M.SivaRajan Profile picture
Nov 15 23 tweets 4 min read
#பிருகு_மகரிஷி

உலகம் தோன்றிய காலத்தில் படைக்கும் கடவுளான பிரம்மதேவரால் உருக்கப்பட்டவர் பிருகு முனிவர்.

பிருகு என்னும் சொல்லுக்கு, கடுமையான தவசக்தியால் பாவங்களைப் பொசுக்குபவர் என்று பொருள். Image
பஞ்சபூதங்களில் அக்கினியுடன் பிருகு மகரிஷி பிறந்ததாக வேதங்கள் கூறுகின்றன.

மகரிஷி பிருகு, சப்தரிஷிகளுள் ஒருவர்.

பிரம்மதேவரால் தன் படைக்கும் தொழிலில் உதவி புரிவதற்காக உருவாக்கப்பட்ட பிரஜாபதியில் ஒருவர்.

பிரம்மதேவரின் மானசபுத்திரராகவும் கருதப்படுகிறார்.
கி.மு3000 ஆம் ஆண்டு, திரேதா யுகத்தில் இவர் எழுதிய #பிருகு_சம்ஹிதா எனும் நூல் சோதிட சாஸ்திரத்தின் தலை சிறந்த நூல்களுள் ஒன்றாக
கருதப்படுகிறது.

பிருகு மகரிஷி கியாதி என்ற பெண்மணியை மணந்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு மகாலட்சுமியே மகளாகப் பிறந்தாள்.

பின் விஷ்ணுவை மணந்து கொண்டாள்.
இதனால் உலகத்தைக் காக்கும் விஷ்ணுவுக்கு மாமனார் என்ற பெருமை பெற்றவர் இவர்.

பிருகுவின் பெயரால் தான் லட்சுமிக்கு பார்கவி என்ற பெயர் ஏற்பட்டது.

மகாபாரதத்தில் பிருகு மகரிஷிக்கும் பரத்வாஜ முனிவருக்கும் நடந்த வாக்குவாதம் மிகவும் சிறப்பானது.

இதற்கு பிருகு பரத்வாஜ சம்வாதம் என்று பெயர்.
இப்பகுதி தத்துவக் கருத்துக்களை எடுத்துச் சொல்லும் பகுதியாக அமைந்துள்ளது.

பிருகு மகரிஷி புலோமா என்ற பெண்ணையும் மணந்தார் .

இவள் குழந்தையாக இருந்தபோது மிகவும் சுட்டியாக இருந்தாள்.
அவளைக் கட்டுப்படுத்த எண்ணிய பெற்றோர், அதோ பார் அந்த மரத்தில் இருக்கும் பிரம்மராட்சதனிடம் உன்னைக் கொடுத்துவிடுவோம் என்று சொல்லி பயமுறுத்தினர்.

விளையாட்டாக சொன்ன சொல்லை அவர்கள் மறந்து விட்டனர்.

ஆனால், மரத்தில் இருந்த பிரம்மராட்சதன் இந்நிகழ்வை மறக்காமல் தக்க தருணத்திற்காக
காத்திருந்தான்.

புலோமாவிற்கு திருமண வயது வந்தது.

பிருகு மகரிஷிக்கும் புலோமாவுக்கும் திருமணம் சிறப்பாக நடந்தது.

இதை அறிந்த ராட்சதனுக்கு கடும் கோபம் உண்டானது.

புலோமா இருந்த பிருகுவின் ஆஸ்ரமத்திற்கு அருகில் வந்து ஒரு மரத்தில் தங்கிக் கொண்டான்.

இவ்விஷயத்தை அறிந்த பிருகு தன்
மனைவிக்கு பாதுகாப்பு தேடினார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த புலோமாவை, தான் இல்லாத நேரத்தில் பாதுகாக்கும்படி தன்னோடு பிறந்த தன் சகோதரன் அக்னிதேவனுக்கு உத்தரவிட்டார்.

அதனால் அவன் ஆஸ்ரமத்திலேயே தங்க வேண்டியிருந்தது.

ஒருநாள் பிருகு மகரிஷி ஆசார அனுஷ்டானங்களுக்காக
நதிக்கரைக்கு கிளம்பினார். அக்னிதேவன் ஆஸ்ரமத்தில் காவல் காத்துக் கொண்டிருந்தான் .

இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணிய ராட்சதன், ஆஸ்ரமத்தின் உள்ளே நுழைந்தான்.

எதிர்ப்பட்ட அக்னியிடம் பவ்யமாக பணிந்து, சுவாமி நீங்களே எனக்கு நியாயத்தைச் சொல்லுங்கள்.
புலோமாவின் பெற்றோர் தன் பெண்ணை எனக்கு தருவதாக வாக்களித்துவிட்டு உமது சகோதரருக்கு திருமணம் செய்துவைத்தது சரியா? இவள் குழந்தையாக இருந்த போதே என்னுடையவளாகி விட்டாள் என்று நியாயம் பேசினான்.

அவனது விதண்டாவாதத்தைக் கேட்ட அக்னி, தன் அண்ணியார் பிருகு மகரிஷிக்குத் மட்டுமே உரியவள்,
திருமணமான பெண்ணை அவனுடன் அனுப்ப இயலாது, என்று மறுத்து விட்டார்.

பிரம்ம ராட்சதன் கோபாவேசமாக எழுந்தான்.

இவள் என் மனைவி நான் இவளைத் தூக்கிச் செல்வேன் என்று புலோமாவைப் பலவந்தப்படுத்தினான்.

அந்த சமயத்தில் பயத்தில் புலோமா அலறித் துடித்தாள்.
அவள் ராட்சதனின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஓரிடத்தில் போய் விழுந்தாள்.

அப்போது பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்தது.

அந்த குழந்தையின் முகம் மின்னலைப் போல இருந்தது. அந்த ஒளியை தாங்க முடியாத பிரம்மராட்சதன் அந்த கணமே சாம்பலானான்.
பிருகு தன் அனுஷ்டானங் களை முடித்துக் கொண்டு ஆஸ்ரமம் திரும்பினார்.

நடந்த விஷயங்கள் அவருடைய ஞானதிருஷ்டியில் தெரிந்தன.

தன் மனைவி புலோமாவையும், தேஜஸ் நிறைந்த குழந்தையும் வந்து பார்த்தார்.

தன் மனைவியைப் பாதுகாக்கத் தவறிய அக்கினிதேவன் மீது கோபம் உண்டானது
ஏ! அக்னி! நீ யாகத்தீயாகவும், அடுப்புத் தீயாகவும் இருந்து நற்பெயர் பெற்றாய். இனி ஆங்காங்கே திடீர் திடீரெனப் பிடித்து அகப்பட்டவர்களை எல்லாம் பஸ்பமாக்கி தன் இரையாக்கிக் கொள்ளும் இழிந்த நிலையை அடைவாய். மக்கள் உன்னைத் திட்டித் தீர்ப்பார்கள், என்று சாபமளித்தார்.
மனம் வருந்திய அக்னிக்கு ஆறுதல் சொல்ல ஓடோடிவந்தார் பிரம்மா. அக்னியே! உனக்கு கிடைத்த சாபம் பற்றி கவலைப்படாதே. இவ்வுலகில் நீ பற்றி அழிக்கப்போகும் பொருட்களும், மனிதர்களும் உலகத்திற்கு தேவையில்லாதவர்களாகவே இருப்பர்.

அவரவர் முன்வினை மற்றும் செய்த பாவத்தின் அடிப்படையில் உன்னால்
பொருட்களையும், உயிரையும் இழப்பர். எனவே உலகத்தைத் தூய்மைப்படுத்தும் பணியை விருப்பத்தோடு செய். உன்னால் உலகம் நன்மை பெறுவதாக, என்று ஆறுதல் சொல்லி தேற்றினார். புலோமாவிற்குப் பிறந்த குழந்தைக்கு சியவனர் என்று பெயரிட்டு வளர்த்தனர்.
சிசுவாக இருந்தபோதே தேஜஸால் பிரம்ம ராட்சதனைக் கொன்ற இவருக்கு தனிச் சிறப்பிடம் உண்டு.

ஒருமுறை பிருகு மகரிஷி, மும்மூர்த்திகளில் சாந்த குணம் கொண்ட மூர்த்தி யார் என்பதை அறிய பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் காணச் சென்றார்.

பிரம்மாவும், சிவனும் பிருகு மகரிஷி வைத்த சோதனையில்
தோற்றதால் சாபம் பெற்றனர். பிரம்மாவுக்கு கோயில் இல்லாமல் போனது.

சிவன் லிங்கவடிவம் பெற்றார். ஆனால், விஷ்ணு பிருகு மகரிஷி காலால் உதைத்த போதும் கோபப்படாமல் புன்சிரிப்புடன் பிருகுவின் பாதங்களைப் பணிந்து நின்றார்.
அதனால், மும்மூர்த்திகளில் விஷ்ணுவே சாந்தமூர்த்தி என்ற முடிவுக்கு வந்தார் பிருகு.

ஜோதிடம், ஆயுர்வேதம் போன்ற சாஸ்திரங்களில் பிருகு மகரிஷியின் அரிய நூல்கள் காணப்படுகின்றன.

பிருகு மகரிஷி ஜீவன் முக்தனாக விரும்பி கடும்தவம் இருந்தபோது தம் தவத்திற்கு இடையூறு ஏற்படாமலிருக்க விரும்பி
எனவே தம் தவத்தை தடுப்பவர்கள் பிரம்மஞானத்தை மறக்க வேண்டும் என்று சாபமிட்டுவிட்டு தவம் இயற்றினார்.

அவருடைய தவ அக்னி தேவர்களை தாக்கியது.

தேவர்கள் திருமாலுடன் வந்து சிவபெருமானிடம் பிரார்த்திக்கவே, தமது திருக்கரத்தை பிருகு முனிவரின்
சிரசில் வைத்து அவரது தவாக்னியை அடக்கினார் சிவபெருமான்.

சிவபெருமான் பிருகு முனிவரது விருப்பம் நிறைவேறும் என்று ஆசிர்வதித்தார்.

சிவ தரிசனம் பெற்று மகிழ்ந்த பிருகு முனிவர் தமது சாபத்தால் சிவபெருமான் பாதிக்கப்படுவாரே என்று வருந்தி தம்மை மன்னிக்க வேண்டினார்.
பிருகு முனிவரின் சாபத்தைத் தாம் மகிழ்வுடன் ஏற்பதாகக் கூறினார் சிவபெருமான்.

இதனாலேயே பின்னர் சுவாமிமலையில் தமது புத்திரன் முருகரிடம் உபதேசம் பெற்றார் சிவபெருமான்.

மகாபாரதத்தில் கிருஷ்ணன் ரிஷிகளில் நான் பிருகுவாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மருதேரி கிராமம், சிங்கபெருமாள் கோவில் அருகே இவருக்கு கோவில் உள்ளது, மார்கழி மாதம் ரோகினி நட்சத்திரத்தில் இவருக்கு குரு விழா கொண்டாடப்படுகிறது.

#பிருகு_மகரிஷி_வரலாறு

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Nov 16
#பைரவர்_அஷ்டோத்ர_சதநாமாவளி

1. ஓம் பைரவாய நம
2. ஓம் பூத நாதாய நம
3. ஓம் பூதாத்மனே நம
4.ஓம் பூத பாவநாய நம
5.ஓம் க்ஷேத்ரதாய நம
6. ஓம் க்ஷேத்ர பாலாய நம
7.ஓம் க்ஷேத்ர ரக்ஞாய நம
8. ஓம் க்ஷத்ரியாய நம
9. ஓம் வீராஜே நம
10. ஓம் ஸ்மசானவாஸிநே நம
11.ஓம் மாம்ஸாசினே நம
12. ஓம் ஸர்ப்பராசயே நம
13. ஓம் ஸ்மராந்தக் ருதே நம
14. ஓம் ரக்தபாய நம
15. ஓம் பானபாய நம
16. ஓம் ஸித்தாய நம
17. ஓம் ஸித்தி தாய நம
18. ஓம் ஸித்த ஸேவிதாய நம
19. ஓம் கங்காளாய நம
20. ஓம் காலசமனாய நம
21. ஓம் கலாய நம
22. ஓம் காஷ்டாய நம
23. ஓம் தனவே நம
24. ஓம் கவயே நம
25. ஓம் த்ரிநேத்ரே நம
26. ஓம் பஹு நேத்ரே நம
27. ஓம் பிங்கள லோசனாய நம
28. ஓம் ஓம் சூல பாணயே நம
29. ஓம் கட்க பாணயே நம
30. ஓம் கங்காளிநே நம
Read 11 tweets
Nov 16
#ஐப்பசி_துலா_ஸ்நானம் ..

கடைமுக தீர்த்தவாரி..

ஐப்பசி மாதக்கடைசி நாள் கடைமுகம் என்று அழைக்கப்படுகிறது.

ஐப்பசி மாதத்தில் அனைத்துப் புண்ணிய நதிகளும் கலந்து புனிதத்தை அள்ளி வழங்கும் என்பர்.

இந்த மாதத்தில், காவிரி நீராடல் புண்ணியம் மிகுந்தது. Image
அதுவும், ஐப்பசி கடைசி நாளன்று மேற்கொள்ளப் படும் புனித நீராடலை கடை முழுக்கு என்று கூறுவார்கள்.

ஐப்பசி மாதம் கடைசி நாளில் காவிரியில் முழுகி, மயூரநாதரை வழிபட்டால் நன்மை உண்டாகும்.

மேலும் நம் பாவங்கள் கரைந்தோடும்.

மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும் Image
காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும்.

பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை நதி உள்ளிட்ட ஜீவநதிகள் அனைத்தும் மயிலாடு துறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு Image
Read 9 tweets
Nov 16
#காசி_ஸ்ரீ_கால_பைரவர்

#பைரவாஷ்டமி_சிறப்பு

#அஷ்ட_பைரவர்_யாத்திரை

பலருக்கும் தெரியாத தகவல் :

காசி க்ஷேத்திரத்தின் சிவாலயங்களில் சிவபெருமானின் தலைமை காவலர் காலபைரவர்.

காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வடக்கில், பைரவநாத் என்னும் இடத்தில் அமைந்துள்ளது, காலபைரவரின் திருக்கோயில்.
இவரின் மேனியில் செந்தூரம் பூசி, அதற்கு மேல் பட்டு சரிகை வஸ்திரம் அணிவித்திருப்பதுடன், முகக் கவசமும் அணிவித்துள்ளனர்.

காசியில் யம பயம் கிடையாது. காலபைரவரின் சந்நிதியில், `கால பைரவ அஷ்டகம்’ படிக்கப்படுவதால் பக்தர்களை நெருங்குவதற்கு காலதேவன் அஞ்சுவான் என்பது நம்பிக்கை.
காசி காலபைரவர் ஆலயத்தில் வழங்கப்படும் மந்திரிக்கப்பட்ட காப்புக் கயிறு மிகுந்த சக்தி வாய்ந்தது.

இந்த கயிறைக் கட்டிக்கொள்வதால் பயம், பகைகள் விலகி நன்மை நடக்கும்.

காசிக்குச் சென்று பைரவரை தரிசித்தால்தான் காசி யாத்திரை பூர்த்தியாகும்.
Read 7 tweets
Nov 16
தருமை ஆதீன 25 வது குரு மகா சந்நிதானம் கயிலை மாமுனிவர் ஸ்ரீ ல ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் குருபூஜை இன்று.

சுவாமிகள் ஆற்றிய திருத்தொண்டு :

1.இவரது அருளாட்சிக் காலத்தில் ஆதீனத்திற்குச் சொந்தமான 27 திருக்கோயில்களும் குடமுழுக்கு செய்யப்பட்டன. Image
2.ஆதீனத்தில் ஸ்ரீ மகாலட்சுமி துர்காம்பிகை திருக்கோயில் நிறுவப்பட்டது.

3.ஸ்ரீ ஷண்முகர் விருந்தினர் மாளிகை கட்டப்பட்டது ஆதீனத்தில்.

4.ஸ்ரீ சொக்கர் பூசை மடம் சலவைக் கல்லால் பதியப்பட்டது ,வெள்ளித் தகடுகள் பதிக்கப்பட்டன.

5.திருக்கயிலாய தரிசன நினைவு வளைவுகள் கட்டப்பெற்றன.
6.தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்கள் பலவற்றைத் தரிசித்த புண்ணியமும் வடநாட்டிலுள்ள பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களை வழிபட்ட பெருமையும் இவருக்கு உண்டு.

7.1959 இல் திருக்கயிலாய தரிசனம் செய்து அன்றுமுதல் ஸ்ரீ கயிலைக் குருமணி என்று அன்பர்களால் அழைக்கப்பட்டார்.
Read 13 tweets
Nov 16
#பைரவர்_வழிபாடு

சிவ வடிவங்களில் ஒன்று பைரவ வடிவம்.

பைரவர் என்றால் அச்சம் தருபவர் என்று பொருள்.

அதாவது, பகைவர்களுக்கு பயத்தையும் அடியவர்களுக்கு அருளையும் அளிக்கும் தெய்வம் இவர்.

ஸ்ரீ பைரவ அவதாரம் குறித்து புராணங்களில் மிக அற்புதமாக சொல்லப்பட்டிருக்கின்றன. Image
சிவபெருமானால் படைக்கப்பெற்ற பிரம்மன், சிவனாரைப் போலவே ஐந்து முகங்களும் எட்டுத் தோள்களுமாக விளங்கினார்.

எனவே இவரை, சிவபெருமானுக்கு இணையாக அனைவரும் போற்றினர்.

இதனால் ஆணவம் கொண்டார் பிரம்மன்; மதிமயங்கி சிவநிந்தனை செய்தார்.
அப்போது பைரவரைத் தோற்றுவித்த சிவனார், பிரம்மதேவனின் ஐந்தாவது தலையை வெட்டி, அதனை கபாலமாக்கிக் கொண்டார்.
Read 17 tweets
Nov 16
#வைரவேச்சுரம்

காஞ்சீபுரம் வைரவேச்சுரம் :

கண்டியூரில் பிரம்மனின் சிரத்தைக் கொய்த பாவம் தீர சிவ வழிபாடு செய்த பைரவரின் தனி ஆலயம் காஞ்சிபுரத்தில் உள்ளது. Image
இதற்கு அருகிலேயே இந்தக் கால பைரவர் அஷ்ட பைரவராகி எட்டு வடிவங்களுடன் எட்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்ட வைரவேச்சுரம் என்ற சிவாலயமும் உள்ளது.

இத்தலத்தின் உற்சவர் காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ளார்.
காஞ்சிக்குத் தென்மேற்கில் அழிப்படை தாங்கி என்னுமிடத்தில் பிரம்மதேவர் வழிபட்ட பைரவர் கோவில் அமைந்துள்ளது.

இங்கு பிரம்மன் சிவலிங்கத்தை வைத்து வழிபட்டதுடன் தனது ஐந்தாவது சிரத்தைக் கிள்ளிய பைரவருக்கும் தனி சந்நிதி அமைத்து வழிபாடு செய்தான்.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(