M.SivaRajan Profile picture
Nov 13 4 tweets 2 min read
#வால்_இல்லாத_ஆஞ்சநேயர்

ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் வால் இல்லாத ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது.

ராமர் பிரதிஷ்டை செய்து வழிபடுவதற்காக, ஆஞ்சநேயர் காசிக்கு சிவலிங்கத்தை தேடிச் சென்றார். Image
அவர் வருவதற்கு தாமதம் ஆனதால், சீதாதேவி மணலில் செய்து கொடுத்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து ராமபிரான் வழிபட்டு முடித்து விட்டார்.

அதன் பிறகு வந்த ஆஞ்சநேயர், தன்னுடைய வாலால் மணல் லிங்கத்தை அகற்ற முயன்றதாகவும்,
அந்த முயற்சியின் போது, ஆஞ்சநேயரின் வால் அறுந்து போனதாகவும் ஒரு சாரார் கூறுகின்றனர்.

இதனை மெய்ப்பிக்கும் வகையிலேயே, இங்குள்ள தலத்தில் ஆஞ்சநேயர் வால் இல்லாத தோற்றத்துடன் காணப்படுவதாக தல வரலாறு தெரிவிக்கிறது.
மேலும் இந்த ஆலயத்தில் கடல் மணலால் உருவாக்கப்பட்ட மற்றொரு வால் இல்லாத ஆஞ்சநேயர் உருவமும் உள்ளது.

இந்த உருவத்தின் மீது கடல் சிப்பிகள் பதிந்திருப்பதை காண முடிகிறது.

#வால்_இல்லாத_ஆஞ்சநேயர்

#ஜெய்_ஸ்ரீ_ராம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Nov 15
#பிருகு_மகரிஷி

உலகம் தோன்றிய காலத்தில் படைக்கும் கடவுளான பிரம்மதேவரால் உருக்கப்பட்டவர் பிருகு முனிவர்.

பிருகு என்னும் சொல்லுக்கு, கடுமையான தவசக்தியால் பாவங்களைப் பொசுக்குபவர் என்று பொருள். Image
பஞ்சபூதங்களில் அக்கினியுடன் பிருகு மகரிஷி பிறந்ததாக வேதங்கள் கூறுகின்றன.

மகரிஷி பிருகு, சப்தரிஷிகளுள் ஒருவர்.

பிரம்மதேவரால் தன் படைக்கும் தொழிலில் உதவி புரிவதற்காக உருவாக்கப்பட்ட பிரஜாபதியில் ஒருவர்.

பிரம்மதேவரின் மானசபுத்திரராகவும் கருதப்படுகிறார்.
கி.மு3000 ஆம் ஆண்டு, திரேதா யுகத்தில் இவர் எழுதிய #பிருகு_சம்ஹிதா எனும் நூல் சோதிட சாஸ்திரத்தின் தலை சிறந்த நூல்களுள் ஒன்றாக
கருதப்படுகிறது.

பிருகு மகரிஷி கியாதி என்ற பெண்மணியை மணந்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு மகாலட்சுமியே மகளாகப் பிறந்தாள்.

பின் விஷ்ணுவை மணந்து கொண்டாள்.
Read 23 tweets
Nov 15
*கார்த்திகை மாதம் பற்றிய 51 சிறப்பு தகவல்கள்*

*1. கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழைபொழியும் கார் காலம் ஆகும். காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம். ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது.*
*2. கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.*
*3. விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல் சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே, கார்த்திகை மாதத்தைத் திருமண மாதம் என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது.*

*4. கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள்,
Read 42 tweets
Nov 15
#துலா_ஸ்நானம்

நாளை காவிரி கடை முழுக்கு

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகளில் நீராடி தங்களின் பாவங்களைப் போக்கிக்கொள்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

அப்படி தங்கள் நீர்நிலைகளில் வந்து நீராடுபவர்களை புனிதப்படுத்தி விட்டு, அவர்களின் பாவங்களை ஏற்றுக் கொள்கின்றன.
அப்படி பாவங்களால் மாசுபடும் இந்த நதிகள் ஒவ்வொரு ஆண்டு துலா மாதம் என்னும் ஐப்பசியில் மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரியில் நீராடிதங்களிடம் உள்ள பாவங்களைப் போக்கிக் கொள்வதோடு, தங்களை மென்மேலும் புனிதப்படுத்திக் கொள்வதாக ஐதீகம்.
மூன்று நதிகள் தவிர, சப்த கன்னியரும் கூட ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் நீராடுவதாக சொல்லப்படுகிறது.

எனவே ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது சிறப்பான ஒன்றாக கருதுகிறார்கள்.

ஐப்பசி மாதம் முழுவதும் நீராட முடியாதவர்கள், ‘கடை முழுக்கு’ என்று சொல்லப்படும்,
Read 6 tweets
Nov 15
#கண்_திறக்கும்_நரசிம்மர்

*கார்த்திகையில் கண் திறக்கும் ஸ்ரீ நரசிம்ம பெருமாள்*

ஒரு நாழிகை இந்தத் திருத்தலத்தில் நாம் தங்கி இருந்தாலே இத்தலம் நமக்கு முக்தியை அளிக்க வல்லது.

🌹 *ஆழ்வார்கள் பாடிய நூற்றிஎட்டு திவ்ய தேசங்களுள் ஒன்று. Image
வேலூர் மாவட்டத்தில் உள்ள சோளசிம்மபுரம் எனப்படும் சோளிங்கர்*.

*திருக்கடிகை* என்ற திருப்பெயரில் இவ்வூரை ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள்.

கடிகை என்பது ஒரு நாழிகைப் பொழுதைக் குறிக்கும்.

ஒரு நாழிகை இந்தத் திருத்தலத்தில் தங்கி இருந்தாலே, இத்தலம் முக்தியை அளிக்க வல்லது.
அதனால் தான் திருக்கடிகை என்று இதனை ஆழ்வார்கள் அழைத்துள்ளார்கள்.

🌹நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்பிய சப்த ரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்கள், சோளிங்கர் மலைக்கு மேல் நரசிம்மர் யோக நிலையில் தவம் புரிவதை அறிந்து கொண்டார்கள்.

750 அடி உயரம் கொண்ட அந்த மலைக்கு மேல் சென்ற முனிவர்கள்
Read 13 tweets
Nov 15
#வெண்_மணல்_லிங்கம்

*வெண்மணலாலான சுயம்பு லிங்கம் மற்றும் பீமனின் பிரம்மகத்தி தோஷம் நீக்கிய தலம்*

பிரம்மபுரீஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரை தலங்களில் 123ஆவது சிவத்தலமாகும். Image
இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் அமைந்துள்ளது.

இத்தலத்தின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர், தாயார் வண்டமர் பூங்குழலம்மை.

இத்தலத்தின் தலவிருட்சமாக தேத்தா மரமும், தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும் உள்ளன.

இத்தல இறைவனார் சுயம்பு மூர்த்தி.

ஏழு விடங்கத் தலங்களில் ஒன்றாகும்.
இத்தலத்து தியாகராஜர் அவனி விடங்கத் தியாகர், ஊழிப்பரன் என்றும் இவரது நடனம் வண்டு நடனம் என்றும் அறியப்படுகிறது.

சிவபெருமானின் திருமுடி கண்டதாகப் பிரம்மா பொய் கூறியதால் அவருக்கு சாபம் உண்டாகிறது.

எனவே படைக்கும் தொழில் தடைபடுகிறது.

இதனால் நவகிரகங்களும் தத்தமது வேலையை
Read 13 tweets
Nov 14
#அய்யர்_மலை_சிவன்

மகிமை பொருந்திய அய்யர் மலை இரத்தினகிரீஸ்வரர்

ஆரிய மன்னன் ஒருவன் மாணிக்கக் கற்கள் வேண்டி இறைவனிடம் வந்தான். “மாணிக்கக் கற்களை நீ பெற வேண்டுமென்றால் இந்த தொட்டியை காவிரி நீரால் நிரப்ப வேண்டும்” என்று ஒரு தொட்டியை இறைவன், அரசனிடம் காண்பித்தார். Image
அந்த தொட்டியில் எவ்வளவு தான் நீரினை ஊற்றினாலும் நிரம்பவில்லை. இதனால் கோபமடைந்த மன்னன் அவனது வாளை எடுத்து இறைவனிடத்தில் வீசினான்.

அந்த சமயம் இறைவன் மாணிக்கக் கற்களை மன்னனுக்கு தந்து அருள் பாவித்தார்.
இறைவனை காயப்படுத்தியதில் வருத்தமடைந்த மன்னன் அந்த கோவிலிலேயே இறைவனுக்கு சேவை செய்து முக்தி பெற்றான் என்கிறது வரலாறு.

அந்த மன்னனால் இறைவன் வெட்டு பட்டதால் இத்தலத்தில் சிவனுக்கு ‘முடித்தழும்பர்’ எனும் பெயரும் உண்டு.

இன்றளவும் சிவலிங்கத்தின் மேல் பகுதியில் இந்த வடு காணப்படுகிறது.
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(