பெரியார் ஜாதி மநாட்டில் பேசினார் என்கிறவர்கள் அவர் என்ன பேசினார் என்று சொல்லமாட்டார்கள்- 2

(வன்னியகுல ஷத்திரியர் மகாநாடு)

புராணக் குப்பைகளிலிருந்து ஆதாரம் தேடி உங்கள் சமூகத்தை புகழ்ந்து விட்டு போக நான் இங்கு வரவில்லை நான் சொல்லப் போகும் செய்திகள் உங்கள் மனசுக்கு சங்கடத்தை 1/8 Image
ஏற்படுத்தலாம் பல பிடிக்காமலும் இருக்கலாம் எப்படி இருந்தாலும் நான் சொல்லும் சொற்களை நீங்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறவில்லை நான் சொல்வதை ஆராய்ந்து உங்கள் புத்திக்கு எது சரி என்று படுகிறதோ அதை நீங்கள் ஒப்பு கொள்ளுங்கள் இல்லையேல் தள்ளி விடுங்கள், 2/8
பொதுவாக இதுபோன்ற சாதி மாநாடுகள் கூட்டுவது தங்கள் சாதி பெருமைகளை பேசுவதற்க்குகாகவும் அவரவர் சாதி மட்டும் தனியாகவே பிரிந்திருக்கும்படி சாதி உயர்வையே பேசி கொண்டிருப்பதற்காக மட்டும் என்று இருக்க கூடாது இம்மகாநாட்டின் பயனாகவாவது உங்களுக்கு மேல் ஒரு ஜாதி ஒன்று இருக்கின்றது என்று 3/8
எண்ணிக் கொண்டிருப்பதையும் நீங்கள் சில ஜாதிக்கு மேலானவர்கள் என்று எண்ணி கொண்டிருப்பதையும் அடியோடு ஒழித்து விட வேண்டும் ஏனெனில் நீங்கள் சில சாதிகளுக்கு மேலானவர்கள் என எண்ணும்போதே நீங்கள் சில சாதிகளுக்கு கீழானவர் என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள் 4/8
உங்கள் சாதி உயர்வுக்கான கோரிக்கை இதனால் எதிர்விளைவாக உங்களை கீழ் சாதிப்பட்டத்தோடு நிலைக்க செய்து விடுகிறது அதனால் நீங்கள் மேல் சாதி என்ற தத்துவம் சிக்கலாகிவிடுகிறது உதாரணமாக இப்பொழுது நீங்கள் உங்களை வன்னியகுல ஷத்திரியரென்றும் சொல்லிக் கொள்கிறீர்கள் இதனால் நீங்கள் 5/8
தங்களை பிராமணர்களாக சொல்லிக் கொள்ளும் இந்த பார்ப்பனர்களுக்கு கீழ்ப்பட்ட ஜாதியார் என்பதை சிறிதும் எதிர் வாதமில்லாமல் ஒப்பு கொண்டு விடுகிறீர்கள் உங்களது ஷத்திரிய தன்மையால் இங்கு தகராறுகளுக்கு குறைவில்லை நீங்கள் வன்னியகுல ஷத்திரியரென்றால் நாடார்கள் அக்கினிகுல ஷத்திரியர்களென்று 6/8
சொல்லிக் கொள்ளுகிறார்கள் ஒரு
ஷத்திரியப் பட்டத்திற்காக ஏன் இப்படி ஒருவருக்கு ஒருவர் போட்டியும், சண்டையும் போட்டுக் கொள்ளுகிறீர்கள், இதன் பலனாய் ஒருவனுக்கு நோகாமல் பிராமணர் பட்டம் கிடைத்து விட்டது தானே இதுபோன்ற இழிவானதும் அர்த்தமற்றதுமான நாங்கள் உயர்ந்த ஜாதி அவர்கள் 7/8
தாழ்ந்த ஜாதி என்ற சண்டைகளை போடுவதற்கு பிற சாதியினரை சாடை பேசுவதற்கும் சாதி மாநாடுகளை நடத்தாமல் ஆக்கப்பூர்மாக மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்கான மாநாடுகளாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்

என்று ஜாதி சங்க மாநாட்டில் சென்று ஜாதி பெருமை அல்ல இழிவு என்று பேசினார் பெரியார் 8/8

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கபிலன்

கபிலன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @_kabilans

Nov 15
தமிழ்த்தேசியத்தில் சாதியை ஒழிக்க என்ன வழி ? சாதியம் என்பது தமிழக சமூகவியலில் மக்களின் வாழ்வியலை தீர்மானிக்கிறது இந்த வகையில் தான் நமது வர்ககம் ஒரு சாதி வர்க்கமாக உள்ளது சொந்த சாதிக்குள் மணம் செய்து கொள்ளும் முறைதான் இந்த வழக்கத்தின் முதன்மை 1/5
பெயருக்கு பின் சாதி பட்டம் குல தெய்வ வழிபாடு என்ற இரண்டும் ஜாதி கட்டமைப்பை இனைத்து விடுகிறது இதை காப்பதில் தான் சாதியத்தின் வெறி மிக கொடூரமாக இருக்கிறது சமூகநீதி மட்டும் போதும் அது சாதி ஒழிப்பை செய்து விடுமா ? என்றால் முடியாது சமூகநீதி இல்லாமல் சாதி ஒழிப்பும் முடியாது 2/5
சாதி ஒழிப்பு போராட்டத்தில் முதண்மை தீண்டாமை ஒழிப்பு சாதி கொடுமைக்கு எதிரான போராட்டம், சமூக நீதிக்கான வகுப்புவாரி உரிமை போராட்டம் இதை பெரியார் கூறும் போது பறையன் பட்டம் ஒழியாமல் சூத்திரன் பட்டம் ஒழியாது என்கிறார் 3/5
Read 5 tweets
Nov 14
தென் தமிழக கோவில்களில் நாடார்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட போது நாடார்களுக்கு அனுமதியில்லை என்றால் வேறெந்த சாதியும் கோவிலுக்குள் செல்ல கூடாது என்று அறிவித்தார் பெரியார் வட தமிழக கோவில்களுக்குள் நாடார்கள் செல்லலாம் ஏன் தென் தமிழக கோவில்களுக்குள் அவர்கள் செல்ல முடியாது ? என்று 1/7
கேள்வி எழுப்பி ஆலய நுழைவு போரட்டத்தை முடுக்கினார் பெரியார் மேலும் ஏன் நாடார் சகோதரர்கள் பாதம் பட்டவுடன் சாமி மறைந்து விடுமா அல்லது சாமிக்கு சக்தி போய் விடுமா ? அப்படி சக்தியற்ற அந்த கல்லை தொழுவதால் யாருக்கு என்ன பிரயோஜனம் ? என்று கேட்டார் 2/7
மேலும் நாடார்களை ஆதரிக்கும் விதமாக பட்டியலின மக்களுக்கு அனுமதி வரும் வரை நாடார்கள் காத்திருக்க தேவையில்லை என்று அறிவித்தார், வைக்கம் கோவில் நுழைவு போராட்டத்தில் நாடார்களை தான் அவர் பெருமளவு ஈடுபடுத்தினார் தனது பிரச்சாரத்தை வைக்கத்துடன் நிறுத்தி கொள்ளாமல் நாகர்கோவில் 3/7
Read 7 tweets
Nov 13
ராவ் பகதூர் நமசிவாயம் சிவராஜ் B.A.,B.L. தந்தை சிவராஜ் அவர்கள் நீதிக்கட்சியின் தலைவராக இருந்தார் தன்னை தேடி வந்த துணை நீதிபதி பதவி ஏற்காமல் மக்கள் பணி செய்வதை உயர்வாக கருதி இயங்கினார் 1927 வரை ஆதிராவிட மாணவர்களை சேர்த்து கொள்ளாத பச்சையப்பன் கல்லூரியின் மீது வழக்கு தொடர்ந்து 1/6 Image
அந்த வழக்கில் சிவராஜ் அவர்கள் வெற்றி பெற்றார், அதன் பின்னர் தான் 1928-ஆம் ஆண்டு முதல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிட மாணவர்களை கல்லூரியில் சேர்த்து கொண்டனர் அன்றைய மதராஸ் மாகாணத்தின் மேயராகவும் 1945 முதல் 1946 பதவிவகித்தார் தந்தை சிவராஜ் 2/6
இவர் தன் பதவி காலத்தில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய காலபந்து மைதானத்தை கட்டினார் பின்பு அந்த காலந்து மைதானத்தை காமராஜர் ஆட்சி காலத்தில் காமராஜர் ஜவஹர்லால் நேரு மைதானம் என்று பெயரிட்டார் சென்னை மாநகர மேயராக இருந்த
மக்களின் காலத்தில் கல்விக்காக 16 பள்ளிகளை ஏற்படுத்தினார் 3/6
Read 6 tweets
Oct 29
இந்த ஆவணங்கள் இலங்கை
மலையகத்திலிருந்து 1964 ஸ்ரீமா
சாஸ்த்திரி ஒப்பந்தப்படி தமிழ்நாடு திரும்பிய மக்களுக்கு இலங்கையில் உள்ள இந்திய தூதர் வழங்கும் ஆவணம் இதில் குடும்ப உறுப்பினர் விவரமும் இந்தியாவில் பூர்வீக குடும்பத்தின் ஊர் முகவரியும் இந்தியா வந்த தேதியும் பதிவும் இருக்கும் 1/8
இங்கு வந்த சேர்ந்த மக்களுக்கு ,
கல்வி, வேலைவாய்ப்பு வணிக கடன் வழங்கவும் விதிகள் வகுத்து
செயல்படுத்தவும் குடும்ப கார்டு என்ற
அடையாள அட்டையும் மத்திய அரசு இலங்கையில் இருந்த தூதர் மூலமே
வழங்கியது மத்திய அரசுகள் ஆண்டு தோறும் நிதி அளிக்கும் தமிழக அரசு அளவில்தமிழ்நாடு அரசின் வேலை 2/8
வாய்ப்பில் 80கள் வரை முன்னுரிமை வழங்கியது ஒன்றிய அரசு ஆண்டு தோறும் நிதி அனுப்புவதுடன் நிறுத்தி கொண்டது மலையக தமிழர் என்ற ஒரு பிரிவு மக்கள் இருப்பதே சில ஆட்சியாளர்களுக்கு தெரியாது அந்த தேயிலை தோட்டங்களை எல்லாம் வெள்ளையன் வைத்திருந்த போது தொழிலாளருக்கு குறைந்த பட்சம் 5ஆவது வரை 3/8
Read 8 tweets
Oct 28
பெரியாரின் போர்ப்படை தளபதிகள் அதில் முக்கியமானவர் திராவிடர் இயக்கத்தின் அஞ்சா நெஞ்சன் தளபதி என்ற இரு அடைமொழிக்கும் சொந்தக்காரர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமான பெரியார் தொண்டர் எத்தனை எதிர்ப்பு வந்தாலும் தன் வாழ்நாள் முழுதும் ஒரே தலைவன் ஒரே கட்சி என்று நின்ற கொள்கை மறவன் 1/10
பெரியார் சுயமரியாதை இயக்கத்தை கட்டும் முன்பே பட்டுக்கோட்டையில் அழகிரி அவர்கள் சுயமரியாதை சங்கம் ஒன்றை நிறுவியவர் சாதி சமய சடங்குகள் சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றை எதிர்த்து களப்பணி ஆற்றி பெரியாரின் கருத்துக்களை மக்களிடம் பரப்பி வந்தவர் இவர் 2/10
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தில்லை நடராசனையும் சீரங்கநாதனையும் பீரங்கி வைத்து பிளக்கும் நாள் எந்நாளோ? என்று முதன் முதலில் முழங்கியவர் இவர் அஞ்சாநெஞ்சர் என்ற பெயருக்கு ஏற்றவாறு அந்த கருத்துக்கு உரம் போட்டவர் அதனாலே கடுமையான தாக்குதலுக்கும் ஆளானார் 3/10
Read 10 tweets
Oct 27
பெரியாரின் பெருந்தொண்டர் MR.ராதா பெரியாரின் தம்பிகள் பெரியாரை விட்டு போன போது இல்லை இல்லை நான் தந்தை பெரியாருடன் தான் சாகும் வரை இருப்பேன் என்று அழுத்தமாக கூறி அந்த தம்பிகளின் அவதூறுகளுக்கு பதிலடி கொடுத்து கூடவே இருந்தவர் நடிகவேள் MR.ராதா அவர் திரையில் தோன்றி பேசும் வசனத்தில்1/1
முழுக்க முழுக்க பகுத்தறிவு கருத்துக்களும் திராவிட இயக்கத்தின் கருத்துகளும் தான் இருக்கும் அசாத்திய திறமைசாலி நாடகம் போடும் இடத்தில் நாத்திக கருத்துக்கு எதிராக ரவுடிகள் வந்து கலவரம் செய்தால் தனித்து நின்று அவர்களை துவம்சம் செய்து விட்டு அதே வேகத்தில் மேடையேறி வசனங்களை பேசுவார் 1/2
அவரின் ராமாயண நாடகம் ஒன்று பெரியார் தலைமையில் 15.9.1954 அன்று சென்னை ஒற்றை வாடை தியேட்டரில் நடந்தது வால்மீகி ராமாயணம் உள்ளிட்ட பல ராமாயண கதைகளை தன் நாடகத்துக்கான ஆதாரங்களை மேற்கோள்களாக எழுதி அரங்கின் வாயிலில் வைத்து எதிரிகள் வாயை அடைத்தார் ராதா 1/3
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(