Theni Siraj Profile picture
Nov 13 11 tweets 4 min read
"ஓர் இனத்தை அடிமைப் படுத்த வேண்டுமா?
அவ்வினத்தின் மொழியை அழித்து விடு" -இப்பன்ஸ்

"அயர்லாந்து வேண்டுமா? அல்லது காலிக் மொழி வேண்டுமா' என்று கேட்கப்பட்டால் நான் அயர்லாந்தை விட்டு விடுவேன், காலிக் மொழி வேண்டும் என்று கேட்பேன்" என்கிறார் அயர்லாந்தின் விடுதலைக்காக போராடிய திவேலரா.
1/n Image
1963 மாநிலங்களவையில் பேரறிஞர் அண்ணா "ஜனநாயகம் என்பது பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படையிலான ஆட்சி மட்டும் அல்ல; சிறுபான்மை மக்களின் உரிமைகள், உணர்ச்சிகள் ஆகியவையும் புனிதம் என்று கருதி, அவற்றைக் காப்பதற்குப் பெயர்தான் ஜனநாயகம்".

"இந்தி ஆட்சி மொழியாவதை எதிர்த்து
2/n
உணர்ச்சிப்பூர்வமாக தெரிவிக்கபடும் எதிர்ப்பை இந்த மசோதா கணக்கிலேயே எடுத்துக்கொள்ளவில்லை. இந்த எதிர்ப்பு இந்தியாவின் ஏதோ ஒரு சிறு பகுதியிலிருந்து வரவில்லை. தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலிருந்தும் வருகிறது என்றார்.

'இந்தியா ஒற்றை நாடல்ல'

இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவாக ஒரு
3/n
மொழி வேண்டும் என்று பலரும் பல விதங்களில் வாதாடினர். அது ஏற்கப்பட்டால் இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் ஒன்றைத்தான் பொதுமொழியாக ஏற்க வேண்டும். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.

இந்தியா 'ஒற்றை நாடு' என்று ஏற்றுக்கொள்வோமானால், இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால்,
4/n
இந்தியா 'கூட்டாட்சி நாடு' இந்தியச் சமூகம் பன்மைத்துவம் கொண்டது. ஆகையால் ஒரே ஒரு மொழியைப் பொதுமொழியாக ஏற்பது ஏனைய மொழி பேசுவோருக்கெல்லாம் அநீதி இழைப்பது போன்றதாகிவிடும்.

இந்தியா ஒரே நாடல்ல. இந்தியா பல்வேறு இனக் குழுக்களையும் மொழிக் குடும்பங்களையும் கொண்ட நாடு. இதனாலேயே
5/n
இந்தியாவை 'துணை கண்டம்' என்று அழைக்கிறோம். இதனால்தான், ஒரே மொழியை இந்தியாவின் ஆட்சிமொழியாக நம்மால் ஏற்க முடியவில்லை.

தேசிய கீதமான 'ஜனகண மன' பாடலும், தேசத் தாய் வாழ்த்தாக பாடப்படும் 'வந்தே மாதரம்' பாடலும் இந்தியில் இயற்றப்பட்டவை அல்ல.

நான் தமிழுக்காக வாதாடுகிறேன்.
6/n
அதற்காக இந்திக்காக வாதாடுபவர்களின் தாய்மொழிப் பற்றை நான் மறுக்கவில்லை. அவர்கள் இந்திக்காகப் பாடுபடட்டும்.
என்று நீண்ட நெடிய உரை நிகழ்த்தி இந்தி திணிப்புக்கு எதிராக அன்றே வலுவான போராட்டத்தை நடத்தி அதில் வெற்றியும் அடைந்தார். மீண்டும் இந்த பாசிச சக்திகள் இந்தியை தூக்கி வருகிறது.
7
மொழி என்பது கருத்தை விளக்கும் கருவி தானே இதில் சொந்த மொழி,
வந்த மொழி என பாகுபடுத்தி
ஏன் சண்டையிட வேண்டும்? என்று பொறுப்பற்ற சிலர் அலட்சியமாக பேசுகின்றனர்!
மொழியை வெறும் தொடர்பு கருவியாக மட்டுமே உலகம் ஏற்றிருக்குமானால்
அச்சுப்பொறிகளும், தட்டெழுத்தும், கணினியும்,
8/n
விஞ்ஞான சாதனங்களும் மலிவாகப் பெருகிவிட்ட இந்நாளில் சிரமம் இன்றி கற்கக்கூடிய ஒரு மொழியை
மனித குலம் தேர்ந்தெடுத்து இருக்கும்.
நாகரிகம் பெற்ற எந்த இனமும் தனது தனித்தன்மையை இழக்க தயாராக இல்லை.
மொழி கருவியல்ல வாழ்வின் வழியாகும்.

"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ்
9/n Image
என்று சங்கே முழங்கு"
என்று பாவேந்தர் பாடினார்.
அதன் உண்மையான காரணம் உயிரைவிடவும்,
நாட்டை விடவும்
மொழியே பெரிது என்பதுதான்.
ஒரு நாட்டின் எல்லைகள் விரிவடைந்து கொண்டே போகலாம், அதன் பூகோள அமைப்புகள் மாறலாம்.

"நாட்டுப்பற்று என்பது அவர்களின் தாய்மொழிப்பற்றையே
அடிப்படையாகக்
10/n
கொண்டதாகும்" என்று வரலாற்று அறிஞர் 'டாயின்பி' கூறுகிறார்.

நம்மை அடிமைப்படுத்த
இந்தி வருகிறது.
இதுவே இறுதிப் போராக இருக்கட்டும்...
#இந்தி_வேண்டாம்_போடா
#HindiImposition

@TRBRajaa @isai_ @hihareesh @vasantalic @IlovemyNOAH2019 @Anti_CAA_23

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Theni Siraj

Theni Siraj Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @thenisiraj

Nov 15
"எழுவர் விடுதலையில் அ.தி.மு.கவின் ஏழு நாடகங்கள்” - பட்டியலிட்ட முரசொலி தலையங்கம்
சீன் 1
இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநர் முடிவெடுத்துள்ளார். அது அவரது உரிமை. ஆனால் இந்த முடிவை ஜனவரி 25 ஆம் தேதியே எடுத்துவிட்டார். ஆனால்,
1/n Image
அவர் நல்ல முடிவை எடுக்கவேண்டும் என்று 29ஆம் தேதி அவரைச் சந்தித்து வலியுறுத்தியதாக நடித்தாரே. அதுதான் நாடகம்!

சீன் 2
பிப்ரவரி 4ஆம் தேதி தி.மு.க.வை விமர்சித்து மிகப்பெரிய அறிக்கையை சட்டமன்றத்தில் பழனிசாமி வாசித்தார். "இந்த விவகாரத்தில் மாண்புமிகு ஆளுநர் விரைவில் நல்ல
2/n
முடிவெடுப்பார் என நான் எதிர்பார்க்கிறேன்" என்று சட்டமன்றத்தை ஏமாற்றினார் பழனிசாமி. அன்று மாலையே, ஆளுநரின் கைவிரிப்புக் கடிதம் வந்துவிட்டது. மாலையில் ஆளுநரின் கடிதம் வெளியே வரப்போவது தெரிந்து, முன்கூட்டியே இப்படி ஒரு அறிக்கையை பழனிசாமி வெளியிட்டாரே, அதுதான் நாடகம்!
3/n
Read 18 tweets
Nov 14
13.11.1938 அன்று சென்னை ஒற்றைவாடை நாடககொட்டகையில் நடைபெற்ற தமிழ் நாட்டு பெண்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்...

1.​இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்ய வியலாமற் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும்

1/n Image
தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவரு மில்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போதெல்லாம் பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறது.

2. மணவினை காலத்தில் புரோகிதர்களையும்

2/n
வீண் ஆடம்பரச் செலவு களையும் விலக்கிவிட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

3. மற்ற நாடுகளைப்போல் தமிழர்கள் ஒன்றுபட்டு ஒரு சமுகமாய் வாழ்வதற்கு இன்று பெருந்தடையாயிருப்பது ஜாதி வேற்றுமையாதலால், ஜாதி வேற்று மைகளை ஒழிப்பதற்கு இன்றியமையாத கலப்பு மணத்தை இம்மாநாடு ஆதரிக்கின்றது.
3
Read 26 tweets
Nov 4
தமிழக போஸ்ட் மேனிடம் நிலுவையில் உள்ள சட்ட முன்வடிவுகள்!

💥 நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று இரண்டு முறை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. முதல் முறை ஆளுநர் சட்ட முன்வடிவைத் திருப்பி அனுப்பிய நிலையில்,
1/n
மீண்டும் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நீட் விலக்கு சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு, கடந்த பிப்ரவரி 8- ஆம் தேதி அன்று மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

💥 பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் சுயநிதி கல்லூரிகளில் இருந்து ஐந்து உறுப்பினர்களைச் சேர்ப்பது
2/n
தொடர்பான, சட்ட முன்வடிவு கடந்த ஆண்டு செப்டம்பர் 20- ஆம் தேதி ஆளுநருக்கு அனுப்பட்ட நிலையில், அது நிலுவையில் உள்ளது.

💥 கூட்டுறவுச் சங்கங்களின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாகக் குறைக்கும் சட்ட முன்வடிவு கடந்த ஜனவரி 12- ஆம் தேதி அன்று ஆளுநருக்கு
3/n
Read 9 tweets
Nov 3
உடன்பிறப்புகளே வணக்கம். சென்னை நலமா? சென்னை வாழ் மக்களே நலமா?
இவன் முடிப்பான் என்று நீங்கள் நம்பியது வீண் போகவில்லை.
முத்தமிழறிஞர் கலைஞரிடம் ஸ்டாலின் பற்றி கேட்ட போது உழைப்பு உழைப்பு உழைப்பு என்றார்.
அந்த உழைப்பின் பயனை நீங்கள் ஒவ்வொருவரும் அறிவீர்கள்.
மழை அறிவிப்பு வந்தாலே
1/n
சாலையெங்கும்
வெள்ளகாடாய், வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததெல்லாம் இனி பழங்கதையாய் பேசுவீர்.
"பெருமழைக்காலம்" இனி வசந்தத்தோடு இணைக்கப்படும்
நல்ல தலைவன் நமக்கு கிடைத்திருக்கிறார்.. ஓயாதுழைக்கும் தலைவனின் ஆட்சியில் சீர்மிகு சென்னை சிங்காரமாகிறது திட்டத்தால் மட்டுமல்ல தின்றாலும்.
2/n
கடந்த கொள்ளையர்களின் ஆட்சியின் அவலங்கள்
சரி செய்யவே பலகாலமாகும். ஆனால் இந்த போர்படைத்தலைவன் ஒவ்வொரு திட்டத்தையும் வல்லுநர்களை கொண்டு தீட்டி அதை "போர்கால" வேகத்தில் செய்துமுடிக்கும் திறமை மற்றும் அதனை விடாமுயற்சியுடன் வென்றெடுக்க
இப்படியொரு தலைவன் தமிழ்நாட்டிற்கு கிடைத்தது
3/n
Read 7 tweets
Aug 13
இன்றைய நாளில் பிறந்த
பிடல் காஸ்ட்ரோ, கியூபா புரட்சியாளர் மற்றும் அரசியல்வாதி. கியூபாவின் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் 49 ஆண்டுகள் பணியாற்றினார் ஃபிடல் காஸ்ட்ரோ. கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் உருவாக்கிய பெருமை இவரைச் சாரும். ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்ல 1/n
634 முறை பலரும் பலவிதம் முயற்சித்தனர். அத்தனையும் முறியடித்து வெற்றி பெற்ற, பிடல் காஸ்ட்ரோ
❤️ 96% மக்களை கல்வியை பெற வைத்தார். 60% பெண்கள் கல்வி பெற்றனர்.

❤️ மகப்பேறு இறப்பு விகிதம் மிக குறைவாக இருக்கும் நாடாக்கினார்.

❤️ எழுத்தறிவு இயக்கத்தை ஏற்படுத்தி அதன் முழக்கமாக
2/n
"தெரியாதவர்கள் கற்றுக் கொள்ளுங்கள்
தெரிந்தவர்கள் கற்றுக் கொடுங்கள்"

❤️ இதன் பயனாக 30% இருந்த எழுத படிக்க தெரிந்தோர் விகிதம் ஒரே ஆண்டில் 98% ஆக உயர்ந்தது.

❤️அனைவருக்கும் இலவச கல்வி அரசே வழங்கியது.

❤️ 14 வயதில் தனது சகோதரனுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்து அரசியல்
3/n
Read 10 tweets
Aug 11
⁉️வரலாற்று பிழை⁉️
குற்றால அருவியில் பார்ப்பனர்கள் மட்டும்தான் குளிக்க முடியும். ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது". என்றிருந்த ஜாதி வெறியை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் அன்றைக்கு திருநெல்வேலி மாவட்டத்தின் ஆஷ்' என்ற வெள்ளைக்கார கலெக்டர். 1/n
இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளினாலேயே ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரை, சாதி வெறியனான வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஒரு நாள் ஆஷ்துரை மாலை நேரத்தில் தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தர் உடன் நடைபயிற்சி போகிறார் நடந்து கொண்டிருந்தவர் காதில் ஏதோ அலறல் சத்தம் பலமாக கேட்கிறது. 2/n
ஓசை வந்த திசை நோக்கினார் ஆஷ் துரை. அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார். பின்னால் வந்த ராவுத்தர் ஓடி வந்து "துரை அங்கு போகாதீர்கள்" என்று தடுக்கிறார்."ஏன்" என்று வினவிய துரைக்கு "அது தாழ்த்தப்பட்டவர்களின் குடிசை” என்றும் "நீங்கள்அங்கு போகக் கூடாது" 3/n
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(