M.SivaRajan Profile picture
Nov 15 13 tweets 2 min read
#வெண்_மணல்_லிங்கம்

*வெண்மணலாலான சுயம்பு லிங்கம் மற்றும் பீமனின் பிரம்மகத்தி தோஷம் நீக்கிய தலம்*

பிரம்மபுரீஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரை தலங்களில் 123ஆவது சிவத்தலமாகும்.
இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் அமைந்துள்ளது.

இத்தலத்தின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர், தாயார் வண்டமர் பூங்குழலம்மை.

இத்தலத்தின் தலவிருட்சமாக தேத்தா மரமும், தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும் உள்ளன.

இத்தல இறைவனார் சுயம்பு மூர்த்தி.

ஏழு விடங்கத் தலங்களில் ஒன்றாகும்.
இத்தலத்து தியாகராஜர் அவனி விடங்கத் தியாகர், ஊழிப்பரன் என்றும் இவரது நடனம் வண்டு நடனம் என்றும் அறியப்படுகிறது.

சிவபெருமானின் திருமுடி கண்டதாகப் பிரம்மா பொய் கூறியதால் அவருக்கு சாபம் உண்டாகிறது.

எனவே படைக்கும் தொழில் தடைபடுகிறது.

இதனால் நவகிரகங்களும் தத்தமது வேலையை
சரியாக செய்ய முடியாமல் திணறுகின்றன. எனவே பிரம்மா இத்தலத்தில் பிரம்ம தீர்த்தம் உண்டாக்கி மணலால் லிங்கம் அமைத்து இத்தலத்தில் பூஜை செய்து சாபம் நீங்க பெறுகிறார்.

இதனால் இத்தல சுவாமி “பிரம்மபுரீஸ்வரர்” ஆனார்.

நவகிரகங்களும் தங்களது தோஷம் நீங்கப்பெற்றன.

இதனால் இத்தலம் “கோளிலி” ஆனது.
இங்கு நவகிரகங்கள் நேர்கோட்டில் இருப்பது மிகவும் சிறப்பு.

வெண்மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த இலிங்கத்திற்கு அமாவாசை தினங்களில் மட்டும் சாம்பிராணித் தைலம் சாற்றப்படுகிறது.

மற்ற நாட்களில் குவளை சாற்றி பூஜை செய்யப்படுகிறது.

எனவே இத்தலம் “திருக்குவளை” ஆனது.
சுவாமி, அம்மன் சன்னதி இரண்டும் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது.

பஞ்ச பாண்டவர்களில் பீமன் பகாசூரனை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மகத்தி தோஷம் இத்தலத்தில் நீங்கியது.

சுந்தரர் குண்டையூர் எனும் தலத்தில் பெற்ற நெல்மலையை,

திருவாரூர் பரவையாளர் மாளிகைக்கு கொண்டு
செல்வதற்காக ஆள் வேண்டி இத்தலத்தில் பதிகம் பாடினார்.

பிரம்மா, தாமரைக்கண்ணன், வலாரி, அகத்தியர், முசுகுந்தன், பஞ்சபாண்டவர்கள், நவகிரகங்கள், ஓமகாந்தன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர்.

இத்தலத்தின் அருகே ஓடும் சந்திரநதி கங்கையைப்போல் புனிதமானது என புராணங்கள் கூறுகின்றன.
இத்தல விநாயகர் தியாக விநாயகர் எனப்படுகிறார். மிக அழகிய, சற்றே பெரிய கோயில்.

எதிரில் குளம் உள்ளது.

கோயில் ஊரின் மத்தியில் அமைந்துள்ளது.

கிழக்கு நோக்கிய சன்னிதி.

அழகான ராஜகோபுரம்.

உள்ளே நுழைந்தால் வலப்புரம் வசந்த மண்டபம்.
துவஜஸ்தம்பம் தாண்டி இரண்டாம் கோபுரம்.

நேரே தெரிவது கோளிலிநாதர் சன்னிதி.

தென்பால் தியாகேசர்.

எதிரே சுந்தரர் உற்சவமூர்த்தியாக காட்சி தருகிறார்.

பிரகார வலம் வரும்போது தென்மேற்கில் தியாகவினாயகரும், விஸ்வநாதரும், வாகன மண்டபமும், விசாலாட்சி, இந்திரபுரீஸர் முதலிய சன்னிதிகளும் உள்ளன.
அழகிய முருகன் சன்னிதி.

அது தாண்டி நால்வர், மஹாலட்சுமி சன்னிதிகள்.

அம்பாள் சன்னிதி கிழக்கு நோக்கியது.

தனிக்கோயிலாகவுள்ளது.

சபாநாதர் தரிசனம் அழகானது.

இது கோளிலித்தலமாகையால் நவக்கிரகங்கள் ஒருமுகமாக தென்திசையை நோக்கியுள்ளன.
இறைவன் கர்பக்ரகிரத்தின் வடபுறம் அர்த்தனாரீஸ்வரர், பிரம்மா, துர்கை மற்றும் உமாமகேஸ்வரர் உள்ளனர்.

தென்புறம் நடராஜர், தக்ஷிணாமூர்த்தி உள்ளனர்.

இரண்டாம் கோபுரத் தென்மதிலில் பஞ்ச பாண்டவர் பூசித்து வழிபடும் கோலமும், பிரம்மா வழிபடுவதும் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன.
சுவாமி அம்பாள் கோயில்களுக்கிடையில் அகத்தியர் பூசித்த இலிங்கம் உள்ளது.

அது தனியாக கர்பகிருக, அர்த மண்டபத்துடன் உள்ளது.

சண்டீசர் சன்னிதியும் உள்ளது
திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் நாலு ரோடு பேருந்து நிறுத்தம் வந்து, அங்கிருந்து கொளப்பாடு செல்லும் சாலையில் 9 கீ.மீ சென்றால் இத்தலத்தை அடையலாம்.

#ஓம்_சிவாய_நமஹா

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Nov 16
#பைரவர்_அஷ்டோத்ர_சதநாமாவளி

1. ஓம் பைரவாய நம
2. ஓம் பூத நாதாய நம
3. ஓம் பூதாத்மனே நம
4.ஓம் பூத பாவநாய நம
5.ஓம் க்ஷேத்ரதாய நம
6. ஓம் க்ஷேத்ர பாலாய நம
7.ஓம் க்ஷேத்ர ரக்ஞாய நம
8. ஓம் க்ஷத்ரியாய நம
9. ஓம் வீராஜே நம
10. ஓம் ஸ்மசானவாஸிநே நம
11.ஓம் மாம்ஸாசினே நம
12. ஓம் ஸர்ப்பராசயே நம
13. ஓம் ஸ்மராந்தக் ருதே நம
14. ஓம் ரக்தபாய நம
15. ஓம் பானபாய நம
16. ஓம் ஸித்தாய நம
17. ஓம் ஸித்தி தாய நம
18. ஓம் ஸித்த ஸேவிதாய நம
19. ஓம் கங்காளாய நம
20. ஓம் காலசமனாய நம
21. ஓம் கலாய நம
22. ஓம் காஷ்டாய நம
23. ஓம் தனவே நம
24. ஓம் கவயே நம
25. ஓம் த்ரிநேத்ரே நம
26. ஓம் பஹு நேத்ரே நம
27. ஓம் பிங்கள லோசனாய நம
28. ஓம் ஓம் சூல பாணயே நம
29. ஓம் கட்க பாணயே நம
30. ஓம் கங்காளிநே நம
Read 11 tweets
Nov 16
#ஐப்பசி_துலா_ஸ்நானம் ..

கடைமுக தீர்த்தவாரி..

ஐப்பசி மாதக்கடைசி நாள் கடைமுகம் என்று அழைக்கப்படுகிறது.

ஐப்பசி மாதத்தில் அனைத்துப் புண்ணிய நதிகளும் கலந்து புனிதத்தை அள்ளி வழங்கும் என்பர்.

இந்த மாதத்தில், காவிரி நீராடல் புண்ணியம் மிகுந்தது. Image
அதுவும், ஐப்பசி கடைசி நாளன்று மேற்கொள்ளப் படும் புனித நீராடலை கடை முழுக்கு என்று கூறுவார்கள்.

ஐப்பசி மாதம் கடைசி நாளில் காவிரியில் முழுகி, மயூரநாதரை வழிபட்டால் நன்மை உண்டாகும்.

மேலும் நம் பாவங்கள் கரைந்தோடும்.

மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும் Image
காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும்.

பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை நதி உள்ளிட்ட ஜீவநதிகள் அனைத்தும் மயிலாடு துறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு Image
Read 9 tweets
Nov 16
#காசி_ஸ்ரீ_கால_பைரவர்

#பைரவாஷ்டமி_சிறப்பு

#அஷ்ட_பைரவர்_யாத்திரை

பலருக்கும் தெரியாத தகவல் :

காசி க்ஷேத்திரத்தின் சிவாலயங்களில் சிவபெருமானின் தலைமை காவலர் காலபைரவர்.

காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வடக்கில், பைரவநாத் என்னும் இடத்தில் அமைந்துள்ளது, காலபைரவரின் திருக்கோயில்.
இவரின் மேனியில் செந்தூரம் பூசி, அதற்கு மேல் பட்டு சரிகை வஸ்திரம் அணிவித்திருப்பதுடன், முகக் கவசமும் அணிவித்துள்ளனர்.

காசியில் யம பயம் கிடையாது. காலபைரவரின் சந்நிதியில், `கால பைரவ அஷ்டகம்’ படிக்கப்படுவதால் பக்தர்களை நெருங்குவதற்கு காலதேவன் அஞ்சுவான் என்பது நம்பிக்கை.
காசி காலபைரவர் ஆலயத்தில் வழங்கப்படும் மந்திரிக்கப்பட்ட காப்புக் கயிறு மிகுந்த சக்தி வாய்ந்தது.

இந்த கயிறைக் கட்டிக்கொள்வதால் பயம், பகைகள் விலகி நன்மை நடக்கும்.

காசிக்குச் சென்று பைரவரை தரிசித்தால்தான் காசி யாத்திரை பூர்த்தியாகும்.
Read 7 tweets
Nov 16
தருமை ஆதீன 25 வது குரு மகா சந்நிதானம் கயிலை மாமுனிவர் ஸ்ரீ ல ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் குருபூஜை இன்று.

சுவாமிகள் ஆற்றிய திருத்தொண்டு :

1.இவரது அருளாட்சிக் காலத்தில் ஆதீனத்திற்குச் சொந்தமான 27 திருக்கோயில்களும் குடமுழுக்கு செய்யப்பட்டன. Image
2.ஆதீனத்தில் ஸ்ரீ மகாலட்சுமி துர்காம்பிகை திருக்கோயில் நிறுவப்பட்டது.

3.ஸ்ரீ ஷண்முகர் விருந்தினர் மாளிகை கட்டப்பட்டது ஆதீனத்தில்.

4.ஸ்ரீ சொக்கர் பூசை மடம் சலவைக் கல்லால் பதியப்பட்டது ,வெள்ளித் தகடுகள் பதிக்கப்பட்டன.

5.திருக்கயிலாய தரிசன நினைவு வளைவுகள் கட்டப்பெற்றன.
6.தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்கள் பலவற்றைத் தரிசித்த புண்ணியமும் வடநாட்டிலுள்ள பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களை வழிபட்ட பெருமையும் இவருக்கு உண்டு.

7.1959 இல் திருக்கயிலாய தரிசனம் செய்து அன்றுமுதல் ஸ்ரீ கயிலைக் குருமணி என்று அன்பர்களால் அழைக்கப்பட்டார்.
Read 13 tweets
Nov 16
#பைரவர்_வழிபாடு

சிவ வடிவங்களில் ஒன்று பைரவ வடிவம்.

பைரவர் என்றால் அச்சம் தருபவர் என்று பொருள்.

அதாவது, பகைவர்களுக்கு பயத்தையும் அடியவர்களுக்கு அருளையும் அளிக்கும் தெய்வம் இவர்.

ஸ்ரீ பைரவ அவதாரம் குறித்து புராணங்களில் மிக அற்புதமாக சொல்லப்பட்டிருக்கின்றன. Image
சிவபெருமானால் படைக்கப்பெற்ற பிரம்மன், சிவனாரைப் போலவே ஐந்து முகங்களும் எட்டுத் தோள்களுமாக விளங்கினார்.

எனவே இவரை, சிவபெருமானுக்கு இணையாக அனைவரும் போற்றினர்.

இதனால் ஆணவம் கொண்டார் பிரம்மன்; மதிமயங்கி சிவநிந்தனை செய்தார்.
அப்போது பைரவரைத் தோற்றுவித்த சிவனார், பிரம்மதேவனின் ஐந்தாவது தலையை வெட்டி, அதனை கபாலமாக்கிக் கொண்டார்.
Read 17 tweets
Nov 16
#வைரவேச்சுரம்

காஞ்சீபுரம் வைரவேச்சுரம் :

கண்டியூரில் பிரம்மனின் சிரத்தைக் கொய்த பாவம் தீர சிவ வழிபாடு செய்த பைரவரின் தனி ஆலயம் காஞ்சிபுரத்தில் உள்ளது. Image
இதற்கு அருகிலேயே இந்தக் கால பைரவர் அஷ்ட பைரவராகி எட்டு வடிவங்களுடன் எட்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்ட வைரவேச்சுரம் என்ற சிவாலயமும் உள்ளது.

இத்தலத்தின் உற்சவர் காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ளார்.
காஞ்சிக்குத் தென்மேற்கில் அழிப்படை தாங்கி என்னுமிடத்தில் பிரம்மதேவர் வழிபட்ட பைரவர் கோவில் அமைந்துள்ளது.

இங்கு பிரம்மன் சிவலிங்கத்தை வைத்து வழிபட்டதுடன் தனது ஐந்தாவது சிரத்தைக் கிள்ளிய பைரவருக்கும் தனி சந்நிதி அமைத்து வழிபாடு செய்தான்.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(