M.SivaRajan Profile picture
Nov 22 20 tweets 3 min read
#கிருஷ்ணார்ப்பணம்

🌺 *கிருஷ்ணார்ப்பணம்* *என்பதன் அர்த்தம்*

ஒரு சிறிய கிராமம் மத்தியில் அழகான ஒரு கிருஷ்ணர் கோவில்
அர்ச்சகரும்,

அவரிடம் வேலைபார்த்துவரும் சிறுவன் துளசிராமனும் காலை 4 மணிக்கே கோவிலுக்கு வந்து விடுவார்கள்.
துளசிராமனுக்கு கோவில் தோட்டத்து பூக்களையெல்லாம் பறித்து மாலையாகத் தொடுத்து தரவேண்டிய பணி.

கிருஷ்ண பகவானே கதி என்று கிடக்கும் துளசிராமனுக்கு,

அந்தப் பூப்பறிக்கும் நேரமும் கிருஷ்ணனின் நினைப்புதான் ! ” கிருஷ்ணார்ப்பணம் ” என்று மனதுள் சொல்லியபடியே பூக்களைப் , தொடுப்பான்.
பத்து, பதினைந்து மாலைகள் கட்டி முடித்தவுடன், ஏதோ அவனே கிருஷ்ணருக்கு சூட்டிவிடுவது போன்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு, அர்ச்சகரிடம் கொடுத்து விடுவான்.

கிருஷ்ணரின் சிலைக்கு மாலை சூட்ட போனால்…..

ஏற்கனவே ஒரு புதுமாலையுடன் கிருஷ்ணர் சிலை பொலிவு பெற்று இருக்கும்.
அதைப் பார்த்த அர்ச்சகருக்கு, இது துளசிராமனின்

குறும்பாக இருக்குமோ என்று சந்தேகம்.

அவனைக் கூப்பிட்டு, "துளசிராமா!!!இதெல்லாம் அதிகப்ரசங்கித்தனம்;
நீ மாலை கட்டவேண்டுமே தவிர, சூட்டக்கூடாது ! ” என்று கண்டித்தார்.
"ஸ்வாமி…! நான் சூட்டவில்லை ; கட்டிய மாலைகள் மொத்தம் 15. அத்தனையும் உங்களிடம் கொடுத்து விட்டேன் ! ” என்ற அவன் சொற்கள் அவர் காதில் விழவேயில்லை.

"நாளையிலிருந்து அண்டாக்களில் தண்ணீர் நிரப்பும் பணியைச் செய் ! பூ கட்டவேண்டாம் ! ” கட்டளையாக வந்தது .
இதுவும் இறைவன் செயல் என்று, துளசிராமன் நீரிறைக்கும் போதும், தொட்டிகளில் ஊற்றும்போதும், ” "கிருஷ்ணார்ப்பணம் ” என்று மனம் நிறைய சொல்லிக்கொள்வான். மனமும் நிறைந்தது!
இப்போதெல்லாம் சிலைக்கு அபிஷேகம் செய்ய அர்ச்சகர் வரும்முன்பே , அபிஷேகம் நடந்து முடிந்து, கருவறை ஈரமாகி இருக்கும். நனைந்து..

நீர் சொட்டச் சொட்ட கிருஷ்ணர் சிலை சிரிக்கும்.

அர்ச்சகருக்கு கடும் கோபம், "துளசிராமா!!

நீ அபிஷேகம் செய்யுமளவுக்கு துணிந்து விட்டாயா!
உன்னோடு பெரிய தொல்லையாகிவிட்டதே ! ” வைய்ய ஆரம்பிக்க.

துளசிராமன் கண்களில் கண்ணீர்." ஸ்வாமி! நான் அண்டாக்களை மட்டும்தான் நிரப்பினேன்;

உண்மையிலேயே கிருஷ்ணனுக்கு எப்படி அபிஷேகம் ஆனது என்று எனக்கு தெரியாது! என்றான்.
அவ்வளவுதான் அர்ச்சகர் மறுநாளே மடப்பள்ளிக்கு மாற்றிவிட்டார். பிரஸாதம் தயாரிப்பு பணிகளில் ஒரு சிற்றாளன் ஆனான்.

இங்கும்…. காய் நறுக்கும்போதும் அவன், " கிருஷ்ணார்ப்பணம் ” என்றே தன்னுடைய செய்கைகளை கடவுளுக்கே காணிக்கையாக்கினான்.
அன்று. அர்ச்சகர் முன்னெச்சரிக்கையாக ……சன்னிதானத்தை பூட்டிச் சாவியை எடுத்துச் சென்றுவிட்டார் .

மறுநாள் ..அதிகாலையில் சந்நிதிக் கதவைத் திறக்கும்போதே கண்ணன் வாயில் சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம்!!
"மடப்பள்ளியில் அப்போதுதான் தயாராகி, நெய்விட்டு இறக்கி வைக்கப்பட்டிருந்தது !

அதற்குள் எப்படி இங்கு வந்தது ? நானும் கதவைப்பூட்டிதானே சென்றேன் !

பூனை , எலி கொண்டு வந்திருக்குமோ ?
துளசிராமனுக்கு எந்த வேலை தந்தாலும்

அந்தப்பொருள் எப்படியோ எனக்கு முன்பே இங்கு வந்துவிடுகிறதே !

அவன் என்ன மந்திரவாதியா? "என்று குழம்பினார் அர்ச்சகர்.

இன்று எதுவும் கண்டிக்கவில்லை, ”
துளசிராமா! நாளை முதல், நீ வாசலில், பக்தர்களின் செருப்பை பாதுக்காக்கும் வேலையைச் செய் ! நீ அதற்குத்தான் சரியானவன்! என்று கூறினார்.

"பூ, நீர்,பிரஸாதம் – எல்லாம் நல்ல பொருட்கள் ; சந்நிதிக்கு வந்துவிட்டன ;

இனி என்ன ஆகிறதென்று பார்ப்போம் ; ” – இதுதான், அர்ச்சகரின் எண்ணம்.
இதையும் கடவுள் விருப்பம் என்று ஏற்றுக்கொண்ட துளசிராமன் .அன்றுமுதல் …வாசலில் நின்றிருந்தான்.

அதே, " கிருஷ்ணார்ப்பணம் " என்றே அந்த வேலையையும் செய்துகொண்டு இருந்தான். இன்றும் அர்ச்சகர் பூட்டி, சாவி கொண்டு சென்றார்.
மறுநாள் காலை ; சந்நிதிக்கதவு திறந்ததும், அர்ச்சகர் கண்ட காட்சி

உடலெல்லாம் அவருக்கு நடுங்கத்தொடங்கியது.

இதென்ன கிருஷ்ணா ! உன் பாதங்களில்…

ஒரு ஜோடி செருப்பு!!!

பாதகமலங்களின் பாதுகையின் பீடத்தில்
சாதாரண தோல் செருப்பு ! எப்படி வந்தது ?
துளசிராமன் எப்படிப்பட்டவனானாலும், சந்நிதிப் பூட்டைத் திறந்து

இப்படி செருப்பை வைக்க யாருக்குத்தான் மனம் வரும் ?

ஆச்சரியம், அச்சம், அர்ச்சகருக்கு வேர்த்துக் கொட்டியது.

அப்போது. எங்கிருந்தோ ஒரு குரல்,
"அர்ச்சகரே ! பயப்பட வேண்டாம் அந்த துளசிராமனுக்கு நீ எந்த வேலை தந்தாலும்,

அவன், " கிருஷ்ணார்ப்பணம்" என்று எனக்குக் காணிக்கையாக்கி விடுகிறான்!

அப்படி அன்போடு அவன் தரும் காணிக்கையை நான் மனமுவந்து ஏற்றுக் கொண்டேன்.
நினைவெல்லாம் எங்கோ இருக்க செய்யும் பூஜையை விட,

எதை செய்தாலும் எனக்குக் காணிக்கையாக்குபவனின் அன்பை நான் ஏற்றுக் கொண்டேன்.

துளசிராமன் ஒரு யோகி !

அவன் அன்பு எனக்குப் பிரியமானது!என்றார் பகவான்.
கிருஷ்ண பகவானின் இந்தக் குரல் கேட்டு வாசல் பக்கம் ஓடிவந்து
அந்த யோகி துளசிராமனின் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார், அர்ச்சகர்!

ஆம் நாம் எந்த வேலை செய்தாலும் அதை நம் கிருஷ்ணருக்கு அர்ப்பணம் செய்தால் அதை அவர் மனமார ஏற்றுக் கொள்வார்.
கண்ணனின் அருமை பெருமைகளை சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

#சர்வம்_கிருஷ்ணார்ப்பணம்

#கிருஷ்ணார்ப்பணம்_தத்துவம்

#கிருஷ்ணார்ப்பணம்_மகிமை

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Nov 23
#ஸ்ரீதர_ஐயாவாள்_மடம்

கார்த்திகை_அமாவாசை
கங்கை நீராடல்.

மங்களகரமான சுபகிருது ஆண்டு கார்த்திகை 7தி (23.11.2022 - புதன்கிழமை)

ஆண்டு தோறும் திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் இல்லக் கிணற்றில் இன்றும் கங்கை பொங்கி வருவதைக் காணலாம்; நீராடலாம். Image
கர்நாடக சமஸ்தானத்தில் திவானாகப் பணிபுரிந்தவர் ஸ்ரீதர ஐயாவாள்.

இவர் தன் பதவி சொத்துக்களைத் துறந்து விட்டு தமிழக காவிரிக் கரையிலுள்ள
திருவிசநல்லூரில் குடியமர்ந்து விட்டார்.

தினமும் அருகேயுள்ள மத்யார்ஜூனமான திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரரை தரிசிப்பார்.
அர்த்தஜாம பூஜையும் காண்பார்.

சிவன் மேல் அபார பக்தி கொண்டவர்.

இவரது தந்தையார் மறைந்த திதி கார்த்திகை மாதத்தில் வரும்.

அத்தகைய ஒரு நாளில் இவர் பிராமணர்களுக்கு சிரார்த்த சமையல் தயார் செய்ய ஏற்பாடு செய்து விட்டு காவிரியில் நீராட சென்றார்.
Read 13 tweets
Nov 23
*சித்தர்களை ஏன் நடமாடும் தெய்வம் என்று சொல்கிறோம்...*

சித்தர்களைப் பற்றிய ஆய்வும், வழிபாடும் தமிழ்நாட்டில் சமீப காலமாக அதிகரித்துள்ளது.

முன்பெல்லாம் சித்தர்கள் என்றதும் ‘‘காட்டுக்குள் வாழ்பவர்கள்’’ என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. Image
அவர்களை நெருங்கக் கூட பயப்பட்டதுண்டு..

சித்தர்கள் என்பவர்கள் நடமாடும் தெய்வம், இறைவனின் பிரதிநிதிகள், கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருப்பவர்கள் என்ற யதார்த்தத்தை பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
சித்தர்கள் அனுக்கிரகம் இருந்தால், எந்த இலக்கையும், நம்மால் எட்ட முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் மலர்ந்துள்ளது.

அது மட்டுமல்ல சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்று வழிபட்டால், தோஷங்கள், பிரச்சினைகள் நீங்கும் என்பதை உணர்ந்துள்ளனர்.
Read 11 tweets
Nov 23
#பித்ருக்களுக்கு_முக்தி_தரும்_ஸ்தலம்

*பித்ருக்களுக்கு முக்தி அளிக்கும் தலம் கயா மட்டுமல்ல, இந்தத் தலமும் தான்*

அகிலத்தில் அனந்தகோடி க்ஷேத்திரங்கள் இருக்க, ‘பித்ருக்களுக்கு முக்தி அளிக்கும் தலம்’ என்று கயாவுக்கு மட்டும் இப்படிப்பட்ட ஒரு மகத்துவம் எப்படி வந்தது? Image
கயாவுக்கு மட்டுமே இது பொருந்துமா?

அல்லது, வேறு ஏதாவது க்ஷேத்திரங்கள் உள்ளனவா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைதான் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள பீட்டாபுரம் குக்குடேஸ்வரர் ஆலயம்.
மகாவிஷ்ணு சக்ராயுதத்தை தாட்சாயினியின் உடலை துண்டு துண்டாக வெட்டிவீழ்த்த, அந்த பாகங்கள் பூமியில் எங்கெங்கு வீழ்ந்தனவோ அவை யாவும் சக்தி பீடங்களாயின என்பது பெரும்பாலோருக்குத் தெரிந்ததுதான்.

அவ்வாறு, அன்னையின் பிருஷ்ட பாகம் வீழ்ந்த இடமே பீட்டாபுரம்.
Read 26 tweets
Nov 22
#பெரிய_பிராட்டியார்

*பெரிய பிராட்டியின் சம்பந்தம்*

பெரிய பிராட்டி என அழைக்கப்படும் திருமகளே (லட்சுமி) பெருமாளுக்கு அடையாளம்.

கோயில்களில் திருமார்பு நாச்சியார் என பெருமாளின் மார்பில் இவள் இருப்பாள்.

பக்கத்து நாச்சியாராக அவருக்கு அருகிலும் இருப்பாள்.
தனிக்கோயில் நாச்சியாராகவும் வீற்றிருப்பாள்.

ஆனால், பெருமாளுக்கு இப்படி தனித்தனி சந்நிதிகள் இருக்காது.

பெருமாள் நிஜம் என்றால், அதன் நிழல் தான் தாயார்.

பெருமாள் எங்கு இருக்கிறாரோ, அங்கெல்லாம் தாயார் நிழல் போல தொடர்கிறாள்.

முக்தி பெற்ற உயிர்களை வைணவத்தில் "நித்யசூரிகள்'
என்று குறிப்பிடுவர். இந்த நித்யசூரிகளுக்கெல்லாம் தலைவியாக இருப்பவள் பெரியபிராட்டி தான்.

நிஜம், நிழல் இரண்டில் எதற்கு மதிப்பு அதிகம் என்று கேட்டால் எல்லோரும் நிஜத்திற்குத் தான் என்று பதில் சொல்வர்.

ஆனால், மரம் நிஜமாக நம் கண்முன் நிற்கிறது.

ஆனால், வெயிலுக்கு ஒதுங்குபவர்
Read 20 tweets
Nov 22
#பஞ்ச_நரசிம்ம_சேஷ்த்ரம்

தமிழ்நாட்டின் சீர்காழியில் ஐந்து நரசிம்ம ஆலயங்கள் தோன்றக் காரணமே #திருமங்கை_ஆழ்வார் எனும் விஷ்ணு பக்தர் ஆவார்.

அங்குள்ள ஐந்து ஆலயங்களின் வரலாற்றுப் பின்னணிக் கதை சுவையானது.
அந்த ஐந்து உத்தமமான நரசிம்மத் பெருமாள் ஆலயங்களிலும் ஒரே நாளில் சென்று வழிபட்டால் கடன் தொல்லை குறையும், எதிரிகள் தொல்லை விலகும், தடைப்பட்ட திருமணம் நடைபெறும், மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.
ஓரிரு கிலோமீட்டர் தள்ளித் தள்ளி ஒரே இடத்தில் அமைந்துள்ள இந்த ஐந்து ஆலயங்களும் #திவ்ய_தேசத்தில் காணப்படும் ஆலயங்கள் ஆகும்.

திருமங்கை ஆழ்வார் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர் ஆவார்.

சீர்காழி நகரின் அருகில் உள்ள மங்கை மடம் எனும் ஊரில் இருந்து ஐந்து கிலோ தொலைவில் உள்ள
Read 39 tweets
Nov 22
#கனவில்_பாம்புகள்_வந்தால்

கனவில் பாம்புகள் தோன்றினால் நன்மையா ?
                       
கனவில் பாம்புகள் ஒரு சிலருக்கு  வந்து கொண்டேயிருக்கும்.

காரணம் அவர்களுக்கு இராகுதிசை, கேதுதிசை அல்லது இராகுபுத்தி, கேதுபுத்தி நேரமாக  இருக்கலாம்.
கனவில் பாம்பு வந்தால் அவர்களை போன்றவர்களுக்கு நன்மை தான்.

அதுபோல் 4 - 13 - 22 - 7 - 16 - 25 போன்ற ராகு கேதுக்களின் ஆதிக்க தேதியில் பிறந்தவர்களுக்கு கனவில் அடிக்கடி பாம்புகள் வந்து கொண்டே இருக்கும்

ராகு - கேதுக்குரிய பரிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும் உடனடியாக செய்வது நல்லது.
எதிரிகளால் உங்களுக்கு தொல்லைகள் ஏற்படப்போகிறது  என்பதை உணர்த்த ஒற்றை நல்ல பாம்பு உங்கள் கனவில் உண்டாகும்.

இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.
 
வீரதீரமாக பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(