்க உருவில் பூஜிக்கிறார்கள்?

என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

சிவபூஜை செய்பவர்கள் சாதாரணமாக அவரை லிங்க உருவில்தான் பூஜை செய்வார்கள்.
ஆலயங்களில் கூட சிவ லிங்கத்தையே சிவபெருமானாக பாவித்து பூஜை செய்வார்கள்.

சிவபெருமானை சிவன் உருவில் பூஜை செய்யாமல் ஏன் அவரை லிங்க உருவில் பூஜிக்கிறார்கள்?

சிவனும் சக்தியும் இணைந்ததே சிவலிங்க உருவம் ஆகும்.

சிவன் இன்றி சக்தி இல்லை, அது போலவே தான் சக்தி இல்லாமல் சிவனும் இல்லை.
ஆகவே பிரபஞ்சத்தைப் படைத்த சிவபெருமான் எனும் பரப்பிரும்மன் என்பது சிவனும் சக்தியும் இணைந்துள்ள சிவசக்தி ரூபமே என்பதினால் சிவனை தனியான உருவிலே பூஜிக்காமல் சிவசக்தியான லிங்க உருவிலே பூஜிக்கிறார்கள்.
Read 11 tweets
Nov 12
#சிங்க_முகத்துடன்_மகாலட்சுமி

#சிங்க_முக_மகாலட்சுமி

#நவ_நரசிம்மர்_கோயில்

9 நரசிம்மர்கள் ஒரே இடத்தில்

பக்தன் பிரகலாதனின் அபயக்குரலுக்கு நொடிப்பொழுதில் அவதரித்து இரண்யகசிபுவை சம்ஹாரம் செய்தார் நரசிம்மர்.

இரண்யகசிபுவை வதம் செய்த பின்னும் உக்கிரம் தணியாத நரசிம்மரை கண்டு அஞ்சிய
பிரகலாதன் நரசிம்மரை நோக்கி பாடல் பாடி, லட்சுமி தேவியுடன் சாந்த சொரூபத்தில் காட்சியருள வேண்டி  தரிசனம் பெற்றார்.

பிரகலாதனுக்கு கிட்டிய லட்சுமி நரசிம்மர் தரிசனத்தை தங்களுக்கும் கிட்டவேண்டுமென திருமாலிடம் தேவாதிதேவர்கள் வேண்டி நின்றனர்.
திருமால், ஆவணி நாராயணபுரம் என்னும் சிம்மாசல மலையில் வெப்பாலை மரங்களாய் நின்று தவம் செய்யும்படியும், பிருகு மகரிஷியோடு  சேர்த்து தேவாதி தேவர்களுக்கும் தரிசனம் தருவதாகக் கூறியருளினார்.
Read 15 tweets
Nov 11
#குல_தெய்வ_வழிபாடு

#குல_தெய்வ_பரிகாரம்

*குலதெய்வ கோபம் தணிய 200 வருடத்திற்கு முன்புள்ள பரிகாரம் :*

குலதெய்வ கோபம் தணிய 200 வருடங்களுக்கு முன்பு செய்யபட்டு வந்த பரிகாரம் ஒன்று உள்ளது.

அதன் விபரம் :

*தேவையான பொருட்கள்*

எழுமிச்சை , தாமரைநூல், சாதா திரி, வேப்ப எண்ணெய்..
வீட்டின் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு மாலை 6.45க்கு மேல் (அது சூரியன் முழுமையாக அஸ்தமனம் அடையும் நேரம்)சென்று எழுமிச்சை பழத்தை தரையில் வைத்து உருட்டிவிட்டு,

அதன் தலைப்பகுதியில் சிறிதாக துளையிட்டு உள்ளிருக்கும் சாறு விதைகளை நீக்கிவிடவேண்டும்.
பின்பு வேப்ப எண்ணையை அதில் நிரப்ப வேண்டும் .

பின்பு சாதா திரியையும் தாமரைநூலையும் இணைத்து அந்த கனியின் உள்ளே செலுத்தி தீபம் ஏற்றி இரு கைகளிலும் வைத்துக் கொண்டு அம்மனிடம் குலதெய்வ கோபம் நீங்க அருள்புரியுமாறு வேண்டிக் கொள்ள வேண்டும்..
Read 5 tweets
Nov 11
#சிவபுராணம்

சிவபுராணம் என்றால் என்ன? அதை தினமும் படிப்பதால் வரும் பயன்கள் என்ன?

சிவபுராணத்தின் பெருமைகள் :

1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.
2. வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.

3. மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.
4. மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்.
Read 14 tweets
Nov 11
#மோட்ச_தீபம்

*முன்னோர்களுக்கு மோட்சதீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டிய தலம்*

நவகயிலாயத்தில் ஒன்பதாவதாக விளங்கும் சேர்ந்தபூமங்கலத்தில் ஈசன் சுக்கிர அம்சமாக விளங்குகிறார். Image
அகத்தியர் தனது சீடர் உரோமச முனிவருக்காகத் தாமிரபரணி ஆற்றில் விட்ட ஒன்பது மலர்களில் ஒன்பதாவது மலர் சேர்ந்த இடம்.

இதனால் இவ்வூருக்குச் சேர்ந்த பூமங்கலம் என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
தாமிரபரணி ஆறு கடலோடு சங்கமிக்கும் இடம் என்பதால் சேர்ந்தமங்கலம் என்ற பெயர் வந்ததாகவும் ஒரு சிலர் கூறுகிறார்கள்.

இரண்டும் சேர்ந்து “சேர்ந்தபூமங்கலம்” ஆயிற்று.

கோயிலுக்கு கோபுரம் கிடையாது. கொடிமரம் உள்ளது.
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(