ஐப்பசி மாதக்கடைசி நாள் கடைமுகம் என்று அழைக்கப்படுகிறது.
ஐப்பசி மாதத்தில் அனைத்துப் புண்ணிய நதிகளும் கலந்து புனிதத்தை அள்ளி வழங்கும் என்பர்.
இந்த மாதத்தில், காவிரி நீராடல் புண்ணியம் மிகுந்தது.
அதுவும், ஐப்பசி கடைசி நாளன்று மேற்கொள்ளப் படும் புனித நீராடலை கடை முழுக்கு என்று கூறுவார்கள்.
ஐப்பசி மாதம் கடைசி நாளில் காவிரியில் முழுகி, மயூரநாதரை வழிபட்டால் நன்மை உண்டாகும்.
மேலும் நம் பாவங்கள் கரைந்தோடும்.
மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும்
காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும்.
பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை நதி உள்ளிட்ட ஜீவநதிகள் அனைத்தும் மயிலாடு துறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு
தங்கள் பாவங்களை போக்கி கொண்டதாக புராண வரலாறு கூறுகிறது.
அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அப்போது சிவாலயங்க ளில் இருந்து சாமி புறப்பாடாகி, துலா கட்டத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும்.
இந்த ஆண்டு ஐப்பசி மாதம் 1 ஆம் தேதி துலா உற்சவம் தொடங்கியது.
மயிலாடுதுறையின் காவிரித்துறையின் பெயர் துலாக் கட்டம் எனப் போற்றப்படுகிறது.
மயிலாடுதுறையின் பெருந் திருவிழாவின் பெயர் துலா உற்சவம் என்றே அழைக்கப்படுகிறது.
துலா மாதத்தில் வரும் கடை முழுக்கு தீர்த்தவாரித் திருவிழா, ஸ்ரீமயூரநாதர் அபயாம்பிகையின் வருடாந்திரத் திருவிழாவில், மிக முக்கியமான வைபவமாகப் போற்றப்படுகிறது.
மாதம் முழுதும் காவிரியில் தீர்த்தமாடும் இறைவன் மாதத்தின் கடைசி நாளான ஐப்பசி 30ஆம் நாள் கடைமுக தீர்த்தவாரி காண்பதாக ஐதீகம்
இதுவே மயிலாடுதுறையில், முக்கியமான திருவிழாவாகப் போற்றி கொண்டாடப்படுகிறது.
10 நாள் நடைபெறும் ஐப்பசி கடைமுக தீர்த்தவாரி உற்சவம் மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவிலில் கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கடைமுக தீர்த்தவாரி இன்று 16ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயம் உள்ளிட்ட சிவாலயங்களில் வாழைமரங்கள், தோரணங்கள் கட்டப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு
குலதெய்வம், ஒரு ஜாதகத்தில், ஒரு ஜாதகருக்கு எந்தெந்த அமைப்பில், பாதிக்கப்பட்டு இருக்கும் பொழுது,
அவருக்கு வெளியே தெரியாமலே இருக்கும்.
பொதுவாக ஒரு மோசமான
தசா புக்தி ,கோட்சாரத்தில்
ஏழரை சனி, அஷ்டம சனி நடக்கக்கூடிய காலகட்டங்களில் , தன்னுடைய முயற்சிகள் தடுமாறி, பலனளிக்காமல் போகும் போது தான், ஒரு ஜாதகர் ,ஜோதிடரிடம் ஜாதகம் பார்க்க வருகிறார்.
ஜோதிடரும் அவருடைய ஜாதகத்தை ஆராய்ந்து,
தசா புத்தி சரியில்லை என்றால் , அந்த கிரகத்தின் அதிபதி மற்றும் அந்த கிரகத்திற்குரிய பரிகாரங்களை வழிபாடாக பரிந்துரைக்கின்றனர்.
உதாரணமாக ஒருவருக்கு செவ்வாய் தசை. கன்னி லக்னம் என்று வைத்துக்கொள்வோம்.
27 நட்சத்திரங்களுக்கும் பரிகாரம் வழங்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் முருகபெருமான்!
சுயம்பு முருகனை காண்பது அரிது.
அப்படியொரு சுயம்பு வேலவனை வணங்கும் பாக்கியத்தை வில்வாரணி என்னும் ஊரில்,
நட்சத்திரகிரி, நட்சத்திரக் குன்று என்றெல்லாம் அழைக்கப்படும் நட்சத்திரக் கோயிலில் நாம் பெறலாம்.
வில்வாரணி நட்சத்திரகிரியில் வீற்றிருக்கும் வள்ளி தெய்வானை சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோயில் தனிச்சிறப்பு பெற்றது.
முருகனின் கருணையால் உருவான இத்திருத்தலத்து கருவறையில், நாகாபரணத்துடன் முருகரும், சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒருசேர காட்சிதரும் சிறப்பு இங்கு மட்டுமே காண இயலும்.
27 நட்சத்திரங்களும், சிவ சர்பமும் முருகப்பெருமானை வழிபடும் சிறப்பு, இந்த கோயிலை தவிர உலகில் வேறெங்கும் இல்லை.